Wednesday, June 22, 2011

பிட்டு - 78

1. தலைவர் பாக்கெட்ல பேனா வைக்கறதுக்குப் பதிலா எதக்கு ஸ்டாம்ப் பேட் வெச்சிருக்கார் ?கை நாட்டு வைக்கதான்.==========2. ஒரு மாவட்ட கலெக்டருக்கு வேறு ஊருக்குப் போகச் சொல்லி டிரான்ஸ்ஃபேர் ஆர்டர் வந்தது. கலெக்டரின் ஊழியர்கள் அவருக்குப் பிரிவு உபசார விழா நடத்தினார்கள். விழா முடிந்தபிறகு ஒருவர் மட்டும் ஒரமாக உட்கார்த்து அழுது கொண்டிருந்தார்.அவரிடம் போன கலெக்டர் அவரைப் பார்த்துக் கண்கலங்கி கவலைப்படாதே நீ என்மேல் இவ்வளவு பாசம் வைத்திருப்பாய் என்று தெரியாது அடுத்து வரப்போகம் கலெக்டர் என்னைவிடநல்லவராக இருப்பார் என்று ஆறுதல் சொன்னார்.அதற்கு அழுதுகொண்டிருந்த அந்த நபர் சும்மா எனக்காகப் பொய் சொல்லாதீங்க சார் இதை நான் நம்பமாட்டேன் என்னா உங்களுக்கு முன்னாடி இருந்த கலெக்டரும் இதையேதான்சொன்னாரு என்றார்.==========3. தொகுதி மக்கள் இப்படிக் கேப்பாங்கன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கலைஎன்ன கேட்டாங்க ?இத்தினி வருஷம் எம்.எல்.ஏ-வா இருந்து உங்க குடும்பத்துக்கே ஒண்ணும் செஞ்சுக்கலை .. .. எங்களுக்கு என்ன செஞ்சு கிழிக்கப் போறீங்கன்னு கேட்கறhங்க *==========4. எதுக்குத்தான் எது இனாம் கொடுக்கறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சுஎதுக்குப் புலம்பறீங்க .. .. ?அந்த பாருங்க மாட்டுச் சந்தையில ரெண்டு மாடு வாங்கினா இந்த ஆடு இலவசம்னு சொல்றார் அந்த வியாபாரி==========5. சார் நீங்க சமயத்துல ஆயிரம் ரூபா குடுத்து உதவி பண்ணீங்க உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை.என்ன சார் இதுக்குப் போய் நன்றி சொல்றீங்கஅப்படீன்னா இன்னொரு ஆயிரம் ரூபா குடுங்க சார்!==========6. என்ன உங்க வீட்டுக்காரர் எப்ப பார்த்தாலும் வீட்டுக்கு வெளியவே நிக்கிறார்வீட்டுக்கு மேலே திருஷ்டி பொம்மை வச்சிருந்தோம் அது எங்கேயோ காணாம போயிடுச்சு அதுதான் அவரை நிக்க வச்சிருக்கோம்.==========7. வெயில் தாங்க முடியலியாம் காருக்குள்ள இருந்தே நடிக்கிறேன்னு ஹிரோயின் சொல்றாங்க.==========இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:8. நாயை டெஸ்ட் செய்த டாக்டர் அது கர்ப்பமாக இருப்பதாகச் சொன்னார் அந்தப்பெண்ணுக்குப் பயங்கர கோபம் வந்துவிட்டது.அதுக்கு வாய்ப்பே இல்லை இந்த நாயை நான் வீட்டுக்குள் கதவைப் பூட்டி வளர்கிறேன் வேறு நாயும் உள்ளே வராது பிறகு எப்படி .. ? என்றாள்.இந்த நாயோடு சேர்த்து இன்னொரு நாய் வளர்க்கிறீர்களே அது ஆண்நாய்தானே ? என்று கேட்டார் டாக்டர்.உடனே அந்தப் பெண் முட்டாள்தனமா பேசாதீங்க டாக்டர் அந்த நாய் இவளோட அண்ணன் என்றாள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment