Sunday, April 3, 2011

உணவு கூம்பகம்/பிரமிட்

இது ஒரு மனிதன் சுகதேகியாக வாழ்வதற்கு எவ்வாறு தனது உணவுப்பழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்கான அமைப்பாகும். முக்கோண வடிவிலான அமைப்பில் உள்ளெடுக்கப்படவேண்டிய உணவுகள் பற்றி இப்படம் எளிமையாக விளக்குகிறது.


*

கீழே அடிப்பரப்பில் உள்ள உணவுகள் அதிக அளவில் உள்ளேடுக்கப்பட வேண்டும் . மேலே செல்ல செல்ல அவை குறைந்த அளவில் உள்ளெடுக்கப்பட வேண்டும்.




நாம் உடலுக்கு ஏற்ற உணவு:


1. நீர்
1. முக்கோணத்தின் அடிப்பரப்பானது நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. அதாவது ஒரு மனிதன் சுகதேகியாக வாழ நீர் உள்ளெடுத்தல் மிக அடிப்படையானது என்பதை இது காட்டுகிறது.

2. ஆண் -> ஒரு நாளுக்கு 12 கிளாஸ்/ 3லீட்டர்/ 96 அவுன்ஸ் நீர் அருந்தவேண்டும்

3. பெண் -> ஒரு நாளுக்கு 8 கிளாஸ்/2லீட்டர்/64 அவுன்ஸ் அருந்தவேண்டும்.

***

ஏன் நீர் அருந்தவேண்டும் அல்லது நீரின் முக்கியத்துவம் என்ன?

1. மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். ஒரு வளர்ந்த மனிதனின் உடல் நிறையில் 60% நீராகும்.


*

2. உடலின் அனைத்து தொழிற்பாட்டுக்கும் சமிபாடு, அகத்துறிஞ்சல் கடத்துதல், உடலின் அனுசேபம் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.

*

3. உடல் வெப்பநிலையை பேண உதவுகிறது.

*

4. நீரில் எந்த சக்தி பெறுமானமும் இல்லை. நீரிழப்பால் வரும் தலைவலி, அசதி என்பவற்றை போக்குகிறது.

*

5. சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றை குறைப்பதில் உதவுகிறது.

*

6. குடல், சிறிநீரகம், சிறுநீர்ப்பை என்பவற்றில் ஏற்படும் புற்றுநோயை குறைக்கிறது.

நீரிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுபவை


***

பழங்களும் மரக்கறிகளும்:

ஒரு நாளுக்கு ஒரு சுகதேகி மனிதனால 5 தடவைகள் மரக்கறிகளும், 2-3 தடவைகள் பழங்களும் உள்ளெடுக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


ஏன் பழங்களையும் மரக்கறிகளை உண்ணவேண்டும்.?

1. மிகச்சிறந்த நார்ப்பொருளுக்கான மூலங்களாகும்.
*
2. விற்றமின், கனியுப்புக்களுக்கான சிறந்த ஆதாரம்.
*
3. சக்தி பெறுமானம் குறைந்ததும் கொழுப்பற்றவை.
*
4. ஒட்சியேற்ற எதிரிகள் (antioxidants) phytochemical ஆகியவற்றை அதிகளவில் கொண்டவை.
*
5. அதிகளவில் உட்கொள்வதால் புற்றுநோய், நிறை அதிகரிப்பு, இதய நோய்கள், ஆஸ்துமா, ஆகியவற்றை குறைப்பதில்/ஏற்படுவதற்கான சாத்தியப்பாட்டை குறைக்கிறன.

***

தானியங்களும், மாபொருள் உள்ள மரக்கறிகளும்:

ஏன் முக்கியத்துவமானது?

1. கொழுப்பு குறைவானது.
*
2. விற்றமின்கள் குறிப்பாக B கூட்ட விற்றமின்கள், விற்றமின் E , கனியுப்புக்களான , இரும்பு, செலனியம், நாகம் என்பவற்றை அதிகள்வில் கொண்டவை.
*
3. ஒட்சியேற்ற எதிரிகள் (antioxidants) phytochemical ஆகியவற்றை அதிகளவில் கொண்டவை.
*
4. உடல் நலத்துக்கன உணவை வழங்குகிறது.
*
5. பலவேறு வகையாக இருப்பதால் தெரிவுகள் அதிகம்.
*
6. புற்றுநோய், இதயநோய், மலச்சிக்கல் என்பன எற்படும் வாய்ப்பு குறைவாகும்

***

அவரை இன உணவுகள்:

1. மிகக்குறைந்த் கொழுபை கொண்டவை
*
2. அதிகளவு புரத்ததை கொண்டவை
*
3. கனியுப்புக்களான நாகம், இரும்பு, செலனியத்தையும், போலிக்கமிலம் எனும் விற்றமினையும் அதிகளவு கொண்டவை
*
4.. புற்றுநோய், இதயநோய், மலச்சிக்கல், மன அழுத்தம், நீரிழிவு என்பன எற்படும் வாய்ப்பு குறைவாகும்

***

அடுத்த படிநிலையில் இருப்பவை வாசனைப்பொருட்களும் பாதகமற்ற கொழுப்பு உணவுகளுமாகும்.


நல்லின கொழுப்புணவுகள் ( HDL):


1. நல்லின கொழுப்புணவுகள் எனும் போது அவை தாவர எண்ணெய் வகைகள் குறிப்பக அதிகளவான தனி நிரம்பாத கொழுப்பமிலங்களை (MonoUnsaturated fatty acid), Omega 3 fatty acid ஐ கொண்டவையாகும். இவை உடல் நலனுக்கு உகந்தவை.

உதாரணமன எண்ணெய் வகை :

ஒலிவ், நல்லெணெய், நிலக் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோய எண்ணெய் போன்றவை

1. உடலுக்கு சக்தியை வழங்குவதல்
*
2. இதய நோய்கள், தொற்றுக்களில் இருந்து பாதுகாத்தல் , குருதி அழுத்ததை குறைத்தல்
*
3. விற்றமின் அகத்துறுஞ்சல் , ஒட்சியேற்ற எதிரிகளை வழங்கல் குறிப்பக விற்றமின் E
*
4. மன நலம்/ மூளையின் நலனுக்கு அவசியமானவை.

***

வாசனைப்பொருட்கள்:

1. மூலிகைகளும், வெங்காயம், லீக்ஸ் போன்றவையும், வாசனைப்பொருட்களும்,
முக்கியத்துவம்
*

2. தொற்றுக்களை குறைத்தல்
*
3. குருதிஅழுத்ததை குறைத்தல் போன்றன

***

பாலும் முட்டையும்:

1. முட்டை நாளுக்கு ஒன்று வீதமும், பால் நாளுக்கு 1-3 தரமும் உள்ளெடுக்க வேண்டும்

*

2. புரதம், விற்றமின்களான A,D,E, K, B12 என்பவற்றை அதிகளவு கொண்டவை.

*

3. மனிதருக்கு தேவையான எல்ல ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.

***

அடுத்த வகை உணவுகள் வாரத்தில் சில நாட்கள் உள்ளெடுத்தால் போதுமானது

மீனும் கடலுணவுகளும்:

1. வாரத்தில் 2-4 முறை எடுத்தல் போதுமானது. (ஒரு தடவை 4-6 அவுன்ஸ் )

*

2. 8 இறைச்சிகள் வாரத்தில் 1-3 முறை எடுக்கவேண்டும்.

***

இவை அத்தியாவசியமான உணவுகள் அல்ல, விரும்பினால் உள்ளெடுக்கலாம், மிக குறைந்த அளவில்:

1. சொக்லேட்- அதிகளவு 1 அவுன்ஸ் / நாள்

2. அற்ககொல் - 1-2 தடவை/ நாள் இது வயது, சுகநலன் என்பவற்றை பொறுத்தது.

3. ஒரு பரிமாறல் என்பது 300 மில்லி லீடடர் ஆகும்

*

தேநீர் உடல் நலனுக்கு உகந்த பானமாக கருதப்படுவதால் 2-4 கோப்பைகள் அருந்துவது விரும்பத்தக்கது.

***

நன்றி யாழ்.

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment