Wednesday, February 23, 2011

மன்னிப்பு கேட்பாயா?

திரை அரங்கிற்கு தன நண்பர்களுடன் சென்ற ஒருவன் தன இருக்கையைக் கண்டுபிடித்து உள்ளே நுழையும்போது முன்னாள் அமர்ந்திருந்த ஒருவரின் காலை மிதித்து விட்டான்.மிதிபட்டவர் அவன் மன்னிப்பு கேட்பான் என்று எதிர் பார்த்தார்.அவன் தன நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.இடை வேளையின்போது வெளியே சென்று நண்பர்களுடன் திரும்பிய அவனுக்கு தன வரிசை எது என்று சரியாகத் தெரியவில்லை.முன்னால் அமர்ந்திருந்தவரிடம்,'சார்,படம் ஆரம்பிக்குமுன் நான் உள்ளே போகும்போது உங்கள் காலை மிதித்துவிட்டேனா?'என்று கேட்டான்.இப்போதாவது அவனுக்கு வருத்தம் தெரிவிக்கத் தோன்றியதே என்று எண்ணி அவர்,'ஆமாம்,'என்றார்.உடனே அவன் தன நண்பர்களிடம் சொன்னான்,''நாம் உட்கார்ந்திருந்தது இந்த வரிசை தான்.வாங்கடா!''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நடைபோடு

ஒரு நாள் மாலை.வீட்டின் முன் பகுதியில் முல்லா இங்கும் அங்கும் அமைதியின்றி  நடந்து கொண்டிருந்ததை அவர் மனைவி கவனித்து என்ன விஷயம் என்று கேட்டாள்.''பக்கத்து வீட்டுக்காரரிடம் வாங்கிய நூறு தினார் கடனை நாளைக்குத் திரும்பக் கொடுக்க வேண்டியுள்ளது.கையில் ஒரு தினார்கூட இல்லை.என்ன செய்வதென்றே புரியவில்லை.''என்றார் முல்லா.;அவரிடம் இந்த மாதம் தர முடியாது என்று சொல்லிவிட்டு வரவேண்டியதுதானே?' என்றார் அவர் மனைவி.மனைவியின்  அறிவுரையைக் கேட்டு பக்கத்து வீட்டுக்கு சென்றவர் திரும்ப  வரும்போது  உற்சாகமாக  இருந்தார் .மனைவி கேட்டார்,''நீங்கள் சொன்னதை அவர் ஏற்றுக் கொண்டாரா?''முல்லா சொன்னார்,''பாவம்,இப்போது அவன் அமைதியின்றி  வீட்டின் முன் பகுதியில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கிறான்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வரைபடம்

புத்த மத வேதங்களிலுள்ள கருத்துக்களைக் கொண்டு வரையப்பட்டஓவியம்  ஒன்றை ஒரு புத்த சந்நியாசி எரித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த ஒரு சீடர் அவரிடம் கேட்டார்,'குருவே,என்னே காரியம் செய்கிறீர்கள்?இந்த வேதன்களைத்தானே எப்போதும் எங்களுக்கு பாடமாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள்.அவைதான் வாழ்வைப் பிரதிபலிப்பவை என்று  கூறினீர்கள்?இப்பொது மட்டும் ஏன் அதை எரிக்கிறீர்கள்?'குரு சிரித்துக்கொண்டே சொன்னார்,''நான் வீட்டை அடைந்துவிட்டேன்.இனி எனக்கு வரைபடம் தேவையில்லை.''ஞானம் அடைந்தவர்களுக்கு எந்த வேதமும் தேவையில்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

விற்பனையாளன்

இடம் வாங்கி விற்கும் நிறுவனம் ஒன்றில்,ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்த நிலம் நீண்ட நாட்களாக வாங்க ஆள் இல்லாமல் இருந்தது.அதன் உரிமையாளர் என்ன செய்வது என்று யோசிக்கையில் ஒரு விற்பனையாளன்,தான் அந்த இடத்தை விற்றுத் தருவதாகச் சொன்னான்.அவனும் எப்படியோ பேசி ஒருஆளிடம் நிலத்தை விற்றுவிட்டான்.உரிமையாளருக்கு அவன் மீது ஒரு நல்ல அபிப்பிராயம்  ஏற்பட்டது.
பத்து நாள் கழித்து கடும் மழை பொழிந்தது. அந்த நிலமோ சரியான பள்ளத்தில் இருந்ததால் முழுவதும் நீர் சூழ்ந்துவிட்டது.வாங்கியவருக்கு படுகோபம்.அவர் தான் ஏமாந்ததை எண்ணி,அந்த விற்பனையாளனிடம் வந்து கடுமையாகப்பேச ஆரம்பித்தார்.அவன் அமைதியாகச் சொன்னான்,''உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் பணத்தை பத்து நாள் வட்டியுடன் வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த இடத்தை வாங்க நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்.''வாங்கியவருக்கோ ஒரே திகைப்பு.'என்ன விளையாடுகிறீர்களா?இந்தநிலையில் இந்த நிலத்தை வாங்க யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது?'என்று கேட்டார்.விற்பனையாளன் சொன்னான்,''இந்த இடத்தின் அருமை உங்களுக்குத் தெரியவில்லை.தண்ணீர் வடிந்ததும்இங்கு வீட்டைக் கட்ட வேண்டும். பின் அடுத்த முறைமழை பெய்யும்போது நீரை வெளியேறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அப்போது உங்கள் வீடு இந்த நகரத்திலேயே ஏரியிலே  கட்டப்பட்ட முதல் வீடாக  இருக்கும்.யோசித்துப் பாருங்கள்.ஒரு ஏரி வீடு கட்டுவதென்பது எவ்வளவு கடினமானது .இங்கு இயற்கையாகவே ஒரு ஏரி வீடு கட்டப்போகிறீர்கள்.நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள் இடம் கைமாறிப் போய்விட்டால் உங்களால் அழகிய  ஏரி வீடு கட்ட இயலாமல் போய்விடும்.''வாங்கியவர் அமைதியானார்.இந்த சந்தர்பத்தை உபயோகித்து,விற்பனையாளன்,''தற்போது உங்களுக்கு நான் ஒரு உதவி செய்ய முடியும்.எங்களிடம் இரண்டு சிறிய படகுகள் இருக்கின்றன உங்களுக்காக அவற்றைக் குறைந்த விலைக்குத் தருகிறோம்.அவற்றை நீங்கள் நீரில் செல்ல பயன் படுத்திக் கொள்ளலாம்.''இப்படிச் சொல்லி நீண்ட நாட்களாக பயனின்றி இருந்த இரண்டு படகுகளையும் விற்றுவிட்டான்.
நல்ல விற்பனையாளன் தேவைகளை உருவாக்கிவிடுவான்..

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எளிய அறிவுரை

நம் மீது யாராவது கோபம்கொண்டால்,நாம் நேரடியாக அவரைக் குற்றம் சொல்லாமல் 'நம் மீது அவன் கோபம் அடைய,நாம் அவனுக்கு என்ன செய்தோம்.அவன்  ஏன்  நம் மீது மட்டும் கோபப்படுகிறான்?மற்றவர்களிடம் நல்ல முறையில் தானே நடந்து கொள்கிறான்!'என்று எண்ணி அதற்கான காரணத்தை உங்களிடமே கண்டு பிடிக்க முயலுங்கள்.அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக,'நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன?உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்?நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை.உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம்இருக்க வேண்டும்.'என்று நட்பாகக் கேட்கவும்.உடனே அவன் கண்களில் நீர் மல்க உங்களிடம் மன்னிப்புக் கேட்கலாம்.
ஜார்ஜ் குருட்ஜிவ்  ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை ஒரு எளிய அறிவுரையைக் கூறினார்.''யாராவது உன் மேல் கோபம் கொண்டால்,அதற்கு பதிலாக உடனே எதுவும் செய்யாதே.உடனே பதிலுக்கு சண்டை போடாதே.அவன் சொல்வதைக் கவனமாகக் கேள். பிறகு அவனிடம்,'நான் நீங்கள் கூறியவற்றைப் பற்றி சிந்திக்க எனக்கு 24 மணி நேர அவகாசம் கொடுங்கள்.பிறகு தகுந்த பதிலை உங்களுக்கு  சொல்கிறேன்,'என்று கூறவும்.''குருட்ஜீவ் கூறுகிறார்,''இந்த அறிவுரைஎன்  முழு வாழ்க்கையையும் மாற்றி விட்டது.ஏனெனில் சில சமயம் பிறருடைய கோபம் என்னை ஒன்றும் செய்வதில்லைஎன்பதனை உணர்ந்தேன்.நான் அதற்கு உடனடியாக பதில் சொல்லத் தேவையில்லை.ஏனெனில் அது என்னைக் குறித்து சொல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.நான் அவர் அருகில் இருப்பதே,அவர்  கோபம் என் மீது பாயக் காரணமாகி விட்டது என்று நினைக்கிறேன்.அப்படியே நான் செய்தது தவறு என்று மனப்பூர்வமாக  உணர்ந்தால்,அவரிடம் சென்று நேரடியாக,'என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்,'என்று கூறுகிறேன்.இது எனக்கு மன ஆறுதலாக இருக்கிறது. நான் சொன்னதுபோல 24 மணி நேரத்தில் மீண்டும் வரவில்லை என்றால் அது  என்னைக் குறித்த கோபம் அல்ல என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று பொருள்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கண்ணீர்

சாஷ்ட்யும் என்ற பெண் ஜென் குருதன இள வயது பேத்தி இறந்தபோது மிகவும் வருத்தப்பட்டு கண்ணீரும் கம்பலையுமாய் நின்றார்.அப்போது அங்கு வந்த ஒரு வயதானவர்,''என்னம்மா நீ,ஹாக்கின்  குருவிடம் ஜென் போதனைகளைப் பெற்று விழிப்புணர்வு பெற்ற  நீயே இறப்புக்காக இவ்வாறு அழலாமா?கொஞ்சம் அழுகையை அடக்கி அமைதியாக இரு.''என்று அறிவுரை கூறினார்.அதற்கு அந்த பெண் குரு சொன்னார்,''நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் இங்குள்ள ஊதுவத்தி,பூக்கள்,விளக்குகளைக் காட்டிலும் என் கண்ணீர் தான் என் பேத்திக்கு உகந்ததாக இருக்கிறது.நான் என்ன செய்ய முடியும்?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நம்பிக்கை

சூபி ஞானியான ஜுன்னேய்த்தின்மீது நம்பிக்கை வைத்திருந்த ஒரு சீடர்,ஒரு நாள் காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது,தூரத்தில்,ஜுன்னேய்த்தின் அருகில் முகத்திரை அணிந்த ஒரு  இஸ்லாமியப்பெண் அமர்ந்து,மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக்கொண்டிருப்பதைக் கண்டு ஜுன்னேய்த் ஒருஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான்.அவனைக் கவனித்த ஜுன்னேய்த் அவனை அருகே  அழைத்தார்.அவன் முகக்குறிப்பை அறிந்த ஜுன்னேய்த் அப்பெண்ணின் முகத்திரையை விலக்கினார்.அப்பெண் அவரதுதாயார்.ஜுன்னேய்த் கூறினார்,''நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே?உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய்ய முடியுமா?இங்கே வந்து இந்தப் புட்டியை எடுத்து ருசித்துப்பார்.சுத்தமான தண்ணீர்.மது அல்ல.புட்டி மட்டும் மது இருந்த புட்டி.''சீடன் மன்னிக்கும்படி அவர்காலில் விழுந்தான்.ஜுன்னேய்த்  கூறினார்,''இது மன்னிப்புக்குரிய விஷயம் அல்ல,இது புரிந்து கொள்ளுதளுக்கான விஷயம்.உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி   ஏற்படுத்தப்பட்டது.நீ பிற சீடர்களைப்போல  நடக்க முயற்சிக்கிறாய்.கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ,எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும்.உனது அன்பு ஒரு முயற்சி.உண்மையான அன்பு ஒரு முயற்சியாக இருக்க முடியாது.  நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது.இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும்.அப்போது அதை எதாலும் அழிக்க முடியாது.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பக்திமான்

நாரதருக்கு தான்தான் பகவானின் சிறந்த பக்திமான் என்ற கர்வம் ஏற்பட்டது.பகவானிடம்  பேச்சுவாக்கில்  இதை  சொன்னபோது  அவர்  சொன்னார் ,''நாரதா ,பூலோகத்தில் இருக்கும் ஒரு குடியானவன் தான் என் பக்தர்களிலே சிறந்தவன்,''நாரதருக்கு வருத்தம் ஏற்பட்டது தன்னைக் காட்டிலும் எந்த விதத்தில் சிறந்த பக்திமானாக அவன் இருக்கக்கூடும் என்பதை அறிய ஆவல் கொண்டு அந்தக் குடியானவன் இருக்கும் இடம் சென்று அவன் அறியாமல் அவனுடைய நடவடிக்கைகளைக் கவனித்தார்.அவன் காலையில் எழுந்ததும்,'கிருஷ்ணா,'என்று பகவானை ஒரு நிமிடம் நினைத்துக் கொண்டு,பின் தன் ஏரை எடுத்துக் கொண்டு வயலுக்கு சென்று அந்தி சாயும் வரை கடுமையாக உழைத்தான்.பின் வீடு திரும்பி,குளித்துவிட்டு,வீட்டு வேலைகளைச் செய்து,சாப்பிட்டுவிட்டு படுக்கும் முன் ஒரு முறை,'கிருஷ்ணா,'என்று ஒரு நிமிடம் நினைத்துவிட்டு படுத்து உறங்கிவிட்டான்.நாரதர்,கிருஷ்ணரிடம் சென்று ,'ஒரு நாளில் இரண்டு தடவை மட்டும் உங்களை நினைக்கும் குடியானவன்,சதாசர்வகாலமும் உங்களையே  துதித்துக் கொண்டிருக்கும் என்னைவிட எப்படி சிறந்த பக்தன்  ஆவான்?'எனக் கேட்டார்.கிருஷ்ணர் சொன்னார்,''அது இருக்கட்டும்,முதலில் இதோ , இந்த எண்ணெய் நிரம்பிய கிண்ணத்தை எடுத்துக் கொண்டு இந்த நகரை ஒரு முறை சுற்றி வா.ஒரே ஒரு நிபந்தனை;எண்ணெய் ஒரு சொட்டுக்கூட கீழே சிந்தக்கூடாது '' நாரதரும் மிகுந்த கவனத்துடன் ஒரு துளி கூடச் சிந்தாது,எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு நகர் வலம் முடித்து கிருஷ்ணரிடம்  சாதித்த பெருமையுடன் வந்தார்.கிருஷ்ணர் கேட்டார்,''நாரதா,இந்தகிண்ணத்துடன் நகர் வலம் வந்தபோது என்னை எத்தனை முறை நினைத்தாய்?''நாரதர்செயலில் கவனமாய் இருந்ததால் அவரை நினைக்கவில்லை என்றார்.கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே சொன்னார்,''ஒரு சிறு வேலை செய்யும்போதே நீ என்னை மறந்துவிட்டாய்.நாள் முழுவதும் கடுமையாய் உழைத்த பின்னும் இரண்டு முறை என்னை துதிக்கும் குடியானவன் சிறந்த பக்தன் தானே?''நாரதர் கர்வம் அடங்கி தலை குனிந்தார்.
                                                   ராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஊழல்

ஒரு நாட்டின் அமைச்சர் பக்கத்து நாட்டு அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று அங்கு சென்றார்.அங்கு அவருக்குக் கிடைத்த ஆடம்பரமான வரவேற்பைப் பார்த்து அதிசயித்து,அந்த அமைச்சரால் தனிப்பட்ட முறையில் எப்படி அவ்வாறு செலவழிக்க முடிகிறது என்று கேட்டார்.அவர் ஜன்னலைத் திறந்து ஒரு பாலத்தைக் காட்டினார்.அதில் தனக்கு பத்து சதவீதம் என்றார்.
அடுத்த வருடம் இந்த அமைச்சர் பக்கத்து நாட்டுக்காரரை தன் சொந்த விருந்தாளியாக அழைத்ததன் பேரில் அவரும் வந்தார்.இவர் கொடுத்த வரவேற்பைப் பார்த்து அவர் கதி கலங்கி விட்டார்.அவர் முகக்  குறிப்பறிந்து, ,இவரும் ஜன்னலைத் திறந்து,''அதோ  பாலம்  தெரிகிறதா ?''எனக்  கேட்டார். அவர் பார்த்துவிட்டு,'கண் பார்வை தெரியும் தூரம் வரை பாலம் ஒன்றையும் காணவில்லையே?'எனக் கேட்டார்.சிரித்துக் கொண்டே அமைச்சர் சொன்னார்,''ஆமாம்,எனக்கு நூறு சதவீதம்.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தியானம்

ஒரு பெண்மணி தன்   தோழியிடம் சொன்னாள்,''இன்றைக்கு உன்னிடம் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்.இதுவரை எந்த வேலையும் செய்யாமல் சும்மா  இருந்த என் மகன் இன்று தியான வகுப்பில் சேர்ந்துள்ளான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.''தோழி சொன்னாள்,'விபரம் தெரியாமல் பேசாதே.தியானம் என்பதே சும்மா இருப்பதுதான்.உன் மகன் இதுவரை தனியே சும்மா இருந்தான்.இப்போது கூட்டத்தோடு சும்மா இருக்கப் போகிறான்.அவ்வளவு தான் வித்தியாசம்.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வாதத் திறமை

ஒரு பிரபலமான வக்கீல்,வாதத் திறமை மிக்கவர்.அவர் ஒரு பெரும் பணக்காரருக்காக  ஒரு கேசில் ஆஜரானார்.இந்த வக்கீல் பெரும் குடிகாரர்.பணக்காரரின் கேஸ் கோர்ட்டில் இறுதிக் கட்டத்துக்கு வந்தது.அன்று வக்கீல் தன் வாதத் திறமையைக் காட்ட வேண்டிய நாள்.ஆனால் முந்திய இரவு மிக அதிகமாகக் குடித்திருந்ததால் கோர்ட்டிற்கு தள்ளாடிக் கொண்டே வந்தார்.குடி வெறியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல்,வாதத்தின்போது அவர் பணக்காரருக்கு எதிரான வலுவான வாதங்களை முன் வைக்க ஆரம்பித்து விட்டார்.பணக்காரர் அழ ஆரம்பித்துவிட்டார்.வக்கீலின் உதவியாளர்கள் சைகைகள் மூலம் எவ்வளவோ சொல்லியும் வக்கீல் கண்டுகொள்ளவில்லை.மதிய உணவு இடைவேளை வந்தது.பணக்காரரும் வக்கீலின் உதவியாளர்களும் அவரை சூழ்ந்து கொண்டனர்.அவருக்கு அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுவந்தது.நடந்த தவறைப் புரிந்து கொண்ட அவர்,பணக்காரரிடம் ஒன்றும் பயப்பட வேண்டாம் எனக் கூறினார்.கோர்ட் மீண்டும் கூடியது.வக்கீல்வாதாட ஆரம்பித்தார்,''கணம் கோர்ட்டார் அவர்களே,காலையில் நான் உங்கள் முன் வைத்த விவாதங்கள் எல்லாம் மதிப்பிற்குரிய எதிர்த்தரப்பு வக்கீல் உங்கள் முன் வைக்கக்கூடிய வாதங்களாகும்.இப்போது நான் அவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டியது என் கடமையாகும்.''என்றுகூறிவிட்டு ஆனித்தரமாக பணக்காரருக்கு சாதகமாக, காலையில் சொன்ன ஒவ்வொரு கருத்துக்கும் மாற்றுக் கருத்தை முன் வைத்தார்.அவர் வாதம் முடிந்தவுடன் நீதிபதி,எதிர்த்தரப்பு  வக்கீலை  அழைத்தார்.அவரோ,'நான் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் அவரே சொல்லி பதிலும் சொல்லிவிட்டார்.இதில் நான் பேசே என்ன இருக்கிறது?'என்று கூறி அமர்ந்துவிட்டார்.கேஸ் பணக்காரருக்கு சாதகமாக முடிந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அச்சம்

வாழ்வில் நீங்கள் பிறப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.அது நடந்து முடிந்து விட்டது.அதைப்போல் வாழ்வைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை.அது நடந்து கொண்டே இருக்கிறது.அதேபோல் இறப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை.ஏனெனில் அது தவிர்க்க முடியாதது.அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.பின்பு எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?
''நான் பிறக்கும்போது எந்தக் கவலையையும் சுமந்திருக்கவில்லை.எந்த மாதிரியான தொந்தரவுகளை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.  அப்போது நான் என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை.அதைப்போல இறக்கும் போதும்,அதே உணர்வுடன் தான் இறப்பேன்,''என்று எண்ணுங்கள்.
மென்சியஸ் என்னும்  சீடன் தன குருவான கன்பூசியசிடம்,'இறந்த பிறகு என்ன நடக்கும்?'என்று கேட்டான்.அதற்கு அவர்,''இதற்குப்போய் உன் நேரத்தை வீணடிக்காதே.நீ கல்லறையில் படுத்திருக்கும்போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம்.இப்போது ஏன் நீ அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்?''என்றார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மலரினும் அழகு

ஹைக்கூ கவிஞர் பாஷோ,ஒரு வசந்த காலத்தில்,மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு மலைப் பிரதேசத்திற்குச் செல்ல நினைத்து,தன பயணத்தைத் துவங்கினார்.செலவுக்குத் தேவையான பணத்தையும் எடுத்தக் கொண்டார்.போகும் வழியில் ஒரு கிராமத்தில்,தன பெற்றோரை பக்தி சிரத்தையுடன் கவனித்துக்  கொள்ளும் ஒரு ஏழை விவசாய வீட்டுப் பெண்ணைப்பற்றிக் கேள்விப்பட்டார்..அவளுடைய  நடவடிக்கைகளை  நேரில் பார்த்து மிக  ஆனந்தம் அடைந்தார்.அந்தப் பெண்ணிடம் தான் கொண்டு வந்த பணம் அவ்வளவையும் கொடுத்துவிட்டார்.மலர்க் காட்சியைக் காணாது ஊருக்குத் திரும்பிய அவர் தன நண்பர்களிடம் சொன்னார்,''இந்த ஆண்டு மலர்களைக் காட்டிலும் இறைவனின் சிறந்த ஒரு படைப்பைக் கண்டேன்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

என்ன விலை அழகே!

பெர்னாட்ஷா ஒரு நிகழ்ச்சியில் ஒரு அழகிய மங்கையை சந்தித்தார்.ஆயிரம் பவுண்ட் தொகையை அவளிடம் கொடுத்து,ஒரு நாள் இரவை அவருடன் கழிக்க முடியுமா எனக் கேட்டார்.அந்தப் பெண் உடனடியாக,''நான் திருமணமானவள்;மரியாதைக்குரியவள்.என்னிடமிப்படிக் கேட்பதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம்?''என்று கோபப்பட்டாள்.ஷா உடனே பத்தாயிரம் பவுண்ட் தருவதாகச் சொன்னார்.அவள் இன்னும் கோபத்துடன்,தன கணவனைக் கூப்பிடுவேன் என்றாள்.''சரி,பத்து லட்சம் பவுண்ட் தருகிறேன் யாருக்கும் தெரியப்போவதில்ல.என்ன சொல்கிறாய்?''என்று கேட்டார் ஷா.அந்தப்பெண் யோசித்துவிட்டுத் தன சம்மதத்தைத் தெரிவித்தாள்.உடனே ஷா,''இப்போது நான் பத்து  பவுண்ட் தான் தருவேன் என்று சொன்னால் நீ என்ன செய்வாய்?''என்று கேலியாகக் கேட்டார்.அந்தப்பெண் சீற்றத்துடன்,''நீங்கள் என்னை அவமானப்படுத்துகிரீர்கள்.என்னை யார் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?''என்று வெடித்தாள்.ஷா,''அம்மணி நீங்கள் யார் என்பதை ஏற்கனவே நிர்ணயித்துவிட்டோம்.எவ்வளவு விலை என்பதைப் பற்றித்தான் இப்போது விவாதித்துக் கொண்டு இருக்கிறோம்.என்று அமைதியாகக் கூற அந்தப்பெண் தலை கவிழ்ந்து அங்கிருந்து சென்றாள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கண்ணதாசன்-2

உன் கையிலுள்ள ஒட்டு ஒரு யோக்கியனுக்கு விழுந்தால்,உன் எதிர் காலம் காப்பாற்றப்படும்;ஒரு அயோக்கியனுக்கு விழுந்தால் அவனுடைய எதிர் காலம் காப்பாற்றப்படும்.
**********
ஒரு நடிகையின் கணவனாக இருப்பதில் உள்ள மதிப்பு என்ன?சிங்கம் மார்க் பிடியிலே சிங்கத்துக்கு என்ன மதிப்போ,அவ்வளவு மதிப்பு அவனுக்கும் உண்டு.பீடியை யார் பிடித்தால் என்ன,லேபல் சிங்கம் தானே!
**********
வெற்றியிலே நிதானம் போகிறது;அதோடு வெற்றியும் போய் விடுகிறது.
**********
தலைவர்கள் ஜனங்களை ஏமாற்றுவதற்குப் பெயர் ராஜதந்திரம்;ஜனங்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதற்குப் பெயர் ஜனநாயகம்.
**********
சருமம் பளபளப்பாக இருந்தால் உடம்பிலே நோய் இல்லை என்று பொருளல்ல.தட்டிக் கொடுப்பவர்கள் எல்லாம் அன்புள்ளவர்கள் என்றும்  பொருளல்ல.
**********
உலகத்திலுள்ள எல்லோரும் யோக்கியர்களே!எப்போது?தூங்கும் போது!
**********
இரண்டு பக்கமும் கூர்மையாய் உள்ள கத்தியை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்;எந்தப் பக்கமும் சேரக் கூடிய மனிதர்களிடம் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும்.
**********
அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்லும் போது இருக்கும் தைரியம் ,தனக்குத் தேவைப்படும் போது அடுத்தவனிடம் போய்விடுகிறது.
**********
பாத்திரத்தின் நிறமல்ல,பாலின் நிறம்;ஆத்திரத்தின் நிறமல்ல அறிவின் நிறம்.
**********
விஷ்கியைக் குடித்தவன் தான் ஆட வேண்டும்;விஸ்கி பாட்டிலே ஆடக்கூடாது.நம்மைப் பிறர் தான் புகழ வேண்டும்,நாமே புகழக்கூடாது.
**********
குடித்திருப்பவரோடு  விவாதம்  செய்தால் ,உங்களில்  யார் குடித்திருப்பவர்  என்பது  தெரியாது
**********.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கருத்து

ஒரு விஷயம் குறித்துக் கருத்து சொல்வதில் மூன்று விதமான அணுகுமுறைகள் உள்ளன.அவை,தர்க்கம்,குதர்க்கம்,விதர்க்கம்.தர்க்கம் என்பது எது ஒன்றானாலும்,அதைப்பற்றித் தனக்கென ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொள்வது;குதர்க்கம் என்பதுஅந்தக் கருத்து சரியானதுதான் என்பதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போவது;விதர்க்கம் என்பது ஒரு பொருள் குறித்து,மாறுபட்ட கருத்துக்களைத் தானே அலசிப் பார்த்து,சரியானது எது என்று தானே கண்டு உணர்ந்து கொள்வது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வெற்றியின் ரகசியம்

அலெக்சாண்டர் ஒரு முறை படையெடுப்பின் போது,பதினோரு நாளில் 3300  பர்லாங் தூரம் தன படைகளை அழைத்துச் சென்றிட வீரர்கள் அனைவரும் சோர்வடைந்தனர்.அதிலும் குடிக்க சிறிதும் தண்ணீரே இல்லாத சூழ்நிலையில் மிகவும் களைப்புற்று மேற்கொண்டு செல்ல விருப்பமில்லாதிருந்தனர்.அலெக்சாண்டருக்கு அவர்களை எப்படி சமாதானப்படுத்திக் கூட்டிச் செல்வது என்று யோசனை.அப்போது அவருடைய மெய்க்காப்பாளன் ஒருவன் எங்கிருந்தோ ஒரு குடுவையில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.அவருக்கும் தாகம் அதிகம் இருந்ததால் குடிக்கலாம்என்று எண்ணியபோது சுற்றிலுமிருந்த வீர்களின் முகங்களைப் பார்த்தார்.அவர்கள் தண்ணீரையே பார்த்துக் கொண்டிருந்தனர். உடனே அவர் நீரைக் குடிக்காது  திரும்பக் கொடுத்தார்.எல்லோரும் வியப்புடன் அவரை பார்க்கையில் அவர் சொன்னார்,''நான் மட்டும் நீரை அருந்தினால் மற்றவர்கள் மனமுடைந்து விடுவர்.மேலும் அது நியாயமுமில்லை.''அவருடைய பெருந்தன்மையைக் கவனித்த வீரர்கள் உடனடியாக தங்கள் களைப்பையும் தாகத்தையும் பொருட்படுத்தாது,குதிரைகளில் ஏறிப் புறப்பட்டனர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பலசாலி

ஆமை ஒன்றை யானை மிதித்துச் சென்றது கனத்த ஓட்டின் காரணமாக ஆமை நசுங்கி விடவில்லை.ஆமை யானையிடம் சொன்னது,'நான் உன்னளவுக்கு பலசாலி',யானை ஏளனமாகச் சிரித்தது.ஆமை,யானையிடம் மலையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மறுநாள் காலை வந்தால்,தான் பலசாலி என்பதை நிரூபிப்பதாகக் கூறியது.யானையும் ஒத்துக் கொண்டது.
ஆமை அடுத்து ஒரு நீர் யானையிடம் சென்றது.அதனிடமும் தான் அதற்கு இணையான பலசாலி என்றும் மறுநாள் காலை நீர் யானை அதன் குளத்தில் இருந்தால் நிரூபிப்பதாகக்  கூறியது.நீர் யானையும் சிரித்துக்கொண்டே சம்மதித்தது.
ஆமை நீண்ட ஒரு கயிறை தயார் செய்தது.மறுநாள் காலை அது நீர்யானையிடம் சென்று கயிறின் ஒரு முனையைக் கொடுத்துவிட்டு,தான் ரெடி என்று சொன்னவுடன் இழுக்குமாறு சொல்ல நீர்யானையும் சரிஎன்றது.பின் விரைவாக மலைக்கு சென்று யானையிடம் மறு  நுனியைக் கொடுத்துவிட்டு,தான் ரெடி என்று சொன்னவுடன் இழுக்கக் கேட்டுக் கொண்டது யானையும் ஒத்துக் கொண்டது.
பின் ஆமை இருவர் கண்ணிலும் படாத மையமான ஒரு இடத்தில் நின்று கொண்டு ரெடி என்றது.யானையும்,நீர்யானையும் கயிறை இழுக்க ஆரம்பித்தன.இரண்டும் சம பலம் உடையதானதால் நீண்ட நேரம் இழுத்தும் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை.களைப்பினால் இரண்டும் கயிறை விட்டு விட்டன.இரண்டுமே அடுத்த முனையில் ஆமை தான் இருந்தது என்று நம்பி ஆமைக்கு தங்கள அளவுக்கு  பலம் இருப்பதை ஒத்துக் கொண்டன. அடுத்தவர்கள் உங்களுக்காகச் செய்யக்கூடிய காரியத்தை நீங்கள் செய்யாதீர்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இரட்டை வெற்றி

பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிளாரன்ஸ் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் இருந்த ஒரு பெரிய பளிங்குக் கல்லில் சிலை ஒன்று வடித்துத் தருமாறு சிற்பி மைக்கேல் ஏஞ்சலோவை அந்த நகரத்தின்  மேயர் கேட்டுக் கொண்டார்.இளைய வயது  தாவூதுவின் சிற்பம் ஒன்றை அல்லும் பகலும் உழைத்து முடித்தார் ஏஞ்சலோ.இறுதி வேலை முடிந்தவுடன் மேயர் சிலையைப் பார்வையிட வந்தார்.அவர் ஏஞ்சலோவிடம், சிலையின் மூக்கு பெரிதாக இருப்பதாக, மிகத் தெரிந்தவர் போலக்  கூறினார்.பெரிய அச்சிலையின் நேர் கீழே நின்று பார்ப்பதால் மேயர் சரியான கோணத்திலிருந்து சிலையைப் பார்க்கவில்லை என்பதை ஏஞ்சலோ புரிந்து கொண்டார்.அனால் அவர் எதிர் வார்த்தை ஏதும் பேசாது,ஒரு உளியையும்,கொஞ்சம் பளிங்குத் தூளையும் கையில் எடுத்துக் கொண்டு,மேயரை மேலே  வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.மேயர்
மேலே வந்ததும் சிலைக்கு முன்னால் சில அடி தூரத்தில் நின்று கொண்டார். அவர் வந்ததைக் கவனித்த ஏஞ்சலோ ,உளியைக் கொண்டு சிலையின் மூக்குப் பகுதியில் லேசாகத் தட்டிக் கொண்டு,அதே சமயம் கையிலிருந்த பளிங்குத்தூள் மூக்குப் பகுதியிலிருந்து கீழே  விழச் செய்தார்.மேயரும்  அவர் மூக்குப் பகுதியை சீர்திருத்துவதால் தான் அந்தத் தூள் விழுகிறது என்று நம்பி மிகுந்த திருப்தி அடைந்தார்.ஆனால் ஏஞ்சலோ உண்மையில் ஒரு சிறு மாற்றமும் செய்யவில்லை.அவர் சூழ்நிலைக்கேற்றபடி நடந்து கொண்டதால் இருவருக்கும் திருப்தி;இருவருக்கும் வெற்றி.யாரும் மனம் புண்படவில்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பெண்கள்

தமிழில் பெண்களுக்கு அவர்களின் ஒவ்வொரு பருவத்துக்கேற்ற பெயர்கள் உள்ளன.நாற்பது வயதுக்கு உட்பட்ட பெண்களின் பருவங்களை ஏழாகப் பிரித்திருக்கிறார்கள்.
ஐந்து வயது முதல் ஏழு வயது முடிய பேதைப் பருவம்
எட்டு முதல் பதினொன்று முடிய பெதும்பைப்  பருவம்..
பன்னிரெண்டும்,பதிமூன்றும் மங்கைப் பருவம்.
பதினான்கு முதல் பத்தொன்பது முடிய மடந்தை.
இருபது முதல் இருபத்தைந்து முடிய அரிவை.
இருபத்தாறு முதல் முப்பத்தொன்பது முடிய தெரிவைப் பருவம்.
நாற்பது முதல் பேரிளம்பெண்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பைத்தியக்காரத்தனம்

ஒருவன் கையில்லை என்று வருந்துகிறான்.கையுள்ளவன் பணமில்லை என்று வருந்துகிறான்.பணமுள்ளவன் ஆசைப்பட்டதை அனுபவிக்க நேரமில்லை என்று வருந்துகிறான்.இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில்வருந்துகிறார்கள்;வருத்திக்கொள்கிறார்கள்.இது பைத்தியக்காரத்தனம்.உங்களுக்கு ஜலதோஷம்.அது உங்களை முடக்கிப் போடாதவரை அதைப் பெரிது படுத்த மாட்டீர்கள்.அதற்காக உங்களுக்கு நோய் இல்லை என்று பொருள் இல்லை.படபடப்பு,பயம்,வக்கிரம்,கோபம் என்று எத்தனையோ பைத்தியக்காரத்தனங்களும் அப்படிப்பட்ட நோய்கள் தான்.அமைதியாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் பலரும்,உண்மையில் அமைதியாக இல்லை.அவர்களுடைய பைத்தியக்காரத்தனம் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.அவ்வளவுதான் ஒரு குண்டூசி கொண்டு குத்தினால் போதும்;பட்டென்று வெடித்துவிடும்.இன்றைக்கு 90% பேர் தங்கள் பைத்தியக்காரத்தனம் வெளிப்படாது ஒளித்து வைக்கும் தந்திரம் என்னவெனத் தேடி அலைகிறார்கள்.அவற்றை மொத்தமாகக் களைவது தான் ஆரோக்கியம் என யோசிப்பதில்லை.நீங்கள் உங்களைப் போன்ற பைத்தியக்காரர்கள்  கூட்டத்தில் பாதுகாப்பாக உணர்கிறீர்கள்.
நீங்கள் கோபம் கொள்கிறீர்கள்.அதற்குப் பிறர்தான் காரணம் என நினைக்கிறீர்கள்.மன நலம் தவறிய ஒருவன் ஒரு கயிறு வைத்துத் தன்னைக் கட்டியிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு வருவோர் போவோரை,கயிற்றை வெட்டிவிடச் சொல்லிக் கொண்டிருந்தான். நீங்களும் அப்படித்தான்.கோபம் என்ற தூணுடன் யாரும் உங்களைப் பிணைக்கவில்லை.தேவையற்றபல விசயங்களுடன் கற்பனைக் கயிற்றால் உங்களை நீங்களே பிணைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.யாராவது வந்து நீங்கள் கற்பனையாகப் போட்ட விலங்கை வெட்டி விடுவார்கள் என்று எதிர் பார்த்திருந்தால் வாழ்நாள் முடிந்துவிடும்.
அசிங்கத்தை எடுத்துப் பூசிக் கொண்டால்,எங்கே போய் ஒளிந்து கொண்டாலும்,துர்நாற்றத்திலிருந்து தப்ப முடியாது.கோபம்,பொறாமை,சந்தேகம் போன்ற பல தவறான குணங்களுக்கு இடம் கொடுத்தால்,வேதனைகளில் இருந்து விடுபட முடியாது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தாமரை

தாமரைக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன.
ஆய்மலர்,அம்புயம்அரவிந்தம்,இண்டை,ராசியம்,கமலம்,திருமாலுந்தி,
முண்டகம்,செங்கோலகம் ,கஞ்சம்,சரோமுகம்,வாரிகம்,முரளி.பங்கஜம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

என்ன சம்பந்தம்?

ஒரு சில பெயர்களுக்கும் அவற்றின் பொருளுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை.
**சரித்திரப்  புகழ் பெற்ற நூற்றாண்டுப் போர்  116 ஆண்டுகள் நடந்தது.
**ரஷ்யர்கள் அக்டோபர் புரட்சியை நவம்பரில் கொண்டாடுகிறார்கள்.
**விமானத்தில்  இருக்கும் கறுப்புப் பெட்டியின் (black box ) நிறம் ஆரஞ்சு.
**சீன முள் பழம் நியூசிலாந்து நாட்டில் விளைகிறது.
**பனாமா தொப்பி ஈக்வடார் நாட்டில் தயாரிக்கப் படுகிறது.
**ஒட்டகத் தூரிகை (camel brush) அணில்  ரோமத்திலிருந்து  தயாரிக்கப்  படுகிறது **இந்தியன் இங்கின் (indiyan ank) தாயகம் சீனா..

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முடி வெட்டலாமா?

அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் ஒரு முறை அழுக்குத் தோற்றமுடைய நீக்ரோ  சிறுவன் ஒருவனை சந்தித்தார்.அவனிடம்,''உன் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தால் உனக்கு பத்து ரூபாய் தருகிறேன்,''என்றார்.அவனும் முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டு வந்து பத்து ரூபாயைப் பெற்றுக் கொண்டான்.''இந்தப் பணத்தைக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்?''என்று ஐன்ஸ்டீன் கேட்க,பையன் சொன்னான்,'உங்களது தலை முடியை வெட்டிக் கொண்டு வந்தால்,இந்தப் பணத்தைத் தங்களுக்குத் தரலாம்என்று நினைக்கிறேன்.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆராய்ச்சி

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பாத தாமஸ் ஆல்வா  எடிசன்,ஒரு  நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை.பாதியில்  அவர் அங்கிருந்து கிளம்பத் தீர்மானித்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர்,''மிஸ்டர் எடிசன்,தாங்கள் இப்போது என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்?''என்று கேட்டார்.எடிசன் உடனே சொன்னார்,''இங்கிருந்து வெளியே செல்ல வழி எங்கிருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மாற்று சிந்தனை.

ஒரு அழகிய இளவரசியை மணக்க நடக்கவிருந்த போட்டியில் கலந்து கொள்ள நான்கு இளைஞர்கள் வந்திருந்தனர்.போட்டி இது தான்.''ஒரு பெரிய சதுரமான அறையில் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும்;நான்கு மூலைகளிலும்  முக்காலிகள்போடப்பட்டிருக்கும்.இளவரசி அறையின் மையத்தில் நிற்பாள்; முக்காலியில் நின்று கொண்டு ,கம்பளியை மிதிக்காமலும் ,தொடாமலும் இளவரசியின் கரத்தைப் பிடிக்க வேண்டும்.அவ்வாறு செய்பவர் இளவரசியை மணக்கத் தகுதி பெறுவார்.''எப்படிப் பார்த்தாலும் இளவரசிக்கும் அறையின் ஒவ்வொரு மூலைக்கும் உள்ள தூரத்தைப் பார்த்தால்,இது சாத்தியம் என்று தோன்றவில்லை.சிறிது நேரத்தில் மூவர் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டனர்.நாலாவது  ஆள் சிறிது நேரம் யோசித்து விட்டு,''இளவரசியே,நான் உன்னை மனப்பூர்வமாகக்  காதலிக்கிறேன்.,நீயும் என்னை விரும்பினால்,. ஓடி வந்து என் கரத்தைக் கைப்பற்று.''என்றான்.போட்டியின் விதிகளின்படி  போட்டியாளர் தானே கம்பளத்தை மிதிக்கவோ தொடவோ கூடாது இளவரசி மிதிக்கலாமே?மாற்றி யோசித்த இளவரசனின் புத்திக் கூர்மையை அறிந்து இளவரசியும் ஓடிச் சென்று அவன் கரம் பற்றினாள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிரார்த்தனையின் பலன்

ஒரு ஞானி ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருக்கையிலே ஒரு பெண் ஓடி வந்து,தன குழந்தை உடல் நலமின்றி இருப்பதாகவும் ஞானி வந்து அதைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். ஞானியும் அவளது வீட்டிற்கு வந்து குழந்தையைக் குணப்படுத்த பிரார்த்தனையில் ஈடுபட்டார்.உடனே அங்கு ஒரு கூட்டம் கூடி விட்டது.ஒருவன் ஞானியிடம் கேட்டான்,'மருந்தால் குணமாகாத குழந்தை உன் பிரார்த்தனையால் குணமாகி விடுமா?'ஞானி அவனிடம்,''உனக்கு ஒன்றும் தெரியாது. நீ ஒரு முட்டாள்.'' என்றார்.அவன் அந்த ஊரில் ஒரு பெரியஆள்.எல்லோருக்கும் முன்னால் ஞானி முட்டாள் என்று சொன்னவுடன் அவனுக்கு அவமானமாகப் போய்விட்டது.அவன் கோபத்துடன் திட்டிக் கொண்டே ஞானியை அடிக்கப் போனான்.ஞானி பொறுமையுடன் அவனை நோக்கி வந்து,''அப்பா,நான் சொன்ன சொல் உனக்குக் கோபத்தைவரவழைக்க முடியும் என்றால்,ஏன் என் பிரார்த்தனை இக்குழந்தையைக் காப்பாற்றக் கூடாது?''என்று கேட்டார்.அவன் முகத்தைத் தொங்க விட்டவாறு வெளியேறினான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கார்ப்ரேகர் எண்

தனியான நான்கு எண்களை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்ணை எழுதிக் கொள்ளுங்கள் .பின் அதே நான்கு எண்களை உபயோகித்து வரும் சிறிய எண்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.வருகிற விடையில் உள்ள நான்கு எண்களை உபயோகித்து பெரிய எண்,சிறிய எண் கண்டுபிடித்துப் பின் கழியுங்கள்.இதே போலத் தொடர்ந்து செய்தால் ஒரு முறை   6174         என்ற எண் வரும் எந்த நான்கு எண்களை எடுத்துக் கொண்டாலும் இதே போல ஒரு   நிலையில் 6174     என்ற எண் வரும் இந்த எண்ணை கார்ப்ரேகர் எண் என்று சொல்கிறார்கள்.
உதாரணம்;
எடுத்துக்  கொண்ட  எண்கள்;8,7,9,6
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்;9876
சிறிய எண்;6789
வித்தியாசம்;3087
மீதியில் வரும் நான்கு எண்கள்;. 3,0,8,7
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்;8730
சிறிய எண்;  0378
வித்தியாசம்;8352
8,3,5,2,இவற்றின் பெரிய எண்;8532
சிறிய எண்;2358
வித்தியாசம்;6174
ஒரு  சில  எண்களுக்கு ஒரே  முறையிலும் ,வேறு  சில  எண்களுக்கு  நான்கைந்து  தடவைகளுக்குப்  பின்னும்  இந்த  6174  என்ற  எண்  வரும் .

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஹா!ஹா!

குட்டிப் பாம்பு தாய்ப் பாம்பிடம் கேட்டது,'அம்மா,நாம் கடித்தால் விஷமா?தாய் கேட்டது,''ஆமாம்,ஏன் கேட்கிறாய்?''குட்டி சொன்னது,'இல்லை நான் தெரியாமல் என் நாக்கைக் கடித்துக் கொண்டேன்.'
**********
வேலைக்காரன் முதலாளியிடம் சொன்னான்,''எனக்கு சம்பள உயர்வு வேண்டும்,மூன்று கடைக்காரர்கள் என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்,'முதலாளி கேட்டார்,''யாரப்பா அந்த மூன்று பேர்?என்ன கேட்கிறார்கள்?''வேலைக்காரன் சொன்னான்,'பலசரக்குக் கடைக்காரர்,அரிசிக் கடைக்காரர்,காய்கறிக் கடைக்காரர்.அவர்கள் நான் தர வேண்டிய கடனைக் கேட்கிறார்கள்.'
**********
ஒரு பெண் காலில் செருப்பிலாத ஒரு சிறுவனைப் பார்த்துப் பரிதாபப்பட்டு,அவனை ஒரு கடைக்கு அழைத்து சென்று செருப்பு வாங்கிக் கொடுத்தாள்.சிறுவன் கேட்டான்,'நீங்கள் கடவுளா?'அந்தப்  பெண் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னாள்,''இல்லையப்பா,நான் அவருடைய பல குழந்தைகளில் ஒருத்தி.''சிறுவன் கூறினான்,'நான் அப்போதே நினைத்தேன்,நீங்கள் கடவுளாக இல்லாவிடில் அவருக்கு உறவாயிருப்பீர்கள் என்று.'
**********
பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவு நேரம்.எல்லோரும் வரிசையில் வந்தனர்.ஒரு கூடையில் நிறைய ஆப்பிள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.முன் எச்சரிக்கையாய்.ஆசிரியர் ஒரு பலகையில்,'ஒருவர் ஒரு ஆப்பிள் மட்டும் எடுக்கவும்.கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.'என்று எழுதி வைத்திருந்தார்.சிறுவர்கள் ஆளுக்கொன்று எடுத்துச் சென்றார்கள்.கடைசியில் ஒரு பெரிய தட்டில் சாக்லேட்டுகள் வைக்கப் பட்டிருந்தன.ஒருவன் அடுத்தவனிடம் சொன்னான்,''உனக்கு வேண்டுமளவுக்கு சாக்லேட் எடுத்துக் கொள்.கடவுள் ஆப்பிளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.''
**********
ஒரு விருந்து நடக்க இருந்தது.எதிர் பார்த்ததற்கு மேல் அழையாமலே நிறையப் பேர் வந்திருந்தனர்.அவ்வளவு பேருக்கும் உணவு பத்தாது.என்ன செய்வது என்று ஏற்பாடு செய்தவர் யோசித்துக் கொண்டிருந்தார்.அவருடைய நண்பர் ,''நான் சரி செய்கிறேன்,''என்று சொல்லிவிட்டு கூட்டத்தின் நடுவில் நின்று கொண்டு,''இங்கு மாப்பிள்ளை வீட்டார் சார்பில் வந்திருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள்,''என்றார்.ஒரு நாற்பது பேர் எழுந்து நின்றார்கள்.''அதே போல் பெண் வீட்டார் சார்பில் வந்திருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள்,''என்று அவர் சொல்ல முப்பது பேர் எழுந்து நின்றார்கள்.பின்னர் அவர் சொன்னார்,''இப்போது எழுந்து நிற்பவர்கள் எல்லாம் தயவு செய்து வெளியே செல்லுங்கள்.ஏனெனில் இது இந்த வீட்டுக் குழந்தையின் பிறந்த நாள் விருந்து.''
**********
ஒரு கடைக்காரர் தன வாடிக்கையாளரிடம் கூறினார்,''இதோ நிற்கும் பையன் சரியான முட்டாள்.நான் அதை உங்களிடம் நிரூபிக்கிறேன்.வேடிக்கை பாருங்கள்,''என்றார்.பின்னர் அந்தப் பையனைக் கூப்பிட்டு,ஒரு கையில்  ஐந்து ரூபாய்  நாணயத்தையும் இன்னொரு கையில் இரண்டு ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக் கொண்டு,''இதில் எது உனக்கு வேண்டு தம்பி,''என்று கேட்க அவன் இரண்டு ஒரு ரூபாய்  நாணயத்தை மகிழ்வுடன் எடுத்துக் கொண்டான்.கடைக்காரர் வெற்றிப் புன்னகையுடன் வாடிக்கையாளரைப் பார்த்தார்.
வாடிக்கையாளர் கடையை விட்டு சிறிது தூரம் சென்ற பின் அந்தப் பையன் எதிரில் மிட்டாய் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு வந்தான்.அவனிடம் அவர் கேட்டார்,''ஏன் தம்பி ஐந்து ரூபாயை எடுத்தக் கொள்ளாமல் இரண்டு ரூபாயை எடுத்துக் கொண்டாய்?''பையன் சொன்னான்,'எனக்கு எல்லாம் தெரியும்.ஏற்கனவே நான் பல முறை இதே போல இரண்டு ரூபாய் வாங்கியிருக்கிறேன்.நான் ஐந்து ரூபாயை எடுத்திருந்தால் இன்னொரு முறை இது போல செய்ய மாட்டார்.அப்போது எனக்கு நஷ்டம் தானே?'
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கண்ணோட்டம்

உண்மைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன.இவை அவற்றை விளக்குவதைப் பொறுத்தே இருக்கிறது.ஒரே உண்மை ஆயிரத்தொரு விதத்தில் விளக்கிச் சொல்லப்படலாம்.அதைத்தான் நாம் எல்லோரும் செய்து கொண்டிருக்கிறோம்.இல்லாவிடில்,இத்தனை மதங்கள்,இத்தனை தத்துவங்கள்,கொள்கைகள் தேவையில்லையே?சில உண்மைகளை வேறு விதமாக மட்டுமல்ல,நேர் எதிரான வகையிலும் எடுத்துக் கூறப்படலாம்.
மகாவீரர் தன வாழ்நாள் முழுவதும் நிர்வாணமாக வாழ்ந்தார்.ஒருவர் சார்ந்து நிற்கக்கூடிய எந்தப் பொருளையும் அவர் பயன் படுத்தவில்லை.அவர் தன முடியைக் கரங்களாலே பிடுங்கி விடுவார்.அவர் குளிப்பதில்லை.அவரது கண்ணோட்டத்தின்படி குளிப்பது என்பது உடலை அலங்கரிப்பதாகும்.
இந்த மகாவீரரின் குணாதிசயங்களை சிக்மன்ட் பிராய்டின் கண்ணோட்டத்தில் பார்த்தால் மகாவீரர் ஒரு மனோ வியாதியஸ்தர்.நிர்வாணமாக இருப்பதும் முடியைப் பிடுங்கிக் கொள்வதும்,  குளிக்காமல் இருப்பதும் மன நோயாளியின் குணாதிசயங்கள்.மகாவீரர் இந்த வகையைச் சேர்ந்த மன நோயாளியா?உண்மை தனியாகப் பார்க்கப் படும்போது  அதில் மதிப்பீடுகள்  ஏதும் இல்லை.நீங்கள் அதைப் பற்றி எண்ணும்போது விளக்கங்கள் உருவாகின்றன.அவ்விளக்கங்கள் உங்கள் கண்ணோட்டத்தைப் பொறுத்து அமைகின்றன.அவற்றிற்கும் உண்மைக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கண்ணதாசன்

அறிவாளிகளுக்கு அறிவு தான் அதிகம்.
முட்டாள்களுக்குத்தான் அனுபவம் அதிகம்.
**********
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.
**********
அறிஞர்கள் அகப்பட்டால் விட மாட்டார்கள்.
திருடர்கள் விட்டால் அகப்பட மாட்டார்கள்.
**********
மனிதர்கள் பெரும் வெற்றிக்கு அவர்களே காரணம்.
தோல்விக்குத்தான் கடவுள் காரணம்.
இல்லை என்றால் அவர்களா தோல்வி அடைவார்கள்?
**********
சாதாரண மனிதன் புகழ் பெறத் துவங்கும்போது ,
அவன் செய்த தவறுகளும் புகழ் பெறத் தொடங்குகின்றன.
**********
காமம் என்பது எப்போது ஆரம்பமானது?
நிர்வாணமாக இருந்த மனிதன் ஆடை கட்டத் துவங்கியபோது.
**********
கஷ்டமான நேரத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கும் மரியாதை வருகிறது.
வழி தெரியாத நேரத்தில் ஒவ்வொரு யோசனையும் நல்ல யோசனையாகத் தோன்றுகிறது.
நீண்ட நாள் சிறையில் இருப்பவனுக்குக் கிழவி கூட அழகாகத் தெரிகிறாள்.
பல நாள் சாப்பிடாதவனுக்குக் கோதுமைக் கஞ்சியே அல்வா ஆகிறது.
கிடைக்கக் கூடாதவனுக்கு சிறிய பதவி கிடைத்தாலும் அவனே தெய்வமாகிவிட்டதாகக் கனவு காண்கிறான்.
**********
கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாயை வேண்டுமானாலும் எழுதலாம்.செய்யப்போவதில்லை என்று முடிவு கட்டி விட்டால் எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் சொல்லலாம்.
**********
வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு என்ன வேண்டும்?
எந்த விமரிசனத்தையும் தூக்கி எறிய வேண்டும்.
**********
சோழன் காலத்தில் யாரும் மின்சாரத்தைப் பற்றிப் பேசவில்லை.ஆகவே,
மின்சார யுகத்தில் சோழனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமென்ன?
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பலன் என்ன?

ஒரு சுல்தானிடம் ஒரு அமைச்சர் முப்பது ஆண்டு காலமாகப் பணிபுரிந்து வந்தார்.நேர்மைக்கும் உண்மைக்கும் விஷ்வாசத்திற்கும் சான்றாகத்  திகழ்ந்தவர்.அவருடைய நேர்மையே  சக அமைச்சர்களிடம் அவர் மீது பொறாமையை உருவாக்கியது.அவர் மீது நம்பிக்கை அதிகம் வைத்திருந்த சுல்தானிடம் அடிக்கடி அவரைப்பற்றிப் புகார்கள் கூறிய வண்ணம் இருந்தனர்.இறுதியாக மன்னர் மனம் மாறி அமைச்சரை கொன்று விட முடிவு செய்தார் அந்த நாட்டில் மரண தண்டனை பெற்றவர்களை  ஒரு மைதானத்தில் விட்டு இருபது வேட்டை நாய்களை அவிழ்த்து விட்டு விடுவர்.நாய்களிடம் கடிபட்டு அவர்கள் அகோர ம்ரணம் அடைவர்.அமைச்சர் தன வீட்டுப் பிரச்சினைகளை முடிக்க பத்து நாட்கள் அவகாசம் தருமாறு வேண்டிக்கொண்டார்.தான் எங்கும் தப்பி ஓடமாட்டேன் என்ற உறுதிமொழியை வாங்கிக் கொண்டு அனுமதித்தார்.சுல்தான்.
நேரே வீட்டிற்கு சென்ற அமைச்சர் நூறு தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு அந்த இருபது வேட்டை நாய்களை வளர்க்கும் பொறுப்பு உள்ளவரை  பார்த்து அவரிடம் கொடுத்து விட்டு அந்த நாய்களைப் பத்து நாட்கள் தானே பார்த்துக்கொள்ள அனுமதி வேண்டினார்.அவனும் மகிழ்வுடன் ஒத்துக் கொண்டான்.பத்து நாட்களில் அவர் அந்த நாய்களை மிக நல்லபடியாக அன்புடன் கவனித்துக் கொண்டார்.வெறியோடு முதலில் பாய்ந்த நாய்கள் பத்தாம் நாள் அவர் கையாலேயே உணவு சாப்பிடும் நிலைக்கு வந்து விட்டன.பதினோராம் நாள் அமைச்சர் மன்னனிடம் சென்று மரண தண்டனையை நிறைவேற்றலாம் என்று கூறினார்.அரசன் ஆணையிட அமைச்சரும் அந்த மைதானத்தில் தள்ளப்பட்டு நாய்களும் அவிழ்த்து விடப் பட்டன. பாய்ந்து வந்த நாய்கள் அவரைக் கண்டவுடன் அவரைச் சுற்றி அமைதியாக வாலை ஆட்டின. சுல்தானுக்கு ஆச்சரியம்.'இது எப்படி இயலும்?'என்று அமைச்சரைக் கேட்டார்.அவரும் நடந்ததைக் கூறி விட்டு,''இந்த விலங்குகளை நான் பத்து நாட்கள் தான் பார்த்துக் கொண்டேன்.அதன் பலன் என்ன என்பதை சுல்தான் நேரிலேயே பார்த்தீர்கள்.முப்பது ஆண்டு காலம் உங்களுக்கு நேர்மையாய் சேவை புரிந்ததற்கு என்ன பலன் என்பது இனிமேல் தான் தெரியும்.''என்றார்.அரசன் வெட்கித் தலை குனிந்தான்.அவன் அவரை மன்னித்ததுடன் அவரைப் பற்றி குறை சொன்னவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று அவரிடமே ஒப்படைத்தார்.அமைச்சரோ அவர்களையும் மன்னித்து அவர்களிடமும் அன்பு பாராட்டி வந்தார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நல்லுபதேசம்

நோபல் பரிசு பெற்ற ஒருவரை வரவேற்பதற்காக சிகாகோ ரயில் நிலையத்தில் ஏராளமான தலைவர்களும் அதிகாரிகளும் புகைப்படக் காரர்களும் குழுமியிருந்தனர்.ரயில் வந்து நின்றவுடன் விருது பெற்றவர் வண்டியிலிருந்து இறங்கினார்.அவரோடு கை குலுக்கவும் அவரைப் பாராட்டுவதாகக் காட்டிக் கொள்ளவும் பலர் போட்டியிட்டனர்.புகைப்பட விளக்குகள் மிளிர்ந்த வண்ணமாய் இருந்தன.எல்லோருடைய கவனமும் அவர் மீது இருக்க அவர் கவனம் மட்டும்,தன சுமைகளைத்  தூக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் பக்கம்இருந்தது.அவர் விரைந்து சென்று அந்த மூதாட்டியின்  சுமைகளைத் தூக்கி அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டுப்  பின்கூடியிருந்தவர்கள் அருகில் வந்து அவர்களுக்குத் தன நன்றியைத் தெரிவித்தார்.அவர்களை சிறிது காக்க வைக்க நேரிட்டதற்காக மன்னிப்பு கோரினார்.இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் சொன்னார்,''ஒரு நல்லுபதேசம் உயிருடன் நடந்து செல்வதை என் வாழ்வில் இப்போது தான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.''
அந்த நல்ல மனிதரின் பெயர் டாக்டர் ஆல்பர்ட் ஷ்வெய்த்சர்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மௌனம்

எப்போதும் செய்தித் தாள்களுக்கு பேட்டி கொடுக்க விரும்பாத வினோபாஜி ஒரு முறை அனைவரின் வற்புறுத்தலுக்காக ஒத்துக் கொண்டார்.நிருபர்கள் முன் வினோபாஜி வந்தவுடன்,'தங்களுக்குப் பிடித்த மொழியில் நீங்கள் பேட்டி
அளிக்கலாம்' என அவர்கள் சொன்னார்கள்.உடனே வினோபாஜி,''எனக்குப் பிடித்த மொழி மௌனம் தான்,''என்று கூறி பேட்டியை முடித்துக் கொண்டார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கோமாளிகள்

உலகில் நாம் கோமாளிகளாகக் காட்சி அளிக்கக் காரணம் என்ன?அடிப்படையான பிழைப்பு க்குக்கூட நம்மை நம்புவதைக் குறைத்துக் கொண்டு கடவுளை நம்பி இருப்பது தான்.இந்த உலகில் தங்கள் தேவைகளைப் பெற மண்புழு முதல் யானைவரை தங்கள் திறமையைத் தான் நம்பி இருக்கின்றன.ஆனால் புத்திசாலியான மனிதன் மட்டும் தனக்குத் தேவையானதைக் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான்.உழைக்காமல் சாப்பிடவும்,படிக்காமல் தேர்வடையவும்,உங்கள் தவறுகள் கவனிக்கப் படாமல் போகவும் கடவுளைத் துணையிருக்க வேண்டுகிறீர்கள்.வாழ்க்கை திடுமெனப் புரண்டு விட்டால் என்ன செய்வது என்று கடவுளைத் துணையிருக்கச் சொல்கிறீர்கள்.கோவில் கோவிலாக அதற்கான  பிரிமியம் கட்டுகிறீர்கள்.
வாழ்க்கை பற்றிய அச்சம் மட்டும் கடவுளைப் பற்றிய நம்பிக்கையை வளர்த்திருந்தால் உங்களிடம் தெய்வமும் தங்காது.வாழ்க்கையும் மிஞ்சாது.சந்தேகம் இருக்கும் மனதில் பக்தி நிகழ்வதில்லை.கடவுளிடம் பணிவது போன்ற பாசாங்கு தான் நிகழ்கிறது.பக்தி என்பது உங்கள் அடையாளங்களை இழந்து எதன் மீது பக்தி கொண்டீர்களோ,அதனுடன் இரண்டறக் கலப்பதுதான்.
உங்கள் தவறுகளுக்கான பழியை ஏற்றுக் கொள்ள சக மனிதர்கள் தயாராக இல்லாதபோது,தெய்வச் செயல் என்று அவற்றைச் சுமத்த வசதியான தோள்கள் ஆகக்  கடவுளை வைத்திருக்கிறீர்கள்.அதன் பெயர் பக்தி இல்லை.உங்களின் வாழ்வைக் கடவுளின் உதவியைக் கோராமல் நீங்களாகவே வாழக் கற்றுக் கொண்டீர்களேயானால் உங்கள் வாழ்வு மேன்மை ஆகிவிடும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முஸ்லீம்

தமிழில் முஸ்லீம்களுக்கு பல பெயர்கள் உள்ளன.அவை பெரும்பாலும் காரணப் பெயர்களே.
அரேபியாவிலிருந்து மரக்கலங்களில்  வந்தவர்கள்  மரைக்காயர்  என்று  அழைக்கப்பட்டனர்
'இராவுத்'என்ற உருதுச் சொல்லுக்கு குதிரை வீரன் என்று பொருள்.முஸ்லீம்கள் அரேபியாவிலிருந்து குதிரைகளில் வந்ததால் 'இராவுத்தர்கள்'என்று அழைக்கப்பட்டனர்.
'லெப்பை'என்ற அரபுச் சொல்லுக்கு ஆசிரியர் என்று பொருள்.திருக்குர்ரான் சொல்லிக் கொடுத்தவர்கள்.லெப்பைகள் ஆனார்கள்.
துருக்கி நாட்டிலிருந்து வந்தவர்கள் துருக்கியர்.அதுவே மருவி துலுக்கர் ஆயிற்று.
'சகிபா'என்ற அரபுச் சொல்லுக்கு தோழன் என்று பொருள்.நபிகளின் தோழர்கள்,'சாஹிப்'என்று அழைக்கப்பட்டனர்.
பாயி என்ற ஹிந்திச் சொல்லுக்கு சகோதரன் என்று பொருள்.மத வேற்றுமை பாராத பிற மதத்தினர்,முஸ்லீம்களை பாயிஎன்று அழைக்க அது பாய் என்று மருவி விட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தைரியம்

வயது முதிர்ந்த விவசாயி ஒருவன் இருந்தான்.வாழ்வில் என்ன பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும் எப்போதும் மகிழ்வுடன் காணப்பட்டான்.ஒரு நாள் அவனுடைய நண்பன் கேட்டான்,'இவ்வளவு துன்பங்களுக்குப் பின்பும் தைரியமாக இருக்கிறாயே,அது எப்படி முடிகிறது?'சிரித்துக்கொண்டே விவசாயி சொன்னான்,''அது ஒன்றும் கஷ்டமில்லை.தவிர்க்க முடியாததுடன் எப்படி சமரசம் செய்து கொள்வது என்று தெரிந்து கொண்டால் போதும்.''
இயற்கை உன்னை நோக்கிக் கோடாரியை வீசும் போது உனக்கு இரண்டே வழிகள் தான் இருக்கின்றன.ஒன்று,கோடரியின் கைப்பிடியைப் பிடிப்பது;மற்றொண்டு கோடரியின் கூர் முனையைப் பிடிப்பது.பறந்து வரும் கோடரியின் கைப்பிடியைப் பிடித்து அதை நமக்குப் பயன் தரும் வகையில் உபயோகப்படுத்திக் கொள்வது தான் தைரியம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பீதி

ஹுய்த்ஷு  லியாங் நாட்டு பிரதம மந்திரியாக இருந்தார்.அவருக்குக் கிடைத்த தகவலின் படி சுவாங்க்தசு  அவர் பதவி மீது ஆசைப்பட்டு அவரை விலக்கிவிட்டு,தான் அப்பதவியில் இருக்க சதி செய்வதாக நம்பினார்.
சுவாங்க்தசு லியாங் நகருக்கு விஜயம் செய்த போது பிரதம மந்திரி,அவரைக் கைது செய்து வரக் காவலரை அனுப்பினார்.அவர்கள் இரவு பகலாக மூன்று நாட்கள் தேடியும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.இதற்கிடையே சுவாங்க்தசு தானாக  ஹுய்த்ஷு முன்  தோன்றி  அவரிடம்  சொன்னார் ,'' தெற்கே வாழும் புராண காலப் பறவை,அதன் பெயர் தீப்பறவை.அது முதுமை அடைவதேயில்லையாம்.அது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?தெற்குக் கடலிருந்து எழுகின்ற இந்த மரணமில்லா தீப்பறவை வடக்குக் கடலுக்குப் பறக்கிறது.சில புனித மரங்களைத் தவிர வேறு எங்கும் அதுஎங்கும் இறங்குவதில்லை.அது எவ்வித உணவையும் தொடுவதில்லை.அபூர்வமான சில பழங்களை மட்டுமே உணவாக்கிக் கொள்கிறது.அது தூய்மையான நீரூற்றிலிருந்து வரும் நீரை மட்டும் பருகுகிறது.ஒரு முறை ஒரு ஆந்தை ஏற்கனவே அழுகிப் போன செத்த எலியைத் தின்று கொண்டிருக்கும்போது  அது தனக்கு மேலே பறந்து செல்லும் தீப்பறவையைக் கண்டவுடன் திடுக்கிட்டு பயந்து போய் கூக்குரலிட்டு தான் தின்று கொண்டிருந்த செத்த எலியை மிகவும் கெட்டியாக பிடித்துக் கொண்டதாம்.பிரதம மந்திரியே!நீங்களும் அந்த ஆந்தையைப் போல ஏன் இப்படிப் பயந்து உங்கள் மந்திரி பதவியைப் பிடித்துக்கொண்டு பீதியில் கூக்குரல் இடுகிறீர்கள்?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எளிமை

ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் உணவு உட்கொள்ளுகிறான்.மிக மலிவான ஆடைகளையே அணிகிறான்.மரத்தடியில் வாழ்கிறான்.அவன் தன்னைத் துறவி என்றுஎண்ணிக் கொள்ளுகிறான்.ஆனால் அவன் பக்கம் ஒரு பணக்காரன் கடந்து செல்லும் போது,துறவிக்கு  அவன் மீது குறை காணும் இயல்பு தோன்றி,''இந்தப் பாவிக்கு என்ன நிகழப் போகிறதோ,இவனுக்கு நரகம் தான் கிடைக்கும்.,''என்று எண்ணி இரக்கப்படுகிறான்.இப்படி நினைத்தால் அந்தத் துறவி எளிமையானவரில்லை.ஏனெனில் அவர் மனதில் தான் உயர்ந்தவன்,அப்பணக்காரன் தாழ்ந்தவன் என்ற வித்தியாசம் வந்து விடுகிறது. எப்போதெல்லாம் வேற்றுமை வித்தியாசம்  வந்து விடுகிறதோ அங்கு தன முனைப்பு வந்து விடுகிறது.தன் முனைப்பு இல்லாததுதான் எளிமையாகும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மனசாட்சியின் கணம்

ஒரு திருடன் தன் தொழிலின் மூலம் ஏராளமான சொத்து சேர்த்திருந்தான்.அவன் கட்டளைக்கு அடிபணிய சில திருடர்கள் இருந்தனர்.ஆனாலும் அவனிடம் நிறைவில்லை.ஒரு ஞானியிடம் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறிவிட்டு,தன் மனக்குறையை நீக்க ஒரு வழி காட்டுமாறு வேண்டினான்.ஞானி அவனை ஒரு மலை அடிவாரத்திற்குக் கூட்டிச் சென்றார்.அங்கே கிடந்தது மூன்று பெரிய கற்களைத்  தூக்கிக்கொண்டு அவர் பின்னே வரச்சொல்லிப்  பணித்தார்.அவர் மலை ஏறத் துவங்கி விட்டார்.திருடனால் மூன்று கல்லையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை.அதை ஞானியிடன் அவன் கூற அவரும் ஒரு கல்லைக் கீழே போட்டுவிட்டு இரண்டை மட்டும் தூக்கி வரச் சொன்னார்.சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு கல்லுடன்நடப்பதும் சிரமமாக இருப்பதாகக் கூற ஞானியும் இன்னொரு கல்லைக் கீழே போட்டுவிட்டு ஒரு கல்லை மட்டுஎடுத்து வரச் சொன்னார்.மீண்டும் சிறிது தூரம் நடந்தார்கள்.ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டும் அவனால் மலை மீது ஏற முடியவில்லை.அதைக் கண்ட ஞானியும் ஒரு கல்லையும் கீழே விட்டுவிட்டு வரச் சொல்ல அவனும் எளிதாக அவருடன் மலை ஏறினான்.மலை உச்சியை அடைந்தவுடன் ஞானி சொன்னார்,''நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும்.கனமான கற்களைத் தூக்கி கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை.அதுபோல மனசாட்சியைக் கனமாக வைத்துக்கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும்  வாழ முடியாது.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

யாருக்காக அழ?

குடியானவன் ஒருவன் தன அன்பு மனைவியுடன் ஒரு ஊரில் வசித்து வந்தான்.அவன் ஒரு ஞானி.நீண்ட நாள் கழித்து அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.
ஒரு நாள் குடியானவன் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போதுஅவனது நண்பன் ஒருவன் வந்து குடியானவனின் குழந்தைக்கு காலரா கண்டிருப்பதாக பதட்டத்துடன் வந்து சொன்னான்.குடியானவன் உடனே வேலையை நிறுத்திவிட்டு வீட்டுக்கு விரைந்தான்.குழந்தை இறந்து விட்டது.அவன் மனைவி மற்றும் உறவினர்கள் தாங்கொணாத துயரத்துடன் கதறி அழுதனர்.ஆனால் குடியானவனின் முகத்தில் மட்டும் பாதிப்பு ஏதும் தெரியவில்லை.மற்றவர்களிடமும் அவன்,''வருந்தி என்ன ஆகப் போகிறது?வருத்தப்படாதீர்கள்,''என்று கூறினான்.அது மட்டுமல்ல;அவன் வயலுக்கு சென்று விட்ட வேலையைத் தொடர்ந்து முடித்து விட்டு மாலையில் வீடு திரும்பினான்.அப்போதும் அமைதியாக இருந்த அவனைக் கண்டு அழுது புலம்பிக் கொண்டே அவனைப் பார்த்து அவன் மனைவி ,'நீ ஒரு கல் நெஞ்சுக்காரன்.இதயமே இல்லாதவன்.மகன் இறந்ததற்காக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடாமல் இருக்கிறாயே?'என்று திட்டினாள்.குடியானவன் சாவகாசமாக அமர்ந்துகொண்டு அமைதியாகப் பதில் சொன்னான்,''நேற்றைய இரவு நான் ஒரு புதுமையான கனவு கண்டேன்.அந்தக் கனவில் நான் ஒரு அரசனாகவும்,நீ அரசியாகவும் இருந்தோம் நமக்கு எட்டுக் குழந்தைகள்.நாம் மகிழ்ச்சியுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தோம்.பிறகு தூக்கம் கலைந்து விட்டது. விழிப்பு வந்தது அந்த எட்டுக் குழந்தைகளில் ஒருவரைக்கூடக்  காணோம்.அரசாட்சியும் நமக்கில்லை என்று தெரிந்தது.பிறகு அது ஒரு கனவு என்று மட்டும் புரிந்தது.இப்போது என் எண்ணமெல்லாம்,அந்த நம்முடைய எட்டுக் குழந்தைகளுக்காக அழுவதா அல்லது இப்போது பறிகொடுத்திருக்கும் ஒரு குழந்தைக்காக அழுவதா என்பதுதான்.''
ஞானிகள் இறந்து போனவர்களைக் குறித்தோ இருப்பவர்களைக் குறித்தோ துன்பப் பட மாட்டார்கள்.
                                                     --பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன கதை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன்மொழிகள்-11

நட்பு உடையக்கூடிய பொருள் அதைக் கவனத்துடன் கையாள வேண்டும்.
**********
முதுமைக்கு முன் இளமையையும்
நோய்க்கு முன் உடல் நலத்தையும்
வறுமைக்கு முன் செல்வத்தையும்
வேலையில் ஈடுபடுமுன் ஓய்வையும் 
மரணம் வருமுன் வாழ்க்கையையும்
அரிதாகக் கருதி நன்றாகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
**********
ஒரு பணக்காரன் சொல்வதை பத்து ஏழைகள் சேர்ந்து மாற்றி விடலாம்.
இது ஜனநாயகத்தின் பலம்.
ஒரு அறிவாளி சொல்வதைப் பத்து முட்டாள்கள் சேர்ந்து மாற்றிவிடலாம்.
இது ஜனநாயகத்தின் பலவீனம்.
**********
விருப்பம் நிறைவேறாத போதுதான் ஒருவனின்உண்மையான குணம் வெளிப்படும்.
**********
நாம் பிறரிடம் கண்டு கேலி செய்யும் குற்றங்கள்,நமக்குள் நம்மையே கேலி செய்யும்.
**********
வன்மம் மிகுந்தவன் தன எதிரியை இழிவு செய்வதற்காக எவ்வளவு கீழான செயலையும் செய்யத் தயங்க மாட்டான்.
**********
ஆடு,'மே,மே,' என்று கத்தினால் அறுக்கிறவன் புத்தனாகிவிடுவானா?
**********
முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு;ஆனால் அதை அவர்களிடம் கூறாதே.
**********
தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனின் பலவீனம்.
**********
அடக்கி வைக்கப்பட்ட கோபமே வெறுப்பு.
**********
துயரத்திற்கு ஒரே மாற்று மருந்து சாதனை தான்.
**********
சொல்லில் இங்கிதம் நாவன்மையை விடச் சிறந்தது.
**********
அறிவற்ற அச்சம் இடையூறுகளை இரட்டிப்பாக்குகிறது.
**********
நல்ல வரவேற்பு பாதி விருந்துக்கு சமம்.
**********
முகம் மனிதனின் ஓவியம்
கண்கள் அதன் தூதுவர்கள்.
**********
தவறு செய்வது மனிதத் தனம்.
அதன் பழியை மற்றவர் மீது சுமத்துவது மனித குணம்.
**********
கடன் வாங்குபவர்கள் கவலையையும் சேர்த்தே வாங்குகிறார்கள்.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இறப்பு

சாக்ரடீஸ் இறக்கும் தருவாயில் சீடர்கள் இறுதிச்சடங்குகள் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தனர்.அவர்கள் அவரை நோக்கி,'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'என்று கேட்டனர்.அதற்கு சாக்ரடீஸ் சொன்னார்,''எதிரிகள் என்னைக் கொல்ல விஷம் தருகிறார்கள்.நீங்கள் என்னை எப்படிப் புதைக்கலாம் எனத் திட்டமிடுகிறீர்கள்.நீங்கள் இரு கூட்டத்தினருமே என் இறப்பிலேயே குறியாக இருக்கிறீர்கள்.யாருமே என்னைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை.''
**********
சீன ஞானி லாவோத்சுவின் சீடர் சுவாங்க்தசு இறக்கும் தருவாயில் அவரது  சீடர்கள் ஒரு பிரமாண்டமான இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர்..அவர்கள் சுவாங்க்தசுவிடம் சொன்னார்கள்,'காக்கைகளும் குருவிகளும் எங்கள் குருவின் உடலை உண்டு விடுமே என்று பயப்படுகிறோம்.' சுவாங்க்தசு பதிலளித்தார்,''பூமிக்கு மேலேஎன் உடல் இருந்தால் அது காக்கைகளாலும் பருந்துகளாலும் உண்ணப்படும்.பூமிக்குக் கீழே புதைத்தால்,எறும்புகளாலும் புழுக்க லாலும்  உண்ணப்படும்.இரண்டு விதத்திலும் என் உடல் உண்ணப்படும்.பிறகு ஏன் பரவைகளுக்காகப் பயப்படுகிறீர்கள்?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அக்பர்

அக்பர் தன சுய சரிதையில் எழுதுகிறார்:
என் வாழ் நாளிலே,முதல் முறையாக,நான் செல்வந்தன் அல்ல என்பதைப் புரிந்து கொண்டேன்.என்னிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும்,அது எனக்கு திருப்தி தரவில்லை என்பதையும்,இன்னமும் வேண்டும் என்று கடவுளிடம்  கேட்டுக் கொண்டேயிருந்தேன் என்பதையும் உணர்ந்தேன்.ஏறக்குறைய தன உணர்வு இன்றி,இறைவனிடம் எப்போதும் ஏதாவது கேட்டுக் கொண்டேதான் நான் இருந்துள்ளேன்.இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.வாழ்க்கை கடந்து சென்று கொண்டே உள்ளது.நானோ,குப்பை கூளங்கள் எல்லாம் எனக்கு வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.நிறையப்பொருள் சேர்த்துவிட்டேன்.என்றாலும் அவற்றால் எனக்கு எதுவும் தார் முடியாது என்பதனையும்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net