Sunday, May 22, 2011

கணவன் மனைவியின் கலக்கல் காமெடி !!!

மனைவி : என்ன செய்யறிங்க?
கணவன் : ஒன்னும் செய்யல.
மனைவி : ஒன்னும் செய்யலய...? நம்மலுடைய கல்யாண சான்றிதழ ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.
கணவன் : ம்ம்.. இதுல காலாவதி தேதி இருக்கான்னு பார்த்திக்கிட்டுருந்தேன்.
மனைவி : உங்களுக்கு இரவு உணவு வேணுமா??
கணவன் : நிச்சயமா... என்னுடைய சாய்ஸ் என்ன?
மனைவி : ம்ம்.. வேணும் அல்லது வேண்டாம்.
மனைவி : என்னிடம் உங்களுக்கு பிடித்தது எது? என் அழகான முகமா? அல்லது எனது கவர்ச்சியான உடலா?
கணவன் : சிறிது நேரம் தலைமுதல் கால்வரை பார்த்துவிட்டு........ எனக்கு உன்னிடத்தில் பிடித்தது உன் நகைச்சுவை உணர்வுதான்...

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஜோக்ஸ் !!!

டேய்.. நண்பா.. நான் நம்ம தேசத் தலைவர்கள் படமெல்லாம் கலெக்ட் பண்ணிட்டு இருக்கேன்.
நீ எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணணும்டா.."
"சொல்லுடா" மஹாத்மா காந்தி இருக்கற 1000 ரூபா இல்லன்னா 500 ரூபா நோட்டு இருந்தா கொடுடா"

ஜோதிடர்:

உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.
கஸ்டமர் : எது பல்லா

ரஞ்சனி:
சாதம் சாப்பிட்டா வெயிட் போட்டுருவோமா? ஓரவஞ்சனி: இல்லையே வெயிட் போட்டா தானே சாதம் சாப்பிட முடியும்... ரஞ்சனி: என்ன சொல்ற?
ஓரவஞ்சனி:
குக்கர்ல வெயிட் போட்டாதானே சாதம் வடிக்க முடியும்?

பெண்மணி:
ஒரு டசன் மாம்பழம் கேட்டேன். வீட்டில் போய்ப் பார்த்தால் பத்துப் பழம் தான் இருந்தது.
கடைக்காரர்:
அந்த ஒரு டசன் மாம்பழத்தில் இரண்டு பழம் அழுகிப் போயிருந்தது. நீங்கள் எதற்கு வீணாகச் சுமந்து செல்லணும்னு நானே தூக்கி போட்டுட்டேன்

மனைவி:
''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...''
கணவன்:
''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது...''

கம்பெனி எம்.டி :
இந்த வருடம் கடுமையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்களுக்கு நான் 5000 ரூபாய்க்கு செக் தர்றேன்.”
இளிச்சகுமார்:
ரொம்ப நன்றி சார்.” எம்.டி: இட்ஸ் ஓகே. இதே போல அடுத்த வருஷமும் நல்லா வேலை செஞ்சா இந்த செக்ல கையெழுத்துப் போட்டுத் தர்றேன்!!

கண்டக்டர் படியில் நிற்பவரிடம்....
கண்டக்டர்:
யோவ் உள்ள தான் கடல் மாதிரி இடம் இருக்கே, ஏறி உள்ள வர்றது தானே... படியில்
நிற்பவர்:
சாரி சார் எனக்கு நீச்சல் தெரியாது. நான் கரையிலயே நின்னுக்குறேன்!

-ராமு:
நீ பைக்ல வந்த ஸ்பீடுல என் மேல மோதி இருந்தா என்ன ஆகியிருக்கும்....
சோமு:
நீ இவ்வளவு பேசி இருக்க மாட்ட!
1. அவர்: எதுக்கு பெண் போலீஸ் எல்லாம் திடீர் போராட்டம் நடத்துறாங்க?
இவர்: அவங்க யூனிபார்ம்ல ஜன்னல் வைக்க அனுமதி கோரியாம்!


==========
2. ஒருவர்:
உங்க பையனை நீங்க "தருதல" னு திட்டினாக்கூட அமைதியா சிரிச்சுக்கிட்டு போறான் நல்ல மரியாதை தெரிஞ்ச பையன் போல... மற்றவர்: நீங்க வேற அவன் அஜித் ஃபேனாம் திட்டும் போதும் "தல" சொல்றேன்னு அவனுக்கு அதுல அல்ப சந்தோஷம்!
==========
3. வாங்கின கடனை போன மாதம் திருப்பிக் கேட்டப்ப அடுத்த மாதம் தர்றேன்னு சொன்னீங்க. இப்பவும் அடுத்த மாதம்னு சொல்றீங்களே.. .? இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சுங்கிறது என்கிட்ட கிடையாதுங்க
==========
4. பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்! இப்பவாவது உணர்ந்தியே! கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
==========
5. என்னப்பா இது... தோசையை இப்படி ஸ்டாண்ட்ல தொங்க விட்டுத் தர்றீங்க...? சும்மா அப்படியே பிய்ச்சுத் தின்னுடுங்க... இல்லேன்னா, தட்டு கழுவுற சார்ஜ; எக்ஸ்ட்ரா போடுவோம்
==========
6. உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார். ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.
==========
7. ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க! ==========
இன்றைய மெகா ஜோக்: 8. மேடம்... ஒரு அஞ்சு நிமிஷம் வெளில வெய்ட் பண்ணுங்க... எதுக்கு டாக்டர் ? தெர்மா மீட்டர் வெச்சு டெம்பரேசர் பார்க்கணும்... நீங்க பக்கத்துல இருக்கறதால இவரு வாயைத் திறக்க மாட்டேங்கறார்
உன் நட்பு என்னும் சிறையில் சிக்கிக் கொண்டேன் தவறுகள் செய்தாள் தண்டித்து விடு,ஆனால் விடுதலை மட்டும் செய்துவிடாதே ,



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஜோக்ஸ்



































































courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஜோன்ஸ் ஜோக்ஸ் !!!

ஜோன்ஸ் தன் இரு நண்பர்களுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். டிராபிக் போலிஸ் நடுரோட்டில் கையைக் காட்டி வண்டியை நிறுத்தச் சொன்னார். பின்புறம் அமர்ந்திருந்த ஜோன்ஸ் சொன்னார், “சார்..ஏற்கனவே மூணு பேர் இருக்கோம். நாலாவது ஆள் எல்லாம் ஏத்த முடியாது சார்."


****


நண்பர் : ஆக்சிஜன் உயிர் வாழ மிகவும் அவசியம். அது இல்லாமல் ஒரு நொடிகூட உயிருடன் இருக்க முடியாது. ஆக்ஸிஜன் 1773ல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜோன்ஸ் : அப்படியா!! நல்லவேளை, நான் 1773க்குப் பிறகு பொறந்தேன். அதுக்கு முன்னாடி பொறந்திருந்தா செத்திருப்பேன்.. இல்ல!.


****

போன் வந்தால் மணிக்கணக்காகப் பேசும் வழக்கம் கொண்டவர் ஜோன்ஸின் மனைவி. அவர் அன்று பத்து நிமிடத்தில் பேசிவிட்டு போனை வைத்துவிட, ஜோன்ஸ் ஆச்சரியமாகக் கேட்கிறார். "என்ன சீக்கிரம் போனை வைத்துவிட்டாய்?""ஆமா.. வேற என்ன பண்றது, ராங் நம்பர் வந்தா!." என அலுத்துகொண்டார் அவர் மனைவி.


****


ஜோக்கர் ஜோன்ஸ் ஒரு கிளினிக்கில் டாக்டரின் அறை முன்னால் அமர்ந்திருக்கிறார். அருகே ஒரு நபர் அழுதுகொண்டிருக்கிறார்.

ஜோன்ஸ் : ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?

நபர் : ப்ளட் டெஸ்ட் செய்ய வந்தேன். விரலில் ரத்தம் எடுக்கிறேன் பேர்வழி என்று என் விரலை வெட்டிவிட்டார்கள்.

ஜோன்ஸ் : அய்யய்யோ! நான் செத்தேன்.

நபர் : நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.ஜோன்ஸ் : நான் யூரின் டெஸ்ட் செய்ய வந்திருக்கிறேன். நல்லவேளை...வேற இடம் பார்த்துக்கறேன். பை...பை..

****


ரயில் டிக்கெட் பரிசோதகர் ஜோன்ஸைப் பார்த்தது கேட்கிறார், "டிக்கெட் ப்ளீஸ்!"

ஜோன்ஸ் : (பாக்கெட்டிலும் பேக்கிலும் தடவிப்பார்த்துவிட்டு) ஐயோ.. டிக்கெட்டை எங்க வச்சேன்னு தெரியலையே!

பரிசோதகர் : பரவாயில்லை..உங்களைப் பார்த்தா நல்ல மனுசனாத் தெரியுது. கண்டிப்பா நீங்க எடுத்துருப்பீங்க. நான் அடுத்த ஆளப் பார்க்கிறேன்.(சிறிது நேரம் கழித்து பரிசோதகர் திரும்பி வர, இன்னமும் டிக்கெட்டைத் தேடிக்கொண்டிருக்கிறார் ஜோன்ஸ்.)

பரிசோதகர் : இன்னுமா தேடுகிறீர்கள்? நான் தான் காண்பிக்க வேண்டாமென்று சொல்லிவிட்டேனே!

ஜோன்ஸ் : அடப்போய்யா நீ வேற! டிக்கெட் இருந்தாத்தானே நான் எந்த ஊருல எறங்குறதுன்னு தெரியும்.




courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஜோக்ஸ் !!!

அறிமுகம் :

மிஸ்டர். ஜோக்கர் ஜோன்ஸ் இந்த வாரம் முதல் அறிமுகம். தன்னை முட்டாள் எனப் பிறர் சொல்வதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவே மாட்டார். கள்ளங் கபடமில்லாத அப்பாவி மனிதர். இவர் செய்வதை சீரியஸாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்த மிஸ்டர் எதையும் யோசித்துச் செய்யமாட்டார்... அவ்ளோதான். இதோ ஜோன்ஸ்..பராக்! பராக்!!



***



ஒரு ஆங்கிலேயன், ஒரு அமெரிக்கன், நம்ம ஜோன்ஸ், மூவரும் ஒரு பொய் சொல்லுவதைக் கண்டுபிடிக்கும் கருவியைச் சோதனை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர். மூவரும் பொய் சொல்லவேண்டும். அதற்கேற்றாற்போல அந்தக் கருவி அலறும்.ஆங்கிலேயன் : நான் நினைக்கிறேன்... என்னால் ஒரே நேரத்தில் 20 பாட்டில் பீர் குடிக்க முடியும்."கிர்ர்ர்ர்ர்ர்" கருவி அலறுகிறது.ஆங்கிலேயன் : சரி, என்னால் ஒரே நேரத்தில் 8 பாட்டில் பீர் குடிக்க முடியும்.கருவி அமைதியாய் இருக்கிறது.





அமெரிக்கன் : நான் நினைக்கிறேன், என்னால் ஒரே நேரத்தில் 15 பீட்சா சாப்பிட முடியும்."கிர்ர்ர்ர்ர்ர்" கருவி அலறுகிறது.



அமெரிக்கன் : சரி... என்னால் ஒரே நேரத்தில் 3 பீட்சா சாப்பிடமுடியும்.கருவி அமைதியாய் இருக்கிறது.ஜோன்ஸ் : நான் நினைக்கிறது என்னன்னா... "கிர்ர்ர்ர்ர்ர்" கருவி அலறுகிறது.



***





நண்பர் : வாங்க ஜோ.. நாம் செஸ் விளையாடலாம்.ஜோன்ஸ் : எனக்கு அது விளையாடத் தெரியாதே.. நல்லா இருக்குமா?



நண்பர் : ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்.ஜோன்ஸ் : அப்போ கொஞ்சம் பொறுங்க... நான் என்னோட ஸ்போர்ட்ஸ் ஷூ மாட்டிட்டு வந்திடறேன்.



***



ஜோன்ஸ் : தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.கண்டக்டர் : இன்னொரு டிக்கெட் யாருக்கு?



ஜோன்ஸ் : ரெண்டுமே எனக்குத்தான். ஒன்னு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.கண்டக்டர் : அதுவும் தொலைஞ்சி போச்சுனா?



ஜோன்ஸ் : ஒன்னும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.



***



ஜோன்ஸ் புதிதாக ஒரு வேலையில் சேருகிறார். முதல் நாள் வேலை நேரம் முடிந்த பின்னும் நீண்ட நேரம் வேலை செய்து கொண்டிருக்கிறார்.





மேனேஜர் : (ஆச்சரியத்துடன்) அட! இன்னுமா வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள். வெரி குட்!

ஜோன்ஸ் : தேங்க் யூ சார். வேற ஒன்னுமில்லை. இந்த கம்ப்யூட்டர் கீபோர்டில் ஏ, பி, சி, டி எழுத்துக்கள் எல்லாம் கரெக்டான வரிசையில் இல்லை. அதான் திரும்ப புடுங்கி அல்ஃபபெட்டிகல் ஆர்டர் படி மாட்டிக்கிட்டு இருக்கேன்.

***



நம்ப ஜோன்ஸும் அவரது நண்பரும் ஒரு காரில் வெடிகுண்டு பொருத்திக் கொண்டிருக்கின்றனர்.



நண்பர் : இதை மாட்டும்போது வெடிச்சிட்டா என்ன பண்ணுவ?ஜோன்ஸ் : கவலைப்படாதே.. என்கிட்ட இன்னொரு குண்டு இருக்கு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தென்னாலிராமன் கதை !!!

கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.

அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.
ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது. குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.

ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.

அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான்.
"குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.

குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.

அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.

அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.
இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மாப்பு, வெச்சுட்டாயா ஆப்பு !!!

ஒரு மாறுப்பட்ட கற்பனை !!!





அவள் ஒவ்வொரு முறை என்னை கடக்கும் போதும்,

என் மனம் “வந்துட்டாயா வந்துட்டாயா” என்று அலறும்…



“பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்” என்றேன்…

அவளிடம் என் காதலைச் சொல்லும் முன்னர்….



நீ தான் நான் முதன்

முதலாக காதலிக்கிற பெண் என்றேன்…

“அடப் பாவி, போன மாதம் தான் என் தோழியிடம்

காதலிக்கிறேன் என்று சொன்னாயே!” என்றாள்.

“அது போன மாசம், நான் இப்போ சொல்றது இந்த மாசம்” என்றேன்…



“இப்போ என்ன?

உன் காதலை ஒப்புக் கொள்ள வேண்டுமா?

” என்றாள்“க க க போ” என்றேன்..“முடியாது!

என்று சொன்னாள், என்ன செய்வாய்” என்றாள்..

சற்றே யோசித்து விட்டு “நான், அழுதுடுவேன்!” என்றேன்…



ஒற்றைச் சிரிப்பை உதிர்த்து என்னைப் பார்த்தாள்…

“என்ன சிரிப்பு ராஸ்கல், சின்னப் புள்ளத் தனமாய்” என்று அதட்டினேன்…..

அவள் சோகமாய், என்னை பார்த்தாள்…


“நீ மட்டும் ஹும் சொன்னா, மாமா குச்சி மிட்டாயும்,

குருவி ரொட்டியும் வாங்கித் தருவேனாம்” என்றேன்…



எனது தந்தை காவல்துறையில் இருக்கிறார் என்றாள்…

“பன்றிக்கு நன்றி சொல்லி, குன்றின் மீதேறி நின்றால்,

வென்றிடலாம் எனது மாமாவை” என்றேன்…



இருந்தாலும் நீ ரிஸ்க் எடுக்கிறாய்,இன்னொரு முறை யோசித்து சொல் என்றாள்…

“ரிஸ்க் எடுக்கிறதெல்லாம்,எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி”

என்றேன்…

பிறகு ஒரு வாரம் என்னை காக்க வைத்து,


ஒரு இனிய பொழுதில், சொன்னாள் அவள் காதலை…

அன்றைக்குத் தான் நான் உணர்ந்தேன்,

“மாப்பு, வெச்சுட்டாயா ஆப்பு” என்று….

…..தொடரும்



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்

கண்ணா பின்னா தத்துவங்கள்

1. நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"
2. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்து
பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும்.
அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.
3. டீ மாஸ்டர் டீ போடுரார்பரோட்டா மாஸ்டர் பரோட்டா
போடுரார்மேக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்ஹெட்
மாஸ்டரால மண்டைய போட முடியுமா?
4. புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா
5. ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால்
அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது
6. 1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...
1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
ஆனா.....ஆனா.......ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....
7. காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
ஏனென்றால் அதுவே புல்தான் - Bull8.நைட்ல கொசு கடிச்சாகுட் நைட் வைக்கலாம்...ஆனா, பகல்ல கடிச்சாகுட் மார்னிங் வைக்கமுடியுமா..???
9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
10. நடந்து போனாக் கால் வலிக்கும். ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சில நகைச்சுவை கதைகள் !!!

கதை :1

அம்மாஞ்சியும் அவன் நண்பரும் ஒரு நாள் மீன் பிடிக்க படகு ஒன்றை எடுத்துக்கொண்டுகடலுக்குள் போனார்கள். முதலில் ஒரு இடத்தில் அவ்வளவாக மீன்கள் கிட்டவில்லை.பிறகு நெடுந்தூரம் கடலுக்குள் போனார்கள்.
அங்கு நிறைய மீன் கிடைத்தது. அம்மாஞ்சியின்நண்பன் சொன்னான் " நாளைக்கும் இதே இடத்துக்கு வருவோம்" என்றான். அம்மாஞ்சியும்சந்தோஷமாக ஒத்து கொண்டான். ஆனால் அம்மாஞ்சின் நண்பன் உடனே ஒரு சந்தேகத்தைகிளப்பினான். "நாளைக்கு வர்ரதுக்கு எப்படிடா இந்த இடத்தை ஞாபகம் வச்சுக்கறது...?"என்றான்.
கொஞ்ச நேரம் யோசித்த அம்மாஞ்சி சடாரென கடலுக்குள் குதித்து மூழ்கி கொஞ்சநேரம் கழித்து மேலே வந்தான். "எங்கடா போயிட்டு வர்றே..? எனகேட்ட நண்பனுக்குஅம்மாஞ்சி பெருமையாக சொன்னான். " படகுக்கு அடியில போய் அடையாள குறி போட்டுட்டுவர்ரேன்..நாளைக்கு இதை வச்சி இந்த இடத்துக்கு வந்துடலாம்".
*******
கதை : 2
அம்மாஞ்சி எப்போதுமே எல்லாவற்றிலும் கவனக்குறைவாக இருப்பதாய் அவன் மனைவி குறைபட்டுக் கொண்டாள். அதிலிருந்து கொஞ்சம் கவனமாக இருக்க அம்மாஞ்சி முடிவுசெய்தான்.
ஒரு நாள் பஸ்ஸில் வரும்போது நடத்துனரிடம் இரண்டு டிக்கெட்கள் எடுத்தான்.அருகிலிருந்த அவனுக்கு தெரிந்த ஒருவர் 'ஏன் 2 டிக்கெட் எடுக்கறீங்க...? ' என்றார்"ஒண்ணு மிஸ்ஸானாலும் ஒன்னை வச்சுக்கலாம்ல...""ரெண்டுமே மிஸ்ஸாயிடுச்சின்னா...?""அதுக்குதான் பணம் வச்சிருக்கேனே...
""பணத்தை யாரும்எடுத்துட்டாங்கன்னா..?""பேண்ட் பாக்கெட்ல பர்ஸ் வச்சிருக்கேன்...அதிலேர்ந்து எடுத்துப்பேன்..""அதையும் யாரும் பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்கன்னா...?"நான் என்ன முட்டாளா....?அதுக்காகத்தான் பஸ் பாஸ் எடுத்து வச்சிருக்கேன்..."என்றுபெருமையாக சொன்னான் அம்மாஞ்சி.#
*******
கதை : 3
ஒரு டாக்சீல ரெண்டு பேர் ஏறினாங்க... அப்படிக்கா போயிக்கிட்டே இருக்கும்போது.. பின்னால உக்காந்திருந்தவங்கல்ல ஒருத்தரு திடீர்னு டிரைவர் தோள தொட்டு "லெப்டுல போப்பா" ன்னு சொல்லியிருக்கார்... அந்த டிரைவர் அலறி அடிச்சிக்கிட்டு வண்டி கண்ட்ரோல விட்டுட்டான்...
நல்ல வேளை.. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்த எதிரா வந்த லாரியில கொண்டு போயி வண்டிய மோதியிருப்பான்... வண்டிக்குள்ள எல்லாரும் ஒரு நிமிஷம் சைலண்ட் ஆகிட்டாங்க... அந்த டிரைவர் திரும்பி பார்த்து சொன்னான்..." யப்பா இனி ஒரு தடவை இப்படி செய்யாதே... நான் ரொம்ப பயந்துட்டேன்..."
உடனே பின்னாடி உக்காந்திருந்தவன் சொன்னான் "சாரிப்பா!!.. ஒரே ஒரு தடவை தானே தட்டினேன்... அதுக்கே நீ இப்படி பயந்துக்குவேன்ணு தெரியாது..." அதுக்கு அந்த டிரைவர் சொன்னான் " உன் பேர்ல தப்பில்லப்பா... நான் இன்னைக்கு தான் இந்த வேலைக்கு சேர்ந்தேன்... இதுக்கு முன்னாடி 25 வருஷமா பிணம் எடுத்துட்டு போற வண்டில டிரைவரா வேலை பார்த்தேன்!!!"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வெக்கமாய் இருக்கிறது !!!


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தெரியுமா உங்களுக்கு ??????



  • வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில்


  • மூச்சும், முழுங்கவும் முடியும்..புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.


  • ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?) சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.


  • தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம். கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.


  • 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது. சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.


  • இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.


  • திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.
    கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.


  • எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.


  • . 40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.


  • சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.


  • பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.


  • வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.


  • பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.


  • நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.


  • லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.


  • 15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable


  • குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.


  • எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.


  • வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.


  • சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.


  • கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தெரியுமா உங்களுக்கு ??????

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..
குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..
புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)
சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.
8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

. 40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.
சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.
பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.

வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.
நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.
லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.
15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.
எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.

வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

v மனதைத் தொட்ட வரிகள் !!!

Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி

Ø துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். - கவியரசு கண்ணதாசன்

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
- வால்டேர்

Ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன்

Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்

Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா

Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட்.

Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே

Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!


Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

v சின்னச் சின்னத் தகவல்கள்.!!!

v சின்னச் சின்னத் தகவல்கள்.!!!

Ø அடிக்கடி தாடி, மீசை சேவ் பண்ணினா நெறய முடி வளரும்னு நெனச்சா அது உங்க முட்டாத்தனம்… இத நான் சொல்லலீங்க… அதிகம் படிச்ச டாக்டர்ஸ்…



Ø அந்த காலத்திலயே சாப்பாட பதப்படுத்தி டப்பால அடச்சு போருக்கு அனுப்பிச்சி வச்சாராம் நம்ம “மாவீரன் நெப்போலியன்”.



Ø உலகம் முழுக்க ஒரு வருஷத்துக்கு 40 லட்சம் டன் உப்பு தேவப்படுதாம்…



Ø லாட்டரிக்கு பேர் போன “பூட்டான்”ல சினிமாத் தேட்டரே கிடையாதாம்…



Ø ஆரஞ்சு நிறம் மனசுக்கு மகிழ்ச்சியத் தருமாம்.



Ø நம்ம டைரக்டர் அமீர் இது வரையும் அவர் எடுத்த படம் ஒன்னக்கூட பாத்தது இல்லியாம்.



Ø நடிகர் பிரகாஜ்ராஜும் நம்ம ராகுல் திராவிட்டும் ஒரே காலேஜாம். பிரகாஜ்ராஜ் சீனியராம்.


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிந்தனை துளிகள் !!!!

வாழ்க்கையில் வெற்றி என்பது என்ன?






ஊர் ஊராகச் சுற்றி உபதேசம் செய்து விட்டு, தனக்கென்று தலை வைத்துப் படுக்க ஓர் இடமில்லாமல், கடைசியில் சிலுவையில் அறையுண்டு இறந்த ஏசு நாதரை வெற்றியாளர் என்று சொல்லவேண்டுமா, தோல்வியாளர் என்று சொல்லலாமா? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டுமென்று உண்ணாவிரதம் இருந்து, கால் நடையாகக் காடு மேடெல்லாம் சுற்றி, கடைசியில் இரு வகுப்பினரும் ஒருவரை ஒருவர் கோரமாகத் தாக்கிக்கொண்டிருந்த நிலையில் குண்டு பட்டு இறந்தாரே, அந்த காந்தியடிகள் வெற்றியாளரா, தோல்வியாளரா? அவ்வளவு பெரிய விஷயங்களுக்கெல்லாம் போக வேண்டாம். நாம் நம்முடைய வாழ்க்கையில் வெற்றியாளராகக் கருதப்பட வேண்டுமென்றால், எந்த உரைகல்லில் சோதித்துக் கொள்ளலாம்?







ரால்ப் வால்டோ எமர்ஸன் சொல்வதைக் கேளுங்கள்:





● அடிக்கடி சிரிப்பது, அதிகம் சிரிப்பது



● புத்திசாலிகளின் நேசத்தைப் பெறுவது



● குழந்தைகளின் பாசத்தைப் பெறுவது



● நேர்மையான விமர்சகர்களின் பாராட்டைப் பெறுவது



● நண்பர்களின் துரோகத்தைத் தாங்கிக்கொள்வது



● இயற்கையை ரசிப்பது



● மற்றவர்களிடமுள்ள நல்ல அம்சங்களைப் பராட்டுவது



● ஓர் ஆரோக்யமான குழந்தை



● ஒரு தோட்ட வெளியை உருவாக்கியது



● சமுதாயக் கேடு ஒன்றை சீர்படுத்தியது



● உங்கள் வாழ்க்கையினால் யாராவது தங்கள் வாழ்வில் சற்றேனும் இன்பமடைந்தார்கள் என்று உணர்வது



இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட நீங்கள் வாழ்க்கையில் வென்றவர்களே.





courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஜோக்ஸ்

இந்த வார பஞ்ச் :கண்ணா... பன்னிங்க தான் கூட்டமா எக்ஸாம் எழுத வரும். என்னிக்குமே சிங்கம் சிங்கிளாதான் அரியர் எழுத வரும். ச்சும்மா அதிருதுல்ல....



***






பாண்டு : மச்சான்.. சிகரெட் குடிச்சா கேன்ஸர் வரும்னு சொல்றாங்களே. உண்மையாடா?



ஜோன்ஸ் : தெரியலடா மாப்ளே... நான் குடிச்சா புகை தான் வருது.





***





ஜோன்ஸ் ஏ.டி.எம். மெஷினில் இருந்து பணம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது நண்பர் பாண்டு அவரது பின்னால் நின்று கொண்டு "ஹா... ஹா..ஹா. நான் உன்னுடைய பாஸ்வேர்டைப் பார்த்துவிட்டேன்" என்று கூற, அதிர்ந்துபோன ஜோன்ஸ், பாஸ்வேர்ட் என்னவென்று கேட்க, பாண்டு சொல்கிறார். "நான்கு ஸ்டார்ஸ் தானே". உடனே ரிலாக்ஸ் ஆன ஜோன்ஸ், "அப்பாடி... அது தப்பு. 2298 என்பதுதான் சரி.


* * * *



தபால்காரர் : என்னய்யா இது..பின்கோடு போடவேண்டிய இடத்தில் "சரோஜா சாமான் நிக்கோலா" அப்படின்னு எழுதியிருக்கே?



வெங்கட்பிரபு : ஹி..ஹி..சென்னை - 600028 தான் அப்படி எழுதி



இருக்கேன்.





*****



வாத்தியார் :

உனக்குப் பக்கத்துல ஒரு பையன் தூங்கிக்கிட்டு இருக்கான். அவனை எழுப்பிவிடு.



மாணவன் :

அட போங்க சார். தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது மட்டும் நானா?





*****



டைரக்டர் :



இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும்.



எனக்கு நீச்சல் தெரியாதே.டைரக்டர் : கவலைப்படாதீங்க சார்…குளத்துல தண்ணியே இருக்காது.







*****







நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பாத கணவன் மீது கோபத்தில் இருக்கிறாள் மனைவி. கணவன் தொலைபேசுகிறான்.கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்?




மனைவி :



(கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம்கணவன் : ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.




* * * * *


மனைவி : ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?




கணவன் :

ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா?




****





ராமு : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..


வேணு : அடடா..என்னே ஒரு நட்பு.ராமு : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.




****




நபர் : மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?



ஜோன்ஸ் :

டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு. நபர் : ??!!







****







மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?


ஆசிரியர் : 1 48766 மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.




*******





இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள். பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.




*******










கணவன் : இன்னிக்கி என்ன சமையல்மனைவி : (கடுப்பாக) ம்ம்ம், விஷம்கணவன் : சரி சரி, எனக்காக காத்திராமல் நீ சாப்பிட்டுடு தூங்கு







*******





முதலாளி: இவ்வள்வு வேகமா காரை ஓட்டாதேப்பா, எனக்கு பயமா இருக்கு.


டிரைவர்: பயப்படாதீர்கள், கார் வேகமாய்ப் போகும்போதெல்லாம்என்னைப் போலவே நீங்களும் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள்.




*******








ஒருவர் உங்கள் மேல் கல்லை வீசினால், நீங்கள் அவர்மேல் பூவை வீசுங்கள்ஆனால்,மறுபடியும் அவர்கள் கல்லை வீசினால், ஒரு பூந்தொட்டியை தூக்கி எறியுங்கள். என்ன வில்லத்தனம்?







*******




&& 1 : உங்கள் சொந்த ஊர் எது?




&& 2 : அந்த அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லங்க, சொந்த வீடுதான் இருக்கு.






*******







courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மனதின் கதை !!!

கையில் கிடைக்காதமனதின் கதை கேட்டேன்
கற்பனை ஆனாலும்கதையில் சுவையுண்டு
பிரம்மன் படைத்திட்டான்புவியில்
மனித இனம்மறைந்தே இருப்பதுதான்
மனதின் பெருமையென்றுதேடி அலைந்திட்டான்
அவனின் மனதுக்கிடம்புவியில் புதைத்திட்டால்
குடைந்தே எடுத்திடுவான்வெளியில் மறைத்திட்டால்
பறந்தே பிடித்திடுவான்எவ்விதம் வைப்பதென
யோசனை மிகக்கொண்டான்கண்டான்
சிறந்த இடம்மனிதன் உடலே அ·து
எங்கும் தேடும் மனிதன்தன்னுள் தேட மாட்டான்
தேடத் துவங்கும் அந்நாள்வாழ்வின் அர்த்தம் புரியும்
கதையும் முடிந்தது அங்கேதேடல் துவங்கிடும் இங்கே

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன்மொழிகள் !!!!!

  • பொன்மொழிகள் !!!!!







விரும்பும் போதெல்லாம் விரும்புகிறேன் என்பதை விட‌வெறுத்த போதும் விரும்பினேன் என்பதே உண்மையான அன்பு
விவேகானந்தர் மொழி - 1



அவமானங்கள் கூட வெற்றிக்கான பாதை அமைக்கும்;நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால்- சுவாமி விவேகான‌ந்த‌ர்



நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோஅது தான் உன் வாழ்கையை தீர்மானிக்கும்- சுவாமி விவேகானந்தர்


உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.



வில்லியம் ஷேக்ஸ்பியர்:



வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்


1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.


2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்


3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.





அடால்ஃப் ஹிட்லர்:


நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.




ஆலன் ஸ்டிரைக்:


இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.


அன்னை தெரசா:


இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.


நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.




பான்னி ப்ளேயர்:


வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.




லியோ டால்ஸ்டாய்:


ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.


அப்ரஹாம் லிங்கன்:


கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.




ஐன்ஸ்டைன்:

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.


சார்லஸ்:

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஜோக்ஸ் !!!!

நண்பரிடமிருந்து ஒரு மெயில் வந்தது,
படிச்சி பார்த்து சிரிப்பு அடக்க முடியல,
நீங்களும் கொஞ்சம் சிரிங்க

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

* சிந்தனைக்கவிதை !!!!


  • உலகம் என்பது உருண்டைதான் சற்று உருட்டித்தான் பார்ப்போமே !!!






நிழல் தேடாதே


உன் நிழலில்


ஒருஊரையே நிற்கவை !





முட்களில்


மோதிக்கிழியாதவனுக்குப்


பூக்களைத்


தடவும்தகுதி கிடையாது !





மகிழ்ச்சியாய்ச்


சிரிகவலைகளைப்


பிய்த்துக்காற்று


மண்டலத்திற்குஅப்பால் வீசு !



எதைக்


கண்டும்பிரமிக்கா


தேபிரமிப்பைப்போல்


ஒருபின்னடைவே கிடையாது !





தோல்வி


என்பதுசிந்திக்கத்


தெரியாதவனின்


சித்தாந்தம் !





நிலாவைத்


தொட்டதுமூன்று


தோல்விகளுக்குப்பிறகுதான் !





நீ


எழுந்தால்


ஒருஎட்டு வந்து பார்க்காதவன்


நீ


விழுந்தால்


விழுந்துவிழுந்து விசாரிப்பான் கவனி !



இளைஞனே


இரைப்பையையும்


நம்பிக்கையையும்


காலியாக விடாதே !





நடக்குமா


என்றகேள்வி-உன்


நம்பிக்கைக்


கோபுரத்தின்


அத்திவாரத்தில்விழுந்த கடப்பாறை !



உலகை


உலுக்கி உலுக்கி


எடுத்தவனெல்லாம்


துவக்கத்தில்


ஒருதூசுப்படலமாக இருந்தவன்தான் !

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தத்துவம் !!!!!!!!!!!!


நேத்து உன்னையும்
உன் தம்பியையும் பார்த்தேன்.
நிச்சயமா எனக்கு
ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...
பின்னே?ரெண்டு கழுதைகளைச்
சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"
******
துடிப்பது என் இதயம்தான்.
ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ
. வலித்தால் சொல்லிவிடு.
நிறுத்தி விடுகிறேன். துடிப்பதை அல்ல.
இப்படி
******
ஏன்....
தண்ணி தெளிச்சி
கோலம் போடுறாங்க தெரியுமா...!
*
*
*
*
*
*
*
*
கோலம் போட்டு
தண்ணி தெளிச்சா
**********
முடியாது முடியாது..
சில விஷயத்தை மாத்த முடியாது
காலிஃப்ளவர் தலைக்கு
வைக்க முடியாது.
கவரிங் கோல்டு அடகு
வைக்க முடியாது.
கோல மாவில்
தோசை சுட முடியாது.
வீணாப் போன குறுஞ்செய்தி
வந்தாலும்
உன்னால படிக்காம இருக்க முடியாது
* * * * *
ஊசி போட
நர்ஸ் வேணும்,
காசு போட
பர்ஸ் வேனும்,
காபி போட
சுகர் வேணும்,
கடலை போட
ஃபிகர் வேணும்,
எஸ்.எம்.எஸ்
அனுப்ப மனசு வேனும்,
அத படிக்க
லூசு வேணும்,
உன்னை மாதிரி
கொக்கரக்கோ கும்மாங்கோ!
*****

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

SMS மச்சி SMS (1)

நேத்து உன்னையும்
உன் தம்பியையும் பார்த்தேன்.
நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம்
அடிக்கப் போகுது!...
பின்னே?
ரெண்டு கழுதை களைச் சேர்ந்து பார்த்தால்
அதிர்ஷ்டம் அடிக்கு
மாமே?!" *****

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net