Tuesday, June 7, 2011

எழுத்தாளர் நகைச்சுவை !!!

எழுத பயன்படாத மை எது?
எருமை.





இதுவரை நான் எழுதின கதைகள் எழுவுமே திரும்பி வந்ததில்லை
அப்படியா...! வெரிகுட்.
என் அட்ரஸை எழுதினாத்தானே...!





நீங்க எழுதிட்டு வர்ற கிரைம் தொடர் பற்றி நீங்களே புகார் கொடுக்கனுமா? ஆச்சர்யமா இருக்கே...!
ஆமா சார், உண்மைக் கொலையாளி, யாருன்னு எனக்கே தெரியவில்லை... சீக்கிரம் கண்டு பிடிச்சு சொல்லுங்க கதையை முடிக்கனும்.





அந்த எழுத்தாளர், கதை எழுதலைன்னா கூட பத்திரிக்கைகாரங்க பணம் அனுப்பி வெச்சிடுவாங்க
எப்படி?
இந்த வாரம் கதை அனுப்பாததற்கு நன்றி தெரிவிச்சுதான்...!





மேட்டூர் அணை ஒரு நாளிலேயே ஆறு அடி உயர்ந்தன்னு கட்டுக்கதை விடறாங்க பேப்பர்ல...!
எப்படி சொல்ற
நான் தினமும் அணையை பார்க்கிறேன். கொத்தனார் அணை எப்படி கட்டினாரோ, அப்படி தான் இருக்கு.





உங்க படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா?
எதுங்க?
உங்க நாலாவது பெண் மேனகாதான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment