Tuesday, May 8, 2012

பொன் மொழிகள்-26

பொய்களால் தடவிக் கொடுப்பதைவிட
உண்மையால் அறைவதே மேலானது.
**********
பிறருக்குப் பயன்படுங்கள்.
பிறரால் பயன் படுத்தப் படாதீர்கள்.
**********
முதிய தலைமுறையைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு இளைய சமுதாயத்தைக் குறை சொல்ல ஆரம்பிக்கும்போது உங்களுக்கு நடுத்தர வயது.
**********
முன்னேற்றம் என்பது ''இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது தான்'' என்று நினைக்கும் கால கட்டம் தான் முதுமைப் பருவம்.
**********
உங்களுக்கு  மூக்கின் மேல் கோபம் வரும்போது,வாயை மூடிக் கொள்ளுங்கள்.
**********
நான்மறையைக் கற்றவனல்ல ஞானி.
'நான்'மறையக் கற்றவன் தான் ஞானி.
**********
உறவால் வரும் அன்பைவிட
அன்பால் வரும் உறவே புனிதமானது.
**********
விழுவதெல்லாம்
எழுவதற்குத்தானே தவிர
அழுவதற்காக அல்ல.
**********
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும்,
மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீதிபதியாகவும் இருக்கிறான்.
**********
பலமான மழை பெய்யும்போது
லேசான மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டாதே.
உறுதியான குடை வேண்டும் என்று வேண்டு.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment