Sunday, March 13, 2011

குடைமிளகாய் & மிளகாய் மருத்துவ குணங்கள்

பச்சை மற்றும் சிவப்பு மிளகாய்:



சிறிய இலைகளையுடைய சிறுசெடி வகையைச் சேர்ந்தது மிளகாய்ச் செடி. காயும் பழமும் மிகவும் காரம் உள்ளவை.

*

பச்சையான காய்கள், காய்கறி கடைகளிலும், உலர்ந்த பழம் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். உணவில் காரத்துக்காகப் பயன்படுத்துவர். மூலநோய் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

*

வற்றலே மருத்துவக் குணம் உடையது. பசியைத் தூண்டவும் குடல்வாயுவை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகிறது.

வேறு பெயர்கள்: மொளகாய், முளகாய்.

லத்தின் பெயர்: Capsium Firutesceans, Linn; Solonacea.

மருத்துவக் குணங்கள்: மிளகாய் வற்றலை பழகிய மண்சட்டியில் 2 சொட்டு நெய்விட்டுக் கருக்கிய புளியங் கொட்டை அளவு கட்டிக் கற்பூரத்தைப் போட்டு அரை லிட்டர் நீரில் ஒரு கை நெற் பொரியும் சேர்த்துக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி 100 மில்லியளவு குடித்துவர, வாந்தி- பேதி நிற்கும்.

மிளகாய் வற்றல் 200 கிராம், மிளகு 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைமுழுகிவர எந்த வகையான தலைவலியும் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடிக்க மார்பு நோய், வயிற்று நோய், செரியாமை, கழிச்சல், காய்ச்சலினால் காணும் வாந்தி நீங்கும்.

மிளகாயை அரைத்துத் துணியில் தடவி தோலின் மேல் போட்டு வைக்க, கொப்பளித்து வீக்கம் குறையும். தொண்டைக்கு வெளியில் பூச, தொண்டைக்குள் இருக்கும் கட்டிகள் உடையும்.

மிளகாயை பூண்டு மிளகோடு சம அளவாக எடுத்து சேர்த்து அரைத்து எண்ணெயுடன் குழைத்து மேல் பூச்சாக முதுகு, பிடரி முதலிய இடங்களில் உண்டாகும் நாள்பட்ட வலி, வீக்கங்களுக்குப் பூச குணமாகும்.

மிளகாய்ப் பொடியுடன் சர்க்கரை, பிசின் தூள் சேர்த்து உருண்டை செய்து வாயில் போட்டு மென்று சாப்பிட, தொண்டைக் கம்மல் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி சிறிது இஞ்சிச் சாறு கலந்து குடிக்க வயிற்று உப்புசம் வயிற்றுவலி நீங்கும்.

மிளகாய், பெருங்காயம், கற்பூரம் சம அளவாக எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை செய்து 3 வேளை கொடுக்க ஊழி நோய் குணமாகும்.

மிளகாய் செடி சமூலத்தை 200 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இலவங்கப் பட்டைப் பொடியும், சர்க்கரை கலந்து குடிக்கக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.


1. நன்கு பழுத்த, காய்ந்த கார மிளகாயில் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது.

*
2. மிளகாயின் தோல் நரம்புகளிலும், விதைகளிலும் காப்ஸஸின் என்ற ஆக்கக் கூறுப்பொருள் இருக்கிறது. முழு அளவில் செறிவூட்டப்பட்ட இந்தப் பொருளிலிருந்தே மிளகாய் மூலம் நமக்கு வெப்பம் கிடைக்கிறது.
*
3. காப்ஸஸின், நரம்பு வலிகளையும், நோய்களையும், இடுப்பிலும், உடம்பிலும் பயத்தம் பருப்பு அளவில் வரும் வேர்க்குரு போன்றவைகலை குணப்படுத்தும் நவீனக் களிம்புகளில் கார மிளகாய் முக்கிய மூலப் பொருளாகும்.
*
4. மிளகாய் உடலுக்கு வெப்பத்தைத் தருகிறது. இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.
*
5. முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளவர்கள் மிளகாய் அதிகம் சேர்த்தால் முகம் சிவப்பாகிவிடும். மிளகாய் அளவுக்கு அதிகமானால் குடலுறுப்புகள் கெடவும் வாய்ப்புண்டு.

*

6. ஆந்திரக்காராகள் போல் கார மிளகாய் அதிகம் சேர்ப்பவர்கள், தினமும் பாசிப்பருப்புடன் முள்ளங்கி, செளசெள, பூசணி, வெள்ளரிக்காய் இவற்றில் எதையாவது ஒன்றை பச்சடியாகச் செய்து சாப்பிட்டால் காரமிளகாய் உதவியுடன் காய்ச்சல் இன்றி நலமாக வாழலாம்.



***

குடைமிளகாய்:

குடைமிளகாய் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதை சமைக்கும் போது ஏற்ப்படும் வாசனை ஒரு சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் வாங்குவதும் இல்லை.
*
ஆனால் இதில் எவ்வளவு சத்துக்கள் இருக்கிரது பாருங்கள்.....

*
1. தக்காளி, குடைமிளகாய், எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் 'சி' (C) சத்து அதிகமுள்ளது. இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது.

*
2. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில் கொழுப்புச்சத்து,கொலஸ்ட்ரால்,சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.

*

3. குடமிளகாயில் உள்ள விட்டமின் ஏ,சி,ஈ,பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.
*
4. கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்ட விடாமலும் குடமிளகாய் காக்கிறது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
*

5. குடமிளகாயைச் சமைக்கும் முன் நன்கு அலம்ப வேண்டும்.
*
6. குடமிளகாயைத் துச்சமாக எண்ணாமல் அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு நல்லது.
*
7. ஊசி மிளகாய், குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன. இதே உத்தியைப் பயன்படுத்தி உடலின் பருமனைக் குறைக்க முடியும்.
*
8. காய்கறி சாலட் அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், கோஸ், வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கவும். சுவைக்கு உப்பு, மிளகு எலுமிச்சை பிழியவும். அருமையான சாலட் தயார்.
*
9. குடைமிளகாயில் நிறைந்துள்ள "வைட்டமின் சி' சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
*
10. வைட்டமின் சி 137 மி.கி., வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும்.


***
ந‌ன்றி திரு. – கே.எஸ்.சுப்ரமணி
***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆவாரம் பூ





ஆவாரம் பூ பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும்.

அதை பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்கள்.


1. உடல் சூட்டை ஆவாரம் பூ தணிக்கக் கூடியது.


2. பூவுடன் பாசிப்பயிறு சேர்த்து அரைத்து உடம்பிற்குத் தேய்த்துக் குளிக்கலாம். உடலிலுள்ள அரிப்பு நீங்க இவை நல்ல‌ மருந்து.


3. நரம்பு தளர்ச்சியை போக்க வல்லது.


4. ஆவாரம் பூவுடன் நாவல் மர இலையை சேர்த்துப் பொடியாக்கி பசும்பாலில் கலக்கிக் குடித்துவர சர்க்கரை வியாதி விலகி விடும். நாவல் இலைக்குப் பதில் வில்வ இலையையும் சேர்க்கலாம்.


5. ( வேரை குடிநீரிலிட்டுச் சாப்பிட்டுவர நீரிழிவு, ஆண்குறி எரிச்சல் தணியும். வேண்டுமானால் இத்துடன் கற்கண்டு, பசுவின் பால் சேர்த்துக் கொள்ளலாம்.


6. ஆவாரந்துளிர், கல்மதம், கொன்றைவேர் ஆகிய மூன்றையும் புளித்த மோரில் கலக்கிக் குடிக்க நீரிழிவு நோய் நீங்கும். ஆவாரம், சீந்தில், தில்லைச்செடி இவைகளின் வேர், இலை, தண்டு, பூ முதலியவற்றை முறையே மூன்று, இரண்டு, ஒன்று எனும் எடையாகக் கொண்டு, இளவறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்துப் பொடியாக்கி அரைப்படிக்கு அரைப்படி நீரிட்டு, அரைக்கால் படியாகக் குடிநீர் செய்து அதில் பால் கூட்டி காலை, மாலை கொடுக்க நீரிழிவு போகும். நீரில் சர்க்கரை அளவும் குறையும். )


நன்றி தமிழ்வாணன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அறிஞர்களின் பொன்மொழிகள்



* துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
- பெஞ்சமின்.
* கடலில் முழ்கினால் முத்து எடுக்கலாம்: கடனில் முழ்கினால் சொத்தை இழக்கலாம்.
* உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள். பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.
* நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது, கொட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.
- பெர்னாட்ஷா.
* செய்து முடிக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் சாத‌னைக‌ள் அனைத்தும் செய்ய‌ முடியாத‌வைக‌ள் என்று முத‌லில் ப‌ல‌ரால் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌வைதான்.
- கால்லைல்.
* யார் ஒருவ‌ன் த‌னக்கு உள்ள‌ கெள‌ர‌வ‌மும், ம‌ரியாதையும் போய் விடுமே என்று ப‌ய‌ந்தப‌டி இருக்கிறானோ, அத்த‌கைய‌வ‌ன் அவ‌மான‌த்தைத்தான் அடைகிறான்.
- விவேகான‌ந்த‌ர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஓட்ஸ்ஸில் உள்ள சத்துக்கள்


காடைக்கண்ணி (ஓட்ஸ்)







காடைக்கண்ணி (ஓட்ஸ்) தானியம்


நெல்லைப் போன்ற புற்செடித் தாவரம். இதன் தானியம் ஓட்ஸ். இதன் தாவரவியல் பெயர் அவைனா சடைவா(Avina sativa).



இதில் மதம் (Gluten) கிடையாது. ஆகையால் பாண் (ரொட்டி) தயாரிப்பது இயலாதது. ஆனால் ஓட்ஸ் கூழ் / ஓட்ஸ் கஞ்சி (Oatmeal Porridge) ஓர் ஆரோக்கிய உணவாக உட்கொள்ளப்படுகிறது.





ஓட்ஸ் ஈரட்டி (OAT COOKIES) ஒரு பிரபலமான இனிப்பு வகை ஆகும். இது கொழுப்புச்சத்து குறைவானது.ஓட்ஸின் பாரம்பரிய தமிழ் சொல் "காடைக்கண்ணி" ஆகும்.





நன்றி தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)






1. ஓட்ஸ் பீற்ற குளுக்கான்கள் ஓரளவு நீரில் கரைய கூடியதாக இருப்பதால் உடல் கொலஸ்திரோலை குறைக்கும், இதய நோய்களை குறைக்கவும் உதவுகிரது.






2. மாவு பொருட்கள், இனிப்பு சம்மந்தமான‌ பொருட்கள் உண்டதும் உடலில் ஏற்படும் கிளைக்காமிக் விளைவை (Glycaemic response)பீற்றா குளுக்கான்கள் குறைக்கிறன. நீரிழிவு நோய் இருப்பவர்கள் ( டைப் 1, டைப் 2 ) சர்க்கரை வகை 2 வியாதி உள்ளவர்களுக்கு இது சிறப்பான ஒரு தீர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது.






3. ஓட்ஸ் காலை உணவாக எடுத்து கொண்டால் சீக்கிரம் பசிக்காது. இதனால் அதிகம் உண்ணாமல் உடல் எடை கூடாது.






4. வைட்டமின் ‘இ’ மற்றும் ‘பி’ காம்ளக்ஸ், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீஷியம் போன்ற தாது உப்புகளும், தமனிகளின் சுவர்களை வலுப்படுத்தும் சிலிக்கான் என்னும் தாதும் நிறைந்து காணப்படுகிற‌து.






5. இருதயத்திற்கு ஓட்ஸ் லேசான பலமூட்டியாக உள்ளது. கொலஸ்டிராலை கட்டுப்படுத்துகிறது. மூளைக்கும், நரம்புக்கும் ஊட்டம் தருவதால் நல்ல தூக்கம் தரக்கூடியது.






6. இதில் மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் ‘பி’யும், தாது உப்புக்கள், பொட்டாசியம், பாஸ்பரசும் உள்ளன.






7. ஆங்கிலேயர்கள் அந்த காலத்தில் ஓட்சை குதிரைக்கு உணவாக வழங்கினார்களாம். இதில் இதில் நிறைந்துள்ள புரதம் மற்றும் வைட்டமின் தாதுக்களால் கால்நடைகள் மிகவும் வனப்பாக வளர்க்கப்பட்டன.



உடல் அழகுக்கும் ஓட்ஸ் மிகவும் நல்லது.



எனக்கு தெரிந்த சில இதோ...





9. ஓட்ஸ்சில் இருக்கும் வைட்டமின் ‘இ’ சத்து சருமத்திற்கு நல்லது.





10. ஓட்ஸ் மீலை நீரில் நன்கு கலந்து பசை போல் முகத்தில் தடவி உலர விடவும். பின் இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.



11. ஓட்ஸ் என்பது ஜவ்வரிசியைப் போல அரிசி வகையைச் சேர்ந்த ஒரு தானியம். இதில், துரித செரிமானத்திற்கு உதவும் ‘ஃபைபர்’என்ற நார்ச்சத்து உள்ளது.



*


12. எழுந்து நடமாட முடியாமல், வேலை பார்க்க முடியாமல் படுக்கையில் இருப்பவர்களுக்கு சாப்பிடும் உணவுப் பொருட்கள் எளிதில் ஜீரணமாகாது.



*



13. ‘ஓட்ஸ்’ ஜீரணத்திற்கு உதவியாவதோடு, வயிற்றைச் சுத்தமாக்கிவிடும். தவிர உடல் வலுப்பெற தேவையான சத்துக்களும் உள்ளன.



*



14. கேன்சர் நோயாளிகள், சீறுநீரகப் பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் ஓட்ஸ் கஞ்சிக் குடிப்பது நல்லது.



*



15. பால், சர்க்கரை சேர்த்தும் பருகலாம். கூடுதல் சுவையுடன் இருக்கும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எழுத்தாளர் சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி?

தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு. சுஜாதா அவர்களின் ஏன்? எதற்கு? எப்படி? என்ற பதிவுகள் மிகவும் என்னை கவந்தது.

நான் படித்து அறிந்த தகவல்களை இதில் இடுகிறேன்.

இது திரு. சுஜாதா அவகளுக்கு சமர்ப்பணம்.


1. 'கடல் சூறாவளி'களிலேயே மிகப் பெரியது 'ட்ஸூனமி' என்பது ஜப்பானியச் சொல். மிகப்பெரிய அலை என்று அர்த்தம்.


2. இமயமலையின் உச்சி பகுதியில் 'கடல் வாழ் தாவரங்கள்' - உள்ளதாகப் படித்தேன் - இது பற்றி...
இருபத்திரண்டரைக் கோடி வருஷங்களுக்கு முன் ஆஸ்திரேலியா பக்கத்தில் ஒரு பெரிய தீவாக இந்தியா இருந்தது. மெல்ல அது வடமேற்காக நகர்ந்தது. ஒவ்வொரு நூற்றாண்டும் ஒன்பது மீட்டர். ஒரு காலகட்டத்தில், தற்போதைய ஆசியாவிலிருந்து 6400 கிலோமீட்டர் தெற்கில் இருந்தோம். ஆசிய ஐரோப்பிய கண்டத்துடன் நாளடைவில் முட்டி மோதி ஒட்டிக்கொண்டபோது, அந்த மோதலில் எழுந்ததுதான் இமயமலை. அதனால்தான் இமயத்தின் உச்சியில் கடல் வாழ் தாவரங்களின் ஃபாசில்கள் கிடைத்தன. இன்றைய கணக்கின்படி எவரெஸ்ட் சிகரம் வருஷத்துக்கு 3 மில்லி மீட்டர் உயர்ந்து வருகிறது. 27 மில்லி மீட்டர் வடகிழக்காக நகர்கிறது.


3. பூனை, நாய்க்கெல்லாம் நம்மைவிட இரண்டு லட்சம் மடங்கு அதிக மோப்பசக்தி; ந‌ம்மைவிட 50 மடங்கு அதிக அளவில் 'ரிசெப்டர்' செல்கள் உள்ளன். நாயின் மோப்பசக்தி ரொம்ப நுட்பமானது.


4. ஒரு மலைப்பாம்பு எலியை விழுங்க முதலில் அந்த எலியை ஒரு சுருட்டுச் சுட்டி அழுத்தும். அப்போதே எலி மயக்கம் ஆகிரது. பிறகு பாம்பு வாயை 140 டிகிரி திறந்து எலியை வயிற்றுக்கு அனுப்பும்.19 மணி நேரம் எலி ஜீரணமாகமல் இருக்கும். ( எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் கண்டு பிடித்து இருக்கிரார்கள் )

a. எலியின் தலை ஜீரணம் ஆக 2 நாள் ஆகும்.
b. 4 நாள் கழித்து அதன் ரோமங்கள் உரியும்.
c. 6 நாள் கழித்து எலும்பு மட்டும் தான் பாக்கி.
d. குடலுக்கு சென்று அதுவும் முழுவதும் ஜீரணமாக 2 வாரம் ஆகும்.

படிக்கும் போது நமக்கு சும்மா அதிருது இல்ல....


5. பூமியின் வயது என்ன தெரியுமா? சுமார் நானூறு கோடி வருஷங்கள்!( இவை ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்தில் 2ம் பாகத்தில் 29ம் பக்கம்.)


6. கொசுக்கலில் பெண் கொசுதான் மனிதனை கடிக்கும். அதற்க்கு முட்டையிடும் சக்திக்கு புரோட்டீன் கலந்த ரத்தம் தேவை. அதனால் மனிதன் வெளியிடும் மூச்சில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை வைத்தே 50 அடி தூரத்தில் கண்டு பிடிக்கும்.நம் சருமத்தில் இருந்து வரும் 'லாக்டிக்' அமிலம் அதற்க்கு பரிச்சியம். அந்தா ரத்தம் அதற்க்கு ஒரு வாரம் தாங்கும். அதுபோல் 3 மடங்கு மூக்கு ஸ்ட்ராவால் ஜிவ்வும்.
உலகில் மொத்தம் 3000ம் வகை கொசுக்கள் உள்ளன்.


7. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பாலில் CMC - யை ( Carboxy methyl cellulose )கெட்டியாக்குவதற்க்கும், நிலைப்படுத்துவதற்கும் சேர்க்கப்படும் பொருள்.


8. தங்க நகையை விட பிளாட்டினம் விலை அதிகம்.பிளாட்டினத்தை விட ரேடியம் தான் இன்னும் விலை அதிகம். ஒரு கிராம் 50,000 ரூபாய் கிட்ட விற்க்கிரது. ( இது 2004 வருடம் இடப்படது. )அப்போதே. பிளாட்டினம் மிகவும் உறுதியானது. பார்க்க சிம்புலானது.


9. தங்கத்தை விட பாம்பின் விஷம் விலை மதிப்பு அதிகறிக்க காரணம், பாம்பின் விஷத்தில் இருந்து எடுக்கப்படும் ஸீரம், பாம்பு கடிக்கு மாற்று மருந்து. அந்த விஷத்தில் இருந்து தயாரித்த ரிஸர்பின் போன்ற மருந்து ரத்த அழுத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஒரு துளி விஷம் தங்கத்தின் விலையை விட அதிகம் தான்.

நல்ல பாம்பின் விஷம் ந்யூரோபாக்ஸின் வகைப்பட்டது. கட்டு விரியானின் விஷத்தில் ஹீமோடாக்ஸின் உள்ளது. இது ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவற்றுக்கு குணமாக்க உகந்தது.


10. ஜரோப்பாவின் மாமியார் என்று டென்மார்க் நாட்டை அழைப்பதுக்கு காரணம் டென்மார்க் நாடு ஜரோப்பிய ஒன்றியத்தில் மிக முக்கியமான நாடாக அதன் பொருளாதாரத்தைக் கட்டுப்பத்தவல்ல சாம்ராஜ்யமாக உருவெடுத்துக் கொண்டிருப்பதே.
( இவை ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்தில் 2ம் பாகத்தில் 137ம் பக்கம்.)

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கம்பு அடை


அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் வகையில் இதுவும் ஒன்று.


தேவையான பொருட்கள்:

கம்பு : 1 கப்
பச்சை அரிசி - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
கட‌லை பருப்பு - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
காயிந்த மிளகாய் - 8
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
உப்பு : தேவையான‌ அளவு.

செய்முறை:

1. எல்லாப் பருப்புகளையும் 1/2 மணி நேரம் ஊற‌ விடவும்.

2. கம்பு, அரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊற‌ விடவும்.

3. இவைகளைத் தனித் தனியாக போட்டு அரைத்து அதனுடன் ( மிளகாயும், கறிவேப்பிலையும் சேர்த்து அரைக்கனும் ) உப்பு சேர்த்து கலக்கி அடை ஊற்றவும்.

4. தேவை எனில் வெங்காயம் சேர்த்து அடை ஊற்றலாம்.

5. இல்லையெனில் கட்டியாக அரைத்து வாழை இலையில் தட்டி தோசைக் கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.


குறிப்பு:

கட்டாயம் கல் நீக்கி போடனும். கம்பில் கல் இருக்கும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கம்பு தோசை




கம்பு தோசை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் .




தேவையான பொருட்கள்:


கம்பு - 1 கப்

அரிசி- 1 கப்




செய்முறை:



1. கம்பை 5 மணி நேரமும், அரிசியை 4 மணி நேரமும் ஊறவைத்து மைய அரைத்து எடுக்கவும்.




2. அரைத்த 1 மணி நேரம் கழித்து ஊற்றலாம்.




3. இந்த தோசை ரொம்ப வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.





குறிப்பு:




கம்பை கல் இல்லாமல் சுத்தம் செய்து போடனும்... ( அதில கல் இருக்கும் )

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பழமொழிகள்

உலகப் பழமொழிகள்


* துன்ப‌ப் பற‌வைக‌ள் உன் த‌லைக்கு மேலே வ‌ந்து வ‌ட்ட‌மிடுவ‌தை நீ த‌விர்க்க‌ முடியாது. ஆனால் அவை உன் கூந்த‌லிலே உட்கார்ந்து கூடு கட்டிக் கொள்ளாம‌ல் த‌டுக்க‌ முடியும்.
- சீன‌ப் ப‌ழ‌மொழி.

* இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது.- கொரியா.

* வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டும். விற்பவனுக்கு ஒரு கண் போதும்.- டச்சுப் பழமொழி.

* தீங்குகளை மணலில் எழுது. நன்மைகளைச் சலவைக் கல்லில் எழுது.-பிரான்ஸ்.

* மலர்ந்த முகம் சாதாரண விருந்தையே அறுசுவை உணவாக்கிவிடும். -இங்கிலாந்து.


* இதயம் ரோஜா மலராக இருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும். - ரஷ்யா.


* கூடப் பிறந்த சகோதரி என்பவள் இயற்கை நமக்களித்த சினேகிதி. -ஜெர்மன்.


* அண்டவன் ஆடையை அவிழ்க்க வில்லை. ஆனால் நூற்பதற்குப் பஞ்சு கொடுத்திருக்கிறார்.- ஜெர்மனி.


* பெண் குழந்தை இல்லாதவனுக்கு அன்பைப் பற்றி அறிய முடியாது. -இத்தாலி.


* ஒரு மனிதனின் நடத்தையை அறிய வேண்டுமா? அவன் கையில் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள் -யூகோஸ்லோவியா.

*அன்பே பிரதானம்; அதுவே வெகுமானம்.

*அடக்கமே பெண்ணுக்கு அழகு.

*அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.

*அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம்.

*அழையாத வீட்டுக்கு விருந்தாளி போகாதே.

*அரக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது.

*ஆரிய‌க் கூத்தாடினாலும் காரியத்தில் க‌ண்வை.

*ஆப‌த்தும் ச‌ம்ப‌த்தும் யாருக்கும் உண்டு.

* ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.

* கவலைக்கு மருந்து அதனைக் காலின் கீழ் போடுவதுதான்.

*தூக்கி எறியும் குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது.

*நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து ஆலோசனை செய்.

* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.

* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.

*கணவன் தலைவன், மனைவி அவன் தலையிலிருக்கும் மகுடம்.

* ஆயிரம் எதிரிகளைவிட ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை.

* ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.

* நாக்கில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்க வல்லது.

* திருப்தியான பறவையும் பசி மிகுந்த பறவையும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்க முடியாது.

* நிலம் சூடாக இருக்கும்போது புழு மண்ணிலேயே இருந்து விடுகிறது.

* மிக மிக வேகமாக ஓடு. நீ இருமுறை ஓடுவாய்.

*மனிதனுக்கு மேலே இருக்கும் சிற்றரசன் அவனது மன சாட்சி.

* தாய்க்காக மனைவியை வெறுப்பவன் பழைய மிருகம். மனைவிக்காக தாயை வெறுப்பவன் புதிய மிருகம்.

*குழந்தைக்கு முதற்பாடம் பணிவு.

*அதிகமாக யாரும் எதையும் கொடுத்தால் ஏற்காதே!

* நல்ல உரையாடல் நல்ல படுக்கையைவிட மேலானது.

* ஒரு பெண் மற்றொரு பெண்ணை ஒருபோதும் புகழ்ந்து பேசமாட்டாள்.

* பெண் குழந்தைகள் வீட்டுக்கு அலங்காரம் அவர்கள் விற்பனைக்கு உரிய பொருள்கள்.

* பெண் குழந்தைகள் உன் முழங்கால் அளவிற்கு வளர்ந்து விட்டால் அவர்களின் சீதனப் பெட்டிகள் மார்பு அளவு இருக்க வேண்டும்.

* தந்தையின் பாசம் சவக்குழி வரை; தாயின் பாசம் சிரஞ்சீவியானது.

*உடல் சிறைபட்டுக் கிடந்தாலும் குறைந்த பட்சம் மனம் சுதந்திரமாக இருக்கிறது.

*மனிதனுக்குச் சிறந்த நன்மையும் பெரிய நோயும் பெண்ணால் கிடைக்கின்றன.

*முள்ளின் மேலிருந்து பாடினாலும் மலர் மீதிருந்து பாடினாலும் குயில் இன்மையாகவே பாடுகிறது.

* நீ ஒரு நாட்டில் நுழையும்போது அங்கு விலக்கப்பட்டவைகள் என்னவென்று விசாரித்துக்கொள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

டிப்ஸ் டிப்ஸ்



எனக்கு தெரிந்த நான் செய்யும் டிப்ஸ்!!!!

1. சாவிக் கொத்தில் நாம் அடிக்கடி பயன் படுத்தும் சாவியில் நெயில் பாலிஷ் சிறிது தடவினால் பளிச்சென்று நமக்கு தெரியும். அவசரத்தில் தடுமாற வேண்டாம்.

2. ஊசியில் நூலை கோப்பது பேரும் பாடு. அதை தவிர்க்க நூல் நுனியை சோப்பு கட்டியில் அழுத்தி எடுத்தால் நூல் ஈசியாக ஊசியில் நுழையும். சேய்து பாருங்கோ.

3. நாம் எழுமிச்சை பழத்தை பிழிந்து அந்த தோலை தூக்கி எரியாமல் அதை எடுத்து குளிர் சாதன பெட்டியில் வைத்தால் அதில் ஏற்ப்படும் கெட்ட வாடை நீங்கிவிடும்..

4. மழைக்காலத்தில் ஒரு சில நேரத்தில் பாசி பிடித்து விடும். அதை அக‌ற்ற‌ அந்த‌ இட‌த்தில் சிறிது க‌ல் கோல‌மாவை தூவுங்க‌ள். பிற‌கு பிர‌ஷ்ஷால் தேயித்தால் ப‌ளிச்சுன்னு ஆகிடும்.

5. ரோஜாச் செடியில் வாழைப்ப‌ழ‌த் தோலை ந‌றுக்கிப் போட்டால் செடியும் ந‌ன்றாக‌ வ‌ள‌ரும். பூக்க‌ள் உங்க‌லை பார்த்து சிரித்து உங்க‌லுக்கு ந‌ன்றி சொல்லும்.

6. மிக்ஸியை விட‌ கிரைண்ட‌ரை அதிக‌ம் உபயோகித்தால் க‌ர‌ண்ட்டு மிச்ச‌ம். மிக்ஸியீ அதிக‌ம் க‌ர‌ண்டை ஈழுக்கும்.

7. முருங்கை ம‌ர‌த்தைக் வீட்டின் கொல்லைப் புற‌த்தில் வைப்ப‌தை விட‌ வீட்டில் முன் புற‌ம் வைத்தால் ம‌ர‌ம் செழிப்ப‌க‌ வ‌ள‌ரும். அதிக‌ம் காய்க்கும். ஏனெனில் அங்குதான் வண்டி சொல்லுகிரது. அதனால் ஏற்ப்படும் நில அதிரிவுர் தான் காரணம்.

8. கமலா ஆரஞ்சு பழம் மேல் தோல் சொர சொரப்பாக பார்த்து வாங்கனும்.

9. சாத்துக்குடி தோல் வழுவழுப்பாக இருக்கும்படி பாத்து வாங்கனும்.

10. நாம் கோலம் போட்டு கலர் போடும் முன்பு மைதாவை கஞ்சி போல் ( கன்சி வைத்து ) செய்து கலர் தூவும் இடத்தில் பஞ்சியால் தேய்த்து பின்பு தூவினால் காற்றிலும் பறக்கது. சீக்கிரத்தில் அழியாது.

11. கிருஷ்ண ஜெயந்தில் கண்ணன் கால் போடும் போது தரை வெள்ளையாக இருந்தால் பளிச்சுன்னு தெரியாது. அதனால் அரிசி மாவில் கொஞ்சம் மைதா மாவு, கேசரி பவுடர் போட்டு கலந்து கால் வைத்தால் பளிச்சுன்னும் இருக்கும். அழகு கொஞ்சும். சீக்கிரம் அழியவும் அழியாது.

12. நோயாளிக்குப் பயன்படும் வெந்நீர்ப் பையிலொ சிறிது உப்பு சேர்த்தால் அதிக நேரம் வெந்நீர் சூடு குறையாது.

13. டிஷ்யூ பேப்பரில் மூக்கு கண்ணாடியைத் துடைத்தால் பளபளப்பாக இருக்கும்.

14. ஒருசிலர் அஜினோமோட்டோ என்ற உப்பு அதிகம் சேர்க்கின்றனர். அது உடலுக்கு நல்லது இல்லை. அதை சேர்ப்பதால் நரம்பு சம்மதமான நோய்கள் வருகிற‌து என்று கண்டரிய பட்டு உள்ளது. அதனால் குறைவாக உபயோகிக்கவும்.

15. வெள்ளி பாத்திரம் அல்லது ஆபரணம் வைக்கும் கவர் அல்லது பெட்டியில் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்தால் வெள்ளி கறுப்பாகாது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆழ்கடல் கள‌ஞ்சியதின் நன்றிகள்.


தமிழிஷ் வெப் த‌ள‌ம் என் த‌ள‌த்தில் இருந்து அனுப்பிய‌
" க‌ல்யாண‌ முருங்கை தோசையையும்" , " மார்ப‌க‌ புற்று நோய்யும் "
ஏற்றத‌ற்க்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி.
இந்த தளத்தில் தொடர்ந்து வந்து பதிவு இடும் அனைவருக்கும் என் நன்றிகள்.

நன்றி இமா அம்மா.

நன்றி அண்ணாமலை அண்ணா.

நன்றி டாக்டர்.

நன்றி சிவா அண்ணா.

நன்றி தமிழன் அண்ணா.

நன்றி ராம்ஜி.

நன்றி வாணி.

நன்றி மேணகா அக்கா.

மற்றும் பதிவு போட முடியாமல் என் பிளகில் இருப்பதை படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

" வாழ்க வளமுடன் "
பிரபாதாமு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கம்பு







கம்பு தானிய வகையைச் சேர்ந்தது. இனிப்புச் சுவை உடையது. உடலுக்கு உரமாக்கும் செய்கையை கொண்டது.
உடலை இரும்பாக்கும்!


கம்பு உடல் சூட்டுக்கு மிகவும் நல்லது. அதிகம் குளிச்சி வாய்ந்தது.


கம்பு அதிகம் சத்து வாய்ந்தாது. உடல் இளைக்க விரும்கிற‌வர்கள் இதனை சாப்பிடலாம்....


நார்ச்சத்து உ‌ள்ள உணவுகள் பெருங்குடலில் புற்று நோய் வராமல் தடுக்கும். கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு முதலியன நா‌ர்‌ச்ச‌த்து‌ள்ள உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ல் அடங்கும்.


கம்புமாவுக்கூழ் உடலைத் தூய்மையாக்கும். க‌ம்பை பாயாச‌ம், தோசை, அடை, கூழ் என்று செய்து சாப்பிட‌லாம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வடை கறி

எங்கள் வீட்டில் நாங்கள் செய்யும் " வடை கறி " இது என் அம்மாவின் கை மணம்.

தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - 2 கப்
வெங்காயம் - 2 ( மீடியம் சைஸ் )
தக்காளி - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 2
கிராம்பு, பட்டை - 3,2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க மட்டும்

செய்முறை:

1. முதலில் பருப்பை 1/2 மணி நேரம் ஊறவிட்டு ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.

2. அதை சிறு சிறு உருண்டைகலாக உருட்டி ஆவியில் வேக விடவும். பிறகு அதை உதுத்து விடவும்.

3. அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு பொரித்ததும் இடித்த இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.


4. பிறகு மஞ்சத்தூள், உப்பு, காரம் தேவை எனில் மிளகு தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

5. கொதித்ததும் உதித்து வைத்துள்ள பருப்பை ( ஆவியில் வேக வைத்தது ) போட்டு கொதிக்க விடவும்.

6. கொத்த ம‌ல்லி போட்டு இற‌க்க‌வும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கிரகணத்தின் போது கர்ப்பிணிகள்


கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் அசைய‌க்கூடாது, வெளியே வ‌ர‌க்கூடாது என்று எல்லோரும் சொல்லுவ‌து எதுக்கு என்று ஒரு சிலருக்கு தெரியவில்லை.

அதற்க்கு பதில்

திரு. ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் கூறிய‌து.

கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறுவது ஏன்?

இயல்பு நிலையில் ஏற்படும் மாற்றத்தையே ஜோதிட ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் கிரகணம் எனக் கூறுகிறோம்.

கிரகணம் நிகழும் நேரத்தில் சூரியன் அல்லது சந்திரனில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்படுவதால் செயற்கையான இருட்டு ஏற்படுகிறது.

இதன் காரணமாக பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே கர்ப்பிணிப் பெண்கள், இதயம் பலவீனமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கிரகண நேரத்தில் வீட்டிற்குள் இருக்கும் போது சூரியன் அல்லது சந்திரனின் நேர்மறைக் கதிர்களின் தாக்குதலில் இருந்து தப்ப முடியும்.

நன்றி ஜயா.

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்

http://tamil.webdunia.com/religion/astrology/traditionalknowledge/0907/02/1090702052_1.htm

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மன அழுத்தத்திலிருந்து விடுபட‌

இந்த அவசர யுகத்தில் பலருக்கும் பலவிதமான டென்ஷன். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு, குடும்ப பிரச்னை மட்டும் உள்ளதென்றால், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, அலுவலகப் பிரச்னைகளும் சேர்ந்து, இரட்டை சுமையாகிறது. இதனால், மனஅழுத்தம் உண்டாகி, அது பலவித வியாதிகளுக்கு வழிவகுக்கிறது.

இதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

இதோ சில டிப்ஸ்...

* யோகா செய்யுங்கள்:

தியானம் செய்யுங்கள். குறைந்தது 20 நிமிடமாவது தியானம் செய்யப் பழகுங்கள். இது மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும்; மனம் பக்குவப்படும். தியானம் செய்ய, முறையான பயிற்சி தேவை. முறையான ஆசிரியரிடம் பயின்று யோகா செய்யுங்கள்.

* நல்ல இசையை கேளுங்கள்:

உங்களுக்கு பிடித்தமான மெல்லிய இசையை கேளுங்கள். இது டென்ஷனிலிருந்து, உங்களை விடுவிக்க உதவும். சோர்ந்த மனதை சுறுசுறுப் பாக்க, இசை உதவுகிறது. நல்ல மென்மையான இசை டென்ஷனை குறைக்கிறது. நம் நரம்புகள் விரைத்துப் போய் உடல் கல்லாக ஆகிவிடும் போது, இசை அதை கனிய வைக்கிறது.

* வாரம் ஒரு முறை வெளி இடங்களுக்கு செல்லுங்கள்:

அலுவலகம் செல்லும் பெண்கள், ஒரு நாளும் ஓய்வில்லாமல், வீட்டு வேலை, அலுவலக வேலை என மாற்றி மாற்றி பார்த்து அலுத்து விடுவீர்கள். விடுமுறை தினத்தை ரிலாக்சாக, மனதுக்கு பிடித்த வகையில் செலவிடுங் கள். அன்றைக்கும் வீட்டு வேலையே கதி என்று இருந்துவிட்டால், மனம் அமைதி இல்லாமல் தவிக்கும். ஓய்வு தினத்தில் சிறிது நேரமாவது வெளியிடங்களுக்கு சென்று மனதை "ரிலாக்ஸ்' செய்யுங்கள். மனது புத்துணர்வுடன் இருந்தாலே நாம் சுறுசுறுப்பாக எவ்வித நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.



* உணவில் கவனம் தேவை:

உணவில் கவனம் செலுத்துங்கள். நேரம் தவறாமல் உண்பது மிகவும் அவசியம். அது, சத்தான உணவாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகளே, நாம் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

* பாசிடிவ் திங்கிங்:

எதிலும், "பாசிடிவ் திங்கிங்' வேண்டும். அப்போது தான், உங்களால் எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும். எதிர்மறையான எண் ணங்கள் உங்களை கோழையாக்கிவிடும்.

* பதற்றம் வேண்டாம்:

ஒவ் வொரு விஷயத்திற்கும் பெண்கள் மிகுந்த பதற்றம் அடைவர். பதற்றம் அடையும் போது மன அழுத்தம் அதிகரிப்பதோடு செய்ய நினைத்த வேலையையும் ஒழுங்காக செய்ய முடியாது. இதனால், வீட்டிலும், அலுவலகத்திலும் கெட்ட பெயர் வாங்க வேண்டிய சூழ்நிலை உரு வாகும். அதைத் தவிர்க்க, எதிலும் பதற்றம் அடையாமல் நிதானமாக செயல்படுவது நல்லது.

* திட்டமிடுதல் அவசியம்:

எந்த வேலையையும் செய்யத் துவங் கும் முன், திட்டமிடுதல் அவசியம். திட்டமிட்டால் மட்டும் போதாது; திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிக்க வேண்டும். திட்டமிட்டபடி வேலை செய்து முடித்தால், கிடைக்கும் சந்தோஷமே அலாதி தான்.

by சிவா .


நன்றி சிவா அண்ணா.
http://eegarai.darkbb.com/-f14/---t400.htm

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 5

Mastecting-க்குப் பிறகு உடல் உருவில் வந்த மாற்றத்தைச் சமாளித்தல்

1. மார்பக இழப்பு காலப் போக்கில் பின் சமாளிக்க முடியும்.

இந்தச் சிக்கல்களைச் சமாளிக்க உதவும் சில கருத்துரைகள் கீழே தரப்பட்டுள்ளன:

a. யாரோடாவது பேசுங்கள் உங்கள் உணர்ச்சி காலப்போக்கில் தணியும். உங்கள் உணர்ச்சிகளை உங்களுடைய கணவர், குடும்ப உறுப்பினர் அல்லது நெருங்கிய நண்பரிடம் பேசித் தீருங்கள்.

b. காயம் ஆறுதலில் கவனம் செலுத்துங்கள், உங்கள் ஆலோசகர் அறிவித்துள்ள உடற்பயிற்சிகளைத் தொடருங்கள்.


2. அறுவை நடந்த இடம் ஆற கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்

அறுக்கப்பட்ட இடத்தில் கட்டுபோட்டிருக்கும். அந்தக் கட்டு ஈரமாகாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்பாஞ்ச் குளியல் எடுத்துக்கொண்டு அப்பகுதி ஈரமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தையல் பிரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் வழக்கம்போலக் குளிக்கலாம்.

3. பந்து பிழிதல்


a. ஒரு ரப்பர் பந்தைக் கையில் பிடித்துக் கொண்டு படுக்கையில் படுங்கள்.

b. கைகளை மேலே நேராக உயர்த்தி பந்தை மாறி மாறி பிசைந்து விடவும்.

c. பரிந்துரைத்த முறையில் இந்தப் பயிற்சியைச் செய்யவும்.

4. இராட்டினம் சுழுற்றல்



a. ஒரு நூற் கயிறின் இரு முனைகளில் முடிச்சுகளைப் போடவும். பாதிக்கப்படாத கையின் உதவியால் நூற் கயிற்றினை ஒரு கதவின் மீது வீசி கதவின் இருபுறங்களிலும் ஒவ்வொரு முடிச்சுடன் கூடி இருக்கும்படி செய்யவும்.

b. கதவினை இரு கால்களின் இடுக்கில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டு குதிகால்கள் நிலத்தில் நன்கு ஊன்றுமாறு அமரவும்.

c. நூற்கயிற்றின் முடிச்சுகளை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு மேலும் கீழமாக கைகள் மாற்றி இழுக்கவும்.
>

5. கைகளால் சுவற்றில் ஏறுதல்




a. சுவற்றிற்கு 6-12 அங்குல தூரத்தில் சுவற்றைப் பார்த்தபடி கால் விரல்களின்மேல் நிற்கவும்.

b. முழங்கைகளை மடக்கி, தோள் மட்டத்திற்கு உள்ளங்கைகளைச் சுவற்றில் பதிக்கவும். வடுவில் அழுத்தமோ வலியோ உண்டாகும் வரை மெல்லமெல்ல உள்ளங்கைகளைச் சுவற்றில் மேல் நோக்கி சீராக ஒரே அளவில் மெல்ல நகர்க்கவும். வலிஎடுக்கும் உயரத்தில் உள்ளங்கைகள் உள்ள உயரத்தை கோடிட்டுக் குறித்துக் கொள்ளவும்.

c. நாட்போக்கில் உங்களுடைய முன்புறைறத்தை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம்.


6. பின்புற வருடல்


பாதிக்கப்பட்ட கையின் முழங்கையை மடித்து கைவிரல்களின் பின்புறம் முதுகின் மேல்புறத்தில் தொடுமாறு வைக்கவும்மெல்ல உங்கள் விரல்கள் முதுகின் மறுபுற விளிம்புக்குச் செல்லுமாறு மெல்ல நகர்த்தவும்.


7. முழங்கை மூட்டுக்களை ஒருங்கே இழுத்தல்


a. முழங்கைகளை மடித்து கழுத்தின் பின்புறம் கொண்டு வந்து கைவிரல்களைப் பிணைத்துக் கொள்ளவும்.


b. இரண்டு முழங்கை மூட்டுக்களையும் ஒன்றோடு ஒன்று தொடுமாறு பக்கமாக மெல்ல நகர்த்தவும்.


அடிக்கடி வினவப்படும் வினாக்கள்

1. மாஸ்டக்டமி செய்வதிலுள்ள இடர்பாடுகள் என்ன ?


எந்த அறுவை மருத்துவம் என்றாலும் அதில் வர வாய்ப்புள்ள சில இடர்பாடுகள் உள்ளன. அவையாவன:

1. தொற்றுநோய், இரத்தக்கசிவு போன்ற காயம் ஆறுதலில் உள்ள இடர்பாடுகள்.

2. தோள் விறைத்துப்போதல்.

3. மரத்துப் போதல். மாஸ்டக்டமி நடந்த பிறகு வழக்கமாக ஏற்படுவதைப்போல அறுவை நடந்த இடத்திலுள்ள தோலும் அக்குள் பகுதியும் சிறிது மரத்துப்போகும்.

4. செரோமா (Serome) :
அறுவை காயத்திலிருந்தும் அக்குளிலிருந்தும் வடியும் நிணநீரை, தனிச்சிறப்பு மருத்துவ மனையில் எளிதில் வடித்து எடுத்து விடுவார்கள்.

5. லிம்ப்டோம் (lymphedome) :
என்பது 10-20 சதவீத நோயாளிகளுக்கு ஏற்படும் நீண்டகால லேசான வீக்கம்.

6. தோல் அழுகல் - (Skin necrosis) :
சில சமயங்களில் தோல் முனையில் சில பகுதி நன்றாக ஆறாமல் அழுகுவதைப்போல ஈரமாக இருக்கும். எனினும் தினமும் சுத்தப்படுத்தி, மருந்திட்டு, கட்டுவதின் மூலம் அதைக் குணமாக்க முடியும்.


2. எனக்கு மாஸ்டெக்டமி நடைபெற்ற பிறகு அடுத்த மார்பகத்தில் புற்று நோய் வரும் வாய்ப்புள்ளதா ?
ஆமாம். அடுத்தடுத்த நீங்கள் மருத்துவரை சந்திக்கும் போது வழக்கமான பரிசோதனைகளும், மம்மோகிரம்களும் நடத்தப்படும். மாதந்தோறும் நீங்களே சுயமாக பரிசீலித்துப் பாரத்துக் கொள்ளுங்கள். இரு புறங்களையும் உற்றுப் பாருங்கள். மாதத்திற்கு மாதம் ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள்.


3. அறுவை நடைபெற்ற கை மரத்துப்போதலோ, வலியையோ வீக்கமோ இருப்பதை உணர்ந்தாலோ, மூன்று நாட்கள் காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலோ நானென்ன செய்ய வேண்டும் ?
இயன்ற விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள்.


4. நான் எங்கே செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்ள இயலும் ?
CGH ரீடைல் பார்மஸி (போன் எண் 6850 1889) மற்றும் சிணீஸீநீணீக்ஷீமீ ( எனக்கு இவை என்ன என்று புரியலை? தவறுக்கு மன்னிக்கவும். )
(போன் 6736 3168) இவ்விடங்களிலிருந்து செயற்கை மார்பகங்களைப் பெறலாம்.


5. மார்பகப் புற்று துணைக்குழு (Breast cancer support camp) - வில் நான் எங்கே சேரலாம் ?
Breast Cancer Support Groups:

a) CGH Breast Support குரூப்
b) Breast Cancer பௌண்டடின்
c) Singapore Cancer Society


இவை சிங்கப்பூர் சாங்கி தளத்தில் கிடைத்தது.


நன்றி சிங்கை சாங்கி மருத்துவ மனை.
http://www.cgh.com.sg/library/tamil_breast_allabout.asp

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 4

மருத்துவமனையில் என்ன நடக்கும்?

கீழ்க்கண்டவை, நீங்கள் மாஸ்டெக்டமி செய்து கொள்பவராக இருப்பின் நீங்கள் பெறப் போகும் குறிப்புகள் விவரம்

தனிச் சிறப்பு வல்லுநரின் மருத்துவ நடை தனி மருத்துவ மனையில்


1. உங்களுடைய மருத்துவர் உங்கள் நோய் வரலாற்றைக் கேட்டறிவார். அறுவை மருத்துவத்தின் தன்மையையும் அதிலுள்ள சிக்கல்களையும் உங்களுக்கு விளக்குவார்.

2. நீங்கள் அறுவை மருத்துவத்திற்குத் தகுதியானவர் தானா என்பதைக் கண்டறிய உங்களின் இரத்தம் சிறிது பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

3. நீங்கள் 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருப்பின் கீழ்க்கண்ட பரிசோதனைகள் நடைபெறும். உங்கள் இதயத்துடிப்பைப் பரிசீலிக்க எலக்ட்ரோ கார்டியோகிராம் பரிசோதனையும், உங்களுடைய நுரையீரல், சரியாக உள்ளனவா என்பதை உறுதிப் படுத்த மார்புப்புற எக்ஸ்-ரேவும் எடுக்கப்படும்.

4. உங்கள் மருத்துவ தாதி மருத்துவமனையில் நீங்கள் எவ்வளவு காலம் தங்க வேண்டி வரும் என்பதையும், எவ்வளவு செலவாகும் என்பதையும் உங்களுக்குக் கூறுவாள்.

5. ஒரு மயக்க மருந்து வல்லுநர் மார்பக தாங்கு பிரிவிலிருந்து (breast support group) வந்து உங்களை மானசீகமாக அறுவை மருத்துவத்திற்கு ஆயத்தப் படுத்துவார்.


அனுமதி பெறும் நாளில்

1. நீங்கள் படுக்கைத் தொகுதிக்குள் (Ward) வந்ததும் வசதியாக தங்க மருத்துவ தாதி ஏற்பாடுகள் செய்து தருவாள். பின்னர் உங்களுடைய எடை, உடல் வெப்பநிலை, நாடித் துடிப்பு, சுவாசிக்கும் அளவு, இரத்த அழுத்தம் முதலியவற்றைப் பரிசீலிப்பாள்.

2. படுக்கைத் தொகுதியின் மருத்துவர் உங்கள் நோய் வரலாற்றைக் கேட்டறிந்து உங்களைப் பரிசோதிப்பார். அவர் உங்களுக்குச் செய்ய வேண்டிய சிகிச்சையின் தன்மை, சிக்கல்களை விளக்கி அறுவை செய்ய உங்கள் அனுமதியைப் பெறுவார்.

3. மயக்க மருந்து வல்லுநர் நீங்கள் அறுவை மருத்துவத்திற்கு தகுதியானவர் தானா என்று மதிப்பீடு செய்வார்.

4. ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் அறுவை மருத்துவத்திற்கு நீங்கள் தகுதியானவர் என்று உறுதிப் படுத்தாது இருப்பின் பரிசோதிக்க உங்கள் இரத்தம் சிறிது எடுத்துக் கொள்ளப்படும்.

5. பொதுவாக இரவு 12 மணிக்குமேல் நீங்கள் எதையும் உண்ணவோ, குடிக்கவோ கூடாது என்று உங்கள் மருத்துவ தாதி கூறுவாள்.

6. உங்கள் மருத்துவ தாதி உங்களுக்கு கீழ்க்கண்ட விவரங்களை தருவாள் .

7. நீங்கள் அறுவை மருத்துவ அறையில் இருக்கும் போது என்ன எதிர் பார்க்கப்படும்? உங்கள் அறுவை மருத்துவத்திற்கு பிறகு நீங்கள் விழித்த பின்னர் என்ன எதிர் பார்க்கப்படும்?



அறுவை நடைபெறும் நாள்

அறுவை மருத்துவத்திற்கு முன்னர்

1. நீங்கள் உணவோ, பானமோ எடுத்துக் கொள்ளக் கூடாதென்று நினைவுறுத்தப் படுவீர்கள்.

2. உங்களுடைய அறுவை மருத்துவத்திற்கு முன்னர் தலைக்கு ஊற்றிக் கொள்ளவும்.

3. அறுவைக்கு முன்னர் உங்களிடமுள்ள விலை மதிப்புள்ள பொருட்களை உங்கள் மருத்துவதாதியிடம் கொடுத்துப் பத்திரப்படுத்துமாறு கூறுவார்.

4. அறுவை மருத்துவ அறைக்குள் நீங்கள் போகுமுன்னர் அதற்குரிய கவுனை எடுத்து அணியுமாறு கேட்டுக் கொள்ளப் படுவீர்கள்.

5. மருத்துவ தாதி உங்களை உங்கள் படுக்கையிலிருந்து ஒரு தள்ளுவண்டியில் படுக்க வைத்து அறுவை மருத்துவ அறைக்குள் தள்ளிச்செல்வாள்.


அறுவை மருத்துவ அறையில்

உங்களுக்கு அதிகமாக குளிரெடுத்தால் மற்றொரு கம்பளியையும் தருமாறு கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.


அறுவை மருத்துவத்தின் பின்னால்

1. படுக்கைத் தொகுதியில் நீங்கள் கூர்ந்து கவனிக்கப் படுவீர்கள்.

2. அதிகமாக வடியும் இரத்தத்தை அல்லது நிணநீரை வடிக்க அறுவை நடக்கும் இடத்தில் ஒரு குழல் (Tube) உள்ளே வைக்கப்படும்.

3. மயக்க மருந்தின் பக்க விளைவாக நீங்கள் வாந்தியெடுக்கலாம் அல்லது அறுத்த இடத்தில் வலியை உணரலாம். அவற்றை உங்கள் மருத்துவ தாதியிடம் தெரிவியுங்கள். நீங்கள் மிகவும் அமைதியுடன் இருக்க அவர் மருத்துவ ஊசியைப் போடுவாள்.

4. மயக்க மருந்து தீருவதற்காக அறுவை மருத்துவம் நடந்து முடிந்த 6 மணி நேரம் வரை நீங்கள் படுக்கையில் படுத்திருக்க வேண்டும். எனினும் நீங்கள் நன்கு இருப்பதாக உணர்ந்தால் எழுந்து உட்காரவோ படுக்கையைச் சுற்றி மெல்ல நடக்கவோ ஊக்கிவிக்கப்படுவீர்கள்.

5. உங்கள் மருத்துவரின் குறிப்பின் படி உங்களுக்கு பானமோ, உணவோ தரப்படும்.



அறுவை மருத்துவம் நடந்து முடிந்த 1-6 நாட்களில்


1. அறுவை மருத்துவம் நடந்த இடத்தில் அளவான இயக்கம் இருப்பதை உணர்வீர்கள்.

2. குப்பியில் 20 மி.லி க்கும் குறைவான அளவு வடிநீர் இருந்தால் அது அகற்றப்படும்.

3. அறுவை நடந்த பக்கத்தில் உள்ள தோளும், கையும் ஆற்றலைப் பெறவும், அசைவைப் பெறவும் மார்பக ஆலோசகரோ அல்லது பிசியோ தெரபிஸ்டோ உங்களுக்குச் சில எளிய பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பார்.

4. அறுவை நடந்த இடத்தில் வலியிருந்தால் உங்கள் மருத்துவ தாதிக்குச் சொல்லுங்கள். அந்த வலியைப் போக்க அவள் உங்களுக்கு ஒரு மருந்து ஊசி போடக் கூடும்.

5. புற்று அணுக்கள் பரவியுள்ளனவா எனப்பதைப் பரிசீலிக்க ஒரு எலும்பு ஸ்கேன் எடுக்கவும், ஈரலில் அதிரொலி பரிசோதனைக்கும் நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.



மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பும் நாள்

1. உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசீலித்து நீங்கள் நலமாக இருந்தால் வீட்டிற்கு அனுப்புவார்.

2. உங்களுக்குத் தேவையான மருந்துகளை மருத்துவர் எழுதித்தருவார். அம்மருந்துகளை எப்படி பயன் படுத்த வேண்டுமென்பதை மருத்துவக் கடைக்காரர் விளக்குவார்.

3. உங்கள் மருத்துவ தாதி உங்களுக்கு ஒரு விடுப்புக் கடிதமும், மருத்துவ சான்றிதழும், மறுமுறை மருத்துவரை எந்த நாளில் சந்திக்க வேண்டும் என்ற விவரத்தையும், மருத்துவ மனையிலிருந்து நீங்கள் போகுமுன்னர் தருவாள்.

4. நீங்கள் மருத்துவ மனையில் இருக்கும் போது செய்யப்படாதிருந்தால் தீஷீஸீமீ sநீணீஸீ ( இவை என்ன என்று புரியலை. தவறுக்கு மன்னிக்கவும். ) செய்யவும், ஈரலில் அதிர்வொலிப் பரிசோதனை செய்ய வேண்டிய நாளையும் பிற விவரங்களையும் உங்களுக்குத் தெரிவிப்பாள்.

5. மருத்துவரின் தனி சிறப்பு தனியார் மருத்துவமனையில் அறுவை மருத்துவ மருத்துவரை நீங்கள் காண வேண்டிய நாள் விவரமும் தரப்படும்.

குறிப்பு:

வடிகால் குப்பி விலக்கப் படுவதைப் பொறுத்து நீங்கள் மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்படும் நாள் தீர்மானிக்கப்படும். நீங்கள் நலமாக இருந்தால் நீங்கள் வடிகால் குப்பியுடனேயே வீட்டிற்குப் போகலாம். அதை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பது குறித்து மருத்துவ தாதி உங்களுக்கு கற்றுக் கொடுப்பாள். மருத்துவரது தனிச் சிறப்பு மருத்துவ மனையின் மருத்துவர் அவற்றை நீக்கலாமா என்பதையும் நிர்ணயிப்பார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 3

அறுவை மருத்துவத்தின் வகைகள்:-

அ. லம்பாக்டமி (Lumpectomy)

இந்த வகை அறுவை மருத்துவத்தில் மார்பகம் அப்படியே இருக்கும் மார்பகக் கட்டியும், அதைச் சுற்றியுள்ள சாதாரண இழைமங்கள் சிலவும் அறுத்து அகற்றப்படும்.

ஆ. மாஸ்டெக்டமி (Mastectomy)
இதில் பல வகைகள் உள்ளன.


சாதாரண மாஸ்டெக்டமி (Simple mastectomy)

இந்த முறையில் அக்குளிலுள்ள லிம்ப் நோட்களைச் சுத்தப்படுத்தி, பத்திரப்படுத்தி விட்டு மார்பகம் அறுத்து முழுதும் அகற்றப்படும்.




ரேடிகல் மாஸ்டெக்டமி:-

இந்த முறையில் மார்பகம் முழுவதும் அக்குளுக்குரிய லிம்ப் நோட்களும் சிறிது மார்பக சுற்று சதையும் அறுத்து அகற்றப்படும். புற்றுநோய் மார்பக சுற்றுச்சதையில் பரவியிருந்தால் மட்டுமே இந்த அறுவை சிகிச்சை நடத்தப்படும். பெரும்பாலான ஸ்டெக்டமி நோயாளிகளுக்கு அந்த அறுவை மருத்துவத்தின் போதோ அல்லது சில மாதங்களுக்குப் பிறகுச் செய்யப்படும் தனி அறுவை மருத்துவத்தின் போது மார்பக மீட்டுருவாக்கம் ( re construction) செய்யப்படும்.









மாடிபைட் ரேடிகல் மாஸ்டெக்டமி (Modified)
இந்த முறையில் மார்பகமும் கை அக்குளின் கீழுள்ள சில லிம்ப் நோட்களும் அறுத்து அகற்றப்படும். மார்பு சதைகளும், அப்படியே பத்திரமாக விட்டு வைக்கப் படுவதால் மார்பகச் சுற்று வெளித் தோற்றமும், கையின் ஆற்றலும் பாதிக்கப்படாது. எளிதில் சீராகி விடும். இதுதான் தரமான மாஸ்டெக்டமி முறையாகும். இதில் அக்குளின் கீழுள்ள லிம்ப் நோட்கள் அகற்றுவதுடன் கூடிய சாதாரண மாஸ்டெக்டமியும் ( மாஸ்எடக்டமியும் ) அடங்கும்.






கதிர்பாய்ச்சு மருத்துவ முறை (Radiation thoraphy)
ரேடியேஷன் தெரபியில் (இதை ரேடியோ தெரபி என்றும் கூறுவார்கள்) புற்றுநோய் அணுக்களை அழித்து அவை மேலும் வளராமல் தடுப்பதற்கு ஆற்றல் வாய்ந்த எக்ஸ்-ரேக்களைப் பயன் படுத்துவார்கள். இந்தக் கதிர்கள் சாதாரணமாக வெளியிலுள்ள ரேடியோ பொருட்களிலிருந்து வெளிவந்து இயந்திரத்தின் உதவியால் மார்பகத்தை நோக்கிப் பாய்ச்சப் படுவதால் வெளிப்புறக் கதிர்வீச்சு (External rerdiction) என்று கூறப்படும். கதிர் பாய்ச்சு மருத்துவ முறை இப்போது பெரும்பாலும் லிம்பெக்டமி உதவியுடன் இணைந்து தரப்படுகிறது. இது மெஸ்டெக்டமிக்குப் பிறகு பெரிதும் தேவைப் படுவதில்லை.
சிஸ்டமிக் டிரீட்மெண்ட்:-
உடலமைப்பு முழுதும் சார்ந்த இந்த மருத்துவத்தில் கீழ்க்கண்டவை அடங்கும்.
1. கீமோ தெரபி
புற்று அணுக்களை அழிக்க மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறை மருத்துவமாகும். இது வழக்கமாக மருந்துகளின் கலவையாகும். இம்மருந்துகள் வாய் வழியாகவோ, ஊசியின் மூலமோ தரப்படும். கீமோ தெரபி உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாகும். ஏனென்றால் தரப்படும் மருந்துகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுதும் பயணம் செய்யும். இது சுழற்சியாக தரப்படும். அதாவது மருத்துவ காலம், தேறும் காலம் மீண்டும் மருத்துவ காலம் என்று விட்டு விட்டு ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும்.
2. ஹர்மோனல் தெரபி
புற்றுநோய் அணுக்கள் வளரத் தேவையான ஹார்மோன்களிடமிருந்து தள்ளி வைக்கும் மருத்துவ முறையாகும். இந்த மருத்துவத்தில் ஹார்மோன்கள் பணி செய்யும் முறையை மாற்றும் மருந்துகள் பயன்படுத்தப்படும். இதில் பெண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவமும் அடங்கும். அது உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாதலால் உடல் முழுதுமுள்ள புற்று நோய் அணுக்களை பாதிக்கும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 2

மார்பகப் புற்றுநோயின் படி நிலைகள் (stages)
மார்பகப் புற்று நோயில் நான்கு படி நிலைகள் உள்ளன.

1. முதல் படி நிலை:-



முதல்படிநிலை என்றால் புற்று நோய் அணுக்கள் இன்னமும் மார்பகத்தைத் தவிர வேறெங்கும் பரவில்லை என்றும், கட்டியின் சுற்றளவு 2.5 செ.மீட்டரைக் காட்டிலும் அதிகமில்லை என்று பொருள்.


2. இரண்டாம் படி நிலை:-



அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் புற்று நோய் பரவி விட்டது என்றும் மார்பகக் கட்டியின் சற்றளவு 2.5 செ.மீட்டரைக் கடந்து விட்டது என்றும் பொருள்.

3. மூன்றாம் படி நிலை:-



பொதுவாக மூன்றாம் படிநிலையை முதிர்ந்த புற்றுநோய் என்பார்கள். மார்பகக் கட்டியின் சுற்றளவு 5 செ.மீட்டரை கடந்து விட்டது என்றும் மார்பகச் சுவர் அல்லது மேல் தோலில் இதில் பரவி உள்ளது என்றும் பொருள். இந்நிலையில் அக்குளின் கீழே உள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவி விடும்.

4. நான்காம் படி நிலை:-


இந்த நான்காம் படி நிலை முற்றிலும் பரவி விட்ட புற்றுநோயாகும். புற்றுநோய் மார்பகத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களான நுரையீரல், ஈரல், மூளை, எலும்புகள் மற்ற எல்லா லிம்ப் நோட்கள் அனைத்திலும் பரவி விட்டது என்று பொருள்.


மீண்டும் வரும் புற்று நோய் (Recurrent Cancer)

மீண்டும் வரும் புற்றுநோய் என்றால் துவக்க மருத்துவத்திற்குப் பின்னரும் மீண்டு வரும் நோயாகும். மார்பகத்தில் உள்ள கட்டி முற்றிலும் அறுத்து அகற்றப் பட்ட பின்னரும் அல்லது அழிக்கப் பட்ட பின்னரும் சில நேரங்களில் கண்டு பிடிக்க முடியாத சில சிறு புற்றுநோயணுக்கள் மருத்துவத்திற்குப் பின்னரும் உடலில் விடுபட்டு இருந்தால் அல்லது மருத்துவத்திற்கு முன்னரே புற்றுநோய் பரவி விட்டிருந்தால் புற்றுநோய் மீண்டும் வரும்.

அறுவை மருத்துவம் என்றால் என்ன?

கட்டியின் அளவு, இருப்பிடம், பரிசோதனைச் சாலையில் நடந்த பரிசோதனையின் முடிவுகள், நோய் உள்ள படிநிலை அல்லது அளவு இவற்றைப் பொறுத்து மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவம் நடைபெறும். இந்த மருத்துவம் லோகல் அல்லது சிங்டமிக் முறையாக இருக்கும். ஒருவர் ஒன்று அல்லது பல மருத்துவங்களை பெறுவார். உங்கள் மருத்துவர் மருத்துவ திட்டத்தை உங்களுடன் கலந்து பேசுவார்.

மார்பகப் புற்று நோய்க்கு மருத்துவம் எது ?

மார்பகப் புற்று நோயின் மருத்துவம், கட்டியின் அளவு, இருப்பிடத்தைப் பொறுத்து, பரிசோதனை முடிவுகளையும், நோயுள்ள படி நிலையையும், நோயின் தன்மையைப் பொறுத்தும் அமையும் மருத்துவம் என்பது தனிப்பட்டது அல்லது முறைமையானது. ?? ஒன்றோ அல்லது பல இணைந்த மருத்துவத்தை ஒருவர் பெறலாம். உங்கள் மருத்துவ திட்டத்தைப்பற்றி உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்கிக் கூறுவார்.


லோகல் மருத்துவம்:-

ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள புற்றுநோய் அணுக்களை நீக்கவோ, அழித்தலோ கட்டுப்படுத்துதலோ இந்த வகை மருத்துவத்தின் தன்மையாகும். அறுவை மருத்துவம், அதிரொலி பாய்ச்சும் மருத்துவங்கள் இந்த வகை மருத்துவத்துக்குட்பட்ட மருத்துவமாகும்.

அறுவை மருத்துவம்:-

அறுவை மருத்துவம் என்பது மார்பகக் புற்று நோய்க்கான மிகச் சாதாரணமான மருத்துவ முறையாகும். இந்த அறுவை மருத்துவத்தின் பயன்கள், சிக்கல்கள், எதிர்பார்க்கும் முடிவுகள் குறித்து உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்குவார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 1

பெண்களுக்கு என்று ஏற்படும் சிலவகை நோய்களில், இந்த மார்பக புற்று நோயும் தற்போது அதிகரித்து வருகிறது. இவை நான் படித்தது. நல்ல விசயம் உங்கள் எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பி இங்கே இடுகிறேன்...

இவை சிங்கப்பூர் சாங்கி மருத்துவமனையின் தளத்தில் இடப்பட்ட பதிவு.

அது உங்களுக்காக.....

மார்பகம் என்றால் என்ன?



ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்புத் தொங்கு சதைகளானது. ஒவ்வொரு தொங்கு சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் சிறு முனைப் பகுதி குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத்தொங்கு சதைகள், சிறு இதழ்கள், முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன.

இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோல் (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்பகத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்பகத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றது.


ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப் (lymph) எனப்படும் வர்ணமற்ற திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes) எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன.

இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டங் கூட்டமாக அக்குளின் மேலேயும் தோட்பட்டை எலும்புகளின் மேலும் மார்பகங்களிலும் உள்ளன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.


மார்பகப் புற்று நோய் என்றால் என்ன?

மார்பகப் புற்று நோய் என்றால், மார்பகத்தில் உள்ள சில அணுக்கள் அளவுக்கதிகமாக வளர்வதாகும். புற்று அணுக்கள் மற்ற அணுக்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள இழைமங்களை (tissues) ஆக்கிரமிக்கும் .


மார்பகப் புற்று நோயின் அறிகுறிகள் என்ன?

துவக்க நிலை மார்பகப் புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பகப் புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் அறிகுறியும் இருக்காது.


புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.

1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும்.

2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்.

3. முலைக் காம்பிலிருந்து இரத்தமோ வேறு திரவமோ கசியும்.

4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்)

5. முலைக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும்.

மேற்கண்ட மாறுதல்களில் ஏதேனும் தென்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.








எவ்வாறு மார்பகப் புற்றுநோய் கண்டறியப் படுகிறது?

மார்பகப் புற்றுநோயைக் கீழ்க்கண்ட முறைகளில் கண்டறியலாம்.
மருத்துவ வரலாறு:-
உங்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவ வரலாறு உதவும். உங்கள் மருத்துவர் குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்ததா, இருக்கிறதா என்று கேட்டறிவார். உங்களுடைய மாத விலக்கு விவரங்கள், உங்கள் மார்பகக் கட்டியின் புறத் தன்மைகள் குறித்து உங்களிடம் கேட்பார்.
மார்பகக் கட்டியைத் தொட்டுப் பார்த்தல்:-
உங்கள் மருத்துவர் உங்கள் மார்பகத்தைத் தொட்டுப் பரிசீலனை செய்து மார்பகக் கட்டியின் இருப்பிடம், அளவு, மார்பக லிம்ப் மற்றும் லிம்ப் நோட்ஸ்களின் பொதுத்தன்மையைக் கண்டறிவார்.

மம்மோ கிராம் (mammo gram)
உங்கள் மருத்துவர் மம்மோகிராம் சோதனையைச் செய்து கொள்ளுமாறு உங்களிடம் கூறலாம். மார்பகக் கட்டிகளை, அதிலும் மிகச் சிறியவற்றைக் கண்டு பிடிக்க உதவும் ஒருவகை பயன்மிக்க மார்பகத்தை எக்ஸ்ரே பிடிக்கும் தொழில் நுட்பமாகும் இது. ஒரு தட்டு போன்ற கருவியால் உங்கள் மார்பகத்தைத் தட்டையாக அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும்.
உங்கள் மார்பகக் கட்டியின் முக்கிய விவரங்களை மம்மோகிராம் உங்கள் மருத்துவருக்கு அளிக்கும். மம்மோகிராமில் ஏதேனும் ஒரு பகுதி ஐயம் உண்டாக்கினாலும், தெளிவாக இல்லாவிட்டாலும் மற்றொரு எக்ஸ்-ரே எடுக்க வேண்டியிருக்கும்.
அதிரொலி (Ultra sound)
அதிரொலி என்பது அதிக அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்பகத்தின் மீது செலுத்தி மார்பகத்தின் கட்டி கெட்டியாக (திடமாக) உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா என்று கண்டறியலாம். மம்மோ கிராபியுடனும் இந்தப் பரிசீலனையைச் செய்யலாம்.
நீடில் பயோப்சி (Needle Biopsy)
உங்கள் மருத்துவர் ஒரு மெல்லிய ஊசியால் உங்கள் மார்பகக் கட்டியிலிருந்து ஒரு சில அணுக்களை எடுத்து நுண்ணோக்கியில் பரிசீலித்து மார்பக புற்றுநோய் உள்ளதா இல்லையா என்று கண்டறிவார். சில சமயங்களில் ஒரு பெரிய ஊசியை கெட்டியான கட்டியின் மைய இயைமத்தை எடுக்கப் பயன்படுத்துவார்.

மார்பகப் புற்று நோயின் வகைகள்:-
மார்பகப் புற்று நோயில் பல வகைகளுண்டு. மிகச் சாதாரண வகைகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
இது மிகச் சாதாரணமாக வரும் மார்பகப் புற்றுநோய் வகையாகும். நாளங்கள் தடிப்பதின் வழி இது துவங்கும்.
2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)
இது மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் உண்டாகும்.
3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
மார்பகத்தின் வெளிப்பகுதியில் புற்றுநோய் முற்றிலும் பரவிய பின்னர் புற்றுநோய் அணுக்கள் அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் அதிகமாகப் பரவும். எப்போது இத்தகைய முடிச்சுகளில் புற்று நோய் பரவுகிறதோ, புற்றுநோய் அணுக்கள் உடலின் மற்ற எல்லா பாகங்களிலும், மற்ற எல்லா லிம்ப் நோட்களிலும், எலும்பு, ஈரல், நுரையீரல் முதலிய அங்கங்களிலும் ஏற்கனவே பரவி விட்டது என்பதை தெறியலாம். அவ்வாறு மார்பகப் புற்றுநோய் எங்கும் பரவுகிறதோ என முற்றிலும் பரவிய புற்றுநோய் எனலாம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அதிக வெள்ளை போக்கால் கர்பப்பை புற்றுநோய்


பெண்கள் கவானக் குறைவாக இருந்தால் கர்பப்பை இழக்க நேரிடும்.பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விட்டு விடுவதுண்டு.


இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறி விடும். கர்ப்பப்பை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும் என்று கூறுகிறார் சித்த மருத்துவர் டாக்டர் சங்கர்.

இது குறித்து " மாமல்லன் சித்த மருத்துவமனையின் டாக்டர் சங்கர் " இதோ விளக்குகிறார்.


இந்த வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது.


சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும். மேலும் சிலருக்கு தயிர் போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் குணம் நாட்பட நாள்பட நிறமும் மாறுபடும்.


இந்த நோய் வருவதற்கான காரணங்கள்

* தவறான உணவுப் பழக்கங்கள்

* கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்ணுதல்

*சுகாதாரமற்ற உள்ளாடைகள்

*சுய இன்பம் காணுதல்

*மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல்

* ஊளை சதை உள்ளவர்கள் ரத்த சோகை உள்ளவர்கள்

* உடலில் அதிக உஷ்ணம், அதிக உடலுறவில் இடுபடும் பெண்கள்.

* கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் உள்ளவர்கள்.

மேற்க்கூறிய‌ காரணங்களாலேயே இந்த வெள்ளைப்படுதல் நோய் ஏற்படுகிறது.


இந்த நோய்க்கான அறிகுறிகள்

* இந்நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் இறங்குவதற்கு முன்போ பின்போ வெண்ணிறத்துடன் சீழ்போல் வெளிப்பட்டு சிறுநீர் போகும் போது எரிச்சலை ஏற்படுத்தும்.

* உடல் மெலிந்து இடுப்பு, கை, கால்கள், உடல், கணுக்கால், தசை அனைத்து முட்டுகளிலும் அதிக வலியை உண்டாக்கும்.

* உடல் நலிவடைந்து விரைவிலேயே களைப்படையச் செய்வதால் மாடிப்படி ஏறுவதற்கும், இடுப்பில் தண்ணீர் தூக்குவதற்கும் முடியாது.

* பிறப்பு உறுப்புகளில் அறிப்பு, புண் ஏற்படுவதோடு உஷ்ணம் அதிகமாவதால் வயிற்றைப் பிடித்து இழுப்பது போன்ற உணர்வு, கண்களைச் சுற்றி கருவளையம், மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி ஆகியவையும் ஏற்படும்.

* மாதவிலக்கு சரிவர வராமல் இருப்பது என்பது உட்பட பல அறிகுறிகளைக் கூறலாம்.

* இந்த வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பல பெண்கள் வெளியில் செல்ல வெட்கப்பட்டு மருத்துவரை அணுகுவதில்லை. அதன் விளைவு கர்ப்பபையை அகற்றுவதோடு கர்பப்பை புற்று நோயால் ஏற்படக் கூட காரணமாகிறது.


வெள்ளைப்படுதலை போக்குவதற்கான சித்த மருத்துவம்


* கட்டுக் கொடி மூலிகையை நன்கு அரைத்து எருமை தயிரில் கரைத்து சாப்பிட வேண்டும். பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நோய் தீர்ந்து விடும்.

* வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.

* அருகம்புல் இரண்டு கைப்பிடி, கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து எருமைத்தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.

* வெள்ளைப்படுதலால் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த இலுப்பை புண்ணாக்குடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து தூளாக்கி எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்து வெந்நீரால் கழுவ வேண்டும்.

* தென்னம்பூ இரண்டு பிடி, உதிர மரப்பட்டை சிறுதுண்டு இவை இரண்டையும் நன்கு இடித்து பாத்திரத்தில் வைத்து மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி ஒரு டம்ளராக வற்றியவுடன் ஆற வைத்து வடிகட்டி குடித்தால் சுமார் 25 நாட்களுக்குள் வெள்ளைப்படுதல் குணமாகும்.


உணவு முறைகள்

* உணவில் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* சரியான நேரத்தில், உப்புக் காரம் குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.

* எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்கள் சாப்பிடலாம். * மசாலா பொருட்கள், காபி, டீ, புளியை தவிர்த்தல் நல்லது.

* இளநீர், கீரை, தயிர், மோர் இவைகளை அதிகம் சேர்த்தும் மாமிச உணவு வகைகள், கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது. இந்த நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

சித்த மருத்துவத்தில் இதற்கு பல மருந்துகள் உள்ளன. என்னிடம் வரும் நோயாளிகளில் இந்த வெள்ளைப்படுதலை குணப்படுத்த வரும் பெண்கள் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


எனவே வெள்ளைப்படுதலை அலட்சியப்படுத்தாமல் உடன் தகுந்த சிகிச்சையை மேற்கொண்டு உடலை பாதுகாக்க வேண்டும். சித்த வைத்தியத்தில் வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்த எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.



தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,


டாக்டர்எம்.சங்கர்,
மாமல்லன் சித்த மருத்துவம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி மையம்,
393, திருவள்ளூர் சாலை,
பன்னீர் நகர்,
முகப்பேறு,
சென்னை-600037.


தொலைபேசி-044-32953478
Mobile: 9382105986


நன்றி டாக்டர் எம்.சங்கர்.
tamil.webdunia.com

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

படங்களுடன் பழங்களின் பெயர் - 6

Wood Apple ------ விளாம்பழம்

Wax jambu ------ நீர்குமளிப்பழம்




Watermelon ------ வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி


Ugli Fruit ------ முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் (உக்குளி - ugly)


Tangerine ------ தேனரந்தம்பழம், தேன் நாரந்தை


Tamarind ------ புளியம்பழம்


Tamarillo ------ குறுந்தக்காளி


Syzygium ------ சம்புப்பழம், சம்புநாவல்


Strawberry ------ செம்புற்றுப்பழம்


Sour sop/ Guanabana ------ சீத்தாப்பழம்


Raspberry ------ புற்றுப்பழம்


Red currant ------ செந்திராட்சை, செங்கொடிமுந்திரி


Red banana ------ செவ்வாழைப்பழம்


Rambutan(ramboutan) ------ மயிலைப்பழம் (Wild rambutan - கானமயிலைப்பழம்)


Pomelo ------ பம்பரமாசு



Pomegranate ------ மாதுளம் பழம், மாதுளை

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net