Thursday, January 21, 2010

கல்வி அறிவு

ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்,விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீன்.பசி மேலீட்டால் ரயில்வே சிற்றுண்டிக்கடைக்கு சென்று உண்ண என்ன இருக்கிரதுஎனக் கேட்டவுடன் வேலையாள் அவரிடம் விலைப் பட்டியலைக் கொடுத்தான்.அப்போது கண்ணாடி அவரிடம் இல்லாதலால்,''நீயே படித்துச் சொல்லேன்,''என்றார்.வேலையாள் சொன்னான்,''அய்யா,நானும் உங்களைப் போல் எழுத்தறிவில்லாதவன் தான்.''

நாசூக்கு

நாசூக்கு என்றால் என்ன?
நம்மைப் பற்றி எவ்வளவு உயர்வாக நாம் நினைக்கிறோம் என்பதனையும்,பிறரைப் பற்றி எவ்வளவு மட்டமாக நாம் நினைக்கிறோம் என்பதனையும் வெளிக்காட்டாமல் மறைத்துக் கொள்வது.
--மார்க் ட்வைன்

சுற்றிப் பார்க்க

ஒருவர்:இந்த ஊரில் சுற்றிப் பார்க்க என்னங்க இருக்கு?
மற்றவர்:குடை ராட்டினம்.

போகும் வழி

ஒருவன் கையை ஒரு திசையில் நீட்டியபடி,''இப்படியே மதுரைக்கு போகலாமா?''என்று கேட்டான்.
அடுத்தவன் சொன்னான்,'இப்படியே கையை நீட்டிக்கொண்டும் போகலாம்,மடக்கிக் கொண்டும் போகலாம்.'

அஞ்சு நிமிஷம்

கணவன்:இன்னுமா சமையல் ஆகலே?நான் ஓட்டலுக்கு போறேன்.
மனைவி:ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்கோ.
கணவன்:அதுக்குள்ளே ஆகிடுமா?
மனைவி:இல்லே,நானும் புடவையை மாத்திட்டு உங்களோட வந்திடறேன்.