Monday, February 28, 2011

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்



மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்



1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 

3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 

5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும். 

6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். 

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. 

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. 

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. 



--
Regards,
Yoganandhan Ganesan
09731314641


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆண்களின் டைரியிலிருந்து

ஆண்களின் டைரியிலிருந்து....


ஆண்கள் பெண்களிடம் சொல்லும் சட்டங்கள்:

1. ஞாயிற்றுகிழமை = கிரிக்கெட் பார்த்தல். எழுதப்படாத சட்டத்தில் இதுவும் ஒன்று

2. shopping கிரிக்கெட் மாதிரி அல்ல. அப்படி நாங்க நினைக்கபோவதும் இல்ல.

3. அழுவது என்பது blackmail.

4. உங்களுக்கு ஒன்னு வேணும்னு, தெளிவா சொல்லிடுங்க. மறைமுகமா கேட்பது, புதிர் போட்டு பேசுவது, தெளிவா குழப்புவது- இது எதுவுமே வேலைக்கு ஆகாது!

5. பிறந்தநாட்களும், கல்யாண தேதியும் எங்களுக்கு நினைவில் இருக்காது. ஆக, அவற்றை நாள்காட்டியில் குறித்துவைங்க. எங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லிடுங்க, ப்ளீஸ்!

6. 'ஆம்' மற்றும் 'இல்லை'- இவை இரண்டுமே சமமான பதில்கள், எல்லா கேள்விகளுக்குமே.

7. பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் மட்டுமே எங்களிடம் வாங்க. அனுதாபம் வேண்டும் என்றால் உங்களோட படித்த எல்கேஜி தோழிகளை போய் பாருங்க.

8. நாங்கள் 6 மாசத்துக்கு முன்னாடி சொன்னவற்றை இன்று போடும் சண்டையில் இழுக்க கூடாது. நாங்கள் என்ன சொன்னாலும், 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும்.

9. நீங்கள் குண்டாக இருக்கீங்கன்னு நினைத்தால், நினைத்துகொள்ளுங்கள். உண்மையிலே நீங்க அப்படிதான். எங்ககிட்டு வந்து கேட்காதீங்க. பதில் சொல்ல விருப்பமில்லை.

10. நாங்கள் சொல்வது சில, உங்களை காயப்படுத்தும் அல்லது கோபப்படுத்தும். எங்கள் நோக்கம் இரண்டுமே.

11. எங்களிடம் ஒன்றை செய்ய சொல்லுங்கள் அல்லது எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். இரண்டையுமே ஒரே நேரத்தில் சொல்லாதீங்க. அந்த வேலையை பற்றி முழுமையா தெரிந்தால், நீங்களே செய்யலாம். எங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல.

12. எது சொல்ல வேண்டும் என்றாலும், டிவி விளம்பரங்கள் நேரத்தில் மட்டுமே சொல்லுங்க. live match நடந்து கொண்டிருக்கும்போது....மூச்!!

13. கோலாம்பஸுக்கு திசைகள் தேவைப்பட்டது இல்லை. நாங்களும் அப்படிதான். காரில் செல்லும்போது கொஞ்ச நேரம்.....'shut up'

14. எங்களிடம் உலக பொருளாதாரம், அமெரிக்கா வரலாறு, கிரிக்கெட், மொக்கை ஜோக்ஸ்-இதை பத்தி பேச விருப்பம் என்றால் மட்டுமே கேளுங்க இல்லை என்றால் நாங்கள் அமைதியாக இருக்கும்போது என்ன நினைக்குறீங்க என்று கேட்காதீங்க.

15. I am in shape. ROUND is a shape too.
இதை உங்க மனைவியிடம் சொன்னால், நீங்க அநேகமா இன்று இரவு ஹாலில் அல்லது வீட்டு திண்ணையில் தான் படுக்க நேரிடும்.

--
Regards,
Yoganandhan Ganesan
09731314641


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சோம்பேறி

மார்க் ட்வைன் இளைஞராக இருந்தபோது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.ஆறு மாதம் கழிந்தபின் மேனேஜர் அவரை அழைத்து வேலையிலிருந்து, அவரை நிறுத்துவதாகக் கூறினார்.காரணம் என்னவென்று வினவியபோது,மேனேஜர் சொன்னார்,''நீ ஒரு சரியான சோம்பேறி.நீ இந்த நிறுவனத்துக்கு லாயக்கில்லை.''மார்க் ட்வைன் உடனே சொன்னார்,''நீங்கள் தான் சரியான சோம்பேறி.''மேனேஜருக்கு கோபம் வந்தது.தன்னை ஏன் அவ்வாறு கூறினார் என்று கேட்க ட்வைன் சொன்னார்.';நான் ஒரு சோம்பேறி என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஆறு மாதம் ஆகியிருக்கிறதே?நீங்கள் ஒரு சோம்பேறி என்பதை நான் வேளையில் சேர்ந்த அன்றே தெரிந்து கொண்டேன்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தெரிந்து கொள்ள....

உலகிலேயே மிகச்சிறிய தேசீய கீதம் ஜப்பானுடையது.மொத்தம் நான்கே வரிகள்.ஹைக்கூகவிதை வகையைச் சேர்ந்தது.
**********
நத்தை தன எடையைப்போல அறுபது மடங்கு எடை கொண்ட பொருளை இழுத்துச்செல்லும் சக்தி உடையது.
**********
உலகிலேயே அதிக நீளமான தேசீய கீதம் கிரேக்க நாட்டு கீதம்தான்.இது 128 வரிகள் கொண்டது.
**********
இந்தியாவிற்கு சொந்தமாக 1197 தீவுகள் உள்ளன.இவற்றில் 723 தீவுகள் அரபிக்கடலில் உள்ளன.
**********
பாலைவனம் இல்லாத ஒரே அரபு நாடு லெபனான்.
**********
சிகரெட்டிலுள்ள நிகோடின் நச்சு ரத்தக் குழாயை சுருங்கச் செய்து தோலின் திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் உணவுச்சத்து கிடைக்காமல் செய்கிறது.எனவே சிகரெட் பிடிப்பவர்களின் தோல் மற்றவர்களைவிட பத்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே சுருக்கம் விழ ஆரம்பிக்கிறது.
**********
கேமரா என்ற இத்தாலியச் சொல்லுக்கு இருட்டறை என்று பொருள்.
**********
கேரம் என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு அடித்துத் தள்ளச் செய்தல் என்று பொருள்.
**********
கிராம்பு என்பது காயோ கனியோ அல்ல;அது ஒரு மரத்தின் மொட்டு.
**********.
நமது உடலில் வேர்க்காத பகுதி நம் உதடு
இரத்தம் பாயாத பகுதி கண்ணின் கரு விழி.
**********
பனிக்கட்டி என்பது உறைந்த தண்ணீரின் படிகங்கள்.இந்தப் படிகங்கள் பல முகங்களைக் கொண்டவை.இந்த முகங்கள் வெளியே உள்ள வெளிச்சத்தைப் பிரதி பலிப்பதனால் தான் பனிக்கட்டி வெள்ளை நிறமாகத் தெரிகிறது.
**********
நமது மூளையில் தூக்கம் வருவதற்கான அறிகுறிகள்தொடங்கியவுடனே இருதயமானது மூச்சு விடும் வேகத்தை சற்றுக் குறைத்துக் கொள்கிறது.இதை ஈடு செய்து மூளைக்கு அதிக இரத்தத்தை ஏற்றுவதற்கு பிராணவாயு வேகமாகஉள்ளே இழுக்கப்பட்டு,கரியமில வாயு வெளியேறி,இருதயம் சுருங்கி விரிந்து இரத்தம் சுத்திகரிக்கப்பட வேண்டும்.இதற்கு வசதியாக நமது வாய் அகலத்திறந்து காற்றினை உள்ளே இழுத்துக் கொள்கிறது.அது தான் கொட்டாவி.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இன்று.....

இன்று......
ஒரு  கோபத்தை  மறந்து  சமரசம் செய்து கொள்ளுங்கள்
அல்லது
மறந்த ஒரு நண்பரைத் தேடிக் கண்டு பிடியுங்கள்
அல்லது
ஏதேனும் ஒரு அறிய பொருளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
அல்லது
ஒரு வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
அல்லது
ஒரு தவறுக்கு மன்னிப்புக் கேளுங்கள்
அல்லது
ஒரு குழந்தையின் உள்ளத்திற்குக் களிப்பூட்டுங்கள்.
 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பயிற்சி

ஒரு திருடனுக்கு வயதாகி விட்டது.அவன் மகன் ,தனக்கு திருட்டுத் தொழில் செய்ய பயிற்சி கொடுக்குமாறு கேட்டான்.திருடனும் அன்றிரவே மகனை  ஒரு வீட்டிற்குத் திருட அழைத்து சென்றான்.அந்த வீட்டின் ஒரு அறையைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று மகனைப் பார்க்க சொன்னான்.அந்த அறைக்குள் மகன சென்றதுமே அறையை சத்தத்துடன் மூடி வெளியில் தாழ்ப்பாளும் போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டான்.சத்தம்கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் விழித்து விட்டனர்.
மாட்டிக்கொண்ட மகன் பயந்து போனான்.ஒரு நிமிடம் தந்தையின் மீது அவனுக்குக் கோபம் வந்தது.மறு நிமிடம் அங்கிருந்து எப்படி தப்பிச் செல்வது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.உடனே ஒரு பூனையைப் போல சப்தமிடத் துவங்கினான்.அதைக் கேட்ட,ஒரு வேலைக்காரன்,அறையின் உள்ளே மாட்டிக் கொண்டிருக்கும் பூனையை வெளியே கொண்டுவரக் கதவைத் திறந்து வைத்தான்.கதவு திறந்ததும் திருடனின் மகன் வேலைக்காரனை தள்ளிவிட்டு வெளியே ஓடினான்.எல்லோரும் அவனைத்  துரத்தினர். வீட்டின் சுற்றுச் சுவர் அருகே வந்தவன் அங்கு ஒரு கிணறு இருப்பதைப் பார்த்து அதற்குள் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டு இருளில் மறைந்து கொண்டான்.ஓடி வந்தவர்கள் அவன் கிணற்றில் குதித்து விட்டான் என்று கருதி அது பெரிய கிணறு என்பதால் அதில் மூழ்கி இறந்து விடுவான் என்று நம்பி மெதுவாக வீட்டிற்குள் திரும்பினர்.அவர்கள் சென்றதும் அவன்  வீட்டை விட்டு  வெளியேறினான்.தன தந்தையின் செயல் தனக்கு பயிற்சி கொடும்பதர்காகத்தான் என்பதனை உணர்ந்த அவன்,முதல் தேர்விலேயே தான் எப்படி வெற்றி பெற்றோம்என்பதை தந்தையிடம் விளக்க வேண்டும் என்ற ஆசையுடன் வீட்டிற்கு வந்து தந்தையிடம் சொல்ல ஆரம்பித்தான்.தந்தை சொன்னான்,''கதை எல்லாம் எதற்கு?இப்போது நீ இங்கே இருக்கிறாய்.அதுவே போதும்,நீ என் தொழிலைக் கற்றுக் கொண்டு விட்டாய்.எனக்கு மகிழ்ச்சி.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மொட்டை

ஒருவனுக்கு இரண்டு மனைவியர்.ஒருத்தி அவனை விட வயதானவள்.மற்றவள் அவனைவிட வயது குறைந்தவள்.அந்த மனிதனுக்கு முடி நரைக்க ஆரம்பித்தது.அதைப் பார்த்த இளம் மனைவி,தன் கணவன் கிழவனாகி விட்டான் என்று ஊரில் எல்லோரும் கேலி செய்வார்கள் என்று எண்ணினாள்.அதனால் அவன் தலையில் இருந்த  வெள்ளை முடிகளை எல்லாம் பிடுங்க ஆரம்பித்தாள்.மூத்த மனைவியோ,அவனுக்கு முடி கருப்பாயிருந்தால்  அவன் இளமையாகவும் தான் அதிக வயதானவள் போல தோற்றம் அளிக்கக் கூடும்  என்று நினைத்து தன் கணவன் தலையிலுள்ள கருப்பு முடியைப் பிடுங்க ஆரம்பித்தாள்.இரு மனைவியரின் கைங்கர்யத்தால் அவன் வெகு விரைவிலேயே மொட்டை ஆகி விட்டான். 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தகுதி

விருந்துக்கு வந்த ஒருவரை விருந்து கொடுத்தவர் அருகில் அழைத்து,''என்ன உங்கள் தகுதிக்குரிய உடை உடுத்தி வர வேண்டாமா?நீங்கள் இவ்வளவு அலங்கோலமான ஆடைகளை அணிந்து வந்திருப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது.உங்கள் தாத்தா விருந்துக்கு வந்தால் எவ்வளவு அழகாக அவர் தகுதிக்கேற்ற  உடை உடுத்தி வருவார்,தெரியுமா?''வந்தவர் சொன்னார்,''நானும் அவர் உடுத்தி வந்த உடையைத் தானே அணிந்து வந்திருக்கிறேன்?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கொள்ளை

இரண்டு திருடர்கள் ஒரு நாள் இரவு, ஒரு ஜவுளிக் கடைக்குள் நுழைந்து,அங்கிருந்த சேலை மற்றும் பல ரகமான துணிகளை வாரிச்  சுருட்டிக் கட்ட ஆரம்பித்தனர் அப்போது ஒரு திருடன்,'ஐயோ,'என்று திடீரெனக் கத்தினான்.வசமாக மாட்டிக் கொண்டோம் என்று இன்னொரு திருடன் பயந்து,மற்றவன் அருகே சென்று விபரம் கேட்டான்..ஒரு சேலையிலிருந்த விலை அட்டையைக் காட்டியவன் சொன்னான்,''இந்த சேலை மூவாயிரம் ரூபாயாம்.எவ்வளவு கொள்ளை  அடிக்கிறாங்க பார்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அவலம்

நீங்கள் அவலத்தில் இருக்கும்போதெல்லாம் உலகத்துக்கு உங்களை மூடிக் கொண்டு விடுகிறீர்கள்.அவலம் உங்களின் உட்புறத்தில் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.எனவேதான் துன்புறும் மனிதர்கள் தற்கொலைபற்றி  எண்ணத் தொடங்குகிறார்கள்.தற்கொலை என்பது முழு அடைப்பு.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போதெல்லாம் முழுமையாகத் திறந்திருக்கிறீர்கள்.ஒருவர் மகிழ்வுடன் இருக்கும்போது அவர் கையைத் தொட்டுப் பார்த்தால்,ஒரு இதம் பரவுகிறது.அவரது கரத்தின் வழியாக ஏதோ ஒன்று உங்களிடம் வந்து சேர்கிறது.அவர் உங்களை அடைகிறார்.ஆனால் அவலத்தில் இருப்பவரின் கையைத் தொட்டுப் பார்த்தால் அவர் கை செத்ததுபோல இருக்கும்.உயிரோட்டம் இருக்காது.அன்பு,இதம் ஏதும் இருக்காது.விரைத்துப்போய் காணப்படும்.
ஏழைகள் வெளிப்படையாகவே அவலத்தில் இருக்கிறார்கள்.அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளே நிறைவேறவில்லை.பணக்காரகளும் பரிதாபமாகவே இருக்கிறார்கள்.செல்வம் கொண்டாட்டத்துக்கு இட்டுச்செல்ல முடியும்.ஆனால் கொண்டாடும் மனநிலை அவர்களிடம் இல்லை.ஏழை அவலத்தில் இருக்கிறான்.பணக்காரன் அதிக அவலத்தில் இருக்கிறான்.உடனே,''உலகில் ஒன்றுமில்லை;செல்வம் பயனற்றது''என்ற முடிவுக்கு வருகிறான்.உண்மை அப்படி  அல்ல.அவனால் மனத்தால் கொண்டாட முடிவதில்லை.
நரகமும் மோட்சமும் புவியியல் பிரதேசங்கள் அல்ல.மன நிலைகளே.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தகப்பன்

ஜென் மாஸ்டர் ஹாக்யுன் அவர்களினால் கவரப்பட்ட ஒரு வியாபாரி அவருக்கு அவ்வப்போது நிதிஉதவிகளையும் பரிசுகளையும் கேட்காமலே கொடுத்து வந்தான்.அவனுக்கு ஒரு பெண் இருந்தாள்.அவள் அவ்வீட்டு வேலைக்காரனை குடும்பத்தினருக்குத் தெரியாமல் காதலித்து ஒரு குழந்தையும் பெற்றுவிட்டாள்.குழந்தையின் தகப்பன் யார் என்று கோபத்துடன் வியாபாரி கேட்டபோது பயந்துபோன அந்தப்பெண் ஹாக்யுனைக் கை காட்டிவிட்டாள்.அதிர்ந்துபோன வியாபாரி,கோபத்துடன் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு ஹாக்யுனிடம் சென்று அவரை எவ்வளவு தரக்குறைவாகப் பேசமுடியுமோ,அவ்வளவு பேசிவிட்டு,குழந்தையை அவர் மடியில் விட்டுவிட்டு வந்துவிட்டான்.ஹாக்யுன் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை.பதில் எதுவும் பேசவுமில்லை.அவர் அந்தக் குழந்தையை எடுத்து தன குழந்தைபோலவே கொஞ்சினார்.இதைப் பார்த்த ஊர் மக்களும் ஹாக்யுன் தவறு செய்திருப்பார் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.இப்போது ஊரில் யாரும் அவரை மதிப்பதில்லை ஆனால்அது அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஒரு நாள் கடுங்குளிரில் குழந்தையைத் தோளில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று உணவுக்கு பிச்சை  எடுத்துக் கொண்டிருந்தார்.அவர் அந்த  வியாபாரியின் வீட்டு வழியே சென்று கொண்டிருந்தபோது இக்காட்சியை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த வியாபாரியின் மகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.உடனே தன தந்தையிடம் சென்று நடந்த உண்மைகளை அப்படியே சொல்லிவிட்டாள்.வியாபாரிக்கோ மிகுந்த வருத்தம் ஏற்பட்டது ஒன்றும் அறியாத ஒரு ஞானியை அவதூறுக்கு உள்ளாக்கி  விட்டோமே என்று கதறினான்.நேரே அவர் இருக்கும் இடம் சென்று அவர் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து,குழந்தையை அவர் கையிலிருந்து வாங்கிக் கொண்டான்.ஹாக்யுன் கேட்டார்,''என்ன,குழந்தைக்கு வேறொரு தகப்பன் கிடைத்து விட்டானா?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முறை என்ன?

ஒருவன் தன நாய்க்குக் குணம் இல்லை என்று மிருக வைத்தியர் ஒருவரை அணுகினான்.அவரும் பரிசோதித்துவிட்டு,''இந்த மருந்தை ஒரு வாரம் கொடுத்து வாருங்கள் சரியாகிவிடும்.இந்த மருந்து இனிப்பாய் இருக்கும்.அதனால் நாய் அதை விரும்பிக் குடிக்கும்,''என்றார்.வீட்டுக்கு  சென்றவுடன்,அவன்நாயை தன முழங்கால்களுக்கு இடையில் அழுத்திப் பிடித்துக் கொண்டு மருந்தை அதன் தொண்டைக்குள் ஊற்ற முயற்சி செய்கையில் அது திமிறி ஓடி விட்டது.மருந்தும் கொட்டிவிட்டது.சிறிது நேரம் கழித்து பார்க்கையில் அந்த நாய் சிந்திய மருந்தை நக்கிக் கொண்டிருந்தது.இப்போதுதான் அவருக்குப் புரிந்தது.நாய் மருந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அதை வம்படியாக ஊற்றிய முறைக்கு தான் எதிர்ப்பாய் இருந்திருக்கிறது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சொர்க்கம் நரகம்

படைத் தளபதி ஒருவன் ஜென் ஞானி ஒருவரிடம்,''அய்யா,எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்.உண்மையில் சொர்க்கம் நரகம் இருக்கிறதா?''என்று கேட்டான். ஞானி அவனை ஏறெடுத்துப்  பார்த்து,''நீ யார்?''என்று கேட்க,தான் ஒரு படைத்தளபதி என்று கூறினான்.உடனே ஞானி,''நீ ஒரு முட்டாள்.நீயெல்லாம் படைத் தளபதியாய் இருப்பதற்குத் தகுதி அற்றவன்.''என்று கூறினார்.தளபதிக்கு பயங்கரமான கோபம்.உடனே வாளைஉருவினான்.ஞானி சிரித்துக்கொண்டே,''இதோ நரகத்தின் வாசல் திறந்து விட்டது,''என்றார்.அதிர்ச்சி அடைந்த தளபதி வாளை உரையிலிட்டவாறே ,''அய்யா,என்னை மன்னிக்க வேண்டும்.''என்றான். ஞானி,''இப்போது சொர்க்கத்தின்  வாசல்  திறந்து  விட்டது.''என்றார்.சந்தேகம் தீர்ந்த தளபதி ஞானியை வணங்கி விடை பெற்றான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சோம்பேறி

யாராவது நம்மைப் பார்த்து,'சோம்பேறி'என்று சொன்னால் நாம் அதனால் பாதிக்கப் படுகிறோம்.''நான் சோம்பேறி கிடையாது,''என்பது நமக்குத்  தெளிவாகவும் உறுதியாகவும் தெரிந்தால் பிறர் நம்மைப் பார்த்து சோம்பேறி  என்று சொல்வது வெறும் பிதற்றல் ஆகத் தெரியும்.அது நம்மை ஒருபோதும் பாதிக்காது.அப்படி பிதற்றுகிறவனையும் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.அப்படியானால் சோம்பேறி என்று சொன்னவுடனே  சிலர் பாதிப்படைகிறார்களே,அது ஏன்?சோம்பேறி என்று ஒருவர் சொன்னதை திட்டப்பட்டவர் ஏற்றுக் கொள்ளும் போதுதான் அவருக்கு கோபம் வருகிறது.இன்னும் சொல்லப்போனால்,பிறர்,சோம்பேறி என்று திட்டும்போது,சிலர் அந்த திட்டலுக்கு வருந்துவதைவிடத் தான் சோம்பேறி என்பதை மற்றவர் அறிந்து கொண்டனரே,அந்த உண்மையை எல்லோர் முன்னாலும் சொல்லி விட்டனரே என்பதற்காகவே வருந்துகின்றனர். யார் என்ன சொன்னாலும் நம்மைப் பற்றி நமக்கு தெளிவான கருத்து இருக்கும் வரை அது நம்மை பாதிக்காது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

களைப்பு

ஜென் மாஸ்டர் ஹாக்யுன் ஒரு முறை இரண்டு சாதுக்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.முதலில் ஒரு சாது தான் சுமந்து வந்த சுமையை ஹாக்யுனைக் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டார்.அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் அதை தன சுமையுடன் சேர்த்து சுமந்து வந்தார்.ஆனால் அவர் முகத்திலிருந்த மலர்ச்சி கொஞ்சமும் குறையவில்லை.அவர் உல்லாசமாக வருவதைப் பார்த்தஇன்னொரு சாதுவும் தனக்கு உடல் நலம் இல்லாதிருப்பதாகவும் தன்னுடைய சுமையையும் அவர் எடுத்து வர வேண்டும் என்று வேண்டினார்.இப்போதும் ஹாக்யுன் மறுப்பேதுமின்றி அதைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சுமந்து வந்தார்.மூன்று பெரும் தொடர்ந்து பயணிக்கையில்,வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டதால் அவர்கள் படகில் செல்ல நேர்ந்தது.படகில் ஏறியதும் களைப்பு மிகுதியால் அவர் உடனேஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார். திரும்ப அவர் விழித்தபோதுஉடனடியாக அவருக்கு பயணத்தைப் பற்றிய ஞாபகம் வரவில்லை. ஒரு துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து,சுற்றிலும் பார்க்கையில்,உடன் வந்த இரு துறவிகளும்,படகோட்டியும்,முழுக்க வாந்தி எடுத்த நிலையில் இருந்தனர் அவர்கள் இவரை விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.பின்னர்தான் அவர் நடந்தது என்ன என்பதைத் தெரிந்து கொண்டார்.அவர் தூங்கிய சிறிது நேரத்தில் ஒரு பெரும் புயல் வந்து படகைப் பயங்கரமாக ஆட்டியுள்ளது. அதன் பாதிப்பால் தாங்க முடியாத அளவிற்கு படகோட்டியும் இரு சாதுக்களும் வாந்தி எடுத்து உடல் நலம் பாதிக்கப் பட்டனர்.ஆனால் ஹாக்யுன் மிகுந்த களைப்பில் அயர்ந்து  தூங்கிக்  கொண்டிருந்ததால்  அவருக்கு எந்த பாதிப்பும்  ஏற்படவில்லை .

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

லாபம்

தாயின் தளரா உழைப்பினால் படித்துநல்ல வேளையில் அமர்ந்த ஒருவன்,தன முதல் மாத சம்பளத்தில் தன தாய்க்கு ஆயிரம் ரூபாய்க்கு ஒரு நல்ல சேலை வாங்கி ஊருக்கு அனுப்பிவைத்தான்.அதன் உண்மையான விலை தெரிந்தால் ,அம்மா வருத்தப்படுவார்களே என்று கருதி அதன் விலை இருநூறு ரூபாய் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.அடுத்த வாரம் அம்மாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.''நீ அனுப்பிய சேலை நன்றாக இருந்தது .அதைப் பார்த்த பக்கத்து வீட்டு அக்கா ஐநூறு ரூபாய் கொடுத்துவாங்கிக் கொண்டார்கள்.இன்னும் பல பேர் இதே மாதி சேலையை ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராய் இருக்கிறார்கள்.இதில் நல்ல லாபம் கிடைக்கும்போலத் தெரிகிறது.எனவே உடனே அதே மாதிரி சேலைகள் பத்து வாங்கி அனுப்பவும்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அதனால் என்ன?

ஒருவர் தன ஊரிலேயே பெரிய பணக்காரராயிருந்த ஒருவரைப் பார்க்கப் போனார்.அப்போது அவர் எதிரிலேயே வந்தார்.அவர் ஒரு பழைய வேஷ்டிஒரு கிழிந்த துண்டுடனும் இருந்தார்.இவருக்கோ பொறுக்க முடியவில்லை ''அய்யா,நீங்கள் இந்த ஊரில் பெரும் பணக்காரர்.நீங்கள் இந்த மாதிரி உடை உடுக்கலாமா?''என்று கேட்டார்.அவர் சொன்னார்,''தம்பி,அதனால் என்ன?இது நம்ம ஊர் தானே?எல்லோருக்கும் என்னைத் தெரியுமே?இவர்களிடம் நான் பகட்டாய் இருக்க வேண்டிய அவசியம் என்ன?''
சில நாட்கள் கழித்து அதே நபர் பக்கத்திலிருந்த ஒரு பெரிய நகரத்திற்கு ஒரு வேலையாய் சென்றார்.அங்கும் அவர் அந்த பணக்காரரை சந்திக்க நேர்ந்தது. அப்போதும் அவர் பழைய வேஷ்டி,கிழிந்த துண்டுடனே காணப்பட்டார். ''என்ன அய்யா,நம்ம ஊரில தான் எல்லோரையும் தெரியும் என்று பழைய துணி உடுத்தியிருந்தீர்கள்.இந்த நகரத்திற்கு வரும்போதாவது நல்ல உடைகளை உடுத்தி வந்திருக்கலாமே?''என்று கேட்டபோது,பணக்காரர் சொன்னார்,''அதனால் என்ன,தம்பி,இந்த ஊரில் யாருக்கும் நம்மைத் தெரியாதே?எந்த உடை உடுத்தினால் என்ன?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஓஷோ சொல்கிறார்

எப்படி கண்ணில் பட்ட மணல் இந்த அழகிய உலகைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல சிறிய சந்தேகம் அல்லது தயக்கம் இந்த வாழ்வின் பெருமை,அழகு,உங்கள் பலம்,உங்களது மலரும் தன்மை அனைத்தையும் மறைத்துவிடும்.
**********
பொதுவாக மனிதர்கள் கோபம்,வெறுப்பு போன்றவைகளை தங்களிடம் சேர்த்து வைத்துக்கொண்டு,அந்தக் கெடுதல் உணர்வுகளை வெளியேற்ற தகுந்த சந்தர்ப்பத்தை தேடுகிறார்கள்.ஏதாவது சிறு காரணம் போதும்.அவை வெளிப்பட்டுவிடும்.
**********
செயல்பாட்டில் ஒவ்வொரு மனிதனும் ஒரு குழுவுக்குத் தலைவனாக இருக்கவே  விரும்புவான்.ஒவ்வொருவரும் அடுத்தவரை அதிகாரம் செய்யவும் அடுத்தவரை வழி நடத்திச் செல்லவும் ஆசைப் படுவான்.அவன் மக்களுக்கு சொல்லும் அறிவுரையில் உண்மை அல்லது நன்மை  இருக்கிறதா என்பது பற்றி  அவனுக்கு அக்கறை கிடையாது.இங்கு எது முக்கியம் எனில்,அப்படி எடுத்து சொல்வதால் அவனுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது.ஏனெனில் அவனை பிறர் புத்திசாலி என்று மதிக்கிறார்கள்,என்று தனக்குத்தானே எண்ணிக் கொள்கிறான்.பல பேர் அவனை அண்ணாந்து பார்ப்பதில் அவனுக்கு ஒரு ஆத்ம திருப்தி.
**********
ஒரு மனிதர் சாவைக் கண்டு அஞ்சாதபோது,அவரை ஒரு செயலைச் செய்யச் சொல்லி வற்புறுத்த முடியாது.உங்களுடையஅச்ச உணர்வுதான் உங்களை அடிமையாக்குகிறது.உண்மையில்,நீங்கள,எங்கே மற்றவர்களால் அவமானப்படுத்தப் பட்டு விடுவோமோ என்ற அச்சத்தால் தான் மற்றவர்களை அடிமையாக்க  முயற்சி செய்கிறீர்கள்.ஒருவர் தைரியமாகஇருந்தால் யாரையும் அச்சப்படுத்தவோ ,மற்றவர்களால் அச்சுறுத்தப்படவோ மாட்டார்கள்.
**********
அமைதியாய் இருங்கள்.ஆனால் அந்த அமைதியை ஒரு சோகமாக ஆக்கி விடாதீர்கள்.அதை ஒரு சிரிப்பாகவும்,நடனமாகவும் இருக்க விடுங்கள்.அந்த அமைதியானது குழந்தைத் தன்மையுடன் கூடியதாக இருக்கட்டும்.ஆற்றல் நிரம்பி வழிவதாக இருக்கட்டும்.அது செத்துப்போன சவமாக இருக்க வேண்டாம்.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அண்ணலின் அன்பு

ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் தன நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது ஒரு வயதான பெண்மணி அண்ணலைப் பார்க்க வெகு தூரத்திலிருந்து வந்திருந்தார்.அண்ணலை தரிசித்தபின் தான் கொண்டு வந்திருந்த திராட்சைப் பழத்தை அவரிடம் அன்போடு கொடுத்தார் அந்த மூதாட்டி.அண்ணலும் சிரித்துக் கொண்டு அந்த மூதாட்டி முன்னிலையிலேயே அவர் கொடுத்த பழம் முழுவதையும் சாப்பிட்டு விட்டார்.மூதாட்டி மிகுந்த மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்.அவர் சென்றபின் நண்பர்கள் கேட்டனர்,''வழக்கமாக யார் எது கொண்டு வந்தாலும் எல்லோருக்கும் கொடுத்து சாப்பிடுவீர்களே?இன்று என்ன பழம் மிக ருசியாக இருந்ததோ?நீங்களே முழுவதும் சாப்பிட்டுவிட்டீர்களே?''அண்ணல் சொன்னார்,''அந்தப் பெண்மணி கொடுத்த பழம் ஒன்றை வாயில் போட்டேன். அது மிகப் புளிப்பாக இருந்தது.உங்களிடம் கொடுத்தால் மிகப் புளிப்பாயிருக்கிறது என்று யாராவது  சொல்லி விடுவீர்கள்.உடனே அந்த மூதாட்டியின் மனம் மிகவும் புண்படும்.அதனால் சிரித்துக் கொண்டே நான் முழுவதையும் சாப்பிட்டேன் அந்த மூதாட்டி முகத்திலே எவ்வளவு மகிழ்ச்சியுடன் சென்றார்கள்?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மனச்சோர்வு

சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம்.எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும்.யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வரும்.மனதுக்குள் தோற்றுவிட்டதுபோல ஒரு வெறுமை வரும்.அப்படியானால்  உங்களுக்கு மனச்சோர்வு என்று அர்த்தம்.
நீங்கள் விரும்பியபடி யாரோ நடக்கவில்லை.எதிர்பார்த்தது எதுவோ நிகழவில்லை.ஆசைப்படி வாழ்க்கை அமையவில்லை.உங்களுக்குக் கிடைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறீர்கள்.அதை எதிர்க்கிறீர்கள்.
நீங்கள்மனச்சோர்வுடன் இருக்கும்போது மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொளவேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்.உங்களுடன் உட்கார்ந்து மற்றவர்களும் அழ வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்.இரக்கத்தை யாசிக்கிறீர்கள்.
உங்கள் விருப்பப்படி உலகம் ஏன் நடக்க வேண்டும்?நீங்கள் விரும்பும்படி தங்களை மற்றவர்கள் ஏன் ஏய்த்துக் கொள்ள  வேண்டும்? அகங்காரம் எங்கிருந்தாலும் அதற்கு அடி விழத்தான் செய்யும்.அப்போது மனச்சோர்வு முளைத்து எழும்.அது உங்களைப்பற்றிய நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும்.
வெளியே இருந்து ஆயுதம் கொண்டு தாக்குபவர்களைவிட உள்ளிருந்துகொண்டு உங்களைக் கீறிக் கிழித்து குடைந்து உங்களை உபயோகம் இல்லாமல் அழித்துவிடும்.மனச்சோர்வு ஒரு விஷ ஆயுதம்.
மனச்சோர்வு வரும்போதெல்லாம் மற்றவர்கள் மீது எரிச்சல் கொள்வதை நிறுத்திவிட்டு,அதற்குக் காரணம் நீங்கள் தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.உலகின் மீது கோபம் கொள்ளாதீர்கள்.உங்கள் குறைகளை உணர்ந்து,மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு என்று உணருங்கள்.வழியும் வேதனையும்  நிறைந்த அனுபவங்களையே வாழ்க்கைப் பாடமாக ஏற்று உங்களைப் பக்குவப் படுத்திக் கொள்ளுங்கள்.மாற்றுக் கருத்துக்களை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.அவற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி என்று திட்டமிடுங்கள்.கிடைக்கும் அனுபவங்களை உங்களுக்குப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இசை எனும் தவம்

ஒரு நவாபின் அரண்மனையில் பல இளம் பாடகர்கள் இருந்தனர்.அரசவைக்கு  வந்த சிறந்த பாடகன் ஒருவன் தான் பட சில விதிகளைச் சொன்னான்.அவை கடுமையாயிருந்தன.அதாவது அவன் பாடும்போது யாரும் தலையை அசைக்கக் கூடாது.அசைந்தால் அவர்களின் தலைதுண்டிக்கப் பட வேண்டும்.நவாபும் விதிமுறைகளுக்கு ஒத்துக் கொண்டு,இசையைக் கேட்க விரும்புபவர்கள் இந்தக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டால் வரலாம் என அறிவித்தான்.பல ஆயிரம் பேர் அந்த பாடகனின் இசையைக் கேட்கக் கூடினர்.விதிகளை நிறைவேற்றும் பொருட்டு நவாப் உருவிய வாளுடன் வீரர்களை ஆங்காங்கு நிறுத்தினார்.ஆனால் தலையை அசைப்பவர்களை நிகழ்ச்சியின் இடையில் வெட்டிக்கொண்டு இருந்தால் ,பாடகனுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதால்,தலை அசைப்பவர்களை  அடையாளம் காணச் சொன்னான்.இவ்வளவு கடுமையான ஏற்பாடுகளுக்குப் பின்னும் பத்து பேர் தலை அசைத்துவிட்டனர்.நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் தலையை வெட்ட அரசன் ஏற்பாடு செய்தான்.அப்போது அந்த பாடகன் சொன்னான்,''இந்த பத்து பேர் மட்டுமே என் பாடலைக் கேட்கத் தகுதி உள்ளவர்கள்.மற்றவர்கள் மரணத்திற்குப் பயந்து என் பாடலைக் கவனிக்கவில்லை.அவர்கள் கவனம் அவர்களின் உயிர் மீதுதான்.அவர்களுக்கு இசை தேவையில்லை.நான் பாடிய பாடல் இந்த பத்து பேருக்கு மட்டும் தான்.அவர்கள் என் பாடலின் இனிமையில் தம்மை மறந்து விட்டார்கள்.எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி பாடலின் இனிமை அவர்களது இதயங்களைத் தொட்டிருக்கிறது..மீதி இரவும் நான் அவர்களுக்காக பாடுவேன்.எனக்குப் பரிசு எதுவும்  தேவையில்லை.இசையைக் கேட்கும் உண்மையான மனிதர்களைக் கண்டுபிடித்ததே சரியான பரிசு.இவர்களுக்கு பரிசு கொடுக்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன்.ஏனெனில் இசை என்பது ஒரு தவம் என உணர்ந்தவர்கள் இவர்கள்''அந்த பத்துப் பேரைப் பொருத்தமட்டில் இசையைக் கேட்கும்போது அவர்களே  மறைந்து  போய்விட்டார்கள்..இசைமட்டுமே  அங்கு  இருந்தது .

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சில தகவல்கள்

ஒரு கிலோ பஞ்சை 660 கிலோ மீட்டர் நீளத்திற்கு நூலாகத் திரிக்க முடியும்.
**********
இறை இல்லமான காபா ஒரு கருங்கல் கட்டிடம்.33 முழ நீளமும்,22 முழ அகலமும் உள்ள இந்தக் கட்டிடம் உயர்ந்த கறுப்புத் துணியினால் போர்த்தப்பட்டிருக்கிறது.முதல் மனிதரான ஆதம் இறைவனை வணங்க இந்த ஆலயத்தைக் கட்டினார்.
**********
உலகில் அதிகமாக உபயோகப் படுத்தப்படும் காய்கறி,வெங்காயம்.
**********
எஸ்கிமோ என்றால் பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள் என்று பொருள்.அதனால் அவர்கள் தங்களை இனுட் (inuit) என்று சொல்லிக் கொள்கிறார்கள்.அதன் பொருள்,'உண்மையான மனிதர்கள்'.
**********
கிரேக்க புராணப்படி,பண்டோரா என்பவள் தான் முதல் பெண்மணி.ஜீயஸ் கடவுள் ஆணின் கொட்டத்தை அடக்க அவளைப் படைத்தார்.அவர் அவளிடம் ஒரு பெட்டியைக் கொடுத்து,''இந்தப் பெட்டிக்குள் உனக்கு தேவையான அத்தனை ஆயுதங்களும் இருக்கின்றன.அதைத் திறந்து பார்க்காதே.எப்போதாவது தேவைப்படும்,''என்றார்.உலகுக்கு வந்தவுடன் பெண்களுக்கே உரிய ஆர்வத்தில் அவள் அதைத் திறக்கிறாள்.உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் முதலில் அந்தப் பெட்டியில் தான் இருந்தன.அதனைத் திறந்தவுடன் அத்தனையும் வெளி வந்து விட்டன.ஒன்றே ஒன்று மட்டும் பெட்டிக்குள் ஒரு மூலையில் ஒட்டி ஒளிந்து கொண்டது.அது நம்பிக்கை.
'இந்தத் துன்பத்தை நாம் கடப்போம்.நல்லது நடக்கும்,'என்கிற நம்பிக்கை தான் நம்மை எந்தப் புயலிலும் வலி நடத்தி செல்லும் .
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மருத்துவம்

ஒரு மளிகைக் கடைக்காரருக்கு,ஒரு டாக்டர் பலசரக்கு வாங்கியதற்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது.தொலைபேசி மூலம்தொடர்பு கொண்ட போதெல்லாம்,டாக்டர் இல்லை என்ற பதிலே வந்தது.இறுதியில் தன கடை ஆள் ஒருவரை நேரில் அனுப்பி வைத்தார்.அவன் சென்று ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தான்.அவன் முகம் சோர்வாயிருந்தது.கடைக்காரர் போய் வந்த விபரம் கேட்டார்.கடை ஆள் சொன்னான்,''என்ன சொன்னார்!என் நாக்கை நீட்ட சொன்னார்.!கை நாடியைப் பிடித்துப் பார்த்தார்!எனக்கு உடல்நிலை சரியில்லை என்றார்!இன்னும் ஏழெட்டு வாரங்களுக்கு இருக்கும் இடத்தை விட்டுஅசையாதே,ஓடி ஆடி வேலை செய்யாதே என்று எச்சரித்து அனுப்பினார்''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன்மொழிகள்-13

பழக்கிய யானைகளைக் கொண்டு காட்டு யானைகளைப் பிடிப்பதுபோல  பணத்தைப் போட்டுத்தான் பணத்தை ஈட்ட வேண்டும்.
**********
தன்னிடம் குவிந்த செல்வத்தை,தானும் அனுபவியாமலும்,நற்காரியங்களுக்கு செலவிடாமலும் இருப்பவன் சுகம் பெற மாட்டான்.அவன் பணம் படைத்த முட்டாள்.
**********
சிங்கத்துக்கு முடிசூட்டு விழாவோ,சடங்குகளோ விலங்குகள் செய்து வைக்கவில்லை.தன்னுடைய பராக்கிரமத்தால் அல்லவோ சிங்கம் அரச பதவி வகிக்கிறது?
**********
பலசாலிக்கு பாரம் என்று ஒன்றுஇல்லை.
முயற்சி உடையவர்களுக்கு தூரம் என ஒன்று இல்லை.
கல்வியாளர்களுக்கு அந்நிய நாடு என ஒன்று இல்லை.
அன்போடு பேசுபவர்களுக்கு அந்நியன் என ஒருவரும் இல்லை.
**********
சமய சந்தர்ப்பம் தெரியாமல் பிருகஸ்பதியே பேசினாலும் அவன் வெகுமதி  பெறாமல் போவது மட்டும் அல்லாமல் வெறுப்பையும் தேடிக் கொள்கிறான்.
**********
குதிரை,ஆயுதம்,வீணை,சொல்,புத்தகம்,ஆண்,பெண் இவை அனைத்தும் பயன்படுவதும்,பயன்படாமல் போவதும் உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து உள்ளது.
**********
பிரம்மாவே பயமுறுத்தினாலும் தைரியசாலி தைரியத்தைக் கைவிடுவதில்லை.கோடை கால வெயில் குட்டையைததான் வற்றச் செய்யும்.சிந்து நதியோ,எப்போதும் பெருகி ஓடிக் கொண்டேயிருக்கும்.
**********
நெருக்கடி இல்லாத சாதாரண காலத்தில் எல்லோரும் அறிவாளிகளாக இருக்க முடியும்.
**********
செல்வம் சேர்ந்தவனிடம் அகம்பாவம் சேரும்.உணர்ச்சி வசப்படுபவன் ஆபத்தில் சிக்கிக் கொள்வான்.
**********
அரசனின் அருகில் இருந்து ஊழியம் செய்பவன்,நல்ல குடும்பத்தில் பிறக்காதவனாகவோ,மூடனாகவோ,கருணை இல்லாதவனாகவோ இருந்தாலும் அவனை எல்லோரும் மதிக்கிறார்கள்.
**********
பணத்தைசெர்ப்பதிலும் துன்பம்;சேர்த்த பணத்தைக் காப்பதிலும் துன்பம்;அதை இழந்து விட்டாலும் துன்பம்;செலவிட்டு விட்டாலும் துன்பம்.எப்போது பார்த்தாலும் பணத்தால் துன்பமே உண்டாகிறது.
**********
                                                           --பஞ்ச தந்திரக் கதைகள் நூலிலிருந்து

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சமன் நிலை

ஒரு அரசன் தன நான்கு முக்கிய அமைச்சர்களைக் கூப்பிட்டு அவர்களில் ஒருவரை முதல் அமைச்சராக நியமிக்கவிருப்பதாகவும் அதற்கு அவர் வைக்கும் தேர்வில் தேற வேண்டும் என்றும் கூறினார்.தேர்வு இதுதான் கணித முறையில் அமைக்கப்பட்ட ஒரு பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம்பற்றிய பல புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர்.ஒருவர் மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.மறுநாள் காலை அரசவையில் பூட்டு கொண்டு வரப்பட்டது.பூட்டின் அமைப்பு எல்லோருடைய படபடப்பையும் அதிகரித்தது.ஓலைச்சுவடிகளைக் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்கள் அவற்றை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள்.ஆனால் அப்பூட்டைத் திறக்கும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை.இரவில் நன்கு தூங்கிய அமைச்ச மெதுவாக எழுந்து வந்து பூட்டை நன்கு ஆராய்ந்தார்.கூர்ந்து கவனித்ததில் பூட்டு பூட்டப்படவே இல்லை  என்பது அவருக்குப் புலனாயிற்று.சாவியே இல்லாமல் எந்த கணித சூத்திரமும் இல்லாமல் பூட்டை எளிதாக அவர் திறக்க, மன்னர் அவரையே முதல் அமைச்சர் ஆக்கினார்.
பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால்,முதலில் பிரச்சினை என்னவென்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்சினையைப் புரிந்து கொள்ள, மனம் சமன் நிலையில் இருக்க வேண்டும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மரியாதைக்குறைவு

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் யாரையுமே மரியாதைக் குறைவாய்ப் பேசி அறியாதவர்.பாடல்களை கூட சற்று மரியாதைக் குறைவான வார்த்தைகள் வந்துவிட்டால் அதை மாற்ற வழி இருக்கிறதா என்று பார்ப்பார்.கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்துக்கு,''யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க.''என்று ஒரு பாடலில் எழுதியிருந்தார். மெல்லிசை மன்னர் ,''என்ன கவிஞரே,இது மரியாதைக் குறைவாய் இருக்கிறதே,கொஞ்சம் மாற்றக்கூடாதா?யாரை நம்பி நான் பிறந்தேன்,போங்கய்யா போங்க,என்று எழுதக்கூடாதா?''என்று கேட்டார்.அதற்கு கவிஞர் கிண்டலாகச் சொன்னார்,''டேய்,நீ ரொம்ப அடக்கமானவன்.இது எனக்கு மட்டுமல்ல.ஊருக்கே தெரியும்.விஜயவாடா என்கிற ஊரைக்கூட விஜயவாங்க  என்று  சொல்கிற  ஆள்  நீ.பேசாம   நான் சொல்கிற  பல்லவியை  அப்படியே  போடு .'',

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

திருப்தியற்ற மனம்

இளம் பெண்மணி ஒருத்தி தன குழந்தையுடன் கடற்கரைக்குப் போயிருந்தாள்.கடல் அலைகளிலே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஒரு அலை திடீரென இழுத்துச் சென்று விட்டது.''ஐயையோ,என் குழந்தை போய்விட்டதே,''என்று அந்தப் பெண் கண்ணீர் விட்டு அழுதாள்.அந்தப் பண்ணின் அழுகை  உருக்கமானதாக இருந்ததால்,கடல் தெய்வம் குழந்தையை மீண்டும் உயிருடன் கரைக்கு அனுப்பியது.தன குழந்தைக்கு ஏதும் ஆகாதது கண்டு மகிழ்ச்சியில் அவள் திக்குமுக்காடி விட்டாள்.குழந்தையின் கன்னங்களில் மாறிமாறி முத்தமிட்டவள்,எதேச்சையாகக்  குழந்தையின் காலைக் கவனித்தாள்.குழந்தையின் ஒரு காலில் தான் செருப்பிருந்தது.இன்னொரு காலில் இருந்த செருப்பைக் காணவில்லை.உடனே அந்தப் பெண்ணின் மகிழ்ச்சி பறந்து விட்டது.''ஐயையோ,செருப்பு போய்விட்டதே,''என்று அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
இப்படித்தான் பல சமயங்களில் முக்கியம் இல்லாத சமாச்சாரங்கள் நம் மகிழ்ச்சியைப் பறித்து விடுகின்றன.எதிலும் திருப்து அடையாதவர்களுக்கு மகிழ்ச்சி ஏது?
                                                            ----சுவாமி சுகபோதானந்தா.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கரும்புள்ளிகள்

மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் எல்லை நாம் வரையறுத்துக் கொள்வதில் தான் இருக்கிறது.எல்லைகளை நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் விரிவடையச்செய்து கொண்டே போனால்,எந்த மகிழ்ச்சியும் நமக்கு நிம்மதி தரக்கூடியதாக இருக்காது.ஓட்டை வாளியில் தண்ணீர் ஊற்றினால் எப்படி நிற்காதோ அது மாதிரி திருப்தியற்ற  மனம் உடையவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி வந்தாலும் அது தங்காது.அவர்களின் மனம் சோக மயமாகவே இருக்கும்.தன்னிடம் இல்லாததை நினைத்தேதுன்பப்படும்.வாளியில் உள்ள ஓட்டையை அடைத்து விட்டால் தண்ணீர் ஊற்றியதும் நிரம்பி விடுவதுபோல மனதில் இருக்கும் கரும் புள்ளிகளை அழித்து விட்டால் மகிழ்ச்சி நிரம்பும்.''இது கிடைத்தால் தான் என் மனம் மகிழ்ச்சி அடையும்,''என்று மண்டைக்குள் சில விஷயங்களை நம் மனது ஏற்றிக் கொள்கிறது.அவைதான் மனதின் கரும்புள்ளிகள்.
                                 --சுவாமி சுகபோதானந்தா.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தற்புகழ்ச்சி

ஏதேனும் ஒரு சூழ்நிலையில் தன்னைப் பற்றி ஒருவர் கூற நேரிடும்போது,அதற்கான கட்டாயம் நேரும்போது தற்புகழ்ச்சி குற்றமாகாது.  மற்ற நேரங்களில் ஒருவர் எப்போதும் தன்னுடைய சாதனைகள் என்று ஏதாவது பேசிக்கொண்டே இருந்தால் யாரும் அதை ரசிக்க மாட்டார்கள்.
நம் கல்வியாற்றலை அறியாதவரிடம் நம்மைப் பற்றிச் சொன்னாலும்  அதைப் புரிந்து கொள்ளவா போகிறார்கள்?நாம் சாதாரணமாகப் பேசுவதிலேயே நம் கல்வி ஆற்றல் வெளி வருமே?பின் ஏன் தற்பெருமை பேச வேண்டும்?
நம் எதிரி நம் பெருமையை உணர்ந்து தானே தூற்றுகிறான்?பொறாமையில் தானே பழிக்கிறான்?பின் ஏன் தற்பெருமை பேசி அவனுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்?
நம்முடைய செயல்கள்,நம் உழைப்பு,நம் ஆர்வம்,நம் இலக்கு ஆகியவை நம்மைப் பற்றிப் புரிந்து கொள்ளாதவர் களுக்கும்  காலப்போக்கில் புரிய வைத்துவிடுகின்றன.எனவே தற்பெருமை தேவையில்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நிறம்

டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் ஐரோப்பியர்கள் ஒரு முறை கேட்டார்கள்,''எங்கள் ஊரில் மக்கள் ஒன்று,கருப்பாக இருக்கிறார்கள் அல்லது,வெள்ளையாக இருக்கிறார்கள்.ஆனால் உங்கள் ஊரில் வெள்ளை, பழுப்பு,பழுப்பு கலந்த சிவப்பு,மஞ்சள்,வெளிர் மஞ்சள்,கருப்பு என்று பல்வேறு நிறங்களில் இருக்கிறார்களே,அது ஏன்?''ராதாகிருஷ்ணன் சட்டென்று பதில் சொன்னார்,''கழுதைகள் ஒரே நிறத்தில் இருக்கின்றன.குதிரைகள் பல்வேறு நிறங்களில் இருக்கின்றன..''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இரு நண்பர்கள்

இரண்டு நண்பர்கள்  ஒரு சாலையின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரில் ஒரு பை கிடந்தது அதை ஒருவன் எடுத்துப் பார்த்ததில் பணம் இருந்தது.மற்றவன் சொன்னான்,''நமக்கு நல்ல யோகம் இன்று எதிர் பாராத  விதமாக நமக்குப் பணம் கிடைத்துள்ளது.''முதல்வன் சொன்னான்,''நமக்கு என்று சொல்லாதே.எனக்கு என்று சொல் நான் தானே பையை எடுத்தேன்.''சிறிது தூரம் சென்றவுடன் ஒருவன் ஒருவன் ஒரு காவலரைக் கூட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான்.அவன் தான் பையின் சொந்தக்காரன் என்பதை அறிந்து கொண்டு,''நமக்கு பிரச்சினை வரும்போல் இருக்கிறதே,''என்றான் பையை எடுத்தவன் நண்பன் சொன்னான்,''நமக்கு என்று சொல்லாதே.உனக்கு என்று சொல்,''
பிறர்க்கு  உதவி  செய்யாதவர்கள் பிறர் உதவியை எதிர் பார்க்க முடியாது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

என்ன சந்தேகம்?

நூறு வயது முடிந்த ஒருவருக்கு பாராட்டு விழா சிறப்பாக நடந்தது.விழாவுக்கு வந்திருந்த ஒரு செய்தித் தாளின் நிருபர் அவரிடம் நூறு வயது வரை உற்சாகத்துடனும்,உடல் நலத்துடனும் அவர் இருப்பதற்கான காரணங்களைக் கேட்டுக் குறிப்பு எடுத்துக் கொண்டார்.பிறகு அவரிடம் விடை பெறும்போது,  ''அடுத்த தங்களின் நூற்றியோராவது பிறந்த நாள் விழாவிலும் நான் தங்களை  சந்திப்பேன் என நம்புகிறேன்,''என்றார்.அந்தக் கிழவர் சிரித்துக் கொண்டே சொன்னார்,''தங்களுக்கு இப்போது முப்பது வயது தானே இருக்கும்.அதற்குள் என்ன சந்தேகம் உங்களுக்கு வந்தது,நீங்கள் என்னை அடுத்த வருடம் வந்து பார்ப்பதில்?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ராங் நம்பர்

ஒரு அலுவலக மேலாளர் தன மனைவியிடம் டெலிபோனில்,''இன்றிரவு  நமது வீட்டுக்கு எனது மூன்று நண்பர்களை விருந்து சாப்பிட அழைக்கலாம் என்றிருக்கிறேன்.சமையல் சிறப்பாக இருக்க வேண்டும்.உனக்கு சம்மதம் என்றால் அவர்களை அழைக்கிறேன்,''என்றார்.''ஆஹா!தாராளமாய் அழைத்து வாருங்கள்.இதற்கு என்னைக் கேட்க வேண்டுமா?எனக்கு முழு சம்மதம். வெஜிடேரியனா,நான்வெஜிடேரியனா?சொல்லுங்கள் பாயாசமும் வைத்து விடுகிறேன்,''என்று டெலிபோனில் ஒரு அன்புக்குரல் ஒலித்தது.உடனே மேலாளர்,''சாரி,ராங் நம்பர்,''என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஏற்பாடு

சந்நியாசி ஒருவரைத் தேடி இளைஞன் ஒருவன் வந்தான்.சந்நியாசி அவனைக் கேட்டார்,''இந்த வயதில் ஒரு சந்நியாசியைத்  தேடி வர வேண்டிய அளவுக்கு உனக்கு என்ன பிரச்சினை அப்பா?''இளைஞன் சொன்னான்,''நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.நாளை என் கல்லூரியில் ஒரு மாறு வேடப் போட்டி நடக்கவிருக்கிறது.அதில் சந்நியாசி வேடம் போடலாமென நினைத்து உங்கள் உடைகளை இரவல் வாங்கிச் செல்லலாம் என வந்தேன்.''சந்நியாசி உடனே சொன்னார்,''உடைகள் மட்டும் என்ன?என் தாடியையும் தருகிறேன்.''என்று சொல்லிக்கொண்டே தாடியையும் உருவினார்.அவர் வேறு யாருமல்ல.அந்த இளைஞனின் நண்பன் தான்.தான் சந்நியாசி வேடம் போட  யாரிடமோ அந்த உடைகளை வாங்கிப் போட்டுப்  பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எல்லாம் ஒன்றுதான்.

ஒரு கஞ்சன் தான்சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தான்.தினமும் அந்த இடத்திற்கு சென்று பணத்தை எடுத்துப் பார்த்து மகிழ்ச்சியடைவான் ஆனால் மறந்தும் கூட அதிலிருந்து ஏதேனும் எடுத்து செலவு செய்ய மாட்டான்.அவன் அடிக்கடி அங்கு சென்று வருவதை ஒரு திருடன் கவனித்து ஒரு நாள் அவன் பின்னாலேயே சென்று அவன் பணத்தை புதைத்து வைத்திருக்கும் இடத்தை அறிந்து கொண்டான்.ஒரு நாள் இரவு அங்கு சென்று பணத்தை எல்லாம் எடுத்துச்சென்று விட்டான்.மறுநாள்  கஞ்சன் பார்த்தபோது பணம் காணவில்லை என்றதும்,வாயிலும் வயிற்றிலும் அடித்தக் கொண்டு கதறினான்.அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன்,''நண்பா,வருந்தாதே,பணம் அங்கு இருந்தாலும் நீ அதை செலவிடப் போவதில்லை.எனவே பணம் அங்கே இருந்தாலும் ஒன்றுதான்:இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.ஒன்று செய்.நீ பணம் வைத்த இடத்திலேயே  அந்தப் பணம் இருப்பதாகவே நினைத்துக்கொள்.வீணே வருத்தப்படாதே.''என்றான்.
ஒரு பொருளை உபயோகிக்காவிடில் அது இருந்தாலும் ஒன்றுதான்;இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மன நிம்மதி

ஒரு பெரிய பணக்காரன்.அவனுக்கோ மனதில்  திருப்தியும் அமைதியும் இல்லை.பணத்தால் அடையக்கூடிய சுகமெல்லாம் அடைந்த பின்னும் அவனுக்குள் ஒரு வெற்றிடம்.தன் செல்வமனைத்தையும் ஒரு பெட்டியில் வைத்து அங்கு வந்த ஒரு ஞானியைப்  போய்ப் பார்த்தான்.அவரிடம்,''சுவாமி,இந்த என்னுடைய சொத்து முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள்.எனக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தாருங்கள். ஞானி சிரித்தார்.அடுத்த கணம் அந்தப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட  ஆரம்பித்தார்.செல்வந்தனுக்கோ பயங்கர அதிர்ச்சி.வாழ் நாள் முழுவதும் தேடிய சொத்தை ஒரு போலிச் சாமியாரிடம் கொடுத்து ஏமாந்து போய் விட்டோமே என்ற கவலையுடன் அவரைப் பின் தொடர்ந்து ஓடினான். ஞானி எங்கெங்கோ சுற்றி ஓடி விட்டு மீண்டும் முதலில் இருந்த இடத்துக்கே திரும்ப வந்தார்.பணக்காரனும் மூச்சிரைக்க பின்னாலேய அங்கு வந்து சேர்ந்தான்.ஞானி அந்தப் பெட்டியை அவனிடமே திரும்பக் கொடுத்தார்.அவனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி.பணம் திரும்பக் கிடைத்ததில் நிம்மதி.இப்போது ஞானி அவனிடம் சொன்னார்,''இங்கே நீ வருமுன் இந்த பெட்டி உன்னிடம் தான் இருந்தது.அப்போது அதிலிருந்த செல்வத்தால் உனக்கு மகிழ்ச்சி இல்லை.அதே பெட்டி தான் உன்னிடம் இப்போது இருக்கிறது.ஆனால் உன் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி:நிம்மதி.மகிழ்ச்சியும் நிம்மதியும் வெளியில் இல்லை நம்மிடம் தான் உள்ளது.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கமால்

ஒரு முறை கபீர்,தன மகனிடம்,மாடுகளுக்குத் தீனி வைக்கப் புல் வெட்டிக் கொண்டுவரப் பணித்தார்.போனவன் வெகு நேரமாகியும் திரும்ப வராததால் தேடிச்சென்றார்.புல் வெளி நடுவே அவர் மகன்ஆடிக் கொண்டிருந்தார்.அங்கே சிலு சிலுவெனக்  காற்று வீசிக் கொண்டிருக்க புற்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன.அவற்றுக்கு இணையாக அவர் மகனும் அசைந்தாடிக் கொண்டிருந்தார்.கபீர்,''என்ன செய்து கொண்டிருக்கிறாய்,இங்கே?''என்று வினவ அவரது மகன்,''நான் இங்கே வந்தபோது இந்தப் புற்கள் ஏகாந்தமாக ஆடிக் கொண்டிருந்தன.சட்டென்று ஒரு ஆனந்தம்என்னையும் தொற்றிக் கொண்டது.நானும் அவற்றுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்து விட்டேன்.ஆஹா,என்ன ஆனந்தம் அது!''என்றார்.கபீர்,''புல்லை வெட்டி எடுத்து வரச் சொன்னேனே?''என்று கேட்க,''என்னது?புல்லை வெட்டுவதா?என்னால் ஒருபோதும் முடியாது.ஆனந்தம் எனக்களித்த இவற்றுடன் எனக்கு நெருங்கிய உறவு ஏற்பட்டு விட்டது.என்னால் இவற்றைக் கிள்ளக் கூட முடியாது.''என்றார் மகன்.பிரமித்துப்போன கபீர்,மிகுந்த மகிழ்ச்சியில்,''கமால்''என்றார்.கமால் என்றால் அற்புதம் என்று பொருள்.அதன்பின் அவர் கமால் என்றே அழைக்கப்பட்டார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆலோசனை

நம்மிடம் ஆலோசனை கேட்கப் பலர் வருவார்கள்.அவர்கள் எல்லோருமே நம்மை உயர்வாக மதித்து,நாம் கூறும் ஆலோசனைகளை அப்படியே  எடுத்துக்  கொண்டு அதன் படி செயல்பட வேண்டும் என்ன்ற எண்ணத்துடன் வருவார்கள் என்று நாம் நினைத்தால் அது மாபெரும் தவறு.அவர்களில் பெரும்பாலோர் தாம் எடுத்த முடிவு சரியானதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள வருகிறார்களே தவிர,நம்முடைய ஆலோசனையை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாட அல்ல.அவர்களுடைய சிந்தனையில் என்ன இருக்கிறதோ அதையே நாம் சொன்னால்,''நீங்கள் சொல்வது தான் சரி,''என்பார்கள்.அவர்கள் நினைத்ததற்கு நேர் மாறானஆலோசனையை நாம்  சொன்னால் ,''இவரிடம் போய்க் கேட்டேன் பார்,''என்று மனதில் நினைத்துக் கொண்டு அதன் பின் நம் பக்கம் தலை காட்டக்கூட மாட்டார்கள். எனவே யாராவது ஆலோசனை கேட்டு வந்தால்,அவர்கள் முகக் குறிப்பு அறிந்து,''அட,உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லிவிடப் போகிறேன்,''என்று சொல்லலாம்.அதற்கு மேல் அவர்கள் வற்புறுத்திக் கேட்டால்,நம் கருத்தை சொல்லிவிட்டு,''உங்கள் பிரச்சினைக்கு பல தீர்வுகள் உள்ளன. எனக்குத் தெரிந்ததை நான் சொன்னேன்.நீங்கள் யோசித்து முடிவெடுங்கள்,''என்று சொல்லலாமே தவிர,நான் சொல்வது தான் ஒரே தீர்வு என்ற முறையில் பேசாதிருப்பது நல்லது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

விடுகதை

ஔவையாரை அவமதிக்க நினைத்த கம்பர்,அவரிடம் ஒரு விடுகதை போடும் சாக்கில்,'அடி' என்று அழைக்கிறார்.அது,'ஒரு காலில் நாலிலைப் பந்தலடி'என்பதாகும்.அதாவது,'நாலு இலைகளைப் பந்தலாகவும் ஒரு கம்பத்தை அடிக்காலாகவும் உடையது எது?'என்பது விடுகதை.
ஔவையார் என்ன சாதாரணமான புலவரா?அவர் அதற்கு பதில் சொல்லுமுகத்தான் கம்பரை,'அடா'என்று அழைக்க விரும்பினார்.
எட்டேகால் லட்சணமே எமன் ஏறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே-முட்டமேல்
கூரையில்ல வீடே,குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது?
அவலட்சணமே!எமன் ஏறி வருகின்ற எருமைக்கடாவே!மூதேவியே!கழுதையே!கூரையில்லாகுட்டிசுவரே!
குரங்கே!உன் விடுகதைக்கு பதில்,''ஆரைக்கீரையடா!''என்று கொட்டித் தீர்த்தார்.கம்பர் ஒரு முறை அடி என்று அவமதித்ததற்கு எத்தனை பெரிய அவமதிப்பு?எப்படியோ,அவ்விருவருக்கும் இடையில் இருந்த பிரச்சினை நமக்கு ஒரு நல்ல பாடலைக் கொடுத்துள்ளது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இயல்பாக இரு

ஒரு குழந்தை நாள் முழுக்கக் கீழே விழுந்தாலும்,இயல்பாகவே எழுந்துவிடும். அது கீழே விழுந்ததைப்பற்றியே நினைக்காது.ஆனால்,அதைப்போல நீங்கள் விழுந்தால்,உங்களை மருத்துவ மனையில் தான் சந்திக்க வேண்டிவரும். ஏன்?  ஒரு குழந்தை கீழே விழும்போது அது இயல்பாக விழுகிறது.விழுதலில்  இருந்து சண்டை போட்டு தப்பிக்க நினைப்பதில்லை.அது அதன் போக்கிலேயே விழுகிறது.புவி ஈர்ப்புடன் போராடுவது இல்லை.ஒரு தலையணை எப்படி வெறுமே தரையில் விழுமோ,அப்படியே அது விழுகிறது.ஆனால்,நீங்கள் விழும்போது ஆரம்பத்திலேயே எதிர்க்கிறீர்கள்.உங்களுடைய எல்லா தசைகளும்,ஏன்,உங்கள் எலும்புகள் கூட இறுக்கம் அடைகின்றன.இப்படி இறுக்கமான தசைகள்,நரம்புகள் மற்றும் எலும்புகள் கூட்டாக விழும்போது விரும்பத்தாகாத பல உடைவுகள் உங்கள் உடலிலஎற்படுகின்றன.அதேபோல,ஒரு குடிகாரன் கீழே விழும்போது  பார்த்திருக்கிறீர்களா?அவன் எந்த விதப் போராட்டமும் இல்லாமல், முழுமையாக விழுவான்.அவனுக்கும் ஒன்றும் ஆகியிருக்காது.முக்கியமாக,அவன் போராடும் மன நிலையில் இல்லை.இது தான் காரணம்.காலையில்,அவன் மிக இயல்பாக ,சாதாரணமாக எழுந்து நடப்பான்.அவன் உடலில் உடைவோ வலியோ இருக்காது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

படுக்கை

கடலில் கப்பல் போய்க் கொண்டிருந்தது.திடீரென வந்த புயல் கப்பலை  பலமாக ஆட்டியது.பயணிகள் அனைவரும் பயந்து கூக்குரலிட்டனர்.ஆனால் கப்பலின் கேப்டன் மட்டும் எந்த சலனுமுமின்றி தன வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.பயணிகள் அவனைப்  பார்த்து,''உனக்கு பயமாய் இல்லையா?'' என்று கேட்டனர்.
கேப்டன்: பயமா?எனக்கா? என் தந்தை  ,என் பாட்டனார்  அனைவரும் கடலில்தான் இறந்தார்கள்.
பயணி:உன் குடும்பத்துக்கு சாவைக் கொடுத்த இந்தக் கடலைப் பார்த்து உனக்கு பயமில்லையா?
கேப்டன்:எதற்காகப் பயப்பட வேண்டும்.எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியவர்கள் தானே?உன் தந்தைஎங்கு இறந்தார்?
பயணி: என் தந்தை படுக்கையில் தான் இறந்தார்.
கேப்டன்:அப்படியானால் உனக்கு படுக்கையைப் பார்த்தால் பயம் இல்லையா?
பயணி: இல்லை.படுக்கை பாதுகாப்பான இடமாயிற்றே.
கேப்டன்:இருக்கலாம்.கடவுள் இல்லாத இடமே கிடையாது.அவர் அருள் கடலிலும் இருக்கலாம்;படுக்கையிலும் இருக்கலாம்.உன் தந்தை படுக்கையில் இறந்தும் கூட உனக்கு படுக்கையைப் பார்த்து பயமில்லை என்றால் எனக்கு ஏன் கடலைப் பார்த்து பயம் ஏற்படப் போகிறது?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மனநிலை

ஞானி ஒருவர்தொந்தரவு செய்து கொண்டிருந்த ஒரு சீடனிடம் ஒரு கல்லைக் கொடுத்து காய்கறி சந்தைக்குப் போய் விற்பது போல நடித்து மக்களின் நிலையைத் தெரிந்து வரச் சொன்னார்.சீடனும் சந்தைக்கு சென்று கல்லின் அருமை பெருமைகள் பலவற்றைக் கூறினான்.ஆனால் ஒரு சிலரே அதுவும் மிகக் குறைந்த விலைக்கு கேட்டார்கள்.சீடன் குருவிடம் வந்து,விபரம் கூறி அங்கு கல்லை பத்து பைசாவிற்கு மேல் விற்க முடியாது என்று கூறினான்.குரு அடுத்து அதே கல்லை தங்க நகைகள் விற்கும் கடை வீதிக்கு எடுத்து சென்று அதேபோலக் கவனிக்க சொன்னார்.சீடன் கடை வீதிக்கு சென்று,திரும்பிவந்து    ''இங்கு பரவாயில்லை.கல்லை ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள்,''என்றான்.பின்னர் குரு அவனை அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வைர வியாபாரம் நடக்கும் இடத்திற்கு எடுத்து சென்று அதே முயற்சியை செய்ய சொன்னார்.அங்கு போய்வந்த சீடன்,''இங்கு இந்தக் கல்லை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்கலாம்,''என்றான்.குரு சொன்னார்,''நீ விற்கவில்லை என்றதும் எப்படி விலை கூடியது?இது கல்லை விட உன்னைப் பொறுத்த விஷயம் ஆகி விட்டது.காய்கறி சந்தையில் இருக்கும்போது நீயும் அதன் மதிப்பு பத்து பைசாதான் என்று நினைத்தாய்.இப்போது ஆன்மீகத்தில் நீ காய்கறி சந்தையில் தான் இருக்கிறாய்.அதாவது உன் மனநிலையின் மதிப்பு பத்து பைசா தான்.அதை வைரம் விற்கும் கடையைப்போல உயர்த்து.பிறகு என்னிடம் வா,''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிறந்த அறிவுரை

ஒரு ஞானி ஒரு அரசனிடம்,''நீ ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தால் நான் ஒரு சிறந்த அறிவுரை தருவேன்,''என்றார்.அரசனும் பொற்காசுகளைக் கொடுக்க ,ஞானி சொன்னார்,''எந்த ஒரு செயலையும் ,அதன் முடிவு என்னவாயிருக்கும் என்று யோசிக்கும் முன் செய்யாதே,''அரசருடன் இருந்தவர்கள் அனைவரும் இந்த சாதாரண அறிவுரைக்கா ஆயிரம் பொற்காசுகள் என்று கூறி நகைத்தனர்.அரசனோ,''இதில் சிரிக்கஒன்றுமில்லை.எதையும் யோசித்து செய்ய வேண்டும் என்கிறார் ஆனால் தினசரி வாழ்வில் நாம் நிறைய விசயங்ககளை அதன் விளைவு என்னவென்று யோசிக்காமல் செய்து அவதியுறுகிறோம்.எனக்கு இந்த அறிவுரை மிகவும் பிடித்துள்ளது,''என்றார். அதனால் அரசர் பல இடங்களில் ஞானி சொன்ன வாசகங்களை எழுதி வைக்க ஏற்பாடு செய்தார்.
சில மாதங்களுக்குப்பின் ஒரு சதிகாரன் அரசனைக் கொல்லத் திட்டமிட்டான். அவன் அரச வைத்தியனுக்கு லஞ்சம் கொடுத்துஅரசனுக்கு அவன் ஒரு விஷ ஊசி போட ஏற்பாடு செய்தான்.வைத்தியனும் அரசனுக்கு விஷ ஊசியை போடப்போகும்போது அந்த அறையில் எழுதப்பட்டிருந்த ஞானியின் அறிவுரை கண்ணில் பட்டதால் அதைப் படித்தான்.உடனே அவன் யோசனை  செய்தான்,''நான் இக்காரியத்தை செய்தால் பின் விளைவு என்னவாகும்?சதிகாரன் மன்னன் ஆனால் ரகசியம் வெளியே போகக் கூடாது என்பதற்காக என்னைக் கொல்லலாம்.''அவனுடைய தடுமாற்றத்தைக் கவனித்த அரசன் என்னவென்று கேட்டார்.உடனே வைத்தியன் நடந்த உண்மை அனைத்தையும் சொல்லி விட்டான்.சதிகாரன் உடனே பிடிக்கப்பட்டான்.அரசன் உடனே முன்னால் ஞானியின் அறிவுரையைக் கேலி செய்த அனைவரையும் அழைத்து கேட்டான்,''நீங்கள் இப்போது ஞானியின் ஆலோசனை குறித்து கேலி செய்வீர்களா?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அசுத்தம்

முகம்மது நபிகள் ஒரு நாள் காலை ,பிரார்த்தனை செய்ய ஒரு வாலிபனையும்  அழைத்து சென்றார்.அவன் இதுவரை மசூதிக்கு சென்றதில்லை.திரும்பி வரும்போது,தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் குறிப்பிட்டு,''நாயகமே,இந்த  பாவிகளைப் பாருங்கள்.இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இது பிரார்த்தனைக்கு செல்ல வேண்டிய நேரம் இல்லையா?''என்றான்.உடனே முகம்மது ஆகாயத்தை நோக்கி ,''மிகவும் வருத்தப்படுகிறேன்,''என்றார்.அவர் யாரிடம் வருத்தம் தெரிவித்தார் என்று அந்த இளைஞன் கேட்டான்.அதற்கு நபிகள்,''இன்று ஒரு நாள் பிரார்த்தனை பண்ணி விட்டதால் உன்னையே ஒரு ஞானி போலவும் மற்றவர்களெல்லாம் பாவிகள் எனவும் கருதிக் கொண்டு விட்டாய்.உன்னை என்னோடு அழைத்து சென்றதால் என் பிரார்த்தனை அசுத்தமாகி விட்டது.ஆகவே நான் அதற்காக கடவுளிடம் வருத்தம் தெரிவித்தேன்.நான் மறுபடியும் மசூதிக்கு செல்ல வேண்டும்.என்னுடன் நீ வராதே,''என்றார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஓஷோ சிந்தனைகள்

கடவுள்உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய கோப தாபங்களால்  அவரைக் காணமுடியாத படி கண்களை மூடி வைத்துக் கொள்கிறாய்.
**********
முட்டாள்தனமானவர்கள் மிகவும் கீழ்ப்படிதல் உள்ளவர்கள்.எதையும் எதிர்க்க மாட்டார்கள்.ஜடமாகத் திரிவார்கள்.வாழ்வின் சிறப்பை வாழ்ந்து பார்க்க முயற்சிக்க மாட்டார்கள்.அவர்களிடம் தீவிரம் இருப்பதில்லை.இந்த சமூகம் நீ முட்டாளாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறது.
**********
எதையும் உனக்குத்   தேவை என்று ஆசைப் படுமுன்  மும்முறை நினைத்துப்பார்.உனக்கே ஆச்சரியமாக இருக்கும்.99% தேவையற்றதாகவே  இருக்கும்.அவை உன்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றன.உனக்குள்ளே நீ இருக்க அவை நேரமோ இடமோ தருவதில்லை.
**********
வாழ்க்கை ஒரு புதிர்.ஏன் என்பதில்லை.குறிக்கோள் என்பது இல்லை காரணம் ஏதும் இல்லை.அது அப்படியே இருக்கிறது.எடுத்துக்கொள் அல்லது விட்டுவிடு.அது அங்கே இருக்கத்தான் செய்யும்.ஏன் எடுத்துக் கொள்ளக்  கூடாது ?எதற்கு தத்துவ விசாரத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டும்?நடனமாடலாமே?பாடலாமே?அன்பு காட்டலாமே?தியானம் செய்யலாமே?வாழ்க்கை என்கிற அதற்குள்  இன்னும் ஆழ ஆழமாகப் போய்க் கொண்டிருக்கலாமே?
**********
இன்னொரு நரகத்தைப் பற்றி ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?இந்த பூமியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தை விடவா அந்த நரகம் மோசமாக இருக்கப் போகிறது?
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தெரியாமல்

ஒருவர் ஒரு அலுவலகம் செல்ல மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்.எதிரே வந்த ஒருவர் திடீரெனக் கத்தினார்,''என்ன அய்யா,இப்படி மிதித்துவிட்டு ஒன்றுமே நடவாததுபோலச் செல்கிறீர்கள்?''முன்னவர் சொன்னார்,''தெரியாமல் நடந்துவிட்டது.மன்னித்துக் கொள்ளுங்கள்.''உடனே மிதிபட்டவர் சீறினார்,''மன்னிப்புக் கேட்டு விட்டால் என் காலில் உள்ள வலி போய்விடுமா?''அவர் சொன்னார்,''நான் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?வேண்டுமானால் நீங்களும் அதே போல என்னை மிதித்து விடுங்கள்.ஆனால் ஒன்று,நான் உங்களைத் தெரியாமல் தான் மிதித்தேன்.அதுபோல நீங்களும் என்னைத் தெரியாமல் தான் மிதிக்க வேண்டும்.''மிதிபட்டவருக்கு மேற்கொண்டு  என்ன பேசுவதென்று  தெரியவில்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உங்கள் மூக்கு சொல்லும் ரகசியங்களை படிச்சிப்பாருங்க..!

`சாமுத்திரிகா லட்சண' இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின் நடத்தை, மனோபாவத்தைக் கூறக்கூடி யவை என்று நம்பப் படுவதுண்டு. அந்த வகையில் ஒருவரின் `மூக்கை' வைத்தே அவரின் குணநலன், ஆளுமை எப்படி இருக்கும் என்று கூறிவிடலாம் என்கிறார், முகவியல் நிபுணர் டாக்டர் பிரேம் குப்தா. இவர் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், அதற்குரியவர்களின் குணங்களும்...

பெயருக்கு ஏற்ப, பன்றியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.


`பன்றி' மூக்குக்கும் பேராசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த மூக்கு உடையவர்கள் பொருட்செல்வத்தைத் திரட்டுவதிலும், வசதியான வாழ்க்கை வாழ்வதிலும் ஆர்வமாக இருப்பார்கள். சுயநலமிக்க இவர்கள் சிலநேரங்களில் மற்றவர்களால் எளிதாக ஏமாற்றப்படுவார்கள். இந்த மூக்குக்காரர்கள் புத்திசாலிகளாவும் இருப்பார்கள். வேலையைச் செம்மையாகச் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

நுனியில் வளைந்து, கிளியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.


`கிளி' மூக்கு உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சொந்த முயற்சியால் வாழ்க்கையில் உயரும் திறன் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் சந்தர்ப்பவாதிகள், விரைவாகச் சிந்திப்பவர்கள். மற்றவர்களில் இருந்து வித்தியாசமாகச் சிந்திக்கும் இவர்கள் சில வேளைகளில் கலகக்காரர்களைப் போல பார்க் கப்படுவார்கள். ஆனால் மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனமாக இருப்பார்கள்.

நெற்றியின் கீழ்ப்பகுதியில் இருந்து நுனி வரை வளைவின்றிச்

சீராக நீளும் கச்சிதமான மூக்கு இது.

நேரான மூக்கு கொண்டவர்கள் சம யோசிதமானவர்கள், புத்திசாலிகள். மடத் தனத்தை இவர்கள் விரும்பமாட்டார்கள். வெளியே அப்பாவி போல காட்டிக்கொண்டாலும் உண்மையில் இவர்கள் அப்பாவிகள் அல்லர். இத்தகைய மூக்கு உள்ளோரைப் பிறர் புரிந்துகொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். இவர்களுக்கு நல்லிணக்கம் பிடிக்கும்.

இந்த மூக்கு, உட்புறமாக வளைந்து, மேல்நோக்கிக் கூர்மையாக அமைந்திருக்கும். பனிச்சறுக்குப் பகுதியைப் போலத் தோன்றும்.

உம்மணாம்மூஞ்சிகள் இவர்கள். எது இவர்களுக்குப் பிடிக்கும், எது இவர்களுக்குப் பிடிக்காது என்று கணிப்பது கடினம். சிலநேரங்களில் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்ட அடுத்த நொடியே மனதை மாற்றிக்கொள்வார்கள். இயற்கை மீது ஆர்வம் கொண்ட இவர்கள், பிறரின் நடத்தையைச் சரியாகக் கணிப்பார்கள்.

மூக்கு குட்டையாக இருக்கும். மூக்குத் துவாரங்களும் சிறியதாக இருக்கும்.


இனிய இயல்புள்ள விரும்பத்தக்க நபர்கள் இவர்கள். பரீட்சித்து, உறுதி செய்யப்பட்டவற்றையே செய்ய விரும்புவார்கள். `ரிஸ்க்' எடுப்பது இவர்களுக்குப் பிடிக்காது. சில நேரங்களில் இவர்கள் அடுத்தவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள். அடுத்தவர்களின் கோணங்களையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

 

இந்த மூக்கு பெரியதாகவும், சதைப்பற்றானதாகவும், அடிப்பகுதி யில் அகன்றும் இருக்கும்.


இந்த மூக்கு ஆசாமி, ஆதிக்கம் செலுத்துபவர். மற்றவர்களின் உத்தரவுகளை ஏற்க மாட்டார். தமது சொந்த விருப்பப்படியே வாழ்வார். பெரிதாகச் சிந்திப்பார். சின்னச் சின்ன வேலைகள் செய்வது இவர் களுக்குப் பிடிக்காது.

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மூக்கைப் போல நசுக்கப்பட்டது மாதிரி இருக்கும் மூக்கு இது.


இவர்கள் தைரியமானவர்கள், ஆக்ரோஷமானவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள். சராசரி மனிதர்களை விட இவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும். அதேநேரம், ஆக்ரோஷ இயல்பு காரணமாகவே இவர்கள் எளிதாகச் சச்சரவுகளில் சிக்கிக்கொள்வார்கள். தங்களின் லட்சியங்களை எட்டத் தடுமாறுவார்கள்.

வேகத்தடை போல நடுவில் ஒரு மேடு காணப்படும் மூக்கு இது.


இந்த வகை மூக்குக்குரியவர் உறுதியான ஆளுமை கொண்டவர். சூழ்நிலையை இணக்கமாக்குவதில் தேர்ந்தவர். ஆனால் மற்றவர்களின் கருத்துகளை மதிக்க மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருப்பார்கள்.

 

 

நீண்ட, ஆனால் மேலாக வளைந்த மூக்கு இது. மூக்கு நுனி வெளிப் புறமாகவோ, உட்புறமாகவோ வளைந்திருக்காது. இந்தியா வின் மொகலாய அரசர்கள் பலருக்கு இவ்வகை மூக்கு அமைந்திருந்திருக்கிறது


இந்த மூக்கு உடையவர்கள் உறுதியான மனதிடமும், சுயேச்சையாக முடிவெடுக்கும் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்க நபர்களாக இருக்கும் இவர்கள், பொறுமைசாலிகள். ஆசைத் தூண்டுதலுக்கு இவர்கள் மயங்கமாட்டார்கள். நளினம் இவர்களைக் கவரும். ஆனால் இயற்கையாகவே இவர்கள் பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் தொந்தரவு கொடுப்பதுண்டு. மற்றவர் களோடு தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள்.

நுனியில் கூர்மையாகவும், வளைந்ததாகவும் உள்ள மூக்கு இது. நுனி, உதட்டை நோக்கி வளைந்திருக்கும். இந்த மூக்கு ஏறக்குறைய அம்பு நுனியைப் போலிருக்கும்.


இந்த மூக்குக்காரர்களுக்கு பொறுமை ரொம்பக் கம்மி. விவாதம் செய்யாமல் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உலகமே தனக்கு எதிராக சதி செய்கிறது என்ற சிந்தனைப் போக்கு உடையவர்கள். இவர்கள் கூர்மையாகக் கவனிப்பவர்கள். ஆனால் தங்களின் சநதேக மனப்பான்மையால், சூழ்நிலையைப் பற்றித் தவறான முடிவுக்கு வருபவர்கள்.படபடப்பாக இருக்கும் இவர்கள், தூண்டுதலின் பேரில் செயல்படுவார்கள்.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Saturday, February 26, 2011

பொன்மொழிகள்-12

புன்னகைக்குக்கொடுக்கப்பட்ட உதடுகளைப் புகைச்சுருட்டுக்கு ஏன் பயன்படுத்த வேண்டும்?தோட்டங்களைப் பயிரிட வேண்டிய விரல்கள் ஏன் தோட்டாக்களைத் துப்பாக்கியில் திணிக்க வேண்டும்?
**********
மாடி ஏறுகிறவன் எந்த மாடிக்குச் செல்ல வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் வைத்திருந்தால் போதாது.அடுத்த படியின் மீது கவனத்தை வைக்க வேண்டும்.
**********
வாழ்கையை புளிக்க வைத்துவிட்டவர்கள்தான் புளித்த மதுவின் புறமுதுகில் ஏறி சவாரி செய்கிறார்கள்.சமாளிப்பதால்  எதையுமே சரி செய்து விட முடியாது.
**********
மனதின் அளவற்ற ஆசைகளை அடைய முயற்சி செய்து உடல் தளர்ந்து விடுவதேநம்முடைய உள்ளச் சோர்வுக்குக் காரணம்.
**********
மற்றவர்கள் புகழ்ச்சி ஒருவிதமான போதையை ஏற்படுத்தி விடும்.அதிலிருந்து மீள்வது சிரமம்.கொஞ்ச நாள் கழித்து நாம்மற்றவர்கள் அவ்வாறு புகழ வேண்டும் என்று எதிர் பார்க்க ஆரம்பித்து விடுவோம்.
**********
நாம் யாரையாவது எதிரியாகப் பாவித்துக் கொள்கிறோம்.கோபமும் வன்மமும் நம் உடலைப் பலவீனப் படுத்தி நம்மை கருவச் செய்து வீழ்த்தி விடுகின்றன.
**********
போதிக்கிறபலரும் தாம்  போதிக்கிற சுகத்திற்காகப் போதிக்கிறார்களே தவிர மற்றவர் திருந்த வேண்டும் என்பதற்காக அல்ல.திருந்திவிட்டால் நமக்கு வேலை இல்லாமல் போய்விடுமே என்கிற பயமும் அவர்களுக்கு உண்டு.
**********
குண்டூசி தொலைந்ததற்கு கடப்பாரை அளவு விசனம் தேவையா?
**********
காது குத்துவதர்காகக் கடன் வாங்கியவர்கள் கொடுத்தவர்களுக்கும் சேர்த்து  காது குத்திவிடுகிறார்கள்.
**********
                       இறையன்பு எழுதிய ஏழாவது அறிவு என்ற நூலிலிருந்து.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சற்றே நகுக

ஒரு விருந்தில் ஒருவர் அருகிலிருந்தவரிடம் கேட்டார்,''அந்த மூலையில் மிகவும் உரக்கப் பேசிக்கொண்டிருக்கும் அசிங்கமான பெண்மணி யார்?''
''அவள் என் மனைவி.''
''நான் அவரைச் சொல்லவில்லை ,அவர்  அருகில்  இருக்கும்  பெண்ணைக்  குறிப்பிடுகிறேன்.''
''அவள் என் சகோதரி.''
**********
ஆங்கிலத்தில் அகராதியைத் தயாரித்த சாமுவேல் ஜான்சனைச் சந்தித்த இரண்டு பெண்மணிகள் அவரிடம்,''நீங்கள் கெட்ட வார்த்தைகள் எதையும்  உங்கள்  அகராதியில் சேர்க்காதது குறித்து மகிழ்ச்சி,''என்றனர்.உடனே ஜான்சன் கேட்டார்,''ஏன் நீங்கள் அவற்றைத் தேடினீர்களா?''
**********
ஒரு பணியாள் தன்னுடைய செல்வந்தர் எஜமானிடம்,''நீங்கள் என்னை முழுசா நம்பலை.அதனால் வேலையை விட்டு நின்னுக்கிறேன்,''என்றான். அவர்,''நீ எப்படி அப்படி சொல்லலாம்?சாவிக்கொத்தையே உன்னை நம்பி மேஜையின் மேலே தானே வச்சிட்டு வெளியே போகிறேன்,''என்றார். பணியாள்,''உண்மைதான்.ஆனால் ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?''என்றான்.
**********
ஒரு இளைஞன் ஒரு பெண்ணை நேசிப்பதாகக் கூறினான்.அவன் நண்பன் கேட்டான்,''என்ன,முதல் பார்வையிலேயே காதலா?''இளைஞன் சொன்னான்,''இல்லை இது இரண்டாவது பார்வையில் நிகழ்ந்தது.''  எனென நண்பன் விளக்கம் கேட்க அவன்  சொன்னான்,''முதல் முறை பார்த்தபோது அவள் பணக்காரப்பெண் என்று தெரியாது.''
**********
ஒரு பெண் மருத்துவரிடம் சென்று,''என் கணவர் தூக்கத்தில் ஏதேதோ பேசுகிறார்.''என்று சொன்னார்.மருத்துவர் ,''இந்த மாத்திரையைக் கொடுங்கள்.அவர் ஆழ்ந்து தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும்.''என்றார்.அந்தப்பெண் சொன்னாள்,''டாக்டர்,அவருக்குத் தூக்க மாத்திரை  வேண்டாம்.நான் தூங்காமல் இருக்க ஏதாவது மாத்திரை கொடுங்கள்.ஏன்என்றால் அவர் தூக்கத்தில் பேசுவது, முழிச்சிக்கிட்டு இருக்கும் போதுபேசுவதைவிட சுவாரசியமா இருக்கு.''
**********
ஒரு பேச்சாளர் சிறப்பு விருந்தினரை வானளாவப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.ஐந்து நிமிடம் கழித்து அந்த சிறப்பு விருந்தினர்,எழுந்து,''தயவு செய்து என்னைப் புகழாதீர்கள்,''என்றார்.அருகிலிருந்தவர்,''ஏன் ஐந்து நிமிடமாக ஒன்றும் சொல்லாமல் இப்போது சொல்கிறீர்கள்?''என்று கேட்டார்.அதற்கு அவர் சொன்னார்,''நானே அதில் மயங்கி மெய் மறந்துவிட்டேன்.அதனால்தான்.''
**********
ஒரு சிறுவனின் அருகில் ஒரு அழகிய நாய் இருந்தது.அங்கு வந்த அவன் நண்பன் கேட்டான்,''உன் நாய் கடிக்குமா?'''கடிக்காது,''என்று பதில் வந்தது.நண்பன் உடனே அந்த நாயின் நெற்றியில் கை வைத்ததும் அந்த நாய் அவனை கடிக்காத குறையாய் உறுமி அவன் மீது பாய்ந்தது.வெலவெலத்துப்போன நண்பன் ''உன் நாய் கடிக்குமா என்று கேட்டேன்.நீ ஏன் அது கோபக்கார நாய் எனச் சொல்லவில்லை?''என்று கேட்டான்.அவன் சொன்னான்,''என நாய் சாதுவானது அது என் வீட்டில் இருக்கிறது.இது என் நாய் இல்லை வேறு யாருடையதோ?''
**********
                                        இறையன்பு எழுதிய ஏழாவது அறிவு என்ற நூலிலிருந்து.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொய்யன்

ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும்  என்று அறிவித்தார்.நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.ஒரு நாள்  கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம்  இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான்  இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய்   ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று கத்தினான்.உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கற்பனை

நீங்கள் உண்மையைவிடக்  கற்பனையில்  மிகுந்த விருப்பம் காட்டுகிறீர்கள். உண்மையைவிடப் பொய் மிக உண்மையாகத் தெரிகிறது.கற்பனை பலவகையில் உங்களுக்கு திருப்தியைக் கொடுக்கும்.உங்களுடைய கற்பனை உங்கள் அகங்காரத்திற்கு (ego) திருப்தி அளிக்கிறது.ஒரு குரு இறந்தபின் அவருக்கு பல சீடர்கள் உருவாகிறார்கள்.(உதாரணம்:புத்தர், இயேசு..) அவர் இறந்தபின் நீங்கள் அவரைப்பற்றி நிறைய கற்பனை செய்கிறீர்கள்.உங்கள் விருப்பம் போல அவரை வரைந்து கொள்கிறீர்கள்.அவர் உயிரோடு உங்கள் அருகிலிருந்தால்,அவர் உங்களுக்கு ஒரு சாதாரண மனிதராகவே தெரிவார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வியாபாரம்

ஒரு கப்பல் புயலில் மாட்டிக் கொண்டபோது,அதில் பயணித்த அனைவரும் இறைவனை வழிபட தொடங்கினர்.ஒரு ஞானி மாத்திரம் ஏதும் செய்யாது இருந்தார்.அவரை அனைவரும்பைத்தியம் என்று கேலி பேசினர்.அந்த ஞானி சொன்னார்,''எனக்குக் கடவுளிடம் எந்தவியாபாரமும் இல்லை.நம்மைக் காப்பாற்ற வேண்டுமா,மூழ்கடிக்க வேண்டுமா என்பது இறைவன் கவலைப்பட வேண்டிய ஒன்று.அது என்னுடைய கவலை இல்லை.நான் பிறப்பதற்கு அவரிடம் கேட்கவில்லை.திடீரென இந்த பூமிக்கு நான் வந்தேன்.ஆகவே,மரணத்தைப் பற்றியும் நான் கேட்க முடியாது.எப்போது பிறப்பு என் கையில் இல்லையோ,மரணத்தைப்பற்றி மட்டும் எப்படிஎன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும்?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மன்னிக்க முடியாது.

காட்டில் பயங்கரமான நோய் பரவியது நிறைய விலங்குகள் இறந்தன.பல சாகும் தருவாயில் இருந்தன.விலங்குகளின் அரசனான சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்தது.''காட்டில் பாவம் அதிகரித்து விட்டது.இந்தக் காட்டில் யார் அதிக பாவம் செய்தார்களோ,அவரைக் கண்டுபிடித்து பலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்,''என்று சொன்னது சிங்கம்.ஒருவரும் பேசவில்லை.சிங்கம் தான் நிறைய ஆடுகளைக் கொன்று பாவம் செய்ததாகவும்,தான் பலியாவதற்குத் தயார் என்றும் சொன்னது.உடனே நரி சொன்னது,''மாண்பு மிகு அரசே,நீங்கள் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறீர்கள். கேவலம்,இந்த ஆடுகளை நீங்கள் சாப்பிட்டதெல்லாம் ஒரு பாவமா?''என்றது எல்லா விலங்குகளும் கைதட்டி நரியின் பேச்சை ஆமோதித்தன.அதன்பின் புலி,கரடி,யானை போன்றபெரிய  விலங்குகளைக் குற்றம் சாட்ட எந்த விலங்குக்கும் தைரியமில்லை.அப்போது ஒரு கழுதை சொன்னது,''என்னுடைய பேராசையால் எனக்கு உரிமை இல்லாத இடத்தில்  புல்லை திருடி சாப்பிட்டு விட்டேன்.''உடனே எல்லா விலங்குகளும் ,''கழுதை செய்தது மிகப் பெரிய பாவம் எனவே அதை பலி கொடுத்துவிடலாம்,''என்று ஒருமித்த குரலில் சொல்லின.
இது தானே நாட்டு நடப்பு!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பேராசை

பேராசை கொள்ளும்படி நீங்கள் கற்பிக்கப்பட்டிருக்கிரீர்கள்.அது ஒருபோதும் எந்த இன்பத்தையும்தராது..அது வன்முறையானது.அழிவு பயப்பது.புத்திசாலி மனிதன் பேராசை கொள்வதில்லை.மற்றவர்களுடன் போட்டி போடும் விருப்பமின்றி அவர் சாதாரணமாக வாழ்கிறார்.ஒவ்வொருவருக்கும் தனிச் சிறப்பு உண்டு என்பதை அவர் அறிவார்.அவர் ஒரு போதும்  பிறருடன் ஒப்பிடுவதேயில்லை.ஒருபோதும் தன்னை மேல் என்றோ ,கீழ் என்றோ  அவர் எண்ணுவதில்லை.அவர் ஒருபோதும் உயர்வு மனப்பான்மையாலோ,தாழ்வு மனப்பான்மையாலோ துன்புறுவதில்லை.ரோஜாவை தாமரையுடன் எப்படிஒப்பிட முடியும்?எல்லா ஒப்பீடுகளின் துவக்குமுமே தவறாக உள்ளன.ஒவ்வொரு தனி நபரும் தனக்கே உரிய தனியழகு கொண்டிருக்கிறார்.இவற்றை ஒப்பிடுவது சாத்தியமில்லை.
அப்படியானால் பேராசை கொள்வதன் பொருள் என்ன?உன்னை விட நானே உயர்வாக இருக்க வேண்டும் என்பதே பேராசையின்  பொருள். மற்றவர்களை விட நான் உசத்தி என்பதை நான் நிரூபித்தாக வேண்டும்.இதற்காக நீ ஏன் புத்தியை இழக்க வேண்டும்?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பாவம்

ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்கப்போன ஒருவர் அவரிடம் தான் காசிக்கு செல்லவிருப்பதாகக் கூறினார்.எதற்கு என்று பரமஹம்சர் கேட்டதற்கு ,காசிக்கு சென்று கங்கையில் குளித்தால் பாவம் தீரும் என்று கூறப்படுவதால் அங்கு செல்லவிருப்பதாகக் கூறினார்.
பரமஹம்சர் :கல்கத்தாவிலும் கங்கை நதி வருகிறதே,பின் ஏன் காசி செல்லவேண்டும் என்கிறாய்?
பக்தர் :காசி  புனிதமான  இடம் என்பதால்தான்.
ப.ஹ.:காசியில் கங்கையின் கரையில் மரங்கள் இருக்கிறது தெரியுமா?நீ  குளித்தவுடன் உன்பாவங்கள் உன்னைவிட்டு நீங்கி அந்த மரத்தில் போய் ஏறிக்கொள்ளும்.நீ குளித்து கரையில்உடை மாற்றியபின் அவை மீண்டும் உன்னிடம்வந்து ஒட்டிக் கொள்ளும்.அதனால் தான் நான் காசி செல்வதில்லை.மேலும் அம்மரங்களில் குளித்துக் கொண்டிருக்கும் மற்றவர்களின் பாவங்களும் இருக்கும்.அவற்றில் எதுக்கேனும் உன்னைப் பிடித்திருந்தால் அவையும் உன்னிடம் வந்து ஒட்டிக் கொள்ளும்.
பக்தர்.ஐயையோ.என்னை மிகவும்  குழப்பி விட்டேர்களே.என் பாவம் தீர நான் காசி செல்ல  நினைத்தால்,நீங்களோ என் பாவத்தோடு மற்றவர் பாவங்களும் என்னுடன் வந்து ஒட்டிக் கொள்ளலாம்  என்கிறீர்களே.
அதன் பின் அந்த பக்தருக்கு காசி போக பைத்தியமா பிடித்திருக்கிறது?
சொர்க்கம் என்பது மேலே எங்கேயோ இல்லை அது நம்மிடம் தான் இருக்கிறது.இதைப் புரிந்து கொண்டால் வேறு எங்கும் செல்லவேண்டியதில்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சக்கரம்

ஒரு வண்டி போய்க் கொண்டிருந்தது.வண்டிச் சக்கரங்களில் ஒன்று பலமாய் கிரீச் என்று குரல் எழுப்பி வந்தது.வண்டிக்காரன் கீழே இறங்கிப் பார்த்தான்.அந்தச் சக்கரம் குறைபாடுகளுடன் இருந்தது. வண்டிக்காரனுக்கு கோபம் வந்தது.அவன்,''நீதான் ஏகப்பட்ட குறைகளுடன் இருக்கிறாயே!நீ எதற்கு இவ்வளவு சப்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறாய்?''என்று கேட்டான்.சக்கரம் சொன்னது,''இந்த உலகம் தோன்றிய காலம் முதல்,யாருக்குக்குறை இருக்கிறதோ,அவர்கள்தான் அதிக ஆர்ப்பாட்டம் செய்வது  வழக்கமாய் இருக்கிறது.இதற்கு நான் மட்டும் விதிவிலக்கா?''
குறை குடம் கூத்தாடும்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆடும் மீன்கள்

ஒரு மீனவன் தன வலையைக் கரையில் போட்டுவிட்டு   ,புல்லாங்குழலை  எடுத்து  ஊத  ஆரம்பித்தான் .அப்படி ஊதினால் மீன்கள் ஆடிக் கொண்டு வலையில் வந்து  விழும் என்று அவன் நினைத்தான்.நீண்ட நேரம் வாசித்தும் ஒரு மீன் கூட வரவில்லை.மீனவனுக்குக் கோபம் வந்தது புல்லாங்குழலைக் கீழேவைத்துவிட்டு வலையை எடுத்துத் தண்ணீரில் வீசினான்.வலையில் ஏராளமான மீன்கள் அகப்பட்டன.வலையில் அகப்பட்ட மீன்களை பக்கத்தில் இருந்த பாறையில் போட்டான்.உடனே வலையில் இருந்த மீன்களெல்லாம் துள்ள ஆரம்பித்தன.அதைப் பார்த்த மீனவன்,''நான் புல்லாங்குழல் வாசித்தபோது நீங்கள் ஆடாமல் இருந்தீர்கள்.இப்போது ஆடுகிறீர்களே!எதற்காக?என்ன ஆடினாலும் உங்களை நான்விடப்போவதில்லை..''என்று சொன்னான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அசிங்கமானவர்கள்

மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த தன நண்பனைப் பார்க்கப் போனார் கலீல் கிப்ரான்.அவன் ஒரு மரத்தடியில் மிக மகிழ்வுடன் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தான்.கிப்ரான் அவனிடம் கேட்டார்,''இந்த மன நல விடுதியின்சுவர்களுக்குள்ளே இருப்பது குறித்து நீகவலைப் படுகிறாயா?''நண்பன் சொன்னான்,''நான் ஏன் கவலையும் வருத்தமும் கொள்ள வேண்டும்?மிகச் சிலரான நலமான மனிதர்கள் மட்டுமே இங்கு வாழ்கிறோம்.மன நலமற்ற அனைவரையும்வெளியே விட்டு விட்டோம்.இங்கு நான் வந்ததிலிருந்து பல புத்திசாலியான மனிதர்களை,பல அற்புதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன்.வெளியிலோ எல்லோரும் அசிங்கமானவர்களாக இருக்கிறார்கள்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இகழ்ச்சி

தமிழில் முதல் நாவலை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை.அவரிடம் பணம் பெறும் பொருட்டு அவரைப் பார்க்க வந்த ஒரு புலவர் அவரைப்  பார்த்து,
,''அருங்கிரியே,கற்பகமே,காளையே,அனந்தனே,அரியே!''என்று புகழ்ந்தார். அவனுடைய நோக்கத்தைப் புரிந்து கொண்ட பிள்ளை அவர்கள் அவன் சொன்ன வார்த்தைகளை அலங்காரம் ஏதுமில்லாமல்அவனைப்பார்த்து  திரும்பச் சொன்னார்.ஆனால் அந்த புலவர் மிகுந்த கோபத்துடன் வெளியேறிவிட்டார்.அப்படி அவர் என்ன தான் சொல்லி விட்டார்?
புலவர் அருங்கிரியே என்றார்.அதாவது அருமையான மலை போன்றவனே.கற்பகமே என்றார்.அதன் பொருள் நினைத்ததைத்தரும்  கற்பக மரத்தைப் போன்றவனே என்பதாகும்.சிவனின்வாகனம் காளை.எனவே காளை போன்ற ஆற்றல் உடையவனே என்று புகழ்கிறார்.அனந்தன் என்பது திருமால் அமர்ந்திருக்கும் ஆதிசேடன்  ஆகும். அரி என்றால் சிங்கம்.சிங்கம் போன்றவனே என்று சொல்கிறார்.
சரி,வேதநாயகம் பிள்ளை என்ன சொன்னார்?இதோ அவரது பாடல்.
அருங்கிரியே!கற்பகமே! காளையே!
அனந்தனே!அரியே!என்ன
ஒருங்கு நமையே  புகழ்ந்து பொருள்கேட்ட 
ஒருவனை யாம் உற்று நோக்கி
இருங்கல்லே!மரமே!மாடே!பாம்பே!மிருகமே!
என்றோம்;காய்ந்தான் 
மருங்க வன் வார்த்தையைத் திருப்பி நான் சொன்னால்,
அவனுக்கு ஏன் வருத்தம் அம்மா?
 புலவர் அருமையான மலை என்றார்.மலை என்பது கல்தானே.கற்பகம் ஒரு மரம்தானே!காளை என்பது மாடு தானே!அனந்தன் என்பது பாம்பு தானே! சிங்கம் ஒரு விலங்கு தானே.எனவே புலவர் சொன்னதையே திருப்பி,''கல்லே,மரமே,மாடே,பாம்பே,மிருகமே,''என்று சொன்னபோது அவர் கோபம் கொண்டார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பென்சில்

பென்சிலில் இருந்து  கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்:
பென்சிலை யாராவது கையில் எடுத்துக் கொண்டால் ஒழிய அதனால் பயனில்லை.அதுபோல நாமும் உயர்வான காரியத்திற்காக வைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
பென்சிலை அடிக்கடி சீவி  கூராக்குவார்கள்.அதுபோல நமது அறிவு தீட்டப்பட வேண்டும்.
பென்சிலின் உள்ளே இருக்கும் ஊக்கு தான் முக்கியமே தவிர வெளியே இருப்பது எதனால் ஆனது என்பது முக்கியமல்ல.அதுபோல நமக்குள்ளே  குடி கொண்டுள்ள அன்பு,மௌனம்,நற்குணம் தான் முக்கியமே தவிர,வெளியிலுள்ள பகட்டும்,படாடோபமும்,கவர்ச்சியும் முக்கியமில்லை.
பென்சிலை உபயோகிக்கும்போது எழுதுபவர்கள் தவறு செய்யலாம்.ஆனால் அதை ரப்பரால் அழித்துத் திருத்தி எழுதலாம்.அதுபோல வாழ்க்கையில்  நாம் தவறுகள் செய்கிறோம்.அவற்றை நாம் திருத்திக் கொள்ளலாம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கல்லில் எழுத்து

ஜேம்சும் வில்லியம்சும் நண்பர்கள்.ஒருநாள் இவர்களுக்கிடையே ஏற்பட்ட சிறு மன வருத்தத்தில் ஜேம்ஸ் வில்லியம்சைக் கன்னத்தில் அறைந்து விட்டான்.இதனால் வருத்தமடைந்த வில்லியம்ஸ்,''எனது உயிருக்குயிரான நண்பன் என்னைக் கன்னத்தில் அடித்து விட்டான்,''என்று கடல் மணலில் எழுதினான்.பின்னர் இருவருக்கும் சமாதானமேற்பட்டது.கடற்கரையில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென வந்த ஒரு பெரிய அலையில் வில்லியம்ஸ் கடல் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்டான்.உடனே ஜேம்ஸ் கடலில் குதித்து நண்பனைக் காப்பாற்றினான்.வில்லியம்ஸ் அவனுக்கு நன்றி தெரிவித்து பக்கத்திலிருந்த பாறையில்''எனது சிறந்த நண்பன் எனது உயிரைக் காப்பாற்றினான்.''என்று எழுதினான்.ஜேம்ஸ் கேட்டான்,''நான் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதினாய்.ஆனால் உன்னைக் காப்பாற்றியதைக் கல்லில் எழுதுகிறாயே?என்ன காரணம்?''வில்லியம்ஸ் சொன்னான்,''யாராவது உன்னைப் புண்படுத்தினால் அதை மணலில் எழுத்து.ஏனெனில் சிறிது நேரத்தில் அது அழிந்து விடும்.யாராவது நல்ல காரியம் செய்தால் அதைக் கல்லில் எழுத்து.அது என்றும் அழியாது இருக்கும்.''
பொதுவாக நாம் இதற்கு நேர் மாறாகத்தான் செய்கிறோம்.மக்கள் நல்ல காரியத்தை மணலில் எழுதினாற்போல மறந்துவிடுகிறார்கள்.ஆனால் ஒரு கெட்ட செயலுக்கு மாலை போட்டு மனப்புண் ஆறாமல் அதை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சூபி சிந்தனைகள்

மனம் என்ற ஒன்று நம்மிடம் உள்ளவரை மனதில்,'நான்'என்பது இருக்கும்.அந்த நான் என்ற உணர்வானது ஒவ்வொன்றையும் தனக்கு விரும்பிய விதத்தில் தான் கற்பனை செய்யும்.நிஜமான உண்மை அந்தக் கற்பனைக்கு முரணானது என்று தெரியும் நிலையில்,மனம் உண்மையைத்தான் தூக்கி எறியுமே தவிர,தனது கற்பனைகளை விட்டுத்தரவே  செய்யாது.உள் மனதிற்கு உண்மை என்ன என்று  தெரியும்.ஆனால் புற மனம் உண்மையை மறைப்பதற்கு வழி கிடைக்காதா என்று ஏங்கும்.
**********
குழந்தைகள்எதைக்கண்டாலும்குதூகலப்படுகின்றனர்.பரவசமடைகின்றனர். காரணம்,அவர்களின் மனதில்எதைப் பற்றிய கற்பனைகளும் இல்லை.அவர்கள் நிஜத்தை நேரிடையாக எதிர் கொள்கின்றனர்.நாம் ஒன்றைப் பற்றிக் கேள்விப்படும்போதே,நமது மனம் அது பற்றி அதீதக் கற்பனைகள் செய்யத் துவங்கி விடுகிறது.அதனால்,அதன் பின்னர் நேரில் பார்க்கும்போது அது எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும்,நம் மனதால், நிறைவை அடைய முடிவதில்லை.
**********
பணம்,பொருள்,புகழ்,இவற்றை அடையும் வேட்டை,ஆயுள் முழுவதும் தொடர்கிறது.ஆனால் இவற்றை அடையும் வரை இருந்த வேகம்,அடைந்தபின் அவனிடம் வடிந்துபோய்,அப்படி அடைந்தவற்றின் மீது ஒரு சலிப்பு கூட ஏற்படுகிறது.
**********
ஞானம் பெற்றபலரும் ஆலயங்களிலோ,வழிபாட்டுத் தளங்களிலோ,அன்றாடம் தொழும் பக்திமானாக இருந்தது இல்லை.ஆலயப்பணி,இறைவன்தொண்டு என்றெல்லாம் ஈடுபடும் பலரிடம் உள்ளூர ஊடுருவிப் பார்த்தால்,அகந்தை கொப்பளிக்கக்  காணலாம். தாங்கள்  புனிதமானவர்கள் என்ற செருக்கு இவர்களுடன் சேர்ந்து கொண்டு விடுகிறது.இயற்கை என்றுமே மனிதனின் புறச் சூழ்நிலைகளைப் பார்ப்பதில்லை.அவன் மனதை மட்டுமே பார்க்கிறது.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மனதுடன் யுத்தம்

மனம் என்பது விதவிதமான மாயைகளை தோற்றுவிக்கக்கூடியது.அதிலும்,மற்றவர்களிடம் இருந்து தான் வித்தியாசமானவன் என்ற உணர்வை மற்றவரது மனதில் எப்படியாவது விதைக்க அது முயன்று கொண்டே இருக்கும்.ஒரு முறை அத்தகைய உணர்வு ஒருவர் மனதில் புகுந்து விட்டால் அதிலிருந்து எளிதாக யாரும் மீள முடியாது. மனம் உடனே நம்மைச் சுற்றி ஒரு கோட்டையை எழுப்பிவிடும்.அதைத் தாண்டி நம் மனதுக்குள் எதுவும் நுழைய முடியாது.ஒவ்வொரு எண்ணமும்,ஒவ்வொரு கருத்தும் நான் என்ற உணர்வுக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே,மனதில் நுழைய முடியும்.இயற்கை பற்றிய,இறைவன் பற்றிய கருத்துக்களில் கூட நமக்குப் பிடித்தமானது மட்டுமே நம்மால் ஏற்கப்படும்.யுத்தத்தில் பெரிய யுத்தம்,ஒரு மனிதன் தன மனதுடன் நடத்தும் யுத்தமே.நாம் மனதிடம் அடிமைப் பட்டுக் கிடக்கிறோம் என்பதை உணரக் கூட நம்மால் முடிவதில்லை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இல்வாழ்க்கை

ஞானி கபீரைத்தேடி ஒருவர் வந்தார்.அவர் முகத்தைப் பார்த்த  கபீர்,''உங்களைப் பார்த்தால் உங்களுக்கு இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை என்று தெரிகிறது.''வந்தவர் ஆச்சரியப்பட்டு அது உண்மை என்றும்,தங்கள் வாழ்க்கை போராட்டமாகவும் நரகமாகவும் இருப்பதாகக் கூறினார்.
கபீர் இதற்கு பதில் சொல்லவில்லை.தன மனைவியை அழைத்து,இருவருக்கும் பால் கொண்டு வரும்படி சொன்னார்.அவர் மனைவி கொண்டு வந்து கொடுத்தார்.இருவரும் அருந்தினர்.வந்தவர் முகம் அஷ்டகோணலாக ஆனது.கபீர் முகம் கோணாமல் அமைதியாகக் குடித்துக் கொண்டிருந்தார்/அந்தப் பாலில் இனிப்பே இல்லை.உள்ளிருந்து அவர் மனைவி,''போதுமா?எல்லாம் சரியாக இருக்கிறதா?''என்று கேட்க ,''போதும்,ருசியாக இருக்கிறது,''என்றார் கபீர்.
வந்தவர் இப்போது கேட்டார்,''என் பிரச்சினைக்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே?''கபீர் குவளையைக் காட்டியபடி சொன்னார்,''இதுதான் என் பதில்.குறைகளைப் பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்துப் போவதே இல்வாழ்க்கைக்கு இனிய வழி.''
எதையும் பெரிது படுத்தாமல்,இதுதான் நடக்க வேண்டும்,இப்படித்தான் நடக்க வேண்டும் என எல்லாவற்றையும் தன விருப்பத்துக்கு வளைக்காமல்.அதன் விருப்பப்படி விட்டுக் கொடுத்துப் போவதே சிறந்தது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கால்பந்து

யானைகளுக்கும்,பூச்சிகளுக்கும் கால் பந்தாட்டப் போட்டி நடந்தது.பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விட்டார்கள்.அரை இறுதியில் யானைகள் பத்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னணியில் இருந்தன.இரண்டாம் பாதியில் பூச்சிக் குழுவின் சார்பில் பூரான்(நூறு கால் பூச்சி)இறங்கியது.உடனே முழு ஆட்டமும் தலைகீழாக மாறிவிட்டது.பூரான் யானைகளுக்கு இடையே புகுந்து வரிசையாகக் கோல் போட்டது.ஆட்டத்தின் இறுதியில் பூச்சிகள் குழு இருபதுக்கு பத்து என்ற கணக்கில் வென்றது.விளையாட்டு வீரர்கள் களத்தைவிட்டு வெளியேறும்போது,யானைக் குழுவின் தலைவன்,பூச்சிக் குழுவின்  தலைவனிடம்,''உங்கள் முன்னணி ஆட்டக்காரர் பூரானை ஏன் முதல் பாதியில் இறக்கவில்லை?''பூச்சித்தலைவன் சொன்னது,''அதுவா,பூரான் தன நூறு கால்களிலும் காலணிகளை அணிந்து கொள்ள அவ்வளவு நேரமாயிற்று.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

போலித்தோற்றம்

முல்லா தன் கழுதையின் மீது அமர்ந்திருந்தார்.கழுதை  மிக  வேகமாக  ஓடிக்  கொண்டிருந்தது .அது சந்தை வழியாக சென்று கொண்டிருந்தது.''முல்லா,எங்கே வேகமாகப் போகிறீர்?''என்று வழியில் சிலர் கேட்டனர்.முல்லா சொன்னார்,''என்னைக் கேட்காதீர்கள்.என் கழுதையைக் கேளுங்கள்.''''இது என்ன வேடிக்கையாயிருக்கிறது?''என்று அவர்கள் கேட்டனர்.முல்லா சொன்னார்,''இதில்  வேடிக்கை ஒன்றுமில்லை.இது ஒரு வீம்பு பிடித்த கழுதை.நான் சொல்லும் பாதையில் இது போகாது.முரண்டு பிடிக்கும்.எனவே நான் தனியாக இருக்கும்போது இதை உதைத்து நான் விரும்பும் இடத்துக்குக் ஓட்டிச்  செல்கிறேன்.ஆனால் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் என்னைப் பார்த்து  சிரிக்கிறார்கள். என் கழுதையை என்னாலேயே அடக்க முடியவில்லை என்று கேலி பேசுகிறார்கள்.கூட்டத்தைக் கண்டதும் கழுதையும்  அதிகப் பிடிவாதம் பிடிக்கிறது.இதிலிருந்து ஒரு பாடத்தை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.கூட்டம் உள்ள இடத்தில் கழுதை போகும் இடத்துக்கே நான் போகிறேன்.தனியாக இருக்கும்போது அதை நான் ஒரு வழி பண்ணி விடுகிறேன்.கூட்டம் இருக்கும் இடத்தில் அதன் போக்கிற்குப் போக விடுவதால்,குறைந்த பட்சம் நான் அதன் எஜமானனாக இருக்கிறேன் என்ற போலித் தோற்றத்தை எல்லோர் முன்னிலையில் ஏற்படுத்திக்  கொள்கிறேன்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சுதந்திரம்

புகழ்,கெளரவம்,நேர்மை ஆகியவை ஒரு மனிதனின் சுதந்திரத்தைக் குறைக்கும்.நல்லவர் தவறு செய்வதை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.மிகவும் நல்லவர் என்றால் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும்.அப்போது நீங்கள் உங்கள் சுதந்திரத்தை இழக்கிறீர்கள்.உங்கள் நேர்மைச் செயல்களும்,நற்பண்புகளும் ஒரு தங்கக் கூண்டைப்போல உள்ளன.நீங்கள் புன்முறுவல் கூடக் காட்ட முடியாது.உங்கள் செல்வாக்கையும்,கௌரவத்தையும் விடாது தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஓயாது கவலைப் பட்டுக் கொண்டிருப்பீர்கள்.இது உங்கள் சொந்த வாழ்க்கையை விட முக்கியமானதாகிவிடுகிறது.செல்வாக்கைத் தக்க வைக்க நல்லவராக இருப்பது பயனற்றது.செல்வாக்கும் கௌரவமும்  வாழ்க்கையில் வறுமையைவிட அதிகத் துயர் தரும்.விவேகிகள் செல்வாக்கும் புகழும் பெற்றிருந்தாலும் கூட அவை எதுவும் தனக்கு இல்லாததுபோல வாழ்வர்.ஒரு குழந்தையைப்போல இந்த உலகை ஒரு கனவாக,ஒரு வேடிக்கையாகக் கருதினால் சுதந்திரத்தை இழக்காது இருக்கலாம்.
                                           ---ஸ்ரீ ரவிசங்கர்ஜி.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நாத்தீகம்

வேத காலத்திலேயே நாத்தீகவாதமும் இருந்துள்ளது.பூர்வ மீமாம்சையை இயற்றிய ஜைமினி சொல்கிறார்,''வேதத்தில் குறிப்பிட்டுள்ள கர்மாக்களைசெய்தால் போதும்.அதற்கான பலனை அடைந்து விடலாம்.இப்பலனை அடைய தெய்வ அருள் தேவையில்லை.நாம் ஒரு காரியத்தை ஒழுங்காகச் செய்தாலே அதன் பலன் கிடைத்துவிடும்.தெய்வத்தின் தலையீடு தேவையில்லை.தெய்வம் பற்றிய சிந்தனையே  தேவையற்றது.இவ்வுலகம் எப்போதும் உள்ளது.நேற்று இருந்தது.இன்று உள்ளது.நாளையும் இருக்கும்.உலகம் ஏற்கனவே இல்லையென்றால் தானே அதை ஒருவர் உருவாக்கியிருக்க முடியும்?ஆகவே கடவுள் உலகை உருவாக்கினார் என்பது தேவையற்ற வாதம்.நீ உனது கடமையை செய்.பலனைப் பெறுவாய்.அதுவே போதும்.''
சார்வாகர்  என்பவர் முழுக்க நாத்திக வாதம் பேசுகிறார்.''உடலானது இந்திரியங்கள் மூலமாக இயங்குகிறது.உலகும் அதில் உள்ள அனைத்தும் இயற்கையாய்த் தோன்றுகின்றன.அவற்றைப் படைக்க ஒரு இறைவன் தேவையில்லை.நன்றாக சாப்பிட்டு,தூங்கி முடிந்த வரை வாழ்வின் அத்தனை இன்பங்களையும் அடைந்து விடவேண்டும்.கடவுள் வழிபாடு, சடங்குகள்,ஒழுக்கங்கள் அவசியம் இல்லாதவை.தீ சுடுவதும்,நீர் குளிர்ந்திருப்பதும் இயற்கைத் தன்மையால்;கடவுளால் அல்ல.மோட்சம்,சொர்க்கம்,ஆன்மா,பரலோகம் என்பவை கட்டுக் கதைகள்.வேதங்கள்,வேள்வி கற்றவரின் வயிற்றுப்பாட்டிற்காக ஏற்பட்டவை.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இருக்கலாம்

ஒரு ஏழையான சீனக் குடியானவன்,ஒரு அழகான கறுப்புக் குதிரை வைத்திருந்தான்.ஊராருக்கு அந்தக் குதிரையின் மீது வியப்பு.அந்த ஊர் மன்னர்  அந்தக் குதிரையைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்தக் குதிரைக்காக நிறையப் பணம் தருவதாகவும்,அந்தக் குதிரையை தனக்கு விற்று விடுமாறும் அவனிடம் கேட்டார்.அனால் அவன் சம்மதிக்கவில்லை.ஊர்க்காரர்கள்,'மன்னர் பெருந்தொகை கொடுக்க முன் வந்து நீஏற்கவில்லையே,நீ ஒரு முட்டாள்,'' என்று விமரிசித்தனர்.அதற்கு அவன்,'இருக்கலாம்,'என்று சுருக்கமாகப் பதில் சொன்னான்.சில நாளில் அக்குதிரை காணவில்லை.ஊர்க்காரகளவனிடம்,''நீ  பெருந்தொகையை இழந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இப்போதாவது உணர்கிறாயா?''என்று கேட்டனர்.அப்போதும் அவன்,'இருக்கலாம்,'என்றே பதில் கூறினான்.
சில நாட்களுக்குப்பிறகு,அந்தக் குதிரை மேலும் இருபது அழகிய கறுப்புக் குதிரைகளைக் காட்டிலிருந்து அழைத்து வந்தது.மக்கள்,''உன் குதிரையை விற்காதது உன் புத்திசாலித்தனம்,''என்று பாராட்டினர்.இதற்கும் குடியானவன்,'இருக்கலாம்,'என்று கூறினான்.அவனுடைய பையன் குதிரைகளுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும்போது குதிரையிலிருந்து கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான்.மக்கள்,''உன் பையனுக்கு அவ்வளவு விபரம் பத்தாது,''என்றனர்.குடியானவன்  வழக்கம்போலவே,'இருக்கலாம்,'என்றான்.
அப்போது சீனாவில் போர் வந்தது அதற்கு இளைஞர்களை ராணுவத்தில் சேரச்  சொல்லிக் கட்டாயப் படுத்தினர்.குடியானவன் மகன் மட்டும் கால் ஒடிந்திருந்தால் போருக்கு ஏற்றவனல்ல என்று விடப்பட்டான்.மக்கள் குடியானவனிடம் சொல்லினர்,''நீ மிகவும் அதிர்ஷ்டசாலி.உன் பிள்ளை ராணுவத்தில் சேராமல் தப்பி விட்டான்.''என்றனர் இப்போதும் அவன் சொன்னான்,'இருக்கலாம்.'
இவை எல்லாமே ஒப்பீடான சார்பு நிலைகளே.நன்கு உணர்ந்த எவரும்,எதனையும் முற்றிலும் சரியானது என்று கூற மாட்டார்கள். 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கிருபை

ஒருவன் பாவம் செய்ய அவனுடைய மனசு,சந்தர்ப்பம் இரண்டும் காரணமாகின்றன.நாம் பல பாவங்களைச் செய்ய முடியாமல் சந்தர்ப்பமே நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம்.எனவே ஒரு பாவியைப் பார்க்கும்போது,''அம்பிகே,...இந்தப் பாவத்தை நானும் கூட செய்திருக்கலாம்.ஆனால் அதற்கு சந்தர்ப்பம் தராமல் நீ கிருபை செய்தாய்.அந்தக் கிருபையை நீ இவனுக்கு செய்யம்மா...''என்று பிரார்த்திக்க வேண்டும்.
                                  ---காஞ்சிப் பெரியவர்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பகிர்வு

முல்லா தன குருவிடம் சொன்னார்,''  .இதோ,இவர்களெல்லாம் உங்களது சீடர்கள்.உங்கள் உபதேசப்படி இவர்கள் நடப்பதில்லை.அது தான் எனக்கு ஒரே வருத்தம்.''குரு கேட்டார்,''என்னுடைய எந்த உபதேசத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை?''முல்லா சொன்னார்,''எதுவானாலும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எங்களுக்கு  உபதேசித்தீர்கள்.நான் பகிர்ந்து கொடுக்கத் தயாராக இருந்தாலும்   இவர்கள் யாருமே என்னுடன் குடியைப் பகிர்ந்து கொள்வதில்லை.அதனால் நான் தனியே குடிக்க வேண்டியிருக்கிறது.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மருந்து

ஒரு துறவியிடம் வந்து ஒரு பெண் சொன்னாள்,''என் மாமியாரிடம் நான் படும்  துன்பம் தாங்க முடியவில்லை.என் வாழ்வை நரகமாக்குகிறாள்.அவளை சாகடிக்க ஏதாவது மருந்து கொடுக்க முடியுமா?''துறவி அவளுக்கு ஒரு மருந்தை எடுத்துக் கொடுத்துவிட்டு சொன்னார்,''இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமானால் ஒரு நிபந்தனை இருக்கிறது.இந்த மருந்தை அன்புடனும் கருணையுடனும் கொடுத்தால் தான் அது வேலை செய்யும்.மேலும் அப்படிச் செய்யும்போது உன்  மீதும்  யாரும்  சந்தேகப்பட மாட்டார்கள்.இரண்டு மாதத்தில் உன் மாமியார் இறந்து விடுவார்.''ஒரு மாதத்திற்குப்பின் அந்தப் பெண்  துறவியிடம் மீண்டும் வந்தாள். அவள் சொன்னாள்.''அய்யா,இப்போது என் மாமியார் என்னிடம் மிக அன்பாக இருக்கிறார்.அவர் சாகக்கூடாது.வேறு எதேனும் மருந்து கொடுங்கள்.'' துறவி சொன்னார்,''வேறு மருந்து தேவையில்லை அம்மா,உன் அன்பும் கருணையுமே சிறந்தமருந்து.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரிப்பே மருந்து

''அந்த வெள்ளாட்டுடன் எங்கே போகிறாய் தம்பி?''என்று கேட்டான் போலீஸ்காரன்.
'இதை வளர்க்க வீட்டுக்குக் கூட்டிப் போகிறேன்,'என்றான் பையன்.
''வீட்டிலா?''
'ஆமாம்'
''நாத்தமடிக்குமே/''
'அதனாலென்ன?நாத்தத்தைப் பற்றியெல்லாம் ஆடு கவலைப்படாது.'
**********
''காலம் சென்ற என் மனைவி உண்மையிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க  பெண்மணிதான்.''என்று ஒரு பூங்கா பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு,ஒரு வயதானவன்,தன் நீண்ட நாள் நண்பனிடம் சொல்லிக்  கொண்டிருந்தான்.மேலும் அவன் சொன்னான்,''மிகவும் மதப்பற்றுள்ள பெண் அவள்.ஒரு நாள் கூடக் கோவிலுக்குப் போகத் தவறியதில்லை.வீட்டிலும் காலை முதல் இரவு வரை ஒரே பஜனையும்,சங்கீதமும்தான்.''
'அப்படிப்பட்ட நல்ல பெண் எப்படி இறந்து போனார்கள்?'நண்பன் கேட்டான்.
''கழுத்தை நெறித்தே கொன்று விட்டேன்,''என்றான் அந்த வயோதிகன்.
**********
சாலையில் தன் நடுவயதான  மனைவியுடன் சென்று கொண்டிருந்த
கணவன்,அவளிடம் சொன்னான்,''அந்த அழகிய இள மங்கை என்னைப் பார்த்து புன்னகைப்பதைப் பார்த்தாயா?''
மனைவி சொன்னாள்,''இது என்ன பிரம்மாதம்?முதல் தடவை நான் உங்களைப் பார்த்தபோது வாய் விட்டே சிரித்தேனே!''
**********
ஒரு பெண் மருத்துவமனையில் உள்ள விசாரணைப் பகுதிக்கு சென்று கேட்டாள்,''கண்டைனர் லாரியில் அடிபட்ட என் கணவர் எந்த வார்டில் இருக்கிறார்?''அங்கிருந்தவன் சொன்னான்,''அவர் 256,257,258 வார்டுகளில் இருக்கிறார்.''
**********
ஒரு நாய் மூன்று பேருடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததை வியப்புடன் கவனித்த ஒருவன் நாயின் திறமையைப் பாராட்டினான். நாயின் சொந்தக்காரர் சொன்னார்,''அதற்கு அவ்வளவு திறமை கிடையாது,''ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்  சொன்னார்,''நல்ல சீட்டு அதற்கு வரும்போதெல்லாம் அது தன் வாலை ஆட்டி விடுகிறது.''
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மனசாட்சி

முன்பெல்லாம் யார் யாரை ஏமாற்றிக் கொண்டு இருந்தாலும்,அநியாயம் இழைத்துக் கொண்டிருந்தாலும்,அவனவனுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறது,அதனுடைய உறுத்தல் விடாது.அதையே ஒரு ஆறுதலாக,தேறுதலாகச் சொல்வதுண்டு.கடவுள் எங்கும் நிறைந்திருக்கும் முறை,அவனவன் மனதையே அவனவனுக்கு சாட்சியாக நிறுவியிருப்பதுதான்.மனசாட்சிப்படி கேட்கிறானோ இல்லையோ,அவன் எண்ணத்தின்,செய்கையின்,நியாய,அநியாய உணர்வைத் தப்ப முடியாது.அந்த உணர்வே தான் ஆண்டவன்.
வரவர நடப்பைப் பார்த்தால்,மனசாட்சியே கொல்லப்பட்டு விட்டதோ அல்லது அதன் குரல் எட்டாத ஆழத்தில் புதைக்கப்பட்டு விட்டதோ என்று திகைப்பாய் இருக்கிறது.அதனாலேயே மனோதைரியம் கலகலத்துப் போய்விடுகிறது.
அல்லது வீசை,பலம்,கிலோகிராம்,கிராமாகவும் ;படி ,ஆழாக்கு,லிட்டர் மில்லியகவும் மாறி விட்டாற்போல் நியாயத்துக்கும் எடை மாறிவிட்டதா,சாஸ்திர எடையிலிருந்து சமுதாய எடையாக?காலத்தின் மேல் பழியைப் போட்டுக்கொண்டு,சௌகர்யம் தான் நியாயம் என்ற புது எடையில்,நியதிகளை மாற்றிவிட்டதோ?
                                                     லா.ச.ரா.எழுதிய சிந்தா நதி எனும் நூலிலிருந்து.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கனவு

முல்லா,ஒரு நாள் இரவு,ஒரு மனிதன் தனக்கு கொஞ்சம் பணம் தர விரும்புவதைப்போலக் கனவு கண்டார்.அவன் மிகவும் தாராளமாக இருந்தான்.ஆகவே முல்லா,ஒரேயடியாக ஆயிரம் ரூபாய் கொடு என வலியுறுத்தினார்.அந்த ஆளோ  ஐநூறு ரூபாய் வாங்கிக்கொள் என்றான் பின் அறுநூறு வாங்கிக்கொள் என்றான்.ஆனால் முல்லா முழுதாக ஆயிரம் ரூபாய் வேண்டும் என்பதில் விட்டுக் கொடுக்காமல் இருந்தார்.அவன் பெருந்தன்மையானவனாகத் தெரிவதால் ஆயிரம் ரூபாய் தரச் சம்மதிக்கலாம்  எனக்கருதினார்.எனவே ஏன் குறைக்க வேண்டும்?கடைசியில் அந்த ஆள் 950 ரூபாய் தர சம்மதித்தான்.ஆனால் முல்லாவோ ஆயிரத்திலிருந்து இறங்கவில்லை.'ஆயிரம் ரூபாய் தான்'என்று சப்தம் போட்டுச் சொன்ன முல்லா விழித்துக்கொண்டார்.கண்களைத் திறந்தார்.ஆளும் இல்லை பணமும் இல்லை.உடனடியாக அவர் கண்களை மூடிக்கொண்டு சொன்னார்,''கோவிச்சுக்காதே.900,......800,.......700,.....600,....''ஆனால்  அங்கு  யாரும்  இல்லை .

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மருந்து

முல்லா கால் நடை மருத்துவரிடம் போனார்.''என்  குதிரை  ரொம்பவும்  சோம்பேறி ஆகிவிட்டது.ஓடவும் மாட்டேங்குது ,நடக்கவும் மாட்டேங்குது.ஒரு சக்திவாய்ந்த மருந்தைக் கொடுத்து அதை ஓடச் செய்யுங்கள்.''என்று மருத்துவரிடம் சொன்னார்.மருத்துவர் சொன்னார்,''இதற்கு ஒரு கசப்பான மருந்து இருக்கிறது.ஆனால் நேரடியாகக் கொடுத்தால் குதிரை குடிக்காது.எனவே இந்த மூங்கில் குழாயை எடுத்துக்கொள்.இந்த மருந்தை குழாயில் நிரப்பு.குழாயின் ஒரு முனையை குதிரையின் வாய்க்குள் வை. மறுமுனையை உன் வாயில் வைத்துக்கொள்.பின் மருந்து குதிரையின் தொண்டைக்குள் இறங்கும்படியாக ஊதிவிடு.''
முல்லாவும் வைத்தியர் சொன்னதுபோல செய்துகொண்டே வந்தார்.ஆனால் பாவம் முல்லா.அவர் ஊதுமுன் குதிரை ஊதிவிட்டது.மருந்து முல்லாவின் தொண்டைக்குள் இறங்கிற்று உடனே மருந்து வேலை செய்ய ஆரம்பித்தது.என்பது வயதான முல்லா,தன தோட்டத்தின் வேலியைத் தாண்டிக் குதித்து ஓட ஆரம்பித்தார்.யாரும் பிடிக்க முடியாத வேகத்தில் ஓடினார்.அதைப்பார்த்த அவர் மனைவி கவலையுடன் அவர் பின்னே ஓடினார்.ஆனால்  பிடிக்க முடியாதலால்,சற்று நேரம் யோசித்துவிட்டு மருத்துவரிடம் விரைந்தார்.''உடனடியாக அவருக்குக் கொடுத்ததைப்போல இரண்டு மடங்கு மருந்து கொடுங்கள்.அப்போது தான் நான் அவரைப் பிடிக்க முடியும்.''என்றார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சமய மறுப்பாளன்

முல்லாவின் புகழ்  மீது பொறாமை கொண்ட  சில பேர் முல்லா,மதத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார் என்றும்
அவர் சமய மறுப்பாளர் ஆகிவிட்டார் என்றும் சுல்தானிடம் வழக்குத் தொடுத்தனர்.சுல்தான் அதுபற்றி முல்லாவிடம் விளக்கம் கேட்டார்.முல்லா உடனே அந்த சபையிலிருந்த முக்கியமான பத்து  புத்திசாலிகளைத் தேர்ந்தெடுக்குமாறு சுல்தானிடம் வேண்டிக்கொண்டார்.பத்து புத்திசாலிகளைத் தேர்ந்தெடுப்பதில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.இறுதியில் பத்துபேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அந்த பத்துப்பேரிடமும் எழுதுகோலையும் தாளையும் தந்தார் முல்லா.ஒவ்வொருவரும் கடவுளைப்பற்றி அவர்கள் நினைப்பதை எழுதித்தரக் கூறினார்.பத்துப்பேரும் பத்துவிதமான பதில்களை எழுதித் தந்தனர்.அவற்றை சுல்தானிடம் வாசித்துக் காட்டிய முல்லா,,''இறைவனைப்பற்றி எழுதுவதிலேயே இத்தனை கருத்துவேறுபாடுகள் உள்ள இவர்கள்,நான் சமய மறுப்பாளன் என்ற கருத்தில் மட்டும் ஒன்றுபட்டுள்ளனர்.முதலில் இவர்கள் ஒன்று சேர்ந்து இறைவனைப் பற்றிய ஒருமித்த  கருத்துக்கு வரட்டும்.பிறகு அதை நான் ஆதரிப்பவனா,எதிர்ப்பவனா என்பதைப் பற்றிப் புகார் கூறட்டும்.''என்றார்.புகார் கூறியவர்கள் அடங்கிப்போயினர்.
சித்தாந்தங்களோ  அவற்றிடையே உள்ள வேறுபாடுகளோ பிரச்சினை அல்ல. சித்தாந்தவாதிகள்,தம் எண்ணங்களையே கடவுளின் விருப்பமாகச் சித்தரிக்க முயல்கிறார்கள்.நீ அறியாததை,'நான் அறியாதது இது,' என்றே கூறு. அதன் மீது உன் ஊகங்களைத் திணித்துவிடாதே.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எவரிடமும் சொல்லாதே.

கலிபா அல் மாமுன் அழகான அரபுக் குதிரை ஒன்று வைத்திருந்தார்.ஓமா அதை வாங்க ஆசைப்பட்டான்.அதற்கு ஈடாக பல ஒட்டகங்களும்,பெரும் பணமும் தருவதாகச் சொன்னான்.எனினும் மாமுன் அதற்கு இணங்க வில்லை.எப்படியாவது அந்தக் குதிரையை அடைய வேண்டும் என்று ஓமா முடிவு செய்தான்.மாமுன் குதிரையில் வரும் பாதையில் அவன் அழுக்கு உடைகளுடன் குப்புற விழுந்து கிடந்தான்.அந்த வழியாக வந்த மாமுன்,இரக்கப்பட்டு அவனைத் தூக்கினார்.ஓமா,'அய்யா,நான் பல நாள் பட்டினி.நிற்கக் கூட முடியவில்லை.'என்றான்.மாமுன் அவனைத் தூக்கி குதிரையின் மீது உட்கார வைத்தார்.மறுகணமே குதிரையில் பறந்தான்,ஓமா. திகைத்துப்போனகலிபா சட்டென்று சுதாகரித்துக் கொண்டார்.அவர்,''நில்.ஒரு கணம் நில்.நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப்போ.''என்றார் உரத்த குரலில்.குதிரையில் சென்றுகொண்டே ஓமா என்னவென்று கேட்டான்.''உனக்கு இந்த குதிரை எப்படிக் கிடைத்தது என்று எவரிடமும் சொல்லாதே.அப்படி நீ சொன்னால்,ஒரு வேலை உண்மையாகவே யாராவது உடல் நலமின்றி சாலையோரம் விழுந்து கிடந்தால் கூட மக்கள் அவர்களுக்கு உதவி செய்ய அஞ்சுவார்கள்.''என்றார் அல் மாமுன்.
தனது குதிரை தன்னை ஏமாற்றிக் களவாடப்பட்டது என்பதைப் பற்றிக்கூட  மாமுன் கலங்கவில்லை.மக்களிடையே இதுபோன்ற செய்தி பரவினால்,மற்றவர்களுக்கு உதவு செய்பவர்களும் செய்யாமல்போய்விடக்கூடுமே என்று தான் வருந்தினார்.
                                                                    ----சூபி கதை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொறுப்பு

துறவு ஹபீப் ஆஷ்மி ஒரு நாள் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.அங்கே தன உடைகளைத் தரையில் கழற்றி வைத்துவிட்டு ஆற்றுக்குள் இறங்கினார். அப்போது அங்கே வந்த ஒருவன் உடைகளைக் கண்டு யார் குளிப்பது எனப் பார்த்தான்.ஆஷ்மி குளித்தஇடம் மறைவாக இருந்ததால் யாரோ கவனமில்லாது வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்று எண்ணி அங்கேயே காவலுக்கு நின்றான்.ஆஷ்மி வெகு நேரம் நீராடிய பின் கரைக்கு வந்தபோது அவன்,'இப்படிப் பாதுகாப்பின்றி உடைகளை விட்டுச் செல்லலாமா?யாரேனும் களவாடிச் சென்றால் உங்கள் கதி என்ன?'என்று கேட்டான்.ஆஷ்மி சிரித்துக் கொண்டே சொன்னார்,''ஓஹோ,நான் உடைகளை,'அவன்'பொறுப்பில் விட்டுச் சென்றிருந்தேன்.'அவன்;அந்தப் பொறுப்பை உன்னிடம் கொடுத்துவிட்டான் போலும்.''

                                                                      ---சூபி கதை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சோகம்

எந்த சம்பவமும் நம்மை சோகப்படுத்துவதில்லை.ஆனால் உண்மைகளை ஏற்க மறுத்துவிட்டு நம் எதிர்கால விளைவுகளைப் பற்றிக் கற்பனையில் மூழ்கும் போதுதான் சோகம் படிப்படியாக நம்மைக் கவ்விக் கொள்கிறது.குறிப்பிட்ட ஒரு சம்பவம் நம் சிந்தையைக் கிளறிவிட சோகம் ஏற்படுகிறது.நிறைவேறாத விருப்பு வெறுப்புகள் ஏராளமாக இருப்பதால் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவரும் சோகப்படுகிறார்கள்.ஒரு காரியம் நிறைவேறாது என்று  தெரிந்தவுடன்  முயற்சியைக்  கைவிடுகிறோம் .அது நமக்குள்ளே புதைந்துபோய் சோகத்திற்கு வித்திட்டு விடுகிறது.உண்மைகளை ஏற்க மறுப்பதே பல பிரச்சினைகளுக்குக்  காரணமாக அமைகிறது.கசப்பான முடிவுகளைத் தள்ளிப் போடுவதற்கு என்ன காரணம்?இனிமையான சூழ்நிலைகளை மட்டுமே மனம் விரும்புகிறது.இது குழந்தைத்தனமான பக்குவமற்ற  பார்வை.நம்மைப் பற்றிய அபிப்பிராயத்தை இழப்பது தான் வாழ்க்கையில் பெரிய சோகம்.அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தேவையில்லாமல் கவலைப்பட்டு போலி வாழ்க்கை வாழ்வது அதைவிடப் பெரிய சோகம்.நாம் எதிர்பார்த்த முடிவு கிடைத்துவிட்டால் அதை இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்.எதிர்பார்ப்பிற்குக் குறைவாகவோ,மாறுபட்டோ இருந்தால் நாம் ஒடுங்கி உடைந்து போகிறோம்.முடிவு எப்படியிருந்தாலும் ஒரே மன நிலையில் இருப்பதுதான் கர்ம  யோகிக்கு அடையாளம்.
                                                             --சுவாமி தயானந்த சரஸ்வதி 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சபாஷ்

இந்தியாவை முகலாய மன்னர்கள் ஆண்ட காலத்தில் படையெடுத்து வந்தார்  பாரசீக மன்னர் ஷா அப்பாஸ்.அப்போது ஜகாங்கீர் ஆட்சி காலம்.காந்தகார் வரை வந்துவிட்ட எதிரிப்படைகளை ஜகாங்கீர் படைகள் முறியடித்துவிட்டன.அதை அறிந்ததும் ஜகாங்கிருக்கு ஒரு ஓலைஅனுப்பினார் ஷா.தன படைகள் ஜகாங்கீர் நாட்டின் மீது படையெடுத்தது,தனக்குத் தெரியாமலே நடந்துவிட்டது என்றும் ஜகாங்கிருடன் தன நட்புறவு கொள்ளவே விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.அது கேட்ட ஜகாங்கீர்,''இது ஷா அப்பாஸ் வேலை,''என்று தன மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.ஆகவே மெச்சத்தக்க காரியத்தை செய்தவர் ஷா அப்பாஸ்.இந்த மாதிரி காரியங்களை யார் செய்தாலும் ,'ஷா அப்பாஸ்,'என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.ஷா அப்பாஸ் என்ற வார்த்தை ஷபாஸ் என்று உருதுவில் மாறி பிறகு சபாஷ் என்று தமிழில் மருவிவிட்டது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அனுபவங்கள்

ஒரு பயணி,டாக்சியில் சென்று கொண்டிருக்கும்போது,அதன் ஓட்டுனரிடம் ஏதோ கேட்பதற்காக,அவன் முதுகில் லேசாகத் தட்டிக் கூப்பிட்டான்.உடனே ஓட்டுனர் நிலை குலைந்து,இன்னொரு காரை நெருங்கி மோதாமல் தப்பித்து,அடுத்து வந்த ஒரு லாரியின் மீது இடிக்காமல் தப்பித்து,ஒரு மரத்தின்  மீது மோதுமுன் காரை நிறுத்தினான்.சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.ஓட்டுனர் பயணியிடம் சொன்னார்,''என் உயிரே போகும் அளவுக்கு என்னைக் கலங்க வைத்து விட்டாயே?''பயணி மன்னிப்புக் கேட்டுக்கொண்டே,  ''உன் முதுகில் லேசாகத் தட்டியது இவ்வளவு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும்  என்று நான்  நினைத்துக்கூட பார்க்கவில்லை.''ஓட்டுனர் சொன்னார்,''இல்லை,இது என்னுடைய தவறுதான்.இன்று தான் முதல்முதலாக நான் டாக்சி ஓட்டுகிறேன்.  கடந்த பத்தாண்டுகளாக நான் வேனில் பிணங்களைத்தான் எடுத்துப் போய்க்கொண்டிருந்தேன்.''
நமது அனுபவங்கள் கடந்த காலத்தால்  பாதிக்கப் படுகின்றன.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வாழ்ந்தேனா?

முதலில்,உயர்நிலைப் பள்ளியில்  முதல் மாணவனாக தேற வேண்டும் என்றுஉயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பின்,சிறந்த கல்லூரியில் சேர வேண்டும் என்று உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பிறகு,நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பின்,நல்ல ஒரு பெண்மணியைத் திருமணம் செய்ய  உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பிறகு குழந்தைகள்பெறுவதற்காக உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பின்,என் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பிறகு,நான் ஓய்வு பெற வேண்டும் என்று உயிரை விட்டுக் கொண்டிருந்தேன்.
பின்,திடீரென எனக்குள் இருந்த உள்ளுணர்வு பளிச்சிட்டது.
நான் வாழ்க்கையை வாழ்ந்தேனா?நான் வாழ்வதையேமறந்து விட்டேனே!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அசரீரி

ஒரு படகில் பல போணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அதில் ஒரு ஞானியும் இருந்தார்.அவரைப் பார்த்து மற்ற பயணிகள் கேலியும்,கிண்டலும் செய்து வந்தனர்.அவர் தியானத்தில் அமர்ந்தார்.இந்நேரம் அவர் எதுவும் செய்ய மாட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட மற்றவர்கள்,அவரை இஷ்டம் போல அடித்தனர்.அப்போதும் அவர் தியானத்தில் இருந்தார்.அவர் கண்களிலிருந்து அன்பு, கண்ணீராய் வந்து கொண்டிருந்தது.அப்போது ஆகாயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது.''அன்புக்குரியவனே,நீ விரும்பினால் இந்தப் படகை நான் கவிழ்த்து விடுகிறேன்!''அப்போதும் சாதுவின் தியானம் கலையவில்லை.அடித்தவர்கள் இப்போது என்ன நடக்குமோ என்று பயந்தார்கள்.விளையாட்டு வினையாயிற்றே என்று நினைத்து அவர்கள்ஞானியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.சாதுவின் தியானம் முடிந்தது.சுற்றிலும் அச்ச உணர்வுடன் மற்றவர்கள் நிற்பதைப் பார்த்தார்.''கவலைப்படாதீர்கள்,''என்று அவர்களிடம் கூறிவிட்டு ஆகாயத்தை நோக்கி வணங்கி,''என் அன்பான கடவுளே,நீ ஏன் சாத்தானின் மொழியில் பேசுகிறாய்?நீ விளையாட வேண்டும் என்று விரும்பினால் இந்த மக்களின் புத்தியை மாற்று.அதை விட்டுவிட்டு படகைக் கவிழச்செய்வதால்
என்ன பயன்?''என்று கேட்டார்.ஆகாயத்திலிருந்து பதில் வந்தது,''நான் மகிழ்ச்சி அடைந்தேன்.நீ சரியான உண்மையை அறிந்து கொண்டாய்.முன்னால் ஒலித்தது என் குரல் அல்ல.எவன் ஒருவன் சாத்தானின் குரலை அறிந்து கொள்ள முடியுமோ.அவனால்தான் என் குரலையும் உணர முடியும்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மனிதனும் சிங்கமும்

தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி ஒரு மனிதனுக்கும் ஒரு சிங்கத்திற்கும் ஒரு நாள் தர்க்கம் ஏற்பட்டது.ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல பக்கத்தில் ஒரு சிலை இருந்தது.''அதைப் பார்த்தாயா?யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.''என்றான் மனிதன்.
''ஓ,அது மனிதன் செய்த சிலை.ஒரு சிங்கம் சிலை செய்யுமானால்,மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது,தான் நிற்பது போலச் செய்திருக்கும்.''என்று சொல்லியது சிங்கம்.
 தனக்கென்றால் தனி வழக்குதான்.
                                                          --ஈசாப் நீதிக் கதை.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முன் ஜாக்கிரதை

ஒரு மனிதன் சாகும் தருவாயில் கடவுளை தொழுது கொண்டிருந்தான்.திடீரென அவன் சாத்தானைத் தொழ ஆரம்பித்தான்.அவன் மனைவி,''என்ன உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?சாத்தானைத் தொழுகிறீர்களே?''என்று கேட்டாள்.அவன் சொன்னான்,''என் மரணத்திற்குப்பின் நான் எந்த அபாயத்தையும் சந்திக்க விரும்பவில்லை.இறந்தபின் நான் எங்கே செல்வேன் என்பது எனக்குத் தெரியாது.கடவுளை சந்திக்க நேர்ந்தால் நான் அவரை வணங்கி இருப்பதால்  எனக்கு நன்மை செய்வார்.நான் சாத்தானை சந்திக்க நேர்ந்தால் அவரையும் நான் துதித்திருப்பதால் தீங்கு செய்ய மாட்டார்.சாத்தானைத் தொழுததில்  எனக்கு ஒன்றும் சிரமமில்லை.இருவரையும் சேர்ந்து சந்தித்தாலும் பிரச்சினை  எதுவும் இருக்காது.இருவரையும் சந்திக்காவிட்டாலும் நஷ்டம் ஏதும்  இல்லை.நான் எல்லா சாத்தியக்கூறுகளையும்  ஆராய்ந்து முன்ஜாக்கிரதையாக இந்த முடிவினை எடுத்தேன்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சொர்க்கம்

ஒரு அரசியல்வாதி சாகும் தருவாயில் நினைத்தார்,''நான் செய்த பாவங்களுக்குநரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்.''ஆனால் அவர் இறந்தவுடன் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டார்.அவருக்கு ஒரே வியப்பு.ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்று நினைத்தார்.அங்கிருந்தவர்களிடம் கேட்டார்,''வாழ்நாள் முழுவதும் நான் நல்லசெயல்கள் எதுவும் செய்ததில்லை.எனக்கு எப்படி சொர்க்கம்...?''அவர்கள் சொன்னார்கள்,''வாழ்நாள் முழுவதும் நீ நரகத்தில் இருந்துவிட்டாய்.அதனால் உனக்கு சொர்க்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.மேலும் நீ இருந்தது ஒரு நவீன நரகம்.இங்கு எங்கள் நரகம் எல்லாம் பழமையாகவே இருக்கிறது.இன்னும் இங்கே பழைய தண்டனைகளையே அளித்துக் கொண்டு இருக்கிறோம்.பூமியில் நீங்கள் அதையெல்லாம் நவீனமாக மாற்றிவிட்டீர்கள்.உன்னை நரகத்தில் போட்டால் இது தான் நரகமா என்று எங்களைப் பார்த்து சிரிப்பாய்.அதனால் கடவுளுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் உன்னை சொர்க்கத்திற்கு அனுப்பச் சொல்லிவிட்டார்.''
மக்கள் இன்னும் நரகம் எங்கோ இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.நாம் வாழ்வதே நரக வாழ்க்கைதான்.இதை விடக் கொடிய நரகம் இன்னொன்று இருக்க முடியாது.ஆனால் நாம் வாழும் இடத்தை சொர்க்கமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தொந்தரவா?

ஞானி ஒருவரிடம் விளக்கங்கள் கேட்ட ஒருவன் அடிக்கடி வந்து சந்தேகங்கள் கேட்ட போதெல்லாம் ஞானி விரிவாக விளக்கினார்.அவன் ஞானியிடம்,'ஐயா, நான் உங்களுக்கு ஒரு தொந்தரவாகத் தெரியவில்லையா?'என்று கேட்டான். ஞானி அவனிடம் அங்கிருந்த எரியும் விளக்கொன்றை எடுத்து மற்ற விளக்குகளை ஏற்றுமாறு கூறினார்.அதன்படி சில விளக்குகளை ஏற்றினார் வந்தவர்.ஞானி கேட்டார்,''முதல் விளக்கிலிருந்து நெருப்பை எடுத்து மற்ற விளக்குகளை ஏற்றியதால் இந்த விளக்குக்கு நஷ்டம் ஏதாவது உண்டா?'''இல்லை,'என்றார் வந்தவர்.;;அதேபோல நீங்களோ மற்றவர்களோ எத்தனை முறை நாடி வந்தாலும் அதனால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை.அதனால் தயங்காமல் எத்தனை தடவை வேண்டுமானாலும் வாருங்கள்.''என்றார் ஞானி அன்புடன்.
                                                                     --சூபி கதை

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கொள்ளை நோய்

எகிப்தின் பாலைவனத்தில் அமர்ந்திருந்த ஒரு ஞானி,சுழன்று சுழன்று வீசிய காற்றுக்கிடையில்,'கொள்ளைநோய்'செல்வதைப் பார்த்து,அந்த நோயிடம்,''எங்கு செல்கிறாய்?''என்று கேட்டபோது,'டமாஸ்கசில் ஆயிரம் பேரின் உயிரைப் பறிக்கச் செல்கிறேன்'.ஆனால் டமாஸ்கசில் கொள்ளை நோய்பரவிஇருபதாயிரம்பேர்இறந்தார்கள்..ஞானி,'கொள்ளைநோய்'திரும்பச் செல்வதைப்  பார்த்து,''நீ என்னிடம் பொய் சொல்லியிருக்கிறாய்.ஆயிரம் பேர் என்று சொல்லிவிட்டு இருபதாயிரம் பேரை பலி வாங்கியிருக்கிறாய்.''கொள்ளைநோய் சொன்னது,'உண்மையில் என்னால் இறந்தவர்கள் ஆயிரம் பேர் தான்.தாங்களும் இறந்து விடுவோம் என்ற அச்சத்தினால் தான் மற்றவர்கள் பலியானார்கள்.'

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கட்டிப்போடு

ஞானி ஒருவர் பாலைவனச் சோலை ஒன்றில் சிறிய கூடாரம்   ஒன்றில்   தங்கி இருந்தார்.நெடுந்தொலைவிலிருந்து அவரைக் காண ஒருவன் ஒட்டகத்தில் வந்தான்.கூடாரத்தினுள் வந்ததும் ,
பயணி: உங்களைக் காண வெகு தொலைவிலிருந்து வந்துள்ளோம்.
ஞானி: எப்படி வந்தாய்?
பயணி: ஒட்டகத்தில்
ஞானி: ஒட்டகம் எங்கே?
பயணி: வெளியில் நிறுத்தி உள்ளேன்.
ஞானி: அதனைக் கட்டிப் போட்டு வைத்தாயா?
பயணி: இல்லை.எனக்கு இறைவனிடம் முழு நம்பிக்கை உண்டு.அவர் பார்த்துக் கொள்வார்.
ஞானி:முட்டாள்,போ,போய் உன் ஒட்டகத்தைக் கட்டிப்போடு.கடவுளுக்கு நிறைய வேலைகள் உண்டு.உன் ஒட்டகத்தைப் பாதுகாக்க அவருக்கு நேரம் இல்லை.
இக்கதை பின்னர் உலகப் புகழ் பெற்ற பொன்மொழி ஆனது.''அல்லாவிடம் பூரண நம்பிக்கை வையுங்கள்;ஆனால் ஒட்டகத்தைக் கட்டிப்போட மறவாதீர்.''
                                                                               --சூபி கதை

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரிப்பே சிறந்தது.

கஞ்சன் ஒருவன் படுக்கையிலிருந்து எழுந்ததும் தன மனைவி இறந்து கிடப்பதைப் பார்த்தான்,உடனே என்ன செய்வது என்று யோசித்தான்.உடனே சமையல்காரியைக் கூப்பிட்டான்.அவளிடம்,''இன்று காலை சிற்றுண்டிக்கு ஒரு முட்டைபோதும்,''என்று சொன்னான்.
**********
டாக்டர்  நோயாளியிடம் சொன்னார்,''இன்று முதல் நீங்கள் உப்பு,உறைப்பு,காரம் எதுவுமில்லாத உணவை தான் உன்ன வேண்டும்.'' என்றார்.நோயாளி ,''கல்யாணம் ஆனதிலிருந்து  அப்படித்தானே  டாக்டர் சாப்பிட்டு வருகிறேன்.''என்றார் பரிதாபமாக.
**********
ஒருவர் தன நண்பன் வீட்டுக்கு சென்றார்.அங்கு நண்பர் தன் நாயுடன் செஸ் விளையாடிக் கொண்டிருந்தார்.''அட,இவ்வளவு புத்திசாலியான நாயை நான் பார்த்ததில்லை,''என்று நண்பனிடம் சொன்னார்.நண்பர் திகைத்துப்போய் , ;நீ நினைப்பது போல அவ்வளவு புத்திசாலியான நாய் இல்லை.பத்து முறை விளையாடியதில் மூன்று முறை என்னிடம் தோற்றுவிட்டது,'என்றாரே பார்க்கலாம்.
**********
ஒருவர்தன பழைய புத்தகங்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த போது ஒரு பழைய ரசீது ஒன்றைப் பார்த்தார்.அது ஒரு தையற்கடையில்ஏழு  ஆண்டுகளுக்கு முன் தைக்கப்போட்ட ஒரு சட்டைக்கான ரசீது.எப்படியோ சட்டையை வாங்க மறந்து விட்டிருக்கிறார்.நம்பிக்கை இல்லாவிடினும் எதற்கும் ஒரு வாய்ப்பு பார்த்துவிடலாம் என்று கருதி தையற்கடைக்கு சென்று ஒன்றும் சொல்லாமல் ரசீதை மட்டும் நீட்டினார்.கடைக்காரரும்  அதை வாங்கிக்கொண்டு சட்டையைத் தேட கடைக்குள் சென்றார். இவருக்கோ பயங்கர  டென்சன்.கொஞ்ச நேரம் கழித்து கடைக்காரர் அசடு வழிய சிரித்துக்கொண்டே வந்து சொன்னார்,''சார்,சட்டை ரெடியாக இருக்கிறது.ஆனால் காஜா மட்டும் இன்னும் போடவில்லை.நாளைக்கு வந்து சட்டையை வாங்கிக் கொள்கிறீர்களா?''.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அடிக்கடி வயிற்றில் பிரச்சினையா?


* சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.    * உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
* தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.
* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்.


http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மன அழுத்தம் நீங்க..


வாசனைத் திரவியங்களில் அரசி என்று இதைச் சொல்வார்கள். டீயில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனி! உணவின் ருசியை அதிகமாக்கும். செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டும். ஏலக்காயை நசுக்கி, சும்மாவே வாயில் போட்டு மெல்வது சிலருக்குப் பழக்கம். நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல.
ஏலக்காய்க்கும் மூக்கடைப்பு சிகிச்சைக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆமாம்! ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே திறக்கும்.
வெயிலில் அதிகம் அலைவதால் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம் உண்டாகும். நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, நன்கு கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால், இந்த மயக்கம், தலைசுற்றல் உடனே நீங்கும்.
விக்கலை உடனே நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்ட வேண்டும். மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால், விக்கல் உடனே நின்றுவிடும்.
மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், "ஏலக்காய் டீ" குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து (ஒரு கப் டீக்கு இரண்டு ஏலக்காய் போதுமானது!) டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம்!
வாயுத் தொல்லையால் பொது இடங்களில் அவமானத்தைச் சந்திக்கிறவர்கள், கூச்சமின்றி நாடவேண்டிய மருந்து ஏலக்காய். ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத்தொல்லை எப்போதும் இருக்காது.
குழந்தைகளுக்கு வாந்தி பிரச்சினை இருந்தால் பயப்படாமல் ஏலக்காயை மருந்தாகத் தரலாம். இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப்பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவுங்கள். இப்படி மூன்று வேளை செய்தால், வாந்தி உடனே நிற்கும்.


http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net