Friday, April 25, 2014

பொன்மொழிகள்-51

சொர்க்கம் மிகச்சிறியதாகத்தான் இருக்க வேண்டும்.ஏனெனில் அதை என் தாயின் கண்களில் காண்கிறேன்.
******
நல்ல நண்பர்கள் நமக்குக் கிடைத்த பரிசு.
நல்ல பெற்றோர்கள் பரிசாகக் கிடைத்த கடவுள்.
******
உனக்கு உதவ உன் மூளையைப் பயன்படுத்து.
மற்றவர்களுக்கு உதவ உன் இதயத்தைப் பயன்படுத்து.
******
நாம் பெண்களைப் பார்ப்பதே இல்லை.அவர்களை அவர்களின் அழகால் மூடி வைத்திருக்கிறோம்.
******
யாரேனும் பேசிக் கொண்டே இருந்தால் அவர்கள் தங்களது மனதில் இருப்பதை மறைக்கவே முயற்சி செய்கிறார்கள் என்று பொருள்.
******
மற்றவர்களைக் குறை சொல்லும் போக்கு அர்த்தமில்லாதது.
தகுதியும் உழைப்பும் உடையவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
வெற்றி கிடைக்காவிடில் அதற்கு அவரவர் சொந்தப் பிழையே காரணம்.
******
அடிமைகள் பிறர் சுதந்திரத்திற்காகப் போராடுவதில்லை.
******
மனப்பான்மைதான் ஒரு மனிதனை உருவாக்குகிறது. நாம் எந்த செயலை செய்கிறோம் என்பதைவிட என்ன மனப்பான்மையுடன் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
******
நிலைமையை சாதகமாக்கிக் கொள்ளத் தெரிந்தால் வெற்றி எண்ணும் சிகரத்தை அடைய கடின உழைப்பு தேவையில்லை.
******
உண்மையை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதாலோ,ஒப்புக் கொள்ள மறுப்பதாலோ,எந்த நன்மையையும் கிடையாது.சோகமும் விரக்தியும் உங்களை சுற்றி வளைக்கும்.நம்மால் மாற்ற முடியாத எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும்.
******
வெற்றியாளர்கள் நாற்காலிகளில் அமர்ந்து ஓய்வெடுப்பதில்லை.
ஏதாவது வேலைசெய்வதில்தான் ஓய்வினை அடைகிறார்கள்.
******

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net