Sunday, April 3, 2011

ஏன் தலையில நீர் கோத்துக்குது

பாட்டியின் சபை களைகட்டி யிருந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சிறு பிள்ளைகள் கூட்டமும் அதிகமாக இருந்தது.



( இதில் இருந்த கதைகளை ஓரளவுக்கு நீக்கி விட்டேன் )

“சித்த வைத்தியம் படிக்கப்போறேன் பாட்டி...”

“பலே.. பலே... பரவால்லயே... என்னப்போல கிழங்கட்டைக இருக்குற வரைக்குந்தான் இந்தமாதிரி அனுபவ வைத்தியங்க இருக்கும்.. எங்க காலத்துக்கப்புறம் எல்லாரும் இங்கிலீசு மருந்துக்கு போயிடுவாங்கன்னு மனசுக்கு வேதனையா இருந்துச்சு.. ஒங்களமாதிரி ஒரு சில புள்ளைக இந்த சித்த வைத்தியத்த படிச்சி காப்பாத்துறத நெனச்சா மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடியம்மா...”

“நல்லது பாட்டி.. நீங்க அனுபவத்துல செய்யறீங்க.. நாங்க இனிதான் படிச்சி.. அனுபவப்பட்டு செய்யணும். ஆனாலும் ஒங்ககூட போட்டி போட முடியுமா.. கிண்டல் செய்தாள் அந்த பெண்..”

“ஆமாண்டி... அப்படின்னா பேசாம எங்கிட்ட வந்து தினமும் படிச்சிக்கிட்டுப் போ..

“கண்டிப்பா பாட்டி.. நா உங்கக்கிட்ட நெரையா தெரிஞ்சிக்கணும்... கண்டிப்பா வந்து சந்தேகம் கேப்பேன்.. நீங்க சொல்லணும்..”

“கண்டிப்பா செல்றேன் தாயி.. ஆமா உம் முகமெல்லாம் என்ன இப்படி பளபளன்னு நீர்க்கோத்த மாதிரி இருக்கு..”

“அட.. கண்டுபுடிச்சிட்டீங்களே.. பாட்டின்னா சும்மாவா...”

“ம்.. நான் எப்ப தலைக்கு குளிச்சாலும் தலையில நீர் கோத்துக்குது பாட்டி.. ஏன்னு தெரியல...”

“அதுசரி...

டாக்டருக்கு படிக்கப்போறவ இப்படி நோஞ்சானா இருக்கலாமா... நீ ஆரோக்கியமா இருந்தாத்தானே உன்கிட்ட வைத்தியம் பண்ணிக்க நாலு பேரு வருவாக...”

“பாட்டி.... கிண்டல் பண்ணாம ஏன்னு சொல்லுங்க பாட்டி..”

“ம்.. சொல்றேன் கேட்டுக்க...”

“...தலையில நீர் கோத்துக்குறதுக்கு தலை ஈரம் காயாம இருக்குறது மட்டும்தான்னு ரொம்ப பேரு தப்பா நெனச்சிக்கிட்டு இருக்காங்க.. நிச்சயமா அது இல்ல.. குடல் புண்தான் முக்கியக் காரணம். நேரத்துக்கு சாப்பிடாம இருந்துட்டு, நேரம் தவறி சாப்பிடுறது.. இதுனால குடல்ல புண் உண்டாயி .. அது ரணமாயி உஷ்ணத்த உண்டாக்கும்... இந்த உஷ்ணத்தால நீரு சிரசுக்கு ஏறிக்கும்.. அதுக்கப்புறம் நீ எப்போ தலை குளிச்சாலும் உள்ளே இருக்கும் நீரோட சேந்துக்கும்..”

“இதுக்காகத்தான்

மூலத்தில் சூடிருந்தால் மூக்குதனில் நீர்

வடியும் -னு பெரியவங்க சொல்லியிருக்காங்க..”

“அதுக்கு மொதல்ல சாப்பாட்டு முறைய ஒழுங்கா வச்சிக்கணும்.. நேரத்துக்கு சரியா சாப்பிட்டாலே இந்த மாதிரி பிரச்சன வராது.. மலச்சிக்கல் இல்லாம பாத்துக்கணும்..”

“நீங்க சொல்றது சரிதான் பாட்டி.. பப்ளிக் எக்ஸாம் ங்கறதால சீக்கிரம் சீக்கிரமா பள்ளிக்கூடம் போக வேண்டியிருக்கு.. அதுனால காலயில சாப்பிட முடியல.... மத்தியானமும் டெஸ்டு, பிராக்டிகல்னு லேட்டாயி சாப்பிடறேன்.. இப்பதான் புரியுது பாட்டி...”

“இதுக்கு எதாச்சும் மருந்துசொல்லுங்க பாட்டி..”

“ம்... ம்... இப்ப புரியுதா.. எதுக்காக சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு தலமூச்சா அடிச்சுக்கிறாங்கன்னு.. சரி சரி.. மருந்து சொல்றேன்.. கவனமா கேட்டுக்கடியம்மா...”

“துளசி, கறிவேப்பிலை, நன்னாரி வேர், கொத்தமல்லி கீரை, சீரகம் இது எல்லாத்தையும் 1 கைப்பிடி அளவு எடுத்து நல்லா காயவச்சி லேசா எண்ணெய் போடாம வறுத்து பொடியாக்கி வச்சிக்கிட்டு தெனமும் காலைலயும், சாயந்திரமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேன்ல கலந்து சாப்பிட்டுக்கிட்டு வந்தா இந்த மாதிரி பிரச்சன வராது...”

“வாரம் ரெண்டு தடவ எண்ணெ தேச்சி குளிக்கணும்..”

பாட்டி சொன்ன மருந்தைக் கேட்ட அந்த பெண் உற்சாகத்துடன் பாட்டியைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு..

“வரேன் பாட்டி.. இனிமே அடிக்கடி வருவேன்.. நா கேக்குற சந்தேகத்துக்கெல்லாம் நீங்க சரியா எனக்கு சொல்லிக்கொடுக்கணும்...” என்று ஓடிப்போனாள்.

தானும் ஒரு வாத்தியாராகப் போவதை நினைத்து மனதுக்குள் பெருமிதம் கொண்டாள் பாட்டி.

***
நன்றி ஹெத்து சாய்ஸ்.
***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உணவு கூம்பகம்/பிரமிட்

இது ஒரு மனிதன் சுகதேகியாக வாழ்வதற்கு எவ்வாறு தனது உணவுப்பழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்கான அமைப்பாகும். முக்கோண வடிவிலான அமைப்பில் உள்ளெடுக்கப்படவேண்டிய உணவுகள் பற்றி இப்படம் எளிமையாக விளக்குகிறது.


*

கீழே அடிப்பரப்பில் உள்ள உணவுகள் அதிக அளவில் உள்ளேடுக்கப்பட வேண்டும் . மேலே செல்ல செல்ல அவை குறைந்த அளவில் உள்ளெடுக்கப்பட வேண்டும்.




நாம் உடலுக்கு ஏற்ற உணவு:


1. நீர்
1. முக்கோணத்தின் அடிப்பரப்பானது நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. அதாவது ஒரு மனிதன் சுகதேகியாக வாழ நீர் உள்ளெடுத்தல் மிக அடிப்படையானது என்பதை இது காட்டுகிறது.

2. ஆண் -> ஒரு நாளுக்கு 12 கிளாஸ்/ 3லீட்டர்/ 96 அவுன்ஸ் நீர் அருந்தவேண்டும்

3. பெண் -> ஒரு நாளுக்கு 8 கிளாஸ்/2லீட்டர்/64 அவுன்ஸ் அருந்தவேண்டும்.

***

ஏன் நீர் அருந்தவேண்டும் அல்லது நீரின் முக்கியத்துவம் என்ன?

1. மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். ஒரு வளர்ந்த மனிதனின் உடல் நிறையில் 60% நீராகும்.


*

2. உடலின் அனைத்து தொழிற்பாட்டுக்கும் சமிபாடு, அகத்துறிஞ்சல் கடத்துதல், உடலின் அனுசேபம் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.

*

3. உடல் வெப்பநிலையை பேண உதவுகிறது.

*

4. நீரில் எந்த சக்தி பெறுமானமும் இல்லை. நீரிழப்பால் வரும் தலைவலி, அசதி என்பவற்றை போக்குகிறது.

*

5. சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றை குறைப்பதில் உதவுகிறது.

*

6. குடல், சிறிநீரகம், சிறுநீர்ப்பை என்பவற்றில் ஏற்படும் புற்றுநோயை குறைக்கிறது.

நீரிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுபவை


***

பழங்களும் மரக்கறிகளும்:

ஒரு நாளுக்கு ஒரு சுகதேகி மனிதனால 5 தடவைகள் மரக்கறிகளும், 2-3 தடவைகள் பழங்களும் உள்ளெடுக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


ஏன் பழங்களையும் மரக்கறிகளை உண்ணவேண்டும்.?

1. மிகச்சிறந்த நார்ப்பொருளுக்கான மூலங்களாகும்.
*
2. விற்றமின், கனியுப்புக்களுக்கான சிறந்த ஆதாரம்.
*
3. சக்தி பெறுமானம் குறைந்ததும் கொழுப்பற்றவை.
*
4. ஒட்சியேற்ற எதிரிகள் (antioxidants) phytochemical ஆகியவற்றை அதிகளவில் கொண்டவை.
*
5. அதிகளவில் உட்கொள்வதால் புற்றுநோய், நிறை அதிகரிப்பு, இதய நோய்கள், ஆஸ்துமா, ஆகியவற்றை குறைப்பதில்/ஏற்படுவதற்கான சாத்தியப்பாட்டை குறைக்கிறன.

***

தானியங்களும், மாபொருள் உள்ள மரக்கறிகளும்:

ஏன் முக்கியத்துவமானது?

1. கொழுப்பு குறைவானது.
*
2. விற்றமின்கள் குறிப்பாக B கூட்ட விற்றமின்கள், விற்றமின் E , கனியுப்புக்களான , இரும்பு, செலனியம், நாகம் என்பவற்றை அதிகள்வில் கொண்டவை.
*
3. ஒட்சியேற்ற எதிரிகள் (antioxidants) phytochemical ஆகியவற்றை அதிகளவில் கொண்டவை.
*
4. உடல் நலத்துக்கன உணவை வழங்குகிறது.
*
5. பலவேறு வகையாக இருப்பதால் தெரிவுகள் அதிகம்.
*
6. புற்றுநோய், இதயநோய், மலச்சிக்கல் என்பன எற்படும் வாய்ப்பு குறைவாகும்

***

அவரை இன உணவுகள்:

1. மிகக்குறைந்த் கொழுபை கொண்டவை
*
2. அதிகளவு புரத்ததை கொண்டவை
*
3. கனியுப்புக்களான நாகம், இரும்பு, செலனியத்தையும், போலிக்கமிலம் எனும் விற்றமினையும் அதிகளவு கொண்டவை
*
4.. புற்றுநோய், இதயநோய், மலச்சிக்கல், மன அழுத்தம், நீரிழிவு என்பன எற்படும் வாய்ப்பு குறைவாகும்

***

அடுத்த படிநிலையில் இருப்பவை வாசனைப்பொருட்களும் பாதகமற்ற கொழுப்பு உணவுகளுமாகும்.


நல்லின கொழுப்புணவுகள் ( HDL):


1. நல்லின கொழுப்புணவுகள் எனும் போது அவை தாவர எண்ணெய் வகைகள் குறிப்பக அதிகளவான தனி நிரம்பாத கொழுப்பமிலங்களை (MonoUnsaturated fatty acid), Omega 3 fatty acid ஐ கொண்டவையாகும். இவை உடல் நலனுக்கு உகந்தவை.

உதாரணமன எண்ணெய் வகை :

ஒலிவ், நல்லெணெய், நிலக் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோய எண்ணெய் போன்றவை

1. உடலுக்கு சக்தியை வழங்குவதல்
*
2. இதய நோய்கள், தொற்றுக்களில் இருந்து பாதுகாத்தல் , குருதி அழுத்ததை குறைத்தல்
*
3. விற்றமின் அகத்துறுஞ்சல் , ஒட்சியேற்ற எதிரிகளை வழங்கல் குறிப்பக விற்றமின் E
*
4. மன நலம்/ மூளையின் நலனுக்கு அவசியமானவை.

***

வாசனைப்பொருட்கள்:

1. மூலிகைகளும், வெங்காயம், லீக்ஸ் போன்றவையும், வாசனைப்பொருட்களும்,
முக்கியத்துவம்
*

2. தொற்றுக்களை குறைத்தல்
*
3. குருதிஅழுத்ததை குறைத்தல் போன்றன

***

பாலும் முட்டையும்:

1. முட்டை நாளுக்கு ஒன்று வீதமும், பால் நாளுக்கு 1-3 தரமும் உள்ளெடுக்க வேண்டும்

*

2. புரதம், விற்றமின்களான A,D,E, K, B12 என்பவற்றை அதிகளவு கொண்டவை.

*

3. மனிதருக்கு தேவையான எல்ல ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.

***

அடுத்த வகை உணவுகள் வாரத்தில் சில நாட்கள் உள்ளெடுத்தால் போதுமானது

மீனும் கடலுணவுகளும்:

1. வாரத்தில் 2-4 முறை எடுத்தல் போதுமானது. (ஒரு தடவை 4-6 அவுன்ஸ் )

*

2. 8 இறைச்சிகள் வாரத்தில் 1-3 முறை எடுக்கவேண்டும்.

***

இவை அத்தியாவசியமான உணவுகள் அல்ல, விரும்பினால் உள்ளெடுக்கலாம், மிக குறைந்த அளவில்:

1. சொக்லேட்- அதிகளவு 1 அவுன்ஸ் / நாள்

2. அற்ககொல் - 1-2 தடவை/ நாள் இது வயது, சுகநலன் என்பவற்றை பொறுத்தது.

3. ஒரு பரிமாறல் என்பது 300 மில்லி லீடடர் ஆகும்

*

தேநீர் உடல் நலனுக்கு உகந்த பானமாக கருதப்படுவதால் 2-4 கோப்பைகள் அருந்துவது விரும்பத்தக்கது.

***

நன்றி யாழ்.

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உயிர் உள்ள மரம் நமக்கு என்ன தருகிறது?


மலர்கள், காய், கனிகள் தருகிறது
*
நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது
*
காற்றை சுத்தப்படுத்துகிறது
*
நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு,நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.
*
கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.
*
மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.
*
மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. *
காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.


***

ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.


ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.


ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.


ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.


ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.


***

மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அந்த செயற்கை பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது ஒவ்வொரு மரமும் ஒரு வரம் மரங்கள், காடுகள் நமக்குத் தரும்.



மேலும் சில நன்மைகள்:


1. மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.

*

2. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

*

3. மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.


*

4. மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

*

5. மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.

*

6. கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.


*

7. புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.

*

8. உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.

*

9. மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

*

10. நமக்கா இவ்வளவு தரும் மரத்திற்க்கும், இயற்க்கைக்கும் நாம் திரும்பி என்ன உபகாரம் செய்கிறோம். யோசியிங்கள் நண்பர்களே!


***

நன்றி பூ உலகின் நண்பர்கள்
www.poovulagu.org

***




"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மாதவிலக்கு முற்றிலும் நின்றபின்‏ !

மாதவிலக்கு முற்றிலும் நிற்கும் நிலையே menopause ஆகும். இதில் pre, peri and menopause என்று மூன்று நிலைகள் உண்டு. அவரவர் குடும்ப மரபணு பொறுத்து சிலருக்கு மூன்று நிலைகளும் உடனுக்குடனேயே அல்லது இரண்டு வருடங்கள் போல நீடித்தோ இருக்கலாம்.




கருப்பை சுருங்க ஆரம்பித்து, முட்டைகள் வருவது நிற்கும் போது, ஹார்மோனகளில் மாறுதல் ஏற்படும். அதுவரை ஈஸ்ட்ரோஜென் பிரொஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோனள் இந்த மாத சுழற்சியை கொண்டுவரும்.

*

இந்த இரண்டு ஹார்மோன்களும் சுரக்க காரணமாக பிட்யூட்டரி சுரப்பி என்ற மூளையின் பகுதி FSH (Follicle stimuluating Hormone)சுரக்கும். இதுவும் LH ன்ற ஹார்மோனும் கருப்பையை தூண்டும், முட்டை உருவாக வழி செய்யும். மாதவிடாயின் போது, இரத்தத்தில் ஈச்ட்ரோஜன்/ஈஸ்ட்ரடையால் அதிகரிக்க, FSH சுரப்பை கட்டுப்படுத்து.

*

ஆனால் பிரிமெனோபாஸ் போது இரத்தத்தில் ஈஸ்ட்ரடையால் அளவு குறயும். அது FSH சுரப்பதை தடை செய்யாமல், அது எப்போது அதிக அளவிலேயே இருக்கும். பெரி மெனோபாஸ் போது (35 வயது முதல் ஆரம்பிக்கலாம்) மாதவிலக்கு மூன்று மாதங்களுக்கொருமுறை என்று நாளாகி ஆரம்பித்து நிறைய உதிரப்போக்கு இருக்கும்.

*


ப்ரி மெனோபாஸ் போது தலை முடி உதிருதல், அடிக்கடி கோபம் அல்லது அழுகை போன்ற உணர்வுகள், வரட்சியான சருமம்,அதிக உடல் சூடு போல ஒரு உணர்வு வரும். கொலஸ்டிராலில் இருந்து ஈச்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உருவாக NADPH என்ற ஒரு என்சைம் உதவும்.

*

மாதவிலக்கு நிற்கும் நிலையில் இந்த என்சைம் ஈஸ்ட்ரோஜன் தயாரிப்புக்கு பதிலாக கொலஸ்டிராலின் உப பொருட்களை தரும். ஆகவே மாதவிலக்கு நிற்கும் பெண்களின் கொலஸ்டிரால் கூட வாய்ப்பு இருக்கிறது. இதுவும் ஹாட் பிளாஷஸ் வர ஒரு காரணம்.

*

இதனாலேயே பெண்கள் செரிக்கும் திறன் குறையவும், உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகிறது. மேலும் உணர்வு பூர்வமாக சில பிரச்சினைகள் வரும் போது, உண்பது சிலருக்கு ஒரு மகிழ்ச்சியை தரும் (soul food, comforting food) ஏற்கெனவே குறைந்த செரிமானம் இருப்பதால் இது உடல் எடையை இன்னும் அதிகரிக்கும்.

*

இந்த ஹார்மோன் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல், நடுத்தர பெண்கள் உடல் எடை அதிகரிப்பதை பொதுவாக கேலி செய்யும் போக்கை காணலாம். இதனை சரிக்கட்ட கூடுதல் உடல்பயிற்சி, உணவில் இன்னும் அதிக கட்டுப்பாடு தேவையாய் இருக்கும்.

*


ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி் இதில் ஈடுபட்டிருப்பதால் ஸ்ட்ரெஸ் இந்த உடல் வெப்பத்தை அதிகரிக்கும் நிலை (உண்ர்வு) ஏற்படுகிறது.

*

இதை குறைக்க என்ன செய்யலாம்?

1. ஸ்ட்ரெஸ் அதிகமாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். இரவு உறங்கும் முன் இளஞ்சூடாக பால் அருந்தி பிரகு மனதுக்கு பிடித்த வேலைகளில் ஈடுபடுதல் நலம்.

*


2. உணவு பொருட்களில் எண்ணெய் நெய் குறைக்க வேண்டும். வறுத்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவினை தவிர்த்தல் நலம்

*


3. கால்சியம் இயல்பாகவே சூட்டை தரும். ஆகையால் செயற்கையாக இதை எடுத்துக் கொள்ளாமல், பால் தயிர் போன்றவை சேர்த்துக்கொள்ளவும்.

*


4. பாலி பீனால், ஃப்ளேவனாய்ட் இருக்கும் பழங்கள் திராட்சை, பைன் ஆப்பிள் சேர்த்துக்கொள்ளலாம். அவை ஈஸ்ட்ரோஜனின் தன்மைகளை கொண்டிருப்பதால் பலனளிக்கும்.

*


5.கொழுப்பு தவிர்த்து அவரைக்காய், மொச்சை, ராஜ்மா அல்லது பொட்டுக்கடலை, கொத்துக்கடலை சேர்த்து சமைக்கலாம். இவற்றில் ஃப்ளேவனாய்ட் அதிகம். இதில்தான் சோய் புரதமும் வருகிறது. ஆனால் சீன பெண்களுக்கு மெனோபாஸ் பிரச்சினை நிறைய வர அவர்கள் அதிகம் பன்றிக்கரி உணபதும் காரணமாகலாம் என்று சொல்லப்படுகிறது.

*


6. அதிக நார்ச்சத்து உள்ள பொருட்கள் குறிப்பாக வாழைத்தண்டு, பீன்ஸ் போன்றவை சேர்த்து கொள்வதும் பலன் தரும்.

*


7. சப்பாத்தி செய்யும் போது முழுகோதுமை மாவு,அல்லது ராகி போன்றவை அதிகம் சேர்த்து கொள்வதும் பலன் தரும்.

*


8. நிறைய பேரீச்சை பழங்கள், கீரை சேர்த்துக் கொள்ளவும். இது உடலின் இரத்த இரும்பு சத்தை அதிகரித்து, மெனொபாச் நிலையில் அதிக உணர்ச்சி மாறுதல் மற்றும் இரவு வியர்ப்பது, அல்லது உள் காய்ச்சலை தடுக்கும்.

***


மருத்துவ சோதனைகள்:
இனி

1. வருடம் ஒருமுறை மறக்காமல் பாப் டெஸ்ட், மற்றும் மாமாகிராம் செய்து கொள்ளவும்.

*

2. அதே போல போன் டென்சிட்டி பரிசோதனை செய்து கொண்டு அதற்கேற்றார் போல கால்சியம் சேர்த்துக்கொள்வது முக்கியம்.

*

3. குடும்பத்தில் புற்று நோய் சரித்திரம் இல்லாவிட்டாலும் மாறு பட்ட உணவு முறை, மற்றும் சுற்றுப்புறம் போன்றவை நம் புற்று நோய் வாய்ப்பை அதிகரித்திருக்கிறது.

*


4. நம் ஊரில் பெண்கள் ஏதேனும் உடல் உபாதை இல்லை என்றால் மருத்துவரிடம் செல்வதே இல்லை.

*

5. ஆனால் மாதவிலக்கு நின்றபின் வருடம் ஒருமுறை கட்டாயம் மருத்துவரிடம் செல்வது அவசியம்.

*

signs and Symptoms of Menopause
http://www.ehow.com/video_4400906_the-signs-symptoms-menopause.html
*

நன்றி தேன்துளி

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முகப் பொலிவு தரும் இயற்க்கை பக்...

இந்த குறிப்பு ஒரு தளத்தில் படித்தேன். உங்கள் அனைவருக்கும் உதவும் என்ற எண்ணி இந்த தளத்தில் இடுகிறேன். இவை மட்டும் இல்லை எல்லாமும் ( பல நல்ல தகவல் ) உங்களுக்கா என் தளத்தில் இடுகிறேன். நன்றி!




உப்புப் பூச்சு

தேவையான பொருட்கள் :

கடல் உப்பு
இளஞ்சூட்டில் வெந்நீர்

செய்முறை :

கடல் உப்பை மணல் பதத்திற்கு இளம் சூடான தண்ணீரில் கலக்கவும். முகத்தை ஆவியில் காட்டவும். பின்னர் உப்பு பூச்சைத் தடவவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர் நீரில் கழுவவும்.

கடல் உப்பு சரும துவாரங்களை அடைத்துப் பொலிவும் புத்துணர்ச்சியும் கொடுக்க வல்லது.


****


2. முட்டைப் பூச்சு

தேவையான பொருட்கள் :
1 முட்டை வெள்ளை
1 tsp. தேன்

செய்முறை :

முட்டை வெள்ளையை நன்கு நுரை வரும் வரை அடித்துத் தேனைக் கலக்கவும். முகத்தில் கண்ணைத் தவிர மற்ற இடங்களில் தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர் நீரால் கழுவவும்.

மிச்சம் இருப்பதை சில நாட்களுக்குக் குளிர் சாதன பெட்டியில் வைக்கலாம். உபயோகிக்கும் முன் கலவையை நன்கு கலக்கவும்.


****

3. பால் பூச்சு

தேவையான பொருட்கள் :

2 tbsp. பால்
1 tbsp எலுமிச்சை சாறு
1 tbsp பிராந்தி

செய்முறை :
மேற்கூறிய மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும்.10 - 15 நிமிடத்திற்குப் பிறகு குளிர் நீரால் கழுவவும்.


****


4. பால்பவுடர் பூச்சு

தேவையான பொருட்கள் :

1/2 கப் பால் பௌடர்
1 tbsp இளம் சூடான நீர்
3/4 tbsp. பால்

செய்முறை :
மூன்றையும் நன்கு குழைய கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். சில நிமிடங்களுக்குப் பிறகு முகம் கழுவி மீண்டும் தடவவும். 10 நிமிடத்திற்குப் பிறகு முதலில் இளம் சூடான நீரிலும், பின் குளிர் நீரிலும் கழுவவும்.


****

5. ஓட்ஸ் பூச்சு

தேவையான பொருட்கள் :

2 tbsp ஓட்மீல்
2 tbsp பன்னீர்
1/2 கப் பால்

செய்முறை :

பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும். இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகம் கழுவவும்.

இந்தப் பூச்சு வயோதிகத் தன்மையைக் குறைக்கும்.


***

by-விஜயா ராமமூர்த்தி.
நன்றி நிலாச்சாரல்.

*

மேலும் அவர்களின் குறிப்பு அறிய இங்கு சென்று பார்க்கவும்.
http://www.nilacharal.com/ocms/log/03030809.asp

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நாம் குடிக்கும் பாலின் மகத்துவம் .....

'எல்லோருக்கும் நன்மை தரும் பொருள் என்றோ, எல்லோரையும் கெடுக்கும் பொருள் என்றோ உலகத்தில் எதுவுமே இல்லை' என்கிறது ஆயுர்வேதம்.




ஆயுர்வேத சாதனை டாக்டர் கே.ஜி.ரவீந்திரன் கூறுவது:

'எந்தப் பால் நல்ல பால்? எது உடலுக்கு ஊட்டம் தரும் பால்?' 'இப்படிப்பட்ட கேள்விகளுடன் நிறைய வாசகர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

*


இன்னும் சிலருக்கு பால் சைவமா, அசைவமா என்பதிலேயே குழப்பம்!

'பால் என்பது பசுவின் ரத்தம் மாதிரி. உயிர்க்கொலை புரிதல் பாவம் என நினைக்கும் சைவ விரும்பிகள், மாமிசம், முட்டை போன்றவற்றுடன் பாலையும் சேர்த்து ஒதுக்க வேண்டும்' என்று பிரசாரமே செய்கிறார்கள்.

*


பாலைப் பற்றிய ஏகப்பட்ட கட்டுக் கதைகளும் தவறான கற்பனைகளும் மக்கள் மத்தியில் இருக்கின்றன. எல்லாக் குழப்பங்களையும் தீர்க்கவே, இந்த வாரம் பாலைப் பற்றி எழுது கிறேன்.

*

'பூமியில் வசிக்கும் மானுடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வாய்த்திருப்பது பால்!' என்கின்றன வேதங்கள்.

*

இந்தியாவில் அரிசி பிரதான உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு.ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப்படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்குமான உணவு... பால்!

**

இதில் பிரதானமானது பசும் பால். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது!

பால், பசுவின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.

*

பால்இயல்பாகவே இனிப்பானது, குளிர்ச்சி தருவது. அதே சமயம், அது அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது. ஆனால், குடித்தவுடனே புத்துணர்வு தரத்தக்கது. உடல் பலம், மூளை பலம் இரண்டையும் தருவது. சோர் வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மருந்து!

*

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

*
எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

**

ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.

வயிற்றுப்போக்கு உள்ள வர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை உடனே கட்டுப்படுத்தும்!

**

கழுதைப்பால் ரொம்ப சூடு. லேசாகப் புளிப்பும் உவர்ப்பும் கலந்த சுவைகொண்டது. வாதத் தொந்தரவுகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. கக்குவான் இருமலுக்கு மிகச் சிறந்த சிகிச்சை, கழுதைப் பால் அருந்துவதுதான்!

***

சரி... பாலை எப்படிச் சாப்பிடுவது?

பசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடிப்பது நல்லது. அது சுலபமாக ஜீரணமாகிவிடும். கறந்த சூடு ஆறிய பிறகு, அந்தப் பால் கடினமானதாகிவிடும்.

*

அதன்பின் அப்படியே குடித்தால் செரிக்காது. கூடவே, மார்பில் கோழை சேர்ந்து, சளித் தொந்தரவு வரும். எனவே, அதன்பின் கொதிக்க வைத்து அருந்துவதே நல்லது!

காலையில் வெறும் வயிற்றில் பால் சாப்பிடுவது நல்லது. அதன்பின், பசி நன்றாக எடுத்த பிறகுதான் டிபன் சாப்பிடவேண்டும். இருமலோ, தொண்டையில் கிச்...கிச் தொந்தரவோ உள்ளவர்கள், பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டுச் சாப்பிடலாம்.

*

பால் சாப்பிட்ட பிறகு, புளிப்பான பழங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. இரவில் இட்லி, புளிப்பான சாம்பார் என டிபன் சாப் பிட்டபிறகு, உடனே பால் சாப்பிடுவதும் ஆபத்தான பழக்கம்!

*

பாலில் ரெடிமேட் சத்து பவுடர்களைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழக்கம் இப்போது அதிகமாகி இருக்கிறது. குழந்தைகளுக்கு ஊட்டம் தர, இந்தச் சத்துபானங்கள் அவசியம்என நினைக்கிறார்கள் பலர்.

*

பாலில் இந்த பவுடர்கள் சேர்த்தபிறகு, அதன் கடினத்தன்மை மேலும் அதிகரிப்பதால் அது செரிமானம் ஆகக் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, அதற்கேற்றாற் போல, மற்ற சாப்பாடு அயிட்டங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

*

காலை டிபன் கூடவோ, இரவு டிபன்கூடவோ இந்தப் பானத்தைத் தருவதைத் தவிர்க்கவேண்டும். அதிகாலை அல்லது மாலை என உணவு வேளைக்கு இடைப்பட்ட நேரங்களில்தான் குடிக்கத்தரவேண்டும்.

*

'வெளுத்ததெல்லாம் பாலுனு நம்பிடுவேன்' என அப்பாவிகளைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். இப்போது வெளுப்பாக வரும் எதையுமே பால் என்று நம்பிவிடக்கூடாது.


முன்பெல்லாம் 'பால் சாப்பிட்டால் செரிக்காது' என்ற ஒரே பிரச்னை மட்டும் தான் இருந்தது. இப்போது 'பால் அலர்ஜி' என்ற புதுப் பிரச்னையும் சேர்ந்துகொண்டு விட்டது!

*

பசு மனசு நிறைந்து கொடுக்கும் பால்தான் அருமருந்து. இப்போது ஹார்மோன் ஊசிகளை எல்லாம் போட்டு, பசுவின் மடியிலிருந்து பாலை உறிஞ்சி எடுக்கிறார்கள். பாலைத் தரும் பசுவைப் புனிதமாக கருதுவது இந்திய கலாசாரம்.

*

பசுவைத் தெய்வமாக நாம் கருதுகிறோம். பால் என்ற அமுதத்தை அது தருவதால், அதற்கு நன்றிக் கடனாக பொங்கல், படையல் எனப் பசுவுக்கு தருகிறோம்!

*

புதிதாக வீடு கட்டினால், அதற்குள் முதலில் பசு நுழைந்தால்தான் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. வீடு குடித்தனம் போனால், முதலில் பால் காய்ச்சுவது மரபு.

இந்த மரபுகளை மட்டுமே காப்பாற்றி வரும் நாம் பசுவையோ, பாலின் நற்குணத்தையோ காப்பாற்றத் தவறிவிட்டோம் என்பதுதான் வருத்தமான விஷயம்!


சரி... தயிர், வெண்ணெய், நெய் பற்றி... பால்காரர் எடுத்து வருவதும், பாக்கெட் பாலும்தான் பெரும்பாலான நகரங்களில் கிடைக்கின்றன. அது பசும்பாலா, எருமைப் பாலா அல்லது இரண்டும் கலந்ததா... எதுவுமே தெரியாது!

*

பலர் இந்தப் பாலை வெறுமனே பொங்கும்வரை கொதிக்க வைத்தால்போதும் என நினைத்து, பொங்கி நுரை கிளம்பி வந்ததுமே அடுப்பில் இருந்து இறக்கிவிடுகிறார்கள்.

*

இது தவறு! பால் கொதித்தால் மட்டும் போதாது... ஒரு பங்கு பாலுக்கு நான்கு பங்கு தண்ணீர் ஊற்றிப் பாலைக் காய்ச்ச வேண்டும். 'அதுதான் ஏற்கெனவே பால்காரரே தண்ணீரைக் கலந்துவிடுகிறாரே' என ஆதங்கப்படுகிறவர்கள் வேண்டுமானால் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

*

தண்ணீர் சுத்தமாகச் சுண்டி, பழைய ஒரு பங்கு அளவு ஆகும்வரை கொதிக்கவிட வேண்டும். (ஆனால், இன்றைய அவசரயுகத்தில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்கிறீர்களா? இதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயம்!) கொதித்ததும் ஸ்டவ்வை நிறுத்திவிடக்கூடாது.

*

ஐந்து முதல் பத்து நிமிடங்கள் லேசான சூட்டில் அப்படியே வைத்திருந்து, அதன்பிறகே ஸ்டவ்விலிருந்து பாலை எடுக்க வேண்டும். ஆனால், அதற்காகப் பாலை எந்நேரமும் அடுப்பிலேயே கொதிக்கவைப்பதும் தவறு.

*

டீக்கடைகளில் எப்போதும் அடுப்புச் சூட்டிலேயே இருக்கும் பால் வயிற்றுக்கு ஏகப்பட்ட உபாதைகள் தரும்.


*

மேலு‌ம் ‌சில த‌னியா‌ர் பா‌ல் ‌நிறுவன‌ங்க‌ள், பா‌லி‌‌ல் ப‌ல்வேறு ரசாயன‌ங்களையு‌ம் கல‌ந்து ‌வி‌ற்பனை செ‌ய்‌கி‌ன்றன. எனவே, ந‌ல்ல தரமான பா‌ல் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் பொரு‌ட்களை ம‌ட்டு‌ம் வா‌ங்குவது உடலு‌க்கு ந‌ல்லது.


***

நன்றி யாழ் தளம்.
நன்றி வெதுப்னியா.

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உடல் எடை குறைய... ( இயற்க்கை முறை )

உடல் எடை குறைக்க நாம் எவ்வளவோ முயற்ச்சித்து இருப்போம். இயற்க்கை நமக்கு அளிக்கும் உணவு முறையிலும் கொஞ்சம் நாம் கவனம் சொலுத்துவோமா!


1. தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

*

2. சீசனல் ப்ரூட்ஸ் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

*

3. உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

*

4. பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். பப்பாளிக் காயை கூட்டு, சாம்பார் செய்து சாப்பிடலாம்.

*

5. முள்ளங்கியையும் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

*

6. இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.

*

7. காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

*

8. வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.

*

9. என்னடா இது இப்படி தொப்பையோட, குண்டா இருக்கோமே அப்படின்னு கவலைப்படுறத விட்டுட்டு, பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் மாஸ்டர் என தகுந்த நபர்களிடம் உரிய ஆலோசனை பெற்று, வாழ்க்கையை என்ஜாய் செய்யுங்கள்.

*

10. வாழ்க்கை வாழ்வதற்கே!



***
நன்றி தமிழ்சோலை தளம்
***

"வாழ்க வளமுடன்"
***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இயற்க்கை அழகுக் குறிப்புகள்

இயற்க்கை அழகுக் குறிப்புகளும் நாம் மேற்க்கோண்டால் சரும பிரச்சணையில் இருந்து தப்பாலாம். முயற்ச்சித்துப் பாருங்கள் நண்பர்களே!




1. பெண்கள் பச்சைத் தக்காளிப் பழங்களைத் தினமும் சாப்பிட்டு வரவேண்டும். சாப்பிட்டு வந்தால், தோல் கொஞ்சம் சிவப்பாக மாறும். தோல் சுருக்கம் மாறும். நிறமும் மாறி, சுருக்கமும் மறைந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

*

2. கோழி முட்டையை உடைத்து வெள்ளைப் பாகத்தை மட்டும் ஒரு கோப்பையில் ஊற்ற வேண்டும். இதில் கொஞ்சம் எலுமிச்சம்பழச் சாறைக் கலக்க வேண்டும். கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்து இதில் சேர்க்க வேண்டும். சேர்த்து, மூன்றையும் கலக்கி, பெண்கள் தங்கள் முகததில் தடவிக் கொள்ள வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து சோப்புப் போட்டு முகத்தைக் கழுவிவிட வேண்டும். இப்படிச் செய்து வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.

*

3. கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

*

4. தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.

*

5. பெண்களும் சரி, ஆண்களும் சரி, தங்களுக்கு ஊளைச் சதை விழாமலிக்கப் பழம் சாப்பிட்டு வரவேண்டும். பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் ஊளைச் சதை கரையும். பப்பாளிப்பழம் ஒன்றுக்குத்தான் ஊளைச் சதையைக் குறைக்கும் சக்தி உண்டு.

*

6. முகத்தில் பரு இருக்கிறதா? இருந்தால், பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் விகாரமுள்ள, மாறாத வடுக்கள் விழுந்துவிடும். எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.

*

7. பனிக்காலத்தில் சிலருக்குத் தோலில் சில இடங்களில் வெடிப்புத் தோன்றும். வெடிப்புத் தோன்றிய இடங்களில் கொஞ்சம் வாஸ்லைனைத் தடவி வரவேண்டும். தடவி வந்தால் வெடிப்பு மறைந்துவிடும்!

*

8. தங்கள் கண்களுக்கு மை தீட்டிக் கொள்ளும் பழக்கமுள்ள பெண்கள், படுக்கப் போகும்போது சோப்புப்போட்டு முகத்தைக் கழுவிவிட்டு அதன் பின்னரே படுக்க வேண்டும். கண் மையுடன் தூங்கக் கூடாது. கண் மையுடன் தூங்கினால் கண்கள் சீக்கிரம் கெட்டுப் போகும்.


*

9. முகத்தில் தோல் உரிந்தால் அதைப் போக்க சிறிது கிளிசரின், எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவுங்கள். பிறகு சோப்பு போட்டு முகத்தைக் கழுவுங்கள். உரிந்த தோல் வந்துவிடும்.

*

10. குளித்தவுடன் உடல் முழுவதும் சிறிது பவுடர் போட்டுக் கொண்டால் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

*

11. தேங்காயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தோல் பளபளப்புக் குறையாமலும், கோளாறு ஏற்படாமலும் தேங்காய் பார்த்துக் கொள்கிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்களும், இருதயநோய் உள்ளவர்களும் தேங்காயைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.


*

12. முகத்தை, சோப்பு மட்டும் போட்டுக் கழுவிக் கொண்டிருக்கக் கூடாது. பயித்தம் மாவு, சிகைக்ககாய் ஆகியவற்றையும் கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும். இப்படிச் செய்தால்தான் முகத்தில் இருக்கும் பளபளப்பு குறையாமல் இருக்கும்.

*

13. முகத்தில் எண்ணெய் வடிகிறதா? இதைப் போக்கத் தினசரி காலையிலும் இவு படுக்கப் போகும் போதும் முகத்தில் எலுமிச்சம்பழத்தை அறுத்துக் தேயுங்கள். எண்ணெய் பசை போய்விடும்.

*

14. பெண்கள் தினமும் படுக்கப் போகும்போது புருவங்களிலும் இமைகளிலும் கொஞ்சம் விளக்கெண்ணையைக் தடவிக் கொண்டால், புருவங்களிலும் இமைகளிலும் முடி நன்றாக வளரும். பெரிதாக வளரும்.

*

15. இதனால் அழகு அதிகமாகும்.


***
நன்றி தமிழ்வாணன் தளம்.
***

"வாழ்க வளமுடன்"



***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆரோக்கிய அழகுக் கலை

உடற்ப்பயிற்ச்சியும் நமக்கு அழகு செர்க்கும்:




1. நின்றபடியே கைகளிரண்டையும் மேலே தூக்கி, முழங்கால் மடங்காமல், குறைந்தது 25 முதல் 50 தடவை தரையைத் தொடலாம். கைகளை உயர்த்தும்போது மூச்சை இழுத்தும், குனியும்போது மூச்சை வெளியே விடுவது எளிதாய் இருக்கும்.

*

2. கைகளை பக்கவாட்டில் விரித்தும், கால்களை அகல விரித்தும், வலக்கையால் இடதுகால் பாதங்களைத் தொட்டு, இடக் கையை மேலே உயர்த்தி, தலையை இடக்கையாய் பார்க்கும்படி செய்ய வேண்டும். (இதையும் இருபத்தைந்து தடவை, கைகால்களை மாற்றிச் செய்யலாம்). யோகாசனத்தில் இது ‘திரிகோணாசனம்’ எனப்படும்.

*

3. குப்புறப் படுத்துக்கொண்டு கைகளிரண்டையும் தொடைக்கு அருகில் வைத்து, கால்களையும் தலையையும், தரையிலிருந்து 2 அங்குலம் உயர்த்தி ஆறுவரை எண்ணிவிட்டு, பழைய நிலைக்கு வரவும். (இதுபோல் ஆறு தடவை செய்யலாம்).

*

4. குப்புறப் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடக்கி, இரு கைகளால் பிடித்துக் கொண்டு, தலையை தரையிலிருந்து நிமிர்த்தி மேலே பார்த்துக் கொண்டே தொடைகளையும் உயர்த்த வேண்டும். இம்மாதிரி ஆறு தடவை செய்யலாம். யோகாவில் இது ‘தனுராசனம்’ எனப்படும்.

*

5. நேராகப் படுத்துக்கொண்டு தலை, கால்கள் ஆகியவற்றை தரையிலிருந்து 4 அங்குலம் மேலே உயர்த்தி 6 முதல் 10 தடவை எண்ணிவிட்டு, தலையைப் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். (இம்மாதிரி 6 தடவை செய்யலாம்).

*

6. கைகளிரண்டையும் பின்னால் உயர்த்தி, எழும்பி, படுத்தபடியே கால் கட்டைவிரல்களைத் (முழங்கால்களை மடக்காமல்) தொடலாம். இம்மாதிரி 10 முதல் 20 தடவை செய்யலாம்.

*

7. நின்றுகொண்டே மெதுவாய்த் தரையிலிருந்து 2 அங்குலம் உயர்ந்து, மெதுவாக 10 நிமிடம் ‘ஜாகிங்’ செய்து இரண்டு, மூன்று நிமிடம் நின்று ஓய்வெடுத்து, மெதுவாக மூச்சுப் பயிற்சி செய்து மீண்டும் பத்து நிமிடம் குதிக்கலாம்.

*

8. நேராக மல்லாந்து படுத்துக் கொண்டு, கைகளிரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி, மூச்சை நன்றாய் உள்ளிழுத்து எழும்பி, மூச்சைவிட்டுக் கொண்டே, கால் சட்டை விரல்களை முழங்கால்கள் மடங்காமல் தொடவேண்டும். தொடும்போது முகம் முழங்கால்களில் படுமளவு குனிந்தால் வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைவது நிச்சயம்.

***

பாட்டி வைத்தியம்.

1. வெள்ளரிக்காய்ச் சாறு இயற்கையான பிளீச் ஆகும். வெள்ளரிக் காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை, முகத்திற்கு ஒளி தரக்கூடியது. மாசுமருவற்ற பளபளப்பான முகத்தைப் பெறத் தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவுங்கள்.

*


2. 35 வயதிற்குப் பிறகு மாதம் ஒருமுறை ஃபேஷியல் செய்து வந்தால், முகத்தில் சுருக்கங்கள் தோன்றாமல், 50 வயதில் 30 வயதுப் பெண்மணிப்போல் தோற்றம் அளிப்பீர்கள்.

*


3. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வாக்ஸிங் செய்வதால் முதலில் கை, கால்களில் உள்ள முடி குறைவாக வளரும். பின்பு நாளடைவில் வளர்வது நின்றுவிடும்.

*


4. தினமும் அரை மணி நேரம் செய்யும் உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அத்தாட்சி.

*


5. ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் நீர் அருந்தினால், உடல் உள்ளுறுப்புகள் சுத்தமாகும், சருமம் மினுமினுக்கும்.

*


6. வேப்பமர இலைகளையும், புதினா இலைகளையும், துளசி இலைகளையும் கழுவி அரைத்து, முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

*


7. கரிகசலாங்கண்ணி, கறிவேப்பிலை, மருதாணி, செம்பருத்தி ஆகியவற்றை அரைத்து, காயவைத்து, தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி, பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதை தலைமுடியில் தடவிவந்தால் தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

*


8. உப்பு கலந்த நீரில் கால்களை 15 நிமிடம் நனையவைத்தால் கால்வலி குறையும். தளர்ச்சியான கால்கள் புத்துணர்ச்சி பெறும்.

*


9. சிகைக்காய் அரைக்கும்போது, கொஞ்சம் பாசிப்பருப்பு, வெந்தயம், பூந்திக்கொட்டை, பச்சரிசி, காயவைத்த செம்பருத்தி இலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உபயோகித்தால் தலைமுடி பளபளப்பாக இருக்கும்; கருமையாகவும் வளரும்.

*


1. இரவு படுக்கப் போகுமுன் கண்களைச் சுற்றியும் உள்ளங்கால்களிலும் விளக்கெண்ணெய் தடவிவந்தால், உடலின் சூடு குறைந்து கண்கள் தெளிவாகவும், பிரகாசமாகவும் தெரியும்.

***
by- புவனா
நன்றி தமிழ்வாணன்.
***


"வாழ்க வளமுடன்"

***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பல் வலியும் அதன் மற்ற தாக்கங்களும்

"பல் வலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்பது சுகந்தியின் விஷயத்தில் சரியாக இருக்கிறது.


பல்வலி என்றால் அப்படியரு வலி. அவரது கீழ்த் தாடையில் இரண்டு பற்களில் குழி. ஒவ்வொரு முறை அவர் சாப்பிட்டு முடிக்கும் போதும், சில பருக்கைகள் அந்தக் குழிகளில் போய் உட்கார்ந்து கொள்ளும். அந்தப் பருக்கைகளை குண்டூசி, குச்சிகள் போன்ற ஆயுதங்களுடன் போராடித்தான் மீட்க வேண்டியது வரும். இதோடு முடிந்து விடாது.

*

படுக்கப் போகும்போது பல்லில் வலி லேசாக எட்டிப் பார்க்கும். அந்த வலி அப்படியே கூடிக் கொண்டு போய் அன்றைய தூக்கம் காலி. இப்படிப் பல இரவுகள் அவருக்கு நரகவேதனைதான். பல் வலிக்கும்போது கணவரையோ, குழந்தைகளையோ சரியாகக் கவனிக்காமல் போகும்போது எரிச்சல், வாக்குவாதம், சண்டை வந்து குடும்ப நிம்மதியையே கெடுத்து விடும்.

*

இரண்டாவது, 28 வயதில் பற்கள் சொத்தையாகி விட்டதால், யாரிடமும் பல் தெரிய சிரித்துப் பேச முடியவில்லை. தன் முகத்தின் அழகே கெட்டுவிட்டதோ என்ற மனக்கவலை வேறு.

*

அவரது பற்களைப் பரிசோதித்த டாக்டர்கள் அவரது சொத்தை விழுந்த இரண்டு பற்களையும் பிடுங்கியாக வேண்டும். இல்லாவிட்டால் மற்ற பற்களையும் பதம் பார்த்து விடும் என்று சொல்லி விட்டார்கள்.

*

சிறு வயது முதல் பற்களைப் பாதுகாக்க மறந்த அவரது அலட்சியம்தான் இதற்குக் காரணம் என்பதை டாக்டர்கள் அவருக்கு எடுத்துச் சொன்னார்கள்.

*

இதயம், சிறுநீரகம், போன்று பற்களுக்கும் தனி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். காரணம், பல் மற்றும் ஈறுகளில் வரும் நோய்கள், முடக்கு வாதம், இருதய வால்வு அடைப்பு, சிறுநீரக அழற்சி, தோலில் ஒவ்வாமை, ஜீரண உறுப்புகளில் கோளாறு போன்றவற்றிற்குக் காரணமானாலும் ஆகலாம்.

***

பல் சொத்தை ஏன் விழுகிறது?

நம் கடைவாய்ப் பற்களில் உள்ள பள்ளங்களில் உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்வதாலும் அதைச் சரியாக சுத்தம் செய்யாததாலும் பிளாக் எனப்படும் பல்பாசை உண்டாகிறது. இந்தப் பல்பாசை ஒருவகை நுண்ணுயிரிகளுக்கு இடமளிக்கிறது.

*

இந்தப் பல்பாசை பசைத்தன்மையுடன் விளங்குவதால் நாம் உண்ணும் உணவில் சிறுபகுதி அதில் ஒட்டிக் கொள்கிறது. இந்த நுண்ணுயிரிகள் ஒட்டிக் கொள்ளும் இனிப்பு, ஸ்டார்ச் வகை உணவு துணுக்குகளை உண்டு, இனப்பெருக்கம் செய்து வளர்ந்து, லேக்டிக் ஆசிட் எனப்படும் ஒரு வகை அமிலத்தைச் சுரக்கிறது.

*

இந்த அமிலங்கள் பல்லின் எனாமலில் சொத்தை ஏற்படுத்தி பிறகு அது மெதுவாக உள்ளே பரவுகிறது. ‘டென்டின்’ என்ற உணர்வுப் பகுதியை அது தாக்கியவுடன் கூச்சமும், லேசான வலியும் உண்டாகிறது.

*

பல் சொத்தை, அருகில் உள்ள பற்களுக்கும் பரவக் கூடிய வாய்ப்புள்ளதால், பல்லில் நிற மாற்றமோ, கூச்சமோ ஏற்பட்டால் பல் மருத்துவரை அணுகுவது நல்லது.

***

முதலுதவி

1. சாப்பாட்டுத் துகள்கள் குழிக்குள் சிக்கிக் கொண்டால் குண்டூசி, குச்சி, நாக்கு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி எடுக்கக் கூடாது. பற்களில் குழி (சொத்தை) இருந்தால் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ, இனிப்பானதையோ சாப்பிடும்போது பல் வலி உயிரை எடுக்கும். இளஞ்சூடான நீரில் வாயைக் கொப்பளிக்கலாம்.

*

2. சிறிய பஞ்சு உருண்டையில் க்ளோவ் ஆயில் விட்டு, அதை குழி உள்ள இடத்தில் கவனமாக வைக்கலாம். வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். இவை யாவும் முதலுதவி மட்டுமே.

*

3. உடனே நீங்கள் செய்ய வேண்டியது மருத்துவரைப் பார்த்து, குழியை அடைக்க வேண்டும். அல்லது ரூட்கேனல் ட்ரீட்மெண்ட் எடுத்தாக வேண்டும். அவசியம் ஏற்பட்டால் பல்லைப் பிடுங்கி விட்டு புதிய பல்லைக் கட்டிக் கொள்ள வேண்டும். உதடு கடித்தல், நகம் கடித்தல், பல் குத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்து விட வேண்டும்.

*

நீங்கள் சிரிக்கும்போது மற்றவர்கள் பயப்படாமல் இருக்க இவை உதவக் கூடும்.

***

பிரபல பல் நோய்கள் நிபுணர் டாக்டர் என்.வி. ஆறுமுகம் தரும் விளக்கம் :

ஈறுகளிலிருந்து ரத்தம் கசிவது எதனால்?

பாக்டீரியாக்களால் ஈறுகளில் ஏற்படும் ‘இன்ஃபெக்ஜன்’ தான் இதற்குக் காரணம். உணவுத்துÊகள்கள் ஈறுகளில் போய் ஒட்டிக் கொள்ளும்போது ரசாயன மாற்றம் நடக்கும். இதனால் ஈறுகளில் ரத்தம் வரும். உடலில் ஹார்மோன் மாற்றம் காரணமாக பெண்கள் வயதுக்கு வரும் போதும், கர்ப்பக் காலத்தின்போதும் ஈறுகளில் ரத்தம் வருவதுண்டு.

**

ஈறுகளில் வலி வரும்போது, ‘க்ளோவ் ஆயில்’ வைக்கலாமா?

தவறில்லை. ஆனால், இது தற்காலிக நிவாரணம்தான். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றக் கூடாது. இதனால் ஈறு வெந்துவிடும் ஆபத்து உண்டு.

**

பற்களைப் பிடுங்குவதால் மூளை நரம்புகள் பாதிக்கப்படுமா?

இது தவறு. பற்களுக்கும் மூளைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

**

ஏதேனும் நோய்க்கான அறிகுறிதான் பல்வலியா?

சைனஸ் இன்ஃபெக்ஜனாக இருந்தால் மேல் கடவாய்ப் பற்களில் வலி எடுக்கும். மிகவும் அரிதாக, மாரடைப்பின் போது, கீழ்த்தாடையின் இடப்பக்கம் வலி வரும்.

**

டயாபடீஸ், இதய நோய் இருப்பவர்களுக்கு பற்களில் பாதிப்பு வருமா?

சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும். அதனால் கவனம் தேவை. பொதுவாக இதய நோயாளிகளுக்கு ‘ஆஸ்பிரின்’ மாத்திரை சிபாரிசு செய்யப்படுவதுண்டு. அதனால் பற்களில் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன்பு, பல் டாக்டரிடம் எடுத்துக் கொண்டிருக்கும் சிகிச்சை பற்றி தெளிவுபடுத்த வேண்டும். இது முக்கியம்.

**

பற்களில் ‘க்ளிப்’ மாட்டுவது நல்லதா?

நல்லது. பார்க்கவும் அழகாக இருக்கும்.

*

by-எஸ். அன்வர்


***

பல் சொத்தையால் ஏற்படும் சைனஸ் தொந்தரவுகள்!

1. பல்லில் உண்டாகும் சொத்தைக்கும் சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டையும் இணைத்துவைப்பது அவற்றின் இருப்பிடம் அமைப்பு தான். பற்களின் வேருக்கு மிக அருகில்தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன.

*

2. பல்லில் உண்டாகும் சொத்தை மேலும் மேலும் வளரும்பட்சத்தில் அது பல்லின் வேர்வரை புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸிலரி சைனஸ் அறையையும் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே சீழ்தேங்க ஆரம்பித்துவிடும்.

*

3. இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில் வீக்கம் உண்டாகி, அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்துவிடம்.

***

பல் சொத்தையால் சைனஸ் பிரச்சினை வருவது இப்படி தான் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காதுமூக்கு தொண்டை மருத்துவமனை டாக்டர் ரவிராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:

1. பல் சொத்தை மட்டுமல்ல... ஏதோ காரணத்துக்காகப் பல்லைப் பிடுங்கும்போது உஷாராக இல்லையென்றாலும் கஷ்டம்தான். பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த வகையிலும் சைனஸ் அறையைப் பாதித்து விடக் கூடாது.

*

2. விபத்துக்களின் போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தைக் குறி வைக்கும் எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளைச் சேதப்படுத்தி, சைனஸ் தொந்தரவைக் கொண்டு வரும் வாய்ப் பிருக்கிறது.

*

3. சைனஸ் பிரச்சினையை நாங்கள் இரண்டு வகையாக எடுத்துக் கொள்கிறோம். ஒன்று... திடீரென்று வந்த போதும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இன்னொன்று... நிரந்தரமான, ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ். முதல் வகையை சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே குணப்படுத்திவிடலாம்.

*

4. மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை வரை போக வேண்டிய திருக்கும். ஆனால் சைனஸ் பிரச்சினையைப் பொருட் படுத்தாமல் விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் `கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக் களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை.

*

5. டர்பினேட் ஜவ்வுகளையும் வளரவிட வேண்டும். ஆனால், இதெல்லாம் சாதாரண காரிய மில்லை. இப்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மருத்துவத்துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

*

6. பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடி கிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பதுதான் இப்போதைய நிலை.

*

7. முன்பெல்லாம் சைனஸ் பிரச்சனை என்றால் சைனஸ் அறையை ஓட்டை போடுவதுதான் எளிய வழியாக இருந்தது. மூக்குக்கு உள்ளே சிரிஞ்ச்வாயிலாக நீரை பீச்சி அடித்தால் அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை உண்டாக்கிவிடும். உள்ளே தேங்கி கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே வந்து விடும். காலப்போக்கில் இந்த ஓட்டை தானாகவே குணமாகி, நிரப்பப்பட்டு விடும் என்றாலும், இதில் ஒர பெரிய சிக்கல் இருந்தது.

*

8. அடுத்து எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம். மறுபடியும் ஓட்டை போட்டுதான் அதை வெளியே எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சிக்கல். இப்போது இந்தச் சிக்கலுக்கும் தீர்வு கண்டாகிவிட்டது. மூடப்பட்ட கதவைத் திறந்தாலே உள்ளேயிருக்கும் சீழ் வெளியேறி விடும் அல்லவா... அந்தக் கதவை சரியான அளவில் திறப்பதுதான் இப்போதைய சிகிச்சை முறை.

*

9. சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால், எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது.... எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது... அவற்றில் இருப்பதுசளிதானா அல்லது சீழா... என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது.

*

10. இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகிவிட்டது. சைனஸ் அறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது ஓட்டை போட வேண்டியிருக்குமா.. அது தழும்புகளை உண்டாக்கும் அளவுக்கு இருக்குமா?

1. அதற்கெல்லாம் அவசியம் இல்லை.

*

2. அறுவை சிகிச்சை கருவிகளைக் கையாள மூக்குக்கு உள்ளே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது. அப்படியில்லை என்றால் வாய்வழியாகக்கூட சைனஸ் அறைகளை அடைத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

*

3. எத்மாய்டு அல்லது ப்ரன்டல் சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமே, தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே லேசாகக் கிழிக்க வேண்டியிருக்கும். அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு தெளிவாகத் தெரியாதஅளவுக்கு மிக மிகச் சிறிதாக இருக்கும். கவலையே வேண்டாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

*

by - - டாக்டர் ரவி ராமலிங்கம்

***

நன்றி குமுதம்.
நன்றி மருத்துவம்.


***
"வாழ்க வளமுடன்"

***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பல் சொத்தை: பாதரசம் பயன்படுத்த தடை!

பல் சொத்தையை அடைக்க பயன்படும் பாதரசம் உடலில் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த சிகிச்சை முறைக்கு விரைவில் தடை விதிக்கப்படவுள்ளது.



பல் மருத்துவத்துறையில் பாதரசம் முக்கியப் பங்காற்றுகிறது. பல் சிதைவு மற்றும் பல் சொத்தைகளை நிரந்தமாக அடைக்க பாதரசம், வெள்ளி கலந்த உலோகக் கலவை பயன்படுத்தப்படுகிறது.

*

இந்த கலவை மூலம் பல் சொத்தையை அடைப்பதால், பாதரசம் நரம்பு வழியாக ஊடுருவி உடலில் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

*

குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களும், வயிற்று வளரும் சிசுவும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகளுக்கும் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

*

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து நுகர்வோர் குழுக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

*

இதன் காரணமாக, பாதரசத்தை பயன்படுத்தி பல் சொத்தைகளை அடைக்கும் சிகிச்சை முறைக்கு விரைவில் தடை விதிக்கப்படவுள்ளது.

*

இதுதவிர, மருத்துவத் துறையில் பாதரசத்தை பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு புதிய விதிமுறைகளும் விதிக்கப்பட உள்ளன.


***

http://in.tamil.yahoo.com/Health/News/0806/06/1080606027_1.htm

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பல் சொத்தைப் பற்றி....!

பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா?




ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.

*


சரி பல் சொத்தை பற்றி நமது யோகா ஆசிரியர் சுப்ரமணியம் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

1. பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஏற்படும்.

*

2. மேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன.

*

3. காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன.

*

4. பற் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும்.

*

5. அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேத் தேய்க்க வேண்டும். ஆனால் பலரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது.


*

6. ப‌ல் தே‌ய்‌ப்பது ம‌ட்டு‌ம் மு‌க்‌கியம‌ல்ல.. வாயை ந‌ன்கு கொ‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். இ‌ர‌வி‌ல் படு‌க்க‌ச் செ‌ல்லு‌ம் மு‌ன்பு உ‌ப்பு‌த் த‌‌ண்‌ணீ‌ரா‌ல் வா‌யை கொ‌ப்ப‌ளி‌ப்பது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

*

7. ஈறு ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌டாம‌ல் இரு‌க்க, ஈறுகளு‌க்கு ந‌ல்ல ர‌த்த ஓ‌ட்ட‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம். எ‌ந்த‌ப் பகு‌‌தி‌க்கு‌ம் ர‌த்த ஓ‌ட்ட‌ம் குறையு‌ம் போதுதா‌ன் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌கிறது. கா‌ய்க‌றிக‌ள், பழ‌ங்களை ந‌ன்கு கடி‌த்து மெ‌ன்று சா‌ப்‌பிடுவது ஈறு‌ப்பகு‌திகளு‌க்கு ந‌ல்ல ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.

*

8. அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வத‌ற்கு‌க் கூட சொ‌த்தை‌ப் ப‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு ‌சில அறுவை ‌சி‌‌கி‌ச்சைகளை செ‌ய்ய மா‌ட்டா‌ர்க‌ள். சொ‌‌த்தை‌ப் ப‌ல்லை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு‌‌த்தா‌ன் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வா‌ர்க‌ள். ‌நீ‌‌ரி‌ழிவு என‌ப்படு‌ம் ச‌ர்‌க்கரை ‌வியா‌தி‌க்கு இரு‌க்கு‌ம் அனை‌த்து ‌விஷய‌ங்களு‌ம் சொ‌த்தை‌ப் ப‌ல்லு‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம்.

*

9. சா‌ப்‌பிடு‌ம் போது ந‌ன்கு ‌மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் உண‌வி‌ல் அ‌திகள‌வி‌ல் உ‌மி‌‌ழ்‌நீ‌ர் சே‌ர்‌‌ந்து உணவு செ‌ரிமான‌த்‌‌தி‌ற்கு உத‌வு‌கிறது. அதே‌ப்போல சா‌ப்‌பி‌ட்டது‌ம் வாயை ந‌ல்ல த‌ண்‌ணீ‌ரி‌ல் கொ‌ப்ப‌ளி‌த்து அ‌ந்த ‌நீரை து‌ப்‌பி‌விட‌க் கூடாது. முழு‌ங்‌கி‌விட வே‌ண்டு‌ம். இதுவு‌ம் செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.

*

10. அ‌ந்த கால‌த்‌தி‌ல் சா‌ப்‌பி‌ட்டு முடி‌ந்தது‌ம் வெ‌ற்‌றிலை பா‌க்கு போடுவா‌ர்க‌ள். வெ‌ற்‌றிலை‌க்கு செ‌ரிமான‌த் ‌திறனு‌ம், ச‌ளியை‌ப் போ‌க்கு‌ம் ச‌க்‌தியு‌ம் உ‌ள்ளது. வெ‌ற்‌றிலை‌ப் பா‌க்கு‌ப் போ‌ட்டா‌ல் அ‌ந்த சாறையு‌ம் து‌ப்‌பி‌விட‌க் கூடாது.

*

11. தா‌ய், த‌ந்தைய‌ரி‌ல் இருவரு‌க்கோ அ‌ல்லது யாரேனு‌ம் ஒருவரு‌க்கோ ‌ப‌ல் சொ‌‌த்தை இரு‌ந்தா‌ல், அவ‌ர்களது ‌பி‌ள்ளை‌க்கு‌ம் ப‌ல் சொ‌த்தை க‌ண்டி‌ப்பாக வரு‌ம். அதனை த‌வி‌ர்‌க்க முடியாது. அ‌ப்பாவை ‌விட, அ‌ம்மா‌வி‌ற்கு ப‌ல் சொ‌த்தை இரு‌ந்தா‌ல் குழ‌ந்தை‌க்கு வர அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன.

*

12. ப‌ல்சொ‌த்தை‌க்கு ச‌ர்வா‌ங்காசன‌ம், ‌சிரசாசன‌ம் செ‌ய்தா‌ல் ‌பி‌ர‌ச்‌சினை குறையு‌ம். ‌சிரசாசன‌ம் செ‌ய்யு‌ம் போது ப‌ல் சொ‌த்தை மாறுவது க‌ண்கூடாக‌த் தெ‌ரியு‌ம். பொதுவாக ப‌ற்களை ‌பிடு‌ங்க‌க் கூடாது எ‌ன்பா‌ர்க‌ள். ‌கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் புடு‌ங்கவே‌க் கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல், நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.

*

13. த‌ற்போது சொ‌த்தை‌ப் ப‌ற்க‌‌ளி‌ன் வே‌ர்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்து சொ‌த்தையை ச‌ரி செ‌ய்யு‌ம் முறை வ‌ந்து‌ள்ளது. அ‌தி‌ல்லாம‌ல் ஒரு ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கி‌வி‌‌ட்டா‌ல் அ‌ந்த இட‌த்‌தி‌ல் செ‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்துவது‌ம் ந‌ல்லது. ஏ‌ன் எ‌னி‌ல் ‌கீ‌ழ்‌ப்ப‌ல்லை‌ப் ‌பிடு‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் அதனா‌ல் மே‌ல் ப‌ல் இற‌ங்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனை‌த் த‌வி‌ர்‌க்கவே செ‌‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்த‌ப்படு‌கிறது.

*

14. ப‌ற்களு‌‌க்கு ப‌ச்சை‌க் கா‌‌ய்க‌றிகளை அதாவது கேர‌ட், வெ‌ள்‌ள‌ரி‌க்கா‌ய் போ‌ன்‌ற‌வ‌ற்றை‌க் கடி‌த்து மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் ந‌ல்ல ப‌யி‌ற்‌சி ‌கிடை‌க்கு‌ம்.

*

15. ஆ‌‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் ப‌ற்‌றி:


ஆ‌யி‌ல் ‌பு‌ல்‌லி‌ங் எ‌ன்பது‌ம் ப‌ற்களு‌க்கு ந‌ன்மை தர‌க்கூடியதுதா‌ன். வெறு‌ம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் கூட செ‌ய்யலா‌ம். ஆனா‌ல் வார‌த்‌தி‌ல் ஒரு நா‌ள் ம‌ட்டுமே ஆ‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் செ‌‌ய்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.


***
நன்றி வெதுப்னியா.
***

"வாழ்க வளமுடன்"

***

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிறுநீரகச் செயலிழப்பு வந்துவிட்டால்உணவில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம்....

சிறுநீரகச் செயலிழப்பு வந்துவிட்டால் முழுவதும் செயலிழக்காமல் இருப்பதற்கு தினசரி உணவில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்.




டாக்டர் ஆர்.வெங்கட்ராமன் அவர்களிடம் சந்தித்துத் தெரிந்துகொண்ட விவரங்களை அடிப்படையாக வைத்தே உணவு, டயட் பற்றிய விவரங்களைத் தந்துள்ளேன்.

*

எந்த நோயாளியாக இருந்தாலும் முதலில் தனது உடலின் நோயின் தன்மையைப் பற்றித் தெரிந்துகொள்வது மிக முக்கியம். டாக்டர் சொன்ன உணவுக் கட்டுப்பாட்டைச் சரிவர செயல்படுத்தாவிடில் நஷ்டமடைவது நோயாளிதான் எனத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

*

அதே நேரம் ஒவ்வொரு நோயாளியின் உடல் நிலையும் வித்தியாசப்படும். ஒருவருக்கு கொடுத்த ‘டயட்’ மற்றவருக்கு சரிவராது எனப் புரிவதும் அவசியம். டாக்டரின் பரிந்துரையின் பேரில், தினப்படி உணவில் கலோரிகள் கணக்கிடப்பட வேண்டும்.

*

எந்த அளவு புரதம், சோடியம், பொட்டாசியம், தண்ணீர் போன்றவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் ‘டயட்டீஷியன்’ கூறியபடி எந்தக் காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும், எதை மிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பின்பற்றுவதும் தங்கள் பழுதடைந்த சிறுநீரகம் மேலும் விரைவாகப் பழுதடையாமல் காப்பாற்ற உதவும் என்று புரிந்துகொள்ளுங்கள்.

*


நோயாளி மட்டுமின்றி அவருக்காக உணவு சமைப்பவருக்கும் இதைப் பற்றி முழுவதும் தெரிந்திருக்க வேண்டும். தினமும் எந்த அளவு பருப்பு, பயறு, தானியம், காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தெரிந்து கொள்ளவும். (ஒரு நாள் முழுவதற்கும்) அதற்குத் தகுந்தபடி உணவில் மாற்றங்கள் செய்யவும்.

***


சிறுநீரகம் பழுதடைந்த நேயாளிக்கான உணவுகள்:



1. முதலில் உப்பை குறைக்கச் சொல்வர். அதனால் ஊறுகாய், காரம் அதிகமுள்ள துவையல் தவிர்க்கப்பட வேண்டும்.

*

2. கலோரிகள் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதால் பொரித்த பண்டங்கள், அதிக நெய், சர்க்கரை சேர்க்கும் இனிப்புகள், கேக், பிஸ்கட், ஜாம், ஜெல்லி எல்லாவற்றையும் தவிர்க்கவேண்டும்.

*

3. கோகோ, சாக்லேட் எடுத்துக்கொள்ளக் கூடாது.

*

4. டின்னில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தக்காளி சாஸ், கெட்ச்_அப் முதல் ஸ்குவாஷ், பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஜூஸ், இளநீர் எல்லாவற்றிலும் சோடியம், பொட்டாசியம் அதிகம் இருக்குமென்பதால் அவற்றைத் தவிர்ப்பது நலம்.

*

5. காய்கறிகளில் டாக்டர் குறிப்பிட்ட காய்கள் மட்டும் (நோயாளியின் உடல் நிலைக்கேற்ப) எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.

*

6. பச்சைக் காற்கறிகளில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் வேக வைத்து தண்ணீரை வடித்து காய்கறிகளை உண்பது அவசியம். (வேக வைத்து தண்ணீரை வடித்துவிட்டால் பொட்டாசியம் தண்ணீரில் கரைந்து வந்துவிடும். வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு இந்தத் தண்ணீரை சமையலில் சேர்த்துக் கொள்ளவும். வீணாக்க வேண்டாம்.)

*

7. சிறுநீரகம் செயலிழப்புக்கு ஆளாகியிருக்கும் நோயாளிகள் மது, மாமிசம், சிகரெட் மூன்றையும் தொடாமலிருப்பது அவசியம்.

*

8. டாக்டரை உங்கள் தோழனாக நினைக்கவும். (அவருக்கென்ன, இதைச் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிடக்கூடாது என்று சுலபமாகக் கூறிவிடுவார். யாரால் அப்படியிருக்க முடியும்? _ இது எல்லா நோயாளிகளின் வாயிலிருந்தும் வரும் வார்த்தைகள்) நம் நல்லதிற்குத்தான் அவர்கள் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும்.

***



இனி தங்களுக்காக ஒரு சில செய்முறைக் குறிப்புகள்:

1. வெந்தயக் கீரை, கேழ்வரகு காரடை:

1. இந்த உணவு ஆவியில் வேக வைப்பது. அதனால் எண்ணெய் எதுவுமே சேர்ப்பதில்லை. சுலபமாக ஜீரணமாகும்.

*


2. ஒர ஆழாக்கு கேழ்வரகு மாவை வெறும் வாணலியில் இலேசாக வறுத்துக் கொள்ளவும். (நிறம் மாறாமல்)

*


3. ஒரு சிறு கட்டு வெந்தயக் கீரையை உருவிக் கொள்ளவும். வெள்ளை காராமணிப் பயறு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து குக்கரில் ஒரு விசில் சத்தம் வரும் வரை வேக வைக்கவும். (வெந்த பின் ஆழாக்கு அளவு இருக்கவேண்டும்.)

*

4. வறுத்த மாவுடன், கீரை, வேகவைத்த காராமணி, சிறிது மிளகாய்த் தூள், உப்பு (டாக்டரின் பரிந்துரையின் பேரில் சிறிதளவு சேர்க்கலாம் என்பவர்கள் சேர்த்துக்கொள்ளவும்.) சேர்த்து கலந்து சுடுதண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பதமாகப் பிசையவும்.

*


5. இதை சிறு உருண்டைகளாக (15 உருண்டைகள் வரும்படி) உருட்டி கால் அங்குல கனத்திற்கு அடை போல வாழையிலையில் தட்டவும். இலையோடு அப்படியே ஆவியில் இட்லி போல பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

*

இந்த அளவிற்குச் செய்தால் பதினைந்து அடைகள் கிடைத்தால் ஒரு காரடையில் உள்ள சத்துக்கள்:

கலோரிகள் _ 46

மாவுச்சத்து _ 9.5 கிராம்

புரதச்சத்து _ 1.5 கிராம்,

பொட்டாசியம் _ 10.6 மி.கிராம்

சோடியம் _ 10.2 மி.கிராம்(உப்பு சேர்க்காமல் கணக்கிட்டால்)

***



2. முள்ளங்கி சட்னி:

1. கால் கிலோ சிகப்பு முள்ளங்கியைத் துருவி தனியே வைக்கவும். ஒன்றரை டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையோடு, சிகப்பு மிளகாய் (அவரவர் காரத்திற்குத் தகுந்தபடி) சிறு நெல்லிக்காயளவு ஊற வைத்த புளி, ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய், பெருங்காயப் பொடி, உப்பு சேர்த்து அரைத்து கடைசியாக முள்ளங்கியையும் சேர்த்து அரைத்தெடுக்கவும். தாளிக்க வேண்டாம்.

*


2. இந்த அளவின்படி அரைத்தால் கிட்டத்தட்ட பதினைந்து டேபிள் ஸ்பூன் சட்னி வரும். உப்பு சேர்க்காமல் அரைத்து சிறுநீரக நோயாளிகளுக்கு தனியாக எடுத்துவைத்துவிட்டு மற்றவருக்கு உப்பு சேர்க்கலாம். அல்லது அவர்களுக்குக் குறைவாகச் சேர்க்கலாமென்றால் உப்பு இல்லாமல் எடுத்துவிட்டு பிறகு உப்பு சேர்த்த சட்னியில் இருந்து சிறிதளவு எடுத்து உப்பு சேர்க்காத சட்னியுடன் கலந்து தனியே வைக்கவும்.

*

3. உப்பைச் சேர்க்காமல் கணக்கிடும்போது ஒரு டேபிள் ஸ்பூன் சட்னியில் உள்ள சத்துக்கள்

கலோரிகள் : 15.9

புரதம் : 2.2 கிராம்

மாவுச்சத்து : 0.5 கிராம்

கொழுப்பு : 0.55 கிராம்

சோடியம் : 11.6 மி.கிராம்

பொட்டாசியம் : 11.1 மி.கிராம்

சிறுநீரகம் பழுதுபட்ட நோயாளிகள் மதிய உணவில் சாம்பார் போன்றவை ஓரளவாவது எடுத்துக்கொள்ள வேண்டும். முழுமையாக புரதத்தைத் தவிர்த்தால் உடல் மெலிந்து, நடக்கக் கூட சக்தியில்லாமல் அவதிப்படுவர். தாவரப் புரதங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளையத் தேவைக்கும் மேலே எடுத்துக் கொள்வதுதான் தவிர்க்கப்பட வேண்டும்.

***


இனி தங்களுக்காக ஒரு கலவை சாதம்:

தக்காளி பாத்

1. நூறு கிராம் தக்காளியில் 12.9 மி.கி. சோடியம், 146 மி.கி. பொட்டாசியம் உள்ளது.

*

2. வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு தக்காளி அதிகம் சேர்த்தால் சிறுநீரக நோயாளிகளுக்கு வெங்காயம், பூண்டு, தக்காளி குறைவாகச் சேர்த்து சாதம் செய்யவும்.

*

3. அரை ஆழாக்கு அரிசியை உதிரியாக வேக வைத்து ஆறவிடவும். ஒரு வெங்காயம், இரண்டு தக்காளி, மூன்று பச்சை மிளகாய் அரிந்துகொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவும். நான்கு பல்லு பூண்டை உரித்து அரியவும்.

*

4. வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்து பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். அதோடு அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு விழுதானதும் வேகவைத்த பட்டாணி, பரிந்துரைக்கப்பட்ட உப்பு, ஆறவைத்த சாதம் சேர்த்து நன்கு சூடாகும் வரை கலந்துவிடவும்.

*

5. இதை இரண்டு நபருக்கு பரிமாறினால் ஒரு நபருக்கு கிடைக்கும் சத்துக்கள்:

புரதம் : 5.2 கிராம்

சக்தி : 287 கலோரிகள்

மாவுச்சத்து : 44.1 கிராம்

கொழுப்பு : 7 கிராம்

சோடியம் : 8.1 மி.கி.

பொட்டாசியம் : 223 மி.கி.

இதில் தக்காளியை சுடுதண்ணீரில் போட்டு எடுத்து தண்ணீரை வடித்துவிட்டால் ஓரளவு பொட்டாசியம் குறையும். பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து தண்ணீரை வடிக்கும்போதும் ஓரளவு பொட்டாசியம் குறைந்துவிடும்.

***

பூண்டுக் குழம்பு

1. பூண்டில் சோடியம், பொட்டாசியம் இரண்டுமே இல்லை. நல்ல மருத்துவக் குணங்கள் உள்ளதால் தினப்படி உணவில் நோயாளிகள் சேர்த்துக் கொள்ளலாம்.

*

2. மூன்று முழுப் பூண்டை (மலைப்பூண்டு அல்லது நாட்டுப்பூண்டு) உரித்து பல் பல்லாக எடுத்துக் கொள்ளவும். நூறு கிராம் சிறிய வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். எலுமிச்சையளவு புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். ஒன்றரை டீஸ்பூன் மிளகை வறுத்து கரகரப்பாக பொடிக்கவும். உரித்த சிறிய வெங்காயம் ஐந்துடன் ஒரு தக்காளியைச் சேர்த்து கரகரப்பாக அரைத்து வைக்கவும்.

*

3. வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம் ஆகியவை சேர்த்துத் தாளித்து பூண்டு, சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக பொன்னிறமானதும், அரைத்த விழுது, மிளகுத்தூள், சிறிது தனியாத்தூள் சேர்க்கவும். வாசனை வரும்போது புளிக் கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். சாதத்துடனும் பரிமாறலாம், இட்லியுடனும் பரிமாறலாம்.

*

4. சிறிய கப்பில் எட்டு கப் அளவு குழம்பு கிடைத்தால், ஒரு கப் அளவில் கிடைக்கும் சத்துக்கள்

சக்தி _ 73 கலோரிகள்

மாவுச் சத்து _ 11.3 கிராம்

புரதம் _ 2 கிராம்

கொழுப்பு _ 2.2 கிராம்

சோடியம் _ 0.8 மி. கிராம்

பொட்டாசியம் _ 9.0 மி. கிராம்

5. பொதுவாக மதிய உணவுக்கு பொரியல் வகைகளைச் செய்யும்போது, சௌ_சௌ, புடலங்காய், பீர்க்கங்காய், பட்டாணி, மாங்காய், நூல்_கோல், அகல அவரை, முள்ளங்கி, பீட்ரூட், வெந்தயக் கீரை போன்றவைகளில் பொட்டாசியம் ஓரளவு குறைவாக உள்ளதால் (100 கிராம் காய்கறிகளில் 100 மி.கிராம் அதற்குக் குறைவாகவும்) இந்தக் காய்கறிகளில் பொரியல் செய்யலாம். வேகவைத்த தண்ணீரை வடித்துவிட்டு பொரியல் செய்யவும்.

*

6. அரிசியில் சோடியம், பொட்டாசியம் இரண்டுமே இல்லாததால், தினமும் குறிப்பிட்ட அளவு உண்ணலாம். (புழுங்கலரிசி மற்றும் பச்சரிசி இரண்டிலும்) கீரை வகைகளில் புதினா, கறிவேப்பிலை, முட்டைகோஸ், பொன்னாங்கண்ணி, முள்ளங்கி இலை, புளியம் இலை இவைகளில் சோடியம், பொட்டாசியம் இரண்டுமே அறவே இல்லாததால் இவற்றை உபயோகித்து விதவிதமான சாத வகைகள், ருசியான பொடி வகைகள் செய்யலாம்.

**

உதாரணத்திற்கு:

கறிவேப்பிலைப் பொடி:

1. கறிவேப்பிலையை உருவி நன்றாகக் கழுவி வடித்து ஒரு துணியின் மீது பரப்பி நிழலில் நன்கு காய விடவும்.

*

2. இலையில் ஈரமில்லாமல் நன்கு உலர்ந்தபின் ஒரு அடி கனமான வாணலியில் சிறிதுசிறிதாக வறுக்கவும். நன்கு கரகரப்பானதும் எடுத்து தட்டில் கொட்டவும். எல்லா இலையையும் வறுத்து, மொரமொரப்பானதும் மிக்ஸியில் பொடி செய்யவும்.

*

3. இந்தப் பொடி இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு இருந்தால் கால் ஆழாக்கு கடலைப் பருப்பு, கால் ஆழாக்கு உளுத்தம் பருப்பு, 20 சிகப்பு மிளகாய், பூண்டு உரித்தது 10 பற்கள், புளி, சிறிய நெல்லிக்காயளவு, ருசிக்கேற்ப உப்பு தேவை.

*

4. மிளகாயை மட்டும் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுக்கவும். வாணலி சூடாக இருக்கும்போது புளியைப் பிய்த்து அதில் சிறிதுநேரம் போட்டு வைத்தால் ஈரமில்லாமல் இருக்கும்.

*

5. முதலில் மிளகாய், வறுத்த பருப்பு வகைகள், உப்பு போட்டு மிக்ஸியை ஒரு தடவை லேசாக ஓடவிட்டு அதோடு புளி, கறிவேப்பிலைப் பொடி, பூண்டு சேர்த்து மறுபடி ஒரு தடவை எல்லாம் ஒன்றாக பொடி ஆகும் படி விட்டுவிட்டு மிக்ஸியை ஓடவிடவும்.

*

6. இதேபோல புளியம் இலை (துளிர்) புதினா போன்றவை உபயோகித்தும் செய்யலாம். கடலைப் பருப்பிற்கு பதில் எள் உபயோகிக்கலாம். சிறுநீரக நோயாளிகளுக்காக உப்பைக் குறைத்துச் சேர்த்து தனியே எடுத்துவிட்டு மீதியுடன் தேவையான உப்பை மற்றவர்களுக்காக சேர்த்துக் கொள்ளலாம்.

*

7. குறைவான புரதம், தேவைக்கேற்ற மாவுச்சத்து, கொழுப்பு குறைவான, திரவம் பரிந்துரைக்கப்பட்ட, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு தினமும் மாத்திரை வடிவில் வைட்டமின் ‘சி’ டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அவசியமாக மறக்காமல் நோயாளிகள் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

*

8. உணவு முறையில் சரியாகக் குறிப்பிட்டுள்ளபடி டாக்டரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளும் மாற்றங்கள் சிறுநீரகங்கள் சீக்கிரமாக மேலும் பழுதடையாமல் இருக்க உதவிபுரியும்.

*

9. பொதுவாக சிறுநீரகம் பழுதுபட்ட நோயாளிகள், விலங்குகளிலிருந்து பெறப்படும் முதல்தர புரதமான மாமிசம், முட்டை, பால் அதிலிருந்து பெறப்படும் பொருட்களில் உள்ளது அவை குறைக்கப்பட வேண்டியது அவசியம். தாவரப் புரதமான பருப்பு, பயறு வகைகள், தானியங்கள், கீரை, காய்கறிகள் இவற்றிலிருந்து பெறப்படும் இரண்டாம் தர புரதம் எடுத்துக் கொள்ளலாம்.

***

மேலும் சில:


1. பொதுவாகவே நோய் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் சரியான உணவு முறை, மருந்து இவற்றால் மேலும் நோய் முற்றாமல் பல வருடங்கள் உடலைப் பாதுகாக்க இயலும்.


*

2. கடந்த இதழில் நான் எழுதிய அட்டவணைகளைப் பத்திரமாக வைத்துக்கொண்டு என்னென்ன காய்கறிகள் ஒரு நாளுக்குச் சேர்க்கலாம் எனத் தெரிந்து கொள்ளவும். எவ்வளவு தானியம், பருப்பு, எண்ணெய் சேர்க்கலாமென டாக்டர் மற்றும் டயட்டீஷியன் பரிந்துரையின்படி உணவு அட்டவணை தயாரிக்கவும்.

*



3. நமது தென்னிந்திய சமையலில் இட்லி, தோசை வகைகளிலேயே நூற்றுக்கணக்கில் உள்ளது. மதிய உணவுகளில் குழம்பு, பொரியல், ரசம் போன்றவைகளிலும் நூற்றுக்கணக்கான செய்முறைக் குறிப்புகள் உள்ளது.

*

4. தெரியாதவர்களுக்காக இவற்றை புத்தக வடிவில் எங்களைப் போன்றவர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். அதை ஒரு வழிகாட்டியாகக் கொண்டு சரியான உணவை, சரியான அளவில் தேர்ந்தெடுத்து உண்டால் எந்தவிதமான உடல் உபாதைகளும், அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் சுலபமாக சமாளித்து சந்தோஷமாக வாழலாம்.


***

நன்றி குமுதம் ஹெல்த்

***




"வாழ்க வளமுடன்"


***

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கால்களையும் கொஞ்சம் கவனியுங்கள் !

மனித உறுப்புக்களில் முக்கியமானவற்றில் ஒன்று கால்கள்.





மொத்தம் 52 எலும்புகளின் ஒத்துழைப்போடு கால்கள் செயல்பட்டு வருகின்றன. 33 மூட்டுக்கள் உள்ளன. 38 தசைநார்கள் கால்களை இயக்க செயல்படுகின்றன.

*

"மனிதனின் கால்கள் இயங்கும் விதம் ஆச்சரியமளிக்கிறது. அது இயற்கையின் ஒரு அற்புதமான படைப்பு' என்று மருத்துவர்கள் கூறுவர்.

*


கால்களை பொறுத்தவரையில் மொத்தம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் வியர்வை சுரப்பிகள் செயல்படுகின்றன. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் முறை அடி எடுத்து வைத்து நடப்பதாக ஆய்வுகள் கூறி ஆச்சரியப்படுத்துகின்றன.

*

தன் ஆயுள் காலத்தில் கால்களை பயன்படுத்தி ஒருவர் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கி.மீ., துரத்தை கடக்கிறார் என்பதும் கூடுதல் செய்தி.

*


மனித உறுப்புகளிலேயே கால்கள் தான் அதிகமான எடையை எப்போதும் தாங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. மனிதன் சுமக்கும் கூடுதல் எடைகளையும் கால்கள் மட்டுமே தாங்கிக் கொள்கின்றன.

*

அதுமட்டுமல்லாமல், ஒரு மனிதனின் உடலில் ஏற்படும் நீரிழிவு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த ஓட்டத்தில் குறைபாடு போன்றவைகளுக்கு கால்களும் ஒரு காரணமாகவே உள்ளன.

*


இப்படி பல்வேறு வகைகளில் முக்கியமான கால்களில் பிரச்னை ஏற்படுவது பொதுவானது. ஆனால், அவை பெரும்பாலான மக்களால் அலட்சியப்படுத்தப்படுகின்றன. கால்களை சரிவர பராமரிக்காவிட்டால் அது உடலில் பல்வேறு பாகங்களை பாதிக்கும் என்று மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. குறிப்பாக நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம்.

*


"உங்களுடைய கால்கள் ரணமானால், உங்களுடைய உடம்பும் ரணமாகும்' என்பது ஒரு மருத்துவ பழமொழி. எனவே, கால்களை பராமரிக்க வேண்டியது மிக அவசியம்.

*

பொதுவாக, கால்களில் வெடிப்பு, பூஞ்சாள பாதிப்பு, ஆணி, தட்டைக்கால், கொப்புளங்கள், உலர்ந்த தோல் போன்ற பாதிப்புக்கள்தான் அதிகமாக தென்படுகின்றன.

*


ஈரப்பதம் குறைவாகும் காரணத்தால் கால்களில் உள்ள தோல் பகுதியில் வறட்சி ஏற்படுகிறது. பாதங்களில் ஏற்படும் வெடிப்பு காரணமாக, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், வெடிப்பு காரணமாக தாங்க முடியாத வலியும் ஏற்படும்.

*


கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது.

*

இந்த கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் "அல்சராக' மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

*


ஒவ்வொருவரும் மற்ற உறுப்பு களைப் போலவே கால்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். கால்களை பராமரிப்பதற்காக டாக்டர் ஸ்கூல்ஸ் என்ற வெளிநாட்டு நிபுணர் கூறிய சில "டிப்ஸ்'.

***

இதோ:

1. கால்களில் வலி ஏற்பட்டால் அது மற்ற நோய்க்கு அறிகுறி என்பதால் அதை அலட்சியப்படுத்தாதீர். உடனே மருத்துவரை பாருங்கள்.

*

2. தினமும் கால்களை வெதுவெதுப்பான நீரில் சோப் மூலம் சுத்தம் செய்யுங்கள். இந்த முறையில் கால்களை நீரில் மூழ்க வைக்காதீர். அது வறட்சியை ஏற்படுத்திவிடும்.

*

3. ஈரமான கால்களை துடைக்கும் போது மறக்காமல் கால் விரல்களுக்கு இடையில் உள்ள பாகத்தையும் சுத்தப்படுத்துங்கள். அப்போதுதான் பூஞ்ச காளான் பாதிப்பில் இருந்து கால்கள் தப்பிக்கும்.


*


4. துடைத்த பின்னர் விரல் இடுக்குகளை தவிர மற்ற இடங்கள் அனைத்திலும் ஈரப்பதம் தரும் கிரீம்களை தடவுங்கள். இது வெடிப்புக்கள், தோல் உலர்ந்து போதல் போன்ற பாதிப்புக்களை தடுக்கும்.

*
5. கால்களில் காய்ந்த பகுதிகள் ஏதேனும் தென்பட்டால் அதை பக்குவமாக அகற்றி விடுங்கள். கால் ஆணி, கால் கட்டி போன்றவை தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அவற்றை அகற்றி விடுங்கல்.

*

6. நீங்களாகவே இவற்றை அகற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்; அது வேறு உபாதைகளுக்கு வழிவகுக்கும்.

*


7. குறிப்பிட்ட நாட்களில் கால் விரல் நகங்களை அகற்றுங்கள். இதற்காக பிளேடு, கத்தி போன்றவற்றை பயன்படுத்தாமல், "நெய்ல்கட்டர்'களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

*

8. வெறும் காலில் நடப்பதை தவிருங்கள். புதிய காலணிகளை குறிப்பாக ஷக்களை வாங்கும் போது உங்கள் கால் அளவை விட கொஞ்சம் பெரியவையாக வாங்கி பயன்படுத்துங்கள்.

*


9. இறுக்கமான காலணிகள் அணிவதை தவிருங்கள். காட்டன் "சாக்ஸ்'களை மட்டுமே பயன்படுத்துங்கள். ஹீல்ஸ் காலணிகள் எப்போதும் ஏற்புடையதல்ல.

*


10. இதை பின்பற்றினாலே போதும், கால்களால் எந்த பிரச்னையும் வராது.

***

எழுதியவர்: எஸ்.உமாபதி
நன்றி: தினமணி

***

"வாழ்க வளமுடன்"


***

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இவை உடலுக்கு குளிரவைக்கும் பானங்களா?

பெப்சி, கோகோகோலா உள்ளிட்ட சில குளிர்பானங்களில் அதிக அளவில் நச்சுப்படிவங்கள் உள்ளதாக தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுசூழல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


பெப்சி உள்ளிட்ட 12 குளிர்பான நிறுவனத் தயாரிப்புகளை உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று மக்களவையில் பல உறுப்பினர்கள் வாதிட்டார்கள்.

*

இதையடுத்து பெப்சி, கோககோலா பானங்களின் விற்பனை நாடாளுமன்ற வளாக உணவகங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அண்ணபல்கலைக்கழகமும் இந்த முடிவை எடுத்துள்ளது.

*

தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசுகளும் மற்றும் மத்திய அரசும் இந்தக் குளிர்பானங்கள் மீதான முழுமையான தடையை விதிக்க பரிசீலித்து வருகின்றன.

*


பெப்சி, கோககோலா உள்ளிட்ட பானங்களில் நச்சுப்படிவங்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக ஆரம்பம் முதல் இருந்து வருகிறது. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் இந்தக் குளிர்பானங்கள் சமூக அந்தஸ்த்தின் குறியீடாகவும் மாற்றியமைக்கப்பட்டு புதிய கலாசாரமயமாக்கத்துக்கும் வித்திட்டுள்ளது.

*

ஆனால் இந்தப் பானங்களால் ஏற்படக் கூடிய விளைவுகளை சுட்டிக்காட்டும் போது பலரும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.
பெப்சி, கோககோலா மட்டுமல்ல தம்ஸ் ஆப், செவன் அப், மிரிண்டா, ·பேண்டா, லிம்கா என இந்தப் பானங்களின் வரிசை மிகவும் நீளமானது.

*

இந்த நீண்ட வரிசையைப் போலவே இவற்றால் ஏற்படக்கூடிய தீங்குகளும் நீளமானது. ஆனால் இந்தப் பாதிப்புகள் நமக்குத் தெரிவதில்லை. அந்தளவிற்கு இவை மீதான தாக்கம் ஆர்வம் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர்பூடகங்கள் இந்தப் பானங்களின் நுகர்வுக் கலாசாரமயமாக்கலின் முதன்மையான இடம் வகிக்கின்றது.

*


செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இரசாயன அமிலங்களே இம்மென்பானங்களில் புதுத்துணர்வு தரும் சுவையூட்டிகளாக சேர்க்கப்படுகின்றன. இனிப்புச் சுவையை நிலைப்படுத்துவதிலும் இந்த அமிலங்கள் பயன்படுகின்றன.

*

பொதுவாக மென்பானங்களில் சிட்ரிக் அமிலம் பாஸ்பரிக் அமிலம் சில சமயங்களில் மாலிக் அல்லது தாத்தாளிக் அமிலங்கள்கூட சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கை அமிலங்கள் எல்லாமே உடலைப் பாதிக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை.

*


இந்த அமிலங்கள் பற்களில் பாதுகாப்புப் பூச்சான எனாமலை அரிக்கக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன. மென்பானங்கள் குடித்து ஒரு மணிநேரம் வரை இந்த அரிப்பு நீடிக்கலாம். (குடித்தவுடன் பற்கள் கூசுகின்ற சங்கதி இதுதான்) மெனபானங்களின் மூலம் உடலில் சேரும் பாஸ்பரிக் அமிலம் கடைசியில் சிறுநீருடன் வெளியேறும் போது தனியாக வெளியேறுவதில்லை.

*

எலும்புகளிலும் பற்களிலும் இருக்கும் கால்சியத்தையும் பெயர்த்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு போய்விடுகிறது. கால்சியம் போதாத நிலையில் எலும்புகள் பலம்குன்றி கடைசியில் முறியும் நிலைக்கு போய்விடுகின்றன.

*


மென்பானங்கள் எல்லாவற்றிலுமே சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. உதாரணத்துக்கு 325 மில்லிலிட்டர் பெப்சியில் ஐந்தரை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) நாள் ஒன்றுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சர்க்கரையில் அளவு 8 தொடங்கி 11 தேக்கரண்டி அளவு என நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது.

*

ஒரு நாளில் நாம் அருந்தும் பால், தேநீர் மூலம் நமது உடலில் சேரும் சர்க்கரையின் அளவுடன் மென்பானங்களோடு சேர்ந்து வரும் சர்க்கரையின் அளவையும் கணக்கிட்டால் நிர்ணயித்த அளவைவிட நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு பன்மடங்கு அதிகம் என்பது தெரியவரும்.

*


சர்க்கரை அதிக அளவு உடலில் சேருவதை, சர்க்கரை தானே என்று இனிப்பான செய்தியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஊட்டச்சத்து ஆய்வாளரான விஞ்ஞானி மேஜான் யாட்கின் சர்க்கரையை 'வெள்ளை நச்சு'' என்று வர்ணித்து இருக்கிறார்.

*

சர்க்கரையானது பற்களில் பாக்டீரியா கிருமிகள் பெருக வாய்ப்பு அளிப்பதுடன் இதயநோய், தோல்வியாதி போன்றவற்றையும் ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

*


இயற்கைச் சர்க்கரையின் சேதாரம் இவ்வளவு என்றால் சிலவகை பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரைகளும் தம்பங்குக்கு தொல்லைகளைத் தருகின்றன.

*

குறைந்த கலோரியைக் கொண்ட டயட் (diet) குளிர்பானங்களில் செயற்கை இனிப்பான அஸ்பாடேம் (Aspaetame) எசல்பேம் (aceslfame) சாக்ரின் (Saccharine) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

*

மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அஸ்பாடேம் சர்க்கரையைவிட 200 மடங்கு அதிகான இனிப்பைக் கொண்டதாகும். இவை தலைவலி, ஞாபகமறதி, வயிற்றுபோக்கு, பார்வை மங்கல், குருடு போன்றவற்றை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

*


வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஒன்லி மிருகங்களின் மீது நடத்திய ஆய்வுகளில் இருந்து அஸ்பாடேம் மூளைப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளை கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

*


காபி, தேநீர் போன்றவற்றில் கா·பின் cafein எனும் வேதிப்பொருள் இருப்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் கோககோலா பானத்தின் சுவையை அதிகரிப்பதற்காக கா·பின் பயன்படுத்துவது அதிகம். இது வெளியில் தெரியாத விஷயம். கா·பின் மத்திய நரம்புகளை மிகையாகத் தூண்டிவிடுகிறது. அதிகமான கா·பின் தூக்கமின்மை எரிச்சல், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றுக்கு வழிகோலிவிடுகிறது.

*


மென்பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் நிறமூட்டிகள் எவை என்பது பற்றி பாட்டில்களில் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் பெரும்பாலான சாயங்கள் புற்றுநோய்க்கு காரணமாய் உள்ளன என்பதே உண்மை. தார்ட்ராசின் எனப்படும் ஆரஞ்சு நிற சாயம் தோலில் அரிப்பு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு புற்றுநோய்க்கும் காரணமாகத் திகழ்வதாகக் கருதி இச்சாயத்துக்கு நார்வேயில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

*

கார்மேசின் (carmoisine) எனப்படும் சிவப்பு வர்ணம் உணவை நஞ்சடையச் செய்வதுடன் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவிலும் கனடாவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

*


சிங்கப்பூர் தனது பத்து ஆண்டு சுகாதார இயக்கத்தின் ஓர் அங்கமாக கோககோலா, பெப்சி போன்றவற்றுடன் சர்க்கரை அதிகம் கொண்ட பல குளிர்பானங்களை 1972ல் இருந்து கல்வி நிறுவனங்களில் விற்பதற்கு தடை செய்திருக்கிறது.

*


சமீபத்தில்கூட பிரான்சில் கோககோலா குடித்த பலருக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி ஏற்பட்டதால் பிரான்ஸ் தனது நாட்டில் கோககோலவின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

*

ஆக இந்திய அளவில் கோலா, பெப்சி போன்ற பானங்களுக்கு தடை விதிக்க எடுக்கும் முயற்சி ஒன்றும் புதுமை அல்ல. இவ்வளவு ஆபத்துகளையும் தன்னில் கரைத்துக் கொண்டு வரும் மென்பானங்களை இவ்வளவுநாள் அனுமதித்திருப்பது மோசமானது.

*


இந்த மென்பானங்கள் மீது தடைவிதித்தல் என்பதை பகிரங்கவிவாதப் பொருளாக்க வேண்டும். இவற்றால் விளையும் கேடுகள் பற்றி அறிவுபூர்வமான விழிப்புணர்வு வெகுசன மட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

*


மேலும் உள்ளூர் வளங்களைக் கொண்டு தயாரிக்கும் உள்ளூர் மென்பானங்களில் உற்பத்தியை பெருக்க கொள்கை ரீதியான முடிவுக்கு அரசு முன்வர வேண்டும்.

***
by-மதுசூதனன்
நன்றி:ஆறாம்திணை
http://www.yarl.com/forum/index.php?showtopic=658
***


"வாழ்க வளமுடன்"

***

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உணவு பொருட்களில் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் எவை

ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவு கழகத்தின் (National Institute of Nutrition) பல பணிகளில் ஒரு பணி, பல கடைகளில் மற்றும் உணவகங்களில் (Hotels) விற்பனையாகும் உணவுப்பொருட்களை சோதித்து அதில் கலப்படம் (Adulteration) இருக்கிறதா என்றும் சரியாக பதப்படுத்தப்படாமல் அவை கெட்டு போய் உள்ளனவா என்றும் சோதிப்பது.




கலப்படம் இல்லாத மற்றும் சரியாக பதப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களே சாப்பிட தகுதியானவை

*


அவ்வாறு சோதனைக்கு வந்த உணவு பொருட்களில் கலந்திருப்பதாக விஞ்ஞானிகள் ராமதாஸ் மூர்த்தி மற்றும் மோகன்ராம் ஆகியோர் 1984 ஆம் வருடம் கண்டுபிடித்த கலப்படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது

*


இதில் பாலில் நீர் சேர்ப்பதும், அரிசியில் கல் இருப்பதும் அறிந்திருப்பீர்கள். பிற விஷயங்கள் ஆச்சரியப்படுத்தும் !! சில அதிர்ச்சியளிக்கும்

***


உணவுப்பொருள் கலப்பட பொருள்


பால் - தண்ணீர், ஸ்டார்ச்
அரிசி - கல்
பருப்பு - கேசரி பருப்பு
மஞ்சள் பொடி - lead chromate
தானியா பொடி - சானி பொடி, ஸ்டார்ச்
நல்ல மிளகு - காய்ந்த பப்பாளி விதைகள்
வத்தல் பொடி - செங்கல் பொடி, மரப்பொடி
தேயிலை - மரப்பொடி, பொடிசெய்யப்பட்ட உளுந்து தோல், ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட தேயிலை
கொட்டை வடிநீர் - குழம்பி பொடி பேரிச்சம்பழ பொடி
பெருங்காயம் - மண், பிசின்
கடுகு - ஆர்ஜிமோன் விதைகள்
சமையல் எண்ணை - மினரல் எண்ணைகள், ஆர்ஜிமோன் எண்ணை
வெண்ணை - பிற கொழுப்புகள்
பச்சை பட்டானி - பச்சை சாயம்
நெய் - வனஸ்பதி

அதன் பிறகு 27 வருடம் ஆகி விட்டது. இப்ப எவ்வளவு புதிய கலப்பட பொருட்கள் உபயோகிக்கப்படலாம். மேலும் எவ்வளவு உணவு பொருட்களில் கலப்பட பொருட்கள் சேர்க்கப்படலாம் என்று சிந்தித்தால் வரும் பதில் கவலைப்படும் படியாகவே உள்ளது.

***

நன்றி பயணங்கள்.

***

"வாழ்க வளமுடன்"


***

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்

இந்திய மருத்துவ முறைகளான சித்தா,ஆயுர்வேதம்,யுனானி ஆகிய மூன்றிலும் ஒரே மூலிகைகளே வேறு வேறு பெயர்களில் அமைக்கப்படுகின்றது.

சுக்கு,மிளகு,திப்பிலி,மஞ்சள்,புளி,துளசி,பெருங்காயம்,ஆடாதொடை,பூண்டு,எள், கரிசலாங்கண்ணி இவை எல்லாமே மூலிகைகள் தாம்.




1.சுக்கு,மிளகு,திப்பிலி

இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

*


2.இஞ்சி

தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

*


3.புளி

சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

*


4.துளசி

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

*


5.பேரிக்காய், காரட்

இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

*


6.நன்னாரி

உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

*


7.சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.

*


8.சோம்பு

உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது.சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.
*


9.சுரைக்காய்,பூசணிக்காய்

இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது.நீரிழிவு நோய்களும்,கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

*


10.விளாம்பழம்

வயிற்றுப் பொருமல்,தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.

*


11.அமுக்கிரா கிழங்கு

இதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.

*


12.கரிசலாங்கண்ணி கீரை,கீழாநெல்லி

கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும்.குடிப்பழக்கமும்,மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும்.கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.

*


சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.

*


கிராம்பு, ஏலக்காய், அதிமதுரம்,வசாகா,குப்பைமேனி போன்றவையும் மூலிகைகள்தாம்.

*


ஆயுர்வேத மருத்துவர்கள் மூலம் இந்த மூலிகைகளைக் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொண்டு ஆயுளை நீட்டித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

***
நன்றி http://www.tamilmuslimmedia.com/
***

"வாழ்க வளமுடன்"


***
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net