Monday, March 7, 2011

சிரிப்பு வந்தா சிரிங்க

************

நேத்து மங்குனி, சிரிப்பு போலீச பாக்கப் போயிருக்காரு, அப்போ

மங்குனி: டேய் நீ ஒரு கார் வங்கனும்னியே, என்ன பிராண்டு டிட்சைட் பண்ணி இருக்கே?

சிரிப்பு போலீஸ்: பிராண்ட் நேம் மறந்துடுச்சு மச்சி, ஆனா அது டீ-ல ஸ்டார்ட் ஆகும்...

மங்குனி: என்ன ஆச்சர்யம், எல்லாக் காரும் பெட்ரோல் இல்ல டீசல்ல தானே ஸ்டார்ட் ஆகும், அந்தக் காரு மட்டும் எப்படி டீல ஸ்டார்ட் ஆகுது? அப்போ காபில கூட ஸ்டார்ட் ஆகுமா?

சிரிப்பு போலீஸ்:  %&^(&*)(%^$^*&)(*

மங்குனி: ஏம்பா நீதான் டீல ஸ்டார்ட் ஆகும்னு சொன்னே, இப்போ இப்படி திட்டுறீயே? என்னமோ போங்கப்பா.....!

சிரிப்பு போலீஸ் இப்போ கார் வாங்கற ஐடியாவையே கைவிட்டுட்டார். இனி ஏதாவது டௌரியா வந்தாத்தான் உண்டாம்.

************

நம்ம செல்வா ரேடியோ ஜாக்கியா சேர்ந்து மொத நாளு, சிரிப்பு போலீஸ் போன் பண்ணி,

சிரிப்பு போலீஸ்: ஹலோ ரேடியோ டேசனா? நான் கீழ கெடந்து ஒரு பர்ஸ்ச எடுத்திருக்கேன், அதுல 5000 ரூவா, டெபிட் கார்ட், கிரெடிட் கார்டு எல்லாம் இருக்கு, அவர் டீடெயில்ஸ்,

பனங்காட்டு நரி என்ற தில்லுமுல்லு என்ற மணி
நம்பர் 24, 4-த் மெயின் ரோடு
ராசா காலனி,
கேகே நகர், சென்னை

செல்வா: அய்ய்ய்யயோ... கிரேட் சார் கிரேட்.. இந்தக் காலத்துலேயும் இவ்வளவு நேர்மையா இருக்கீங்களே... இப்போ எங்க நிலையத்துக்கு வந்து அதை ஒப்படைக்க போறீங்க அவ்வளவுதானே?

சிரிப்பு போலீஸ்: அட நீங்க வேற யோவ், மொதல்ல நான் சொல்றத கேளுங்க, அந்தப் பர்சை மிஸ் பண்ண நரிக்கு 'என் கதை முடியும் நேரமிது' பாட்டை டெடிகேட் பண்ணனும், அதுக்குத்தான் ஃபோன் பண்ணுனேன், உடனே போடுங்க..... ஓகே பை டாட்டா...சீ யூ....

************

நம்ம வெங்கட், ஊர்ல பயங்கர புயல் மழை அடிச்சிட்டு இருக்கும் போது KFC-ல போயி பார்சல் ஆடர் பண்ணியிருக்காரு, பார்க்க ரொம்ப யங்கா இருக்காரேன்னு கடைக்காரன் கேட்டிருக்கான்,


சார், உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

வெங்கட்: ஏம்பா, எங்கம்மா இந்த மாதிரி என்னைய புயல் மழைல சிக்கன் வாங்க அனுப்புவாங்கன்னு நெனைக்கிறியா?

************

வேலண்டைன்ஸ் டே ஸ்பெசல் கார்ட்டூன்ஸ்

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket



நம்மாளுங்க தண்ணி கெடைக்காம தாகம் எடுத்தே செத்தாலும் சாவாய்ங்களே தவிர, சில விஷயங்கள விடவே மாட்டாய்ங்க...





வேல கெடச்சிருச்சு.........................
மங்குனி அமைச்சருக்கு மாருதி கம்பேனில எப்படியோ வேல கெடச்ச மாதிரி நமக்கும் ஒரு எடத்துல இருந்து வேலைக்கு வரச் சொல்லி ஆடர் வந்திருக்கு,  தனியா போறதவிட யாராவது என்கூட சேர்ந்தீங்கன்னா நல்லாருக்குமேன்னு பாக்குறேன். இடம், சாப்பாடு, ட்ரான்ஸ்போர்ட் எல்லாமே ஃப்ரீ. சம்பளம் கொஞ்சம் கம்மிதான், ஆனா டிப்சே பல மடங்கு தேறுமாம். அப்படி என்ன வேலைன்னு கேக்குறீங்களா? அதை வெளக்கமா வெளக்கறதவிட படமாவே காட்டிடறேன். கொஞ்சம் கீழ பாருங்க,



என்ன இந்த ஜாப் ஓக்கேயா? நெறைய கெடைக்கும் சார், டிப்சு......



--
Regards,
Yoganandhan Ganesan
09731314641


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மொக்கையா ஒரு தேர்வு.

ராகவன்: டேய் மாப்பிள்ளை நான் இன்னைக்கு காலேஜூக்கு வரலை, இண்டர்வெல்ல ஹாஸ்டல் பக்கம் வந்தீன்னா கேண்டீன்ல கோல்ட் பிளேக் பிளையின் இரண்டு வாங்கிட்டு வாடா?

நடேசன் : ஏன் ஹாஸ்டல்ல இருந்து என்னக்கிழிக்கப்போற அங்க வந்து உட்காந்து பாடத்தை கவனிக்கலாம்ல.

ராகவன்: அந்த ஏர்வாடி பார்ட்டி வந்து அதை வெச்சிக்கிட்டீங்கனாக்கும் இதை எடுத்துக்கிட்டீங்கநாக்கும்னு சொல்றத கேட்டு நாக்கும் தவிர எதுவும் புரியறதில்லை. அதுனால இன்னைக்கு உருப்படியா அந்த மரமல்லி மரத்தில் எத்தனை பூ பூத்திருக்குன்னா முழசா எண்ணப்போறேன்.

நடேசன்: ஏண்டா மரத்தில எத்தனை பூ பூத்திருக்குன்னு எண்ணறதெல்லாம் ஒரு பொழுதுபோக்காடா? உருப்படியா ஒரு ஐடியா சொல்றேன் அதைக்கேளு fast reading அப்படின்னு ஒரு காண்செப்ட் இருக்கு, ராஜ் பப்னான்னு ஒருத்தர்தான் அத எழுதிருக்கார், அந்த புத்தகப்படி ஒருதடவை படிச்சா அடுத்த பதினெட்டு மணிநேரத்தில 80 % மறந்துருமாம் , அதுனால வேகமா படிக்கனும், பதினெட்டு மணி நேரத்திற்குள் இரண்டு,மூனு முறை திரும்ப படிச்சிட்டா 95% மேல மறக்காதாம். இந்தாடா இதுதான் அந்தப்புத்தகம் என்ன சொல்லிருக்காருன்னு படிடா.

ராகவன்: பதினெட்டு மணி நேரம் இருக்கேடா, நம்ம எப்பயும் அடுத்த நாள் காலைல பரீட்சைக்கு ராத்திரி 12 மணிக்கு மேலதானே படிப்போம் , படிச்சு மறக்கறதுக்கு முன்னாடியே பரீட்சையே முடிஞ்சுரும், அப்புறம் மறந்தா என்னா இருந்தா என்னடா?

நடேசன்: டேய் வெண்ணை இப்படி படிச்சு பாஸ் பண்றதுல என்னடா புண்ணியம் நான் சொல்றத முயற்சி பண்ணிப்பாருடா? நானும் இந்த முறை தேர்வுக்கு இன்ஸ்ட்ரூமெண்டேசன் பாடத்தை பப்னா சொன்னது மாதிரிதான் படிக்கப்போறேன், கண்டிப்பா 90% மார்க் வாங்க முடியும் அதோட காலத்துக்கும் மறக்காதுடா.
-----------------

இருவரும் தேர்வுக்காக பப்னா புத்தகத்தையும், இன்ஸ்ட்ரூமெண்டேசன் புத்தகத்தையும் வைத்து தீவிரமாக படித்தனர்.தேர்வும் முடிந்து முடிவுகள் வந்தது, எப்பயும் குறைந்தபட்ச மார்க் எடுத்து பாஸ் பண்ணும் ராகவன் இந்த முறை 90% வாங்கிவிட்டான்.

நடேசன் : பரவாயில்லைடா நான் சொன்ன மாதிரி படிச்சு 90% வாங்கிட்ட, ஆனா நானும் தீவிரமா பப்னா சொன்ன மாதிரிதான் படிச்சேன், ஆனா பேப்பர் புட்டுகிச்சுடா ஆச்சர்யமா இருக்கு, எங்கியோ தப்பு பண்ணிட்டேன். நீ எப்படி படிச்ச சொல்லு.

ராகவன்: அது ஒன்னும் இல்லடா , பப்னா புத்தகத்தில முத மூனு பக்கத்தை நல்லா மனப்பாடம் பண்ணிட்டேன் , அப்படியே இன்ஸ்ட்ரூமெண்டேசன் புத்தகத்திலே ஹெட்டிங்கெல்லாம் நல்லா மனப்பாடம் பண்ணிட்டேன். பரிட்சையிலே , கேட்டிருக்க கேள்விக்கு தகுந்த மாதிரி ஹெட்டிங் எழுதி பச்சை கலர் ஸ்கெட்ச்ல அண்டர்லைன் பண்ணிட்டேன். அதுக்கு கீழே பப்னா புத்தகத்தில் படிச்சத அப்படியே எழுதினேன், இடையிடையில டிரான்ஸ்டியூசர் அப்படின்னு போட்டு ஊதா கலர் ஸ்கெட்ச்ல அண்டர்லைன் பண்ணினேன். இது மெயின் சீட்டு முடியுற வரைக்கும் கை கொடுத்துச்சு. அப்புறம் பப்னா புத்தகத்தில படிச்சது நிறைய மறந்து போச்சு ,என்ன பண்றதுன்னு யோசிச்சேன் அடிசனல் சீட்டு வாங்கி மத்த கேள்விக்கு தகுந்த மாதிரி ஹெட்டிங்க மாத்திட்டு மெயின் சீட்ட பாத்து அப்படியே எழுதி வெச்சிட்டேன், அண்டர்லைனும் கரெக்டா போட்டுட்டேன் அவளோதாண்டா.

நடேசன்: ???????????!!!!!!!!!!!!!!!!



--
Regards,
Yoganandhan Ganesan
09731314641


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

டும்... டும்...-திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இருப்பதுபோல ஆளாளுக்கு கண்டிஷன் போட்டு விடுகிறார்கள். ஆனால் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவருக்காவது புரிந்தால்தான் வாழ்க்கை நிலைத்திருக்கும். மணவாழ்வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.

***

திருமணத்திற்கு முன்பு கொஞ்சம் தனியாகப் பேசுவோம் என்னும்போதே `இவர் இப்படித்தான்' என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் பலர். எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு, லட்சியம், ஆசை, கோபம் அனைத்தும் இருக்கும் என்பதை மறந்துவிட்டு `எனக்கு இவர் வேண்டாம்' என்று சொல்லி விடுகிறார்கள். கேள்வி கேட்பது, கண்டிஷன் போடுவது மட்டுமல்லாமல் சந்தித்து பேசும்போதே தங்களின் முக்கியமான எதிர்பார்ப்புகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். திருமணத்தை சுமையாக எண்ணாமல், புனிதமானதாக எண்ணுங்கள். இயல்பாக வாழ்வைத் தொடங்குங்கள்.

***

அப்பா அம்மா சொன்னார்கள் என்பதற்காக கழுத்தை நீட்டிவிடக்கூடாது. வாழப்போகும் நீங்கள் வரப்போகிறவர் குணநலன்களோடு சமன்பட்டு வாழ முடியுமா? என்பதை புரிந்து கொண்டு முடிவை அறிவியுங்கள்.

திருமணம் செய்துவிட்டால் இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குரியவராய் வாழ்தல் வேண்டும். இருவருமே ஆசையில் ஒன்று கூடுவதுபோல லட்சிய பயணத்தில் மற்றவர் பாதையில் தடையாக இல்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அஸ்திவாரமாக அமையும்.

***

குறைகளை மறைத்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது எப்போது வேண்டுமானாலும் பூதாகரமான பிரச்சினையை ஏற்படுத்தும். மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் திருமண பந்தத்திற்கு தயாராக வேண்டும். சின்னச்சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும். சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.

***

நண்பர்களின் வேடிக்கைப் பேச்சும், திருமண `ஜோக்கு'களும் திருமணம் கஷ்டமான விஷயம் என்பது போல்தான் காட்டப்படுகிறது. ஆனால் யதார்த்தத்தில் அப்படி கிடையாது. ஜோக்கை நம்பி மனைவி தாயார் வீட்டிற்கு சென்றிருப்பது சுகமான தருணம் என்று எண்ணுவதும், பேசுவதும் கூடாது. கருத்து வேற்றுமையின்போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். `இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன்' என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்துவிடும்.

***

மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் `அவர் எனக்காக மாற வேண்டும்` என்ற எண்ணம் யாருக்கும் எழாது. சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும். திருமணம் முடிந்ததும் மனைவியின் கேரக்டரை ஆராயத் தொடங்கிவிடக்கூடாது. மாமியார்-மருமகள் பிரச்சினை தலைதூக்கும்போது நடுநிலையில் செயல்பட வேண்டியது கணவரின் பொறுப்பு. அவர்தான் இருவருக்கும் உறவுப்பாலத்தை உருவாக்க கடமைப்பட்டவர்.

***

கணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், பெரியோர் உதவியை நாட வேண்டும். பூசல்கள் மிகுந்தாலும் அயலாரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள். தினமும் சிறிது நேரமாவது மனம்விட்டு பேசுங்கள்.

***

இன்றைய பெண் பணிக்குச் செல்லும் லட்சியப் பெண்ணாகவும், அன்பான தாயாகவும், கடமை மிக்க மருமகளாகவும் பல பொறுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் தலைமைப் பண்புடையவளாக செயல்படுகிறாள். அதை கணவன் புரிந்துகொண்டு பக்கபலமாக இருந்தாலே குடும்பம் குதூகலமாக இருக்கும். வேலைக்குச் செல்வதை எதிர்ப்பது, வீட்டுவேலைகளை அதிகம் சுமத்துவது, குறைகூறுவது பிரச்சினைகளை வளர்க்கும். சினிமாவில் சித்தரிக்கப்படும் வாழ்க்கையையும், சீரியல்களில் காட்டப்படும் குரூரங்களையும் நிஜ வாழ்க்கையில் ஒப்பிடக்கூடாது.

***

வீட்டுப்பொறுப்புகளிலும் இருவரும் பங்கேற்க வேண்டும். கணவன் வேலையில் மனைவியும், மனைவி வேலையில் கணவனும் ஒத்தாசைகள் செய்தால் அன்யோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது பரிசளியுங்கள். கைச்செலவுக்கு கொஞ்சம் கூடுதலாக காசு கொடுங்கள்.

திருமணம் என்பது `நீயா நானா' போட்டியல்ல. கணவன்- மனைவி ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒருவரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர்க்கையால் கிடைக்கும் முழுமையை அனுபவிக்கத்தான்.

***

உடலுறவை இயந்திரத்தனமான விஷயமாக அணுகக்கூடாது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறைவேறும் என்று எண்ணக்கூடாது. அது சார்ந்த பிரச்சினைகளுக்கு இன்டர்நெட்டிலும், தெரிந்தவர்களிடமும் ஆலோசனை கேட்பதை தவிர்த்திடுங்கள். மருத்துவரை அணுகுவது நல்ல பலன் தரும்.

தேவையை நிறைவேற்ற நிபந்தனை விதிக்காதீர்கள். நெருக் கம் இருக்கும் இடத்தில் உரிமை எடுத்துக்கொள்வதும் இருக்கும். எனவே கோபம் கொள்வதும், கூடிக்கொள்வதும் குடும்பத்தில் சகஜம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

***



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 
09731314641

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள்  புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க...

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய....

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

* இதயத்தை வலுவாக்கும்.

* சிறுநீரைப் பெருக்கும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

* இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

* தாதுவை விருத்தி செய்யும்.

* இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 




courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ...

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ...

லகில் எங்கேயும், எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் யாராவது உண்டா? என்றால் இல்லை என்று தான் பதில் வரும். ஏனென்றால் கவலையே இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனாலும் கவலைகளை மறந்து, மகிழ்ச்சியை அனுபவித்து வரும் பலரும் இங்கே வாழ்ந்து வருகின்றனர்.

சைக்காலஜிஸ்ட் லிஷா சைபர்ஸ் கேமன் மற்றும் அவரது மகள் கேரன் ஆகிய இருவரும் இணைந்து பல டாக்குமெண்டரி படங்கள் தயாரித்தார்கள். அதோடு பல்வேறு மனிதர்களை ஆய்வு செய்ததில், இந்தியாவில் உள்ள மக்களின் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் சந்தோஷத்தை உண்டாக்குகின்றன என்பதை அறிந்து கொண்டனர். இங்கே தோன்றிய மகான்களின் கருத்துகளும் மகிழ்ச்சியை அறியும் நோக்கில் இருப்பதாக சர்வதேச அறிஞர்கள் பலரும் கூறுகின்றனர். உளவியலார்கள் இணைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை உருவாக்கும் வழிமுறைகளை வகுத்துள்ளனர். அவற்றை தெரிந்து கொண்டு அதன்படி நடந்தால் கண்டிப்பாக உங்களுக்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவற்றை இங்கே பார்ப்போம்,

சிரிப்பு

சிரிப்பு... எதிரே இருக்கும் யாரையும் எளிதில் கவர்ந்து விடும். பன்சால் என்ற இளம்பெண்ணின் மகிழ்ச்சி ததும்பிய நாட்களில் இவளுடைய முகத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை. ஆனால் திருமணத்திற்கு பின்னர் இவளுடைய முகத்தில் கவலை மட்டுமே குடியிருந்தது. இவளுடைய கணவர் ஆர்மியில் பணியாற்றுபவர் என்பதால், முகத்தில் சிரிப்பு என்பதே இல்லை. இதனால் இவளுக்கும் சிரிப்பு மிஸ் ஆனது. இதன் தாக்கம் இவளுடைய உடம்பும் மெலிந்து ஆரோக்கியம் கெட்டுப் போனது. இதை அறிந்த அவளுடைய தோழிகள் அவளுக்கு நன்றாக சிரிக்குமாறு அறிவுரை கூறினர். சிரிப்பு என்பது நம்முடைய உடம்பு, மனதில் ஏற்படும் வலிகளைப் போக்கும் வலி நிவாரணி. இதுவொரு முகத் தசைகளை அழகாக்கும் அழகியல் காரணி என்பதை பன்சாலுக்கு புரியவைத்தனர். சிரிப்பதால் இளமை மெருகேறும். தற்போது பன்சால் நன்றாக சிரிக்கிறாள்.

சிரிப்பு என்பது நமக்கு மட்டுமின்றி, நம்மை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷப்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.

மன்னிப்பு

சிலரது இயல்பே அவர்கள் எத்தனை உயர்நிலையில் இருந்தாலும் அவர்களை எளிதில் அணுகும் விதத்தில் இருக்கும். அதேநேரம் இந்த மனநிலை எல்லாருக்கும் வராது. மேலும் இதே மனநிலையில் தொடர்ந்து வாழ்வதும் மிகவும் கஷ்டமானது. அப்படியொரு மனநிலை உங்களுக்கும் வரும்போது கண்டிப்பாக இந்த வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றமுடியும். தீயவற்றை மறப்பதும், அதனால் ஏற்பட்ட தவறுகளை மன்னிப்பதும் நம் வாழ்க்கையின் சந்தோஷத்திற்கான அடிப்படை காரணிகள்.

உள்வாங்குதல்

நமக்கு எதில் விருப்பம் அதிகம் என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப விஷயங்களை தேடிச் செல்வது, அதற்கான கருத்துக்களை உள்வாங்கி காதில் போட்டுக் கொள்வது, அது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவது என நம்மை நாம் அறிந்து கொண்டால் மகிழ்ச்சியை அதிகரித்துக் கொள்ளலாம்.

நாம் அடிக்கடி கேட்கும் மனதுக்கு பிடித்த ஒலியின் மூலம் நம்முடைய உடலும், மனதும் உற்சாகமாகும் என்பதை ஒப்புக் கொள்கிறார் பிரபல சைக்யாட்ரிஸ்ட். ஹாரன் சப்தம் எரிச்சலை உண்டு பண்ணும். மென்மையான ஒலிகள் நம்மை தாலாட்டும்.

சுவாசத்தின் வாசம்!

நம்முடைய சுவாசம் மிகச் சரியாக இருக்கும்பட்சத்தில் நம்முடைய உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் அடிப்படையில் உருவானதுதான் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி.

ஒவ்வொரு மனிதனும் சுவாசத்தை மிகச் சரியாக செய்யாதபோது, செயல்பாடுகளில் சிறந்த முறையில் கவனம் செலுத்த முடியாது. மூச்சுப்பயிற்சியை மிகச் சரியாக செய்ததால்தான் யோகிகள் தாங்கள் நினைத்த இலக்கை அடைந் தனர். தியானமும் இதன் அடிப்படையில் உருவானதே. ஆனால் இதில் மூச்சுப் பயிற்சியை முறையாக கையாண்டால் மட்டுமே சிறந்த பலன்களை பெற முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்ததாகவும், அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையில் பல மாற்றங்களை சாதிக்க முடிந்ததாகவும் கூறுகிறார் பிரபல மருத்துவர். உடலில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், சீரான மூச்சு விடுதல் மூலம் அதை குணப்படுத்த முடியும். மூச்சு விடுதலை நாம் முறையாக செய்யும்போது மனதை அமைதியாக்கி, நமது குறிக்கோளை கண்டிப்பாக அடைய முடியும்.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதையே பத்துமுறையாக்கும்போது கண்டிப்பாக வித்தியாசமான அனுபவத்தை பெறமுடியும். புத்துணர்ச்சி, அதிக எனர்ஜி, சூழலை எளிதாக கையாளும் திறன் ஆகிய மூன்றும் கிடைக்கும். இதைத் தான் தியானம் மூலம் நாம் பெறுகிறோம்.

தினமும் எட்டு நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் போதும், பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டுப் பாருங்கள்... புது அனுபவத்தை உணர்வீர்கள்!

கனிவு... அன்பு!

மற்றவர்கள் மீது அன்பு செலுத்தினால், நமது ஆயுள் நீடிக்கும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். மற்றவர்கள் மீது நாம் அளவுக்கு அதிகமான அன்பை செலுத்தும்போது நமது உடலில் உள்ள ஹார்மோன் நமக்கு நல்ல உணர்வுகளை கொடுக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் அன்பை வெளிப்படுத்தும்போது ஹார்மோன் பிரச்சினைகள், ரத்த அழுத்தம், மன அழுத்தம் குறைகிறது. ஆரோக்கியமும், மன அமைதியும் அதிகரிக்கிறது.

ஒருவர் மீது அன்பு வைத்தால் போதும், தொடர்ந்து நமக்கு அது சந்தோஷத்தை கொடுக்கும். குறிப்பாக தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து அன்பை செலுத்தும்போது அதற்கேற்ப குடும்பத்தில் இல்லறம் இனிக்கும் என்று கூறுகிறார் பிரபல செக்ஸ் மருத்துவர்.

அன்புக்கு எல்லையே இல்லை. நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது அன்பை செலுத்தும்போது, அந்த பிராணியும் உங்கள் மீது அன்பை வெளிப்படுத்தும். இதனால் நம்முடைய மனது அமைதியாகி, உடல் ஆரோக்கியமாகும்.

***



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net