Monday, July 30, 2012

உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்



 



 இன்று உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்.

திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள்.

ஆரம்ப காலத்தில் அயல் நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த தால் இதற்கு கிசுமுசுப் பழம் எனப் பெயரிட்டனர்.! பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயா சம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
***
மருத்துவக் குணங்கள்:

1. இதில் விட்டமின் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.!*

2. உலர்ந்த திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும்.
*
3. குழந்தைகளுக்கு எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கல்சியம்தான். கல்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது.
*
4. இரத்த விருத்திக்கு எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.!
*
5. உடல் வலி குணமாக பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.
*
6. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.!
*
7. பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சினை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கஷாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும். மலச்சிக்கல் தீரமலச்சிக்கலே நோய்கள் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு காலம் நோயின்றி வாழலாம்.
*
8. வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் ஜீரண உறுப்புகள் வலு விழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சினை தீராது. இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.
*
9. குடற்புண் ஆறஅஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவறை புண்ணாக்கி விடுகின்றன.!இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடற் புண்கள் குணமாகும்.
*
10. இதயத் துடிப்பு சீராக சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.
*
11. சுகமான நித்திரைக்கு தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.
*
12. தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

4 comments:

  1. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete


  2. உங்கள் வலைக்கு மோஹன் அவர்கள் வலைமூலம் வழி தெரிந்தது.
    திருடுவதற்கும் திருடியதற்கும் வழி என்ன என்று சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன !!

    தாய் தந்தையரிடமிருந்து அவர்கள் ஜீனைத் திருடினோம். ஏன் அவர்கள் ஜீனைத் திருடினோம் என்று
    எண்ணும்படி அவர்கள் வியாதிகள் டயாபெடிஸ், ப்ள்ட் ப்ளெஷர் எல்லாவற்றையுமே ஒரு பேக்கேஜ்
    ஆக பெற்றுக்கொண்டோம்.

    பள்ளியிலே பக்கத்து நண்பனின் டிஃபன் பாக்ஸில் இருக்கும் உப்புமாவையும் திருடினோம்.

    பருவ காலத்திலே பல பார்வைகளைத் திருடினோம்.

    தொழிற்துறையிலே நம்மைப்போல் இருப்பவர்கள் செய்யும் தந்திரங்கள் எல்லாம் என்ன என்று
    அவர்கள் எல்லாரையுமே தெரிந்துகொண்டோம். திருடினோம் என்று சொல்லாவிடினும்.

    இல்லாள் உறங்கும்போதும் அவள் அழகை அவள் அறியாது திருடினோம். ( ரசித்தோம் என்று நாகரீகமாக சொல்லவும்)

    ஆண்டவன் கோவிலிலும் அருகில் காண்பவர்களை அளந்தோம். ( மனதால் திருடினோம் என்பது உண்மை )

    அவ்வப்போது எங்கோ என்றோ படித்த இலக்கியத்திலிருந்து ஈரேழு வாக்கியங்களைத் திருடி
    எதிர் இருக்கும் மாணவர்களிடம் ஏதோ இது நம் சரக்கு என நினைக்க வைத்தோம்.

    ஆக, திருடினோம் என்று சொல்லாதீர்கள். நாமும் இணைந்தோம். மனம் மகிழ்ந்தோம் எனச்சொல்லுங்கள்.

    ஆசிகள் பல.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete


  3. ஹலோ,

    நான் இரண்டாம் முறை கரு தரித்தபோது எனக்கு HB மிகவும் குறைந்து விட்டது. கருப்பு திராட்சை ஊறிய தண்ணீரை குடிக்க முடியவில்லை. அதனால், நான் நேரடியாக கருப்பு திராட்சை மற்றும் அத்திப்பழத்தை தினமும் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன். நான் அடுத்த மாதம் செக் அப் சென்ற பொது 10 பாயிண்ட் அதிகரித்து இருந்தது. பெரியவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். பக்க விளைவுகள் இல்லை. உடனடி பலன். முயற்சி செய்து பாருங்க.

    Thanks,
    Mahi
    http://mahibritto.blogspot.com

    ReplyDelete