Friday, November 11, 2011

பொன்மொழிகள்-21

எந்தப் பிரச்சினையையும் கடக்கும்போதுதான் வலிக்கும்.பின்னர் நினைக்கும்போது அது ஒரு சுகமான தழும்பு.
**********
வெற்றி,தோல்வி இரண்டுமே விளையாட்டின் முடிவுகள்தான்.நமக்குத் தேவை விளையாட்டின் முடிவுகள் அல்ல.விளையாடும்போது கிடைக்கும் அகமகிழ்வும் பரபரப்பும்தான்.வெற்றி தரும் கரவொலி மைதானத்தில் தங்கி விடுவதில்லை.அது ஒரு நிமிட நேர மகிழ்ச்சி.
**********
தொட்டால் சிணுங்கி இலை கூட நாம் விரலால் தொட்டால்தான் சுருங்கிக் கொள்கிறது.ஆனால் ஒன்றைப் பற்றி மோசமாக நினைத்தாலே போதும்.உடனே மனம் சுருங்கி விடுகிறது.மனிதன் தான் இன்னும் புரிந்து கொள்ள முடியாத தாவரம்.
**********
பயம் என்பது என்ன?  தைரியக் குறைவுதான்.
பயத்திலிருந்து வெளியேறுவது எப்படி?பயத்தை தைரியத்துடன் எதிர் கொள்ளுங்கள்.
எது புகழ்ச்சி?  மிகைப்படுத்தப்பட்ட நிறைகள்.
எது இகழ்ச்சி?  மிகைப்படுத்தப்பட்ட குறைகள்.
யார் வாலிபர்? மாறாத குதூகலத்தோடு இருப்பவர் வயதில் கிழவர் கூட வாலிபர்தான்.
யார் கிழவர்? குதூகலமில்லாதவர் வாலிபராயிருந்தாலும் கிழவர்தான்.
**********
ஒரு ஆப்பிளுக்குள் எத்தனை விதைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரிந்திருக்கலாம்.ஒரு விதைக்குள் எத்தனை ஆப்பிள்கள் இருக்கின்றன என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
**********
உலகம் முழுவதும் மனிதர்கள் பல மொழிகளில் பேசுகிறார்கள்.ஆனால் ஒரே மொழியில்தான் புன்னகைக்கிறார்கள்.
**********
பலர் வெற்றியைக் கனவு காண்கிறார்கள்.ஆனால்
சிலர் அதற்காக உழைக்கக் கிளம்பி விடுகிறார்கள்.
**********
எல்லோரிடமும் அழகு இருக்கிறது.ஆனால்
எல்லோராலும் அதைப் பார்க்க முடிவதில்லை.
**********
உங்கள் மனமே நீங்கள் விரும்பியபடி இயங்காதபோது மற்றவர்கள் உங்கள் மனதுக்கு ஏற்ப இயங்கவில்லை என்று கோபம் கொள்வது என்ன நியாயம்?
**********
எப்போதும் நம் எதிர்பார்ப்புக்கு ஒத்துப் போகாதவர்கள் நமக்கு முட்டாளாகத் தென்படுவார்கள்.உங்களையும் இதே காரணத்துக்காக முட்டாளாகப் பார்க்க நூறு பேர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
**********
ஒவ்வொரு பாலைவனத்திலும் ஒரு சிறிய பசுமையான  சோலையாவது இருக்கிறது.ஆனால் எல்லா ஒட்டகத்தாலும் அதைக் கண்டு பிடிக்க முடிவதில்லை.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன்மொழிகள்-20

தான் கூவுவதைக் கேட்பதற்காகத்தான் சூரியன் உதிக்கிறான் என்று சேவல் நினைக்குமானால் அதுதான் அகந்தை.
**********
அற்பப் பொருளுக்கும் மதிப்பு உண்டு.சிறு ஊசிதான் தையற்காரருக்கு உணவு அளிக்கிறது.
**********
பைத்தியக்காரனை நிச்சயம் திருத்தி விடலாம்.
தற்பெருமை பேசுபவனை மட்டும் திருத்தவே முடியாது.
**********
ஆண்களின் மனம் பளிங்காக இருக்கிறது.
பெண்களின் மனம் மெழுகாக இருக்கிறது.
**********
எது தேவை?
தீர்மானிக்க மனம்.
வழி வகுக்க அறிவு.
செய்து முடிக்கக் கை.
**********
ஆரோக்கியம் அற்புதமானது என்பதை
நோயுற்றுக் கிடக்கும்போதுதான் உணருகிறோம்.
**********
நாம் நல்ல வசதியுடன் இருக்கும்போது நண்பர்கள் நம்மைப்பற்றித் தெரிந்து கொள்கிறார்கள்.
நம்மிடம் வசதி குறையும்போதுதான் நாம் நம் நண்பர்களைப்பற்றித் தெரிந்து கொள்கிறோம்.
**********
ஒருவன் எப்போதும் வீரனாய் இருக்க முடியாது.ஆனால்
ஒருவன் எப்போதும் மனிதனாய் இருக்க முடியும்.
**********
ஒரு மனிதனின் இயல்பை அறிய வேண்டுமானால் அவனிடம் அதிகாரத்தைக் கொடுத்துப்  பாருங்கள்.
**********
குற்றம் என்னும் புற்றுக்குள் கை வைத்தால்
சட்டம் என்னும் பாம்பு கடிக்கத்தான் செய்யும்.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பொன்மொழிகள் --23

கடைசி  வார்த்தை  தன்னுடையதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருவர் மோதிக் கொள்ளும் விஷயம் தான் வாக்குவாதம்.
**********
முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள்.அதில் நேரம் வீணாகிறது.நாயிடம் கடிபடுவதைக் காட்டிலும் நாய்க்கு வழி விடுவதே மேல்.
**********
மனிதனின் உண்மையான நண்பர்கள் மூன்று பேர்கள்தான்.அவர்கள்,
*வயதான மனைவி
*வளர்த்த நன்றியுள்ள நாய்
*தயாராய் உள்ள ரொக்கப்பணம்.
**********
இனாமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
**********
என்ன ஆச்சரியம்!எனக்குத் தெரிந்தது மிகவும் குறைவு என்பதைப் புரிந்து கொள்ள நான் எவ்வளவு விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது!
**********
வாழ்க்கையைப் பற்றி பெரிதும் கவலைப் படாதீர்கள்.எப்படியும் நீங்கள் அதிலிருந்து தப்பப் போவதில்லை.
**********
கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கும்.ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
**********
வெற்றி பெற்றவனிடம்,அவன் கூறுவது எல்லாம் உண்மையா என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
**********
விமரிசனத்தால் காப்பாற்றப்படுவதை விட புகழ்ச்சியினால் அழிந்து போவதையே பெரும்பாலோர் விரும்புகின்றனர்.
**********
வாதாட பலருக்குத் தெரியும்.உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.
**********
அதிர்ஷ்டத்தின் வலது கை உழைப்பு:இடது கை சிக்கனம்.
**********
'எப்படி?'என்று தெரிந்திருப்பவனுக்கு எப்போதும் வேலை கிடைத்து விடும்.
ஆனால் 'ஏன்?'என்று தெரிந்திருப்பவன் தான் அவனுக்கு முதலாளி ஆக இருப்பான்.
***********
இளமை ஒரு தவறு.
வாலிபம்  ஒரு போராட்டம்.
முதுமை ஒரு வருத்தம்.
**********
மிகக் கூர்மையாக இருக்காதீர்கள்.
உங்களையே வெட்டிக் கொள்வீர்கள்.
**********

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Saturday, July 30, 2011

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் - I

1. எல்லா ஊரும் நம் ஊரே ; எல்லா நாடும் நம் நாடே.
2. அனைவரும் நம் உறவினர்.
3. தீமைக்கும் நன்மைக்கும் நாமே காரணம்.
4. பெரியோர் என யாரையும் வியந்து போற்றாதீர்.
5. சிறியோர் என யாரையும் இகழாதீர்.
6. தன்னலமாய் வாழாதீர்.
7. பிறர் நலம் பேணி வாழ்வீர்.
8. துன்பம் கண்டு துவளாதவரே வெற்றி காண்பார்.
9. உள்ளம் உயர்வானால் வாழ்வும் உயரும்.
10. வெற்றி கண்டு மயங்காதீர்.
11. வாழ்க்கைத் துணை என்றும் ஒருவரே.
12. காற்று, உணவு, மொழி முதலியவற்றில் தூய்மை பேணுவீர்.
13. சுற்றுப்புறத் தூய்மையே நலவாழ்விற்கு அடிப்படை.
14. உண்மை பேசி உள்ளத்தைத் தூய்மை ஆக்குவீர்.
15. அன்பே வாழ்வின் அடிப்படை.
16. அருள் வாழ்வே அறவாழ்வு.
17. நல்லது செய்யாவிட்டாலும் தீயது செய்யாதே.
18. சான்றோன் ஆக்குதல் பெற்றோர் கடமை.
19. நல்லொழுக்கம் தருதல் ஆளுவோர் கடமை.
20. செல்வம் அழியும் ; அறிவு அழியாது.
21. துன்புறுத்துபவர் துன்பம் காண்பார்.
22. செல்வம் பிறருக்கு உதவவே.
23. தானும் பயன்படுத்தாத பிறருக்கும் உதவாத செல்வரை விட ஏழையே
செல்வந்தன்.
24. செய்க பொருளை.
25. அறவழியில் பொருள் ஈட்டுக.
26. பிறரை உயர்த்த நீ உயர்வாய்.
27. பிறர் வாழ நீ வாழ்வாய்.
28. மறதியை மற.
29. விலையை மிகுதியாகப் பெறாமல் பொருளைக் குறைவாகக் கொடுக்காமல்
வாணிகம் செய்க.
30. குறுக்கு வழியில் பணம் தேடாதே.



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Tuesday, July 12, 2011

பொன்மொழிகள்-19

வயது செல்லச்செல்ல தோல் சுருங்கி விடுகிறது.-ஆனால்
மகிழ்ச்சியை விட்டுவிட்டால் வாழ்வே சுருங்கிவிடும்.
**********
சதா தள்ளாடுவதைவிட ஒருமுறை விழுந்து எழுவது சிலாக்கியம்.
**********
நாள் என்பது இரவையும் சேர்த்துத்தான்.
பூ என்பது காயையும் சேர்த்துத்தான்.
கடல் என்பது நுரைகளையும் சேர்த்துத்தான்.
வாழ்க்கை என்பது ரணங்களையும் சேர்த்துத்தான்.
**********
மீனுக்குக்கூடத் தொல்லை வராது-அதுதன்
வாயை மூடிக் கொண்டிருந்தால்.
**********
சின்னக் கவலைகள் என்பது கொசு போல:
ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தால் அது பறந்து ஓடிவிடும்.
**********
மனிதர்களில் இரண்டு வகையினர் மட்டுமே உண்டு.
ஒன்று திறமையானவர்கள்.
இரண்டு,திறமையைப் பயன்படுத்தாதவர்கள்.
**********
முகத்தை அழகாக வைத்துக்கொள்ள
செலவில்லாத ஒப்பனை புன்னகை.
**********
ஆசைப்படுவது மனம்.
ஆசைப்பட வைப்பது புத்தி.
அவதிப்படுவதோ உடல்.
**********
உன் கௌரவம் உன் நாக்கின் நுனியில் உள்ளது.
**********
இவ்வளவு நீண்ட வாழ்வில் ஒரே ஒரு முறைதான் சாகிறோம்.
**********
கோபத்தில் ஆரம்பமாவது எல்லாம்
இறுதியில் வெட்கப்படும்படி முடியும்.
**********
ஆபத்து பயத்தையும்,பயம் அதைவிடப் பெரிய ஆபத்தையும் தருகிறது.
**********
வயதானவர்கள் கவலைப்படுவதெல்லாம்,தங்களுக்கு வயதாகி விட்டதே என்பதல்ல:மற்றவர்கள் இளமையாக இருக்கிறார்களே என்றுதான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, June 22, 2011

பிட்டு - 80

1. உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க ?பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சு.==========2. ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க .. .. ?பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.==========3. உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே ?அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு.==========4. ஏன் ... உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம் வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா இருக்காம்.==========5. டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு பூச்சிகூட இல்லை.வெரிகுட். நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க.==========6. உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே ?ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன்.==========7. மூணு யானை கர்ப்பமா இருக்குது, அதுல ஒண்ணுக்கு பன்னிரண்டு மாசம். இன்னொண்ணுக்கு பதினாறு மாசம். கடைசி யானை இருபது மாசம். இதுல எந்த யானை முதல - குட்டி போடும்.கடைசி யானைதான்தப்பு. எதுவுமே முதலைக் குட்டி போடாது. எல்லாமே யானைக் குட்டிதான் போடும்.==========இன்றைய பிட்டு ஜோக்:8. மாப்பிள்ளை இவ்வளவு ஸ்பீடா இருப்பார்னு எதிர்பார்க்;கவே இல்லை.ஏன் .. .. ?முதலிரவு முடிஞ்சதும் உடனே நைட் 12-30 மணிக்கு மாமியார் வீட்டுக்கு பிரசவத்தக்கு பஸ் ஏத்தி விட்டுட்டாரே

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 48

ஒரு தபால் அலுவலகத்தில் ஒருத்தன் வேலை பார்த்துக்கிட்டிருந்தான். விலாசம் சரியா எழுதப்படாத மடல்களை ஆராய்ஞ்சு சரியான இடத்துக்கு அனுப்புறது தான் அவனோட வேலை.ஒரு நாள் கடவுளுக்கு என்று விலாசமிடப்பட்டு சீரில்லாத கையெழுத்தில் ஒரு மடல் வந்தது. அந்த மடலைத் திறந்து பாத்து உள்ளே என்ன தான் எழுதியிருக்குன்னு பார்க்கலாமேன்னு நினைச்சான்.அந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்ததுன்னா:நான் 83 வயதுள்ள வயசான விதவை. எனக்குக் கிடைக்கிற சொற்ப பென்ஷனில் தான் நால் காலத்தை ஓட்டுறேன். நேத்து என் பர்ஸை யாரோ திருடிட்டாங்க. அதில் 100 டாலர் இருந்தது. அந்தப் பணத்தை வச்சுத்தான் இனி அடுத்த பென்ஷன் வருகிற வரைக்கும் பொழுதை ஓட்டணும்.அடுத்த ஞாயிற்றுக்கிழமை கிரிஸ்த்மஸ். அதுக்கு என்னுடைய இரண்டு தோழிகளை டின்னருக்கு வரச் சொல்லியிருக்கேன். பணமே இல்லாம இப்போ நான் என்ன பண்ணுவேன். எப்படி போய் சாப்பாட்டுக்கு பொருள் வாங்குவேன். எனக்குன்னு யாருமே இல்லை. கடவுளே, நீ மட்டும் தான் எனக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை.எனக்கு எப்படியாவது உதவி செய்.இப்படிக்கு,உனது தீவிர பக்தைஎட்னாஇதைப் படிச்ச அந்த தபால் ஊழியருக்கு ரொம்ப இரக்கம் வந்திருச்சு. அந்த கடிதத்தை எல்லாருக்கும் வாசிச்சுக் காம்பிச்சாரு. அங்கே இருந்த எல்லாரும் தங்களது பர்ஸில் இருந்து கொஞ்சம் டாலர் எடுத்துக் குடுத்தாங்க. முழுசா ஒரு ரவுண்டு அடிச்சு வரும்போது, 96 டாலர் சேர்ந்துடுச்சு. அதை ஒரு கவர்ல வச்சு அந்த மூதாட்டிக்கே அனுப்பீட்டாங்க. ”இந்தப் பணம் எட்னா கையில் கிடைச்சா எப்படியும் கிரிஸ்த்மஸை நல்லாக் கொண்டாடிவாங்க” நினைச்சு, அன்னிக்கு முழு நாளும் அந்த ஊழியர்களுக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு.கிரிஸ்துமஸும் வந்தது. போனது.சில நாட்கள் கழிச்சு, அதே வயசான மூதாட்டி கிட்டே இருந்து இன்னொரு கடிதம் கடவுளுக்கு விலாசமிட்டு வந்துச்சு. அந்த கடிதத்தை நம்மாளு உடைக்கும் போது எல்லா ஊழியர்களும் அங்கே கூடிட்டாங்க.இப்போ அந்தக் கடித்ததில் என்ன எழுதியிருந்தாங்கன்னா:அன்புள்ள கடவுளுக்கு,நீ எனக்குச் செய்த இந்த உதவிக்கு நான் உனக்கு எப்படி நன்றி சொல்வேன்?உன்னுடைய அன்பான பரிசால் நான் என் தோழிகளுக்கு ஒரு பிரமாதமான டின்னர் கொடுத்தேன்.அன்றைய நாள் மிகவும் அருமையான நாளா இருந்துச்சு. நீ கொடுத்த பரிசைப் பற்றி நான் என் நண்பர்களுக்கெல்லாம் சொன்னேன்.இருந்தாலும் ஒரு சின்னப் பிரச்சினை.நான் 100 டாலர் கேட்டிருந்தேன். 96 தான் குடுத்தீங்க. இதில 4 டாலர் மிஸ்ஸிங்.இது அந்த போஸ்ட் ஆஃபீஸில் இருக்கிற அந்த வீணாப் போனவங்க தான் உருவியிருப்பாங்கன்னு நினைக்கேன்.=========================எனக்கு வந்த ஆங்கில மடலை கஷ்டப்பட்டு தமிழாக்கம் பண்ணி, தட்டச்சு செஞ்சு அனுப்பியிருக்கேன்.மரியாதையா சிரிச்சிருங்க.இல்லே. நடக்கிறதே வேற.ஆமா. சொல்லிப்புட்டேன்.==========================மூலம்:There was a man who worked for the Post OfficeWhose job was to process all the mail that had illegible addresses.One day, a letter came addressed in a shaky handwriting to God with no actual address.He thought he should open it to see what it was about.The letter read:Dear God,I am an 83 year old widow, living on a very small pension.Yesterday someone stole my purse.It had $100 in it, which was all the money I had until my next pension payment.Next Sunday is Christmas, and I had invited two of my friends over for dinner.Without that money, I have nothing to buy food with,Have no family to turn to,And you are my only hope.Can you please help me?Sincerely,EdnaThe postal worker was touched.He showed the letter to all the other workers.Each one dug into his or her wallet and came up with a few dollars.By the time he made the rounds, he had collected $96,Which they put into an envelope and sent to the woman.The rest of the day, all the workers felt a warm glowThinking of Edna and the dinner she would be able to share with her friends.Christmas came and went.A few days later, another letter came from the same old lady to God.All the workers gathered around while the letter was opened.It read:Dear God,How can I ever thank you enough for what you did for me?Because of your gift of love, I was able to fix a glorious dinner for my friends.We had a very nice day and I told my friends of your wonderful gift.By the way, there was $4 missing.I think it might have been those bastards at the post office.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 47

1. கடவுள் எங்க இருக்கார் ?-னு டீச்சர் ஒரு பையனைக் கேக்கறாங்க. அதுக்குப் பையன், எங்க வீட்டு பாத்ரூம்ல என்கிறான். அதிர்ச்சி யோடு எப்படி என்கிறார் டீச்சர்.அதுக்குப் பையன், எங்க அப்பா, அம்மாவை வீடு பூரா தேடிட்டுக் கடைசியில் பாத்ரூமில் கண்டுபிடித்து, அடக்கடவுளே... நீ இங்கதான் இருக்கியா ? என்றார்==========2. அந்தப் பெண்ணுக்கு எழுதிய லவ் லெட்டரை சுக்குநூறாக் கிழிச்சு அவகிட்ட கொடுக்கறியே... ஏன் ?அவ மட்டும் என்ன செய்யப்போறா ? கிழிச்சுதானே போடப்போறா!==========3. ச்சே... எப்போ பார்த்தாலும் மாமியாரைத் திட்டிக்கிட்டே இருக்கியே.நான் உங்க மாமியாரையா திட்டறேன்... என் மாமியாரைத்தானே திட்டறேன்.==========4. நம்ம தலைவர் ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவர் மேல இவ்வளவு கோபமா இருக்கக்கூடாது.ஏன்...?அவரை அடுத்த ஜென்மத்துலேயும் ஜெயில்ல போடுவேன்னு சொல்றாரே.==========5. சுரேஷ்... கண்பார்வை யாருக்கு அதிகம் ? விலங்குகளுக்கா... மனிதர்களுக்கா.. ?விலங்குகளுக்குத்தான் டீச்சர்.விலங்குகள் எதுவும் கண்ணாடி போடறதில்லையே டீச்சர்.==========6. நீங்களே கஷ்டத்துல இருக்கீங்க. எதுக்கு கல்யாணம் வேற பண்ணிக்கிறீங்க...?கஷ்டத்தோட கஷ்டமா இருக்கட்டுமேன்னுதான்.==========7. ரெண்டு அம்பயருக்கும் இடையில என்ன சண்டை ?ஆளுக்கு அஞ்சு அவுட் கொடுக்கணும்னு ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டாங்களாம், ஆனா, இவரு ஆறு அவுட் கொடுத்துட்டாராம்.==========இன்றைய மெகா ஜோக்:நான் சிகரெட் குடிச்சிட்டு இருந்ததை எங்கப்பா பார்த்துட்டாரு ?ஐயையோ, அப்புறம் ?தண்ணி போட்டுட்டு வந்து அடி பின்னிட்டாரு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 46

1. டாக்டர்.. . என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டற மாதிரி கனவு வருது.. .இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா ?ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி என்னை இல்லே உதைக்கிறாரு.==========2. டாக்டர் .. . என் கணவர் தனக்குத்தானே பேசிக்கிறாரு.. .அதுக்குக்கூட அவருக்கு உரிமை கிடையாதா மேடம்.. .?==========3. இவ்வளவு அழகா எனக்கு லெட்டர் எழுதியிருக்கானே ஒருத்தன், இவனைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க ?படிச்சவன்னு தோணுது.தப்பு. படிச்சவன் நான்தான். இவன் எழுதினவன்.==========4. ஹலோ டாக்டர், என் மாமியார் மூச்சு விட முடியாம ரொம்பக் கஷ்டப்படறாங்கஉடனே இங்கே கூட்டிண்டு வாங்க.இதோ, மேக்கப் போட்டுண்டு ஒரு மணி நேரத்துக்குள்ளே வரேன்!==========5. வர வர எனக்கு வர்ற கனவு கூட டி.வி. நிகழ்ச்சி மாதிரி ஆயிடுத்து.ஏன்...?கனவு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஏகப்பட்ட விளம்பரம் வருது.==========6. இளவரசே வீரமுடன் வேட்டைக்கு புறப்பட்ட நீங்கள் ஏன் தலை தெறிக்க, ஓடி வருகிறீர்கள் ?போய்யா, போற வழியில் ஒரு சொறிநாய் துரத்திட்டு வருது.==========7. தலைவர் ஏன் இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்காரு ?அவரோட சின்ன வீடு யார் கூடவோ ஒடிட்டாங்களாம்.==========இன்றைய சின்ன பிட்டு ஜோக்கு:8. வேகப் பந்து வீச்சாளரைக் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சா... எப்படி ?பாஸ்ட் நைட் கொண்டாடிட்டார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 45

1. பொண்ணு வீடு பெரிய வீரப் பரம்பரைன்னு கல்யாண புரோக்கர் சொன்னதை நம்பிப் போய் ஏமாந்துட்டேன்.என்னாச்சு ?பொண்ணுக்குப் பெரிய மீசை இருக்கு.==========2. அமைச்சர் முடிவெட்டப் போறப்போ எதுக்கு ஆறுபேரைக் கூட்டிகிட்டுப் போறார் ?சலூன்ல போர்வை போத்தறப்போ கைதட்டத்தான்.==========3. கொஞ்ச நாளைக்கு நீங்க ஓட்டல்ல சாப்பிடக் கூடாது.சரி டாக்டர், அப்ப உங்க நர்ஸைச் சமைச்சுப் போட அனுப்பறீங்களா.. .?==========4. நீதிபதியை கறுப்பு டிரஸ் போடாம வர வைக்க முடியுமா ?எதுக்கு தலைவரே ?இன்னைக்குக் கறுப்பு எனக்கு ராசியில்லாத நிறம்னு ராசிபலன்ல போட்டிருக்கு.==========5. உங்களை செக் பண்ணிட்டேன்.. . ஸ்லோ பாய்சனா இருக்குமோனு சந்தேகமா இருக்கு.சந்தேகம் வேண்டாம். .. இருபத்தஞ்சு வருஷமா என் மனைவியோட சமையல்தான்.==========6. உங்க கணவருக்குக் குளிர் ஜுரம் .. அதனால நீங்க பக்கத்துல இருக்காதீங்க.ஏன் டாக்டர் ?நீங்க பக்கத்துல இல்லன்னா அவருக்குக் குளிர்விட்டுப் போயிடும்.==========7. தன்னிடம் சிகிச்சைக்கு வந்திருந்த ஒரு பெண்மணியிடம் டாக்டர் சொல்லிக் கொண்டிருந்தார். ஸாரி, மேடம் உங்களை என்னால் காப்பாத்த முடியாது. நோய் ரொம்பவே முத்திவிட்டதால ஆறு மாசம்தான் நீங்கள் உயிரோடவே இருக்க முடியும்.கேட்க அதிர்ச்சியாகத் தான் இருந்தது என்றhலும் சற்று நேரத்திலேயே அந்தப் பெண்மணி சுதாரித்துக் கொண்டாள்.குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய அடிப்படையான உதவிகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு மீதி காலத்தை மகிழ்ச்சியோடு கழிக்கத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்ன டாக்டர், இந்த ஆறு மாத காலத்தை எப்படிக் கழிப்பதாக உத்தேசம் ? என்று கேட்டார்.என் மாமியாரோட இருக்கப் போறேன் டாக்டர் என்றாள் அந்தப் பெண்மணி.என்னது.. . உங்க மாமியாரோடவா ? அவங்களுக்கும் உங்களுக்கும் ஏழாம் பொருத்தம்னு ஏற்கெனவே சொல்லியிருந்தீங்களே ?அதான் டாக்டர் விஷயமே, அவங்களோட இருந்தா இந்த ஆறு மாத காலமே எனக்கு அறுபது வருஷமா தோணும்.==========இன்றைய மெகா ஜோக் இது தாங்க:8. பால்காரர் வீட்டுல பெண் எடுத்தது தப்பாப் போச்சு.ஏன்.. . என்னாச்சு.. .?அங்கே பாரேன்.. . முதலிரவுக்குப் பால் சொம்புக்குப் பதிலா, பால்கேன் எடுத்துக்கிட்டுப் போறதை.==========

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 44

1. தளபதியாரே, என்ன இது ? போர் நடக்கும் நேரத்தில் 7 நாள் விடுப்பு வேண்டுமா ?ஆம் மன்னா, போர் முடிந்த அடுத்தநாளே அரண்மனைக்கு வந்து விடுவேன்.==========2. தலைவரே, உங்க பங்களா, ஃபேக்டரிக்கு, சினிமா தியேட்டர் இது எல்லாத்துக்கும் மக்கள் அன்புனு பேர் வச்சிருக்கீங்களே ஏன் ?என்னோட அரசியல் வாழ்வுல மக்கள் அன்பைத் தவிர எதுவும் சம்பாதிக்கலைனு சொல்லிக்கலாமே ?==========3. அந்த டாக்டர் பி.எம். பார்க்கிற-வர்னு சொல்றாங்களே. அவரு பிரைம் மினிஸ்டருக்கு வைத்தியம் பார்க்கறவரா ?அட, நீங்க ஒண்ணு.. . அவருக்கு போஸ்ட் மார்ட்டம் மட்டும்தான் பண்ணத் தெரியும். அதத்தான் சுருக்கமா பி.எம். ஸ்பெஷலிஸ்ட்ன்னு சொல்றாங்க==========4. அந்தத் தலைவருக்குத் தமிழ் உச்சரிப்பு சரியா வராது போலிருக்கு.அதுக்காக முத்தமிழையும் வித்தவன்-னு பட்டப் பெயர் சூட்டிக் கூப்பிடறது கொஞ்சமும் நல்லா இல்லே.==========5. நீங்க ஒரு ரௌடியை அடிச்சுத் துவைச்சதுல மயங்கி, உங்க மனைவி உங்களைக் கல்யாணம் பண்ணிட்டாங்களே.. . வாழ்க்கை எப்படி இருக்கு ?இப்ப மனைவியோட துணிமணிகளை அடிச்சுத் துவைச்சுட்டு இருக்கேன்!==========6. என் பையன் பென்சில் பட்டாசு கேட்டான்னு அதை வாங்கிக் கொடுத்தேன்.அதுக்கு ஏன் சார் இப்படி அலுத்துக்கறீங்க ?பட்டாசு பாதியிலேயே அணைஞ்சுடுச்சாம்.. . இப்போ ஷார்ப்பனர் பட்டாசு வேணும்னு கேட்கறான்.==========7. அமைச்சர் வீட்டில் என்ன விழா ?புது வேலைக்காரிக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பும் செய்து வைக்கிறார்.==========கடைசியா பிட்டு ஜோக்குக்கு இங்கே வாங்க:8. அரசியல் வாதியை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சு.ஏன் ?முதலிரவை சீரணி அரங்கத்துல வச்சுக்கலாம்னு சொல்றாரு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 43

1. ரசத்துல நான் புளியே போட மறந்துட்டேன்... எப்படி அப்படியே சாப்பிடறீங்க ?நீ சமையல் பண்ண ஆரம்பிச்சபோதே எனக்கு வயித்துல புளியைக் கரைக்க ஆரம்பிச்சிடிச்சு==========2. என்னங்க... திருடன்பாட்டுக்கு நம்ம வீட்ல புகுந்து திருடிட்டிருக்கான். நீங்க ஏதோ எழுதிட்டிருக்கீங்க.. .?சும்மா இருடி... நாளைக்கு போலீஸ் வந்து என்னென்ன பொருள் காணாமப் போச்சுன்னு கேட்டா, கரெக்டா சொல்ல வேணாமா ?==========3. எல்லா அலுவலகக் கதவுலேயும் தள்ளு-னு போட்டிருக்கும். இந்த அலுவலகக் கதவுலே தள்ளாதீர்கள்-னு போட்டிருக்கே... ஏன் ?இது லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம்==========4. பெண் பார்க்க ஆரம்பிச்சு என் கணவர் பார்த்த 52-வது பொண்ணு நான்!பாவம்.. . 51 தடவை லக்கியா இருந்திருக்கார்.==========5. என் கிட்டே வந்து முணுக் முணுக்-னு அடிக்கடி சொல்றியே... ஏன் ?முணுக்குன்னா உங்களுக்குக் கோபம் வரும்னீங்களே, அதான்... செக் பண்றேன்.==========6. சமையலுக்குப் புதுசா ஒரு கண்டக்டரைப் போய் வெச்சிருக்கீங்களே... எதுக்கு ?குக்கர் சரியா விசில் அடிக்கமாட்டேங்குது சார்... அதான்!==========7. நீ செஞ்ச தீபாவளி பலகாரத்தை யாருக்கும் கொடுக்காதேன்னு, என் சம்சாரத்துக்கிட்ட முதல்லயே சொன்னேன். .. கேட்கல!ஏன். .. இப்ப என்னாச்சு ?பயங்கர ஆயுதங்கள் தயாரிச்சதா தெருக்காரங்க புகார் பண்ணி போலீஸ் என் சம்சாரத்தை கைது பண்ணிட்டாங்க.==========கடைசியா இன்னிக்கு பிட்டு ஜோக்கு:8. இது கவர்ச்சி நடிகை ஆரம்பிச்சிருக்கிற ஓட்டலா ?எப்படி கண்டுபிடிச்சே ?ஜட்டிநாடு ஓட்டல்னு போட்டிருக்காங்களே!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 42

1. அந்த டாக்டர் என்ன, தேங்காய் வியாபாரியோட மகனா ..?ஏன் கேட்கறீங்க.. .?வியாதி முத்திப்போச்சான்னு பார்க்கறதுக்கு பேஷண்ட்டைத் தூக்கிக் குலுக்கி தட்டிப் பார்க்கறாரே!==========2. இந்த ஆபரேஷன் சக்ஸா ஆகலைனா வருத்தப்படும் முதல் ஆள் நான்தான்.ஏன் டாக்டர்.. .?பின்னே... நீங்க இருக்கமாட்டீங்களே... நான் மட்டும்தானே வருத்தப்பட்டு ஆகணும்!==========3. எதுக்கு டாக்டர், என் உடம்பிலிருந்து தேவையில்லாம ஒரு லிட்டர் ரத்தம் எடுத்திருக்கீங்க.. .?சிகிச்சை முடிஞ்சு ஒழுங்கா ஃபீஸ் கட்டிட்டா, எடுத்த ரத்தத்தை திரும்ப உங்களுக்கே செலுத்திடுவோம்.==========4. இன்னும் ஒரு மணி நேரத்துல டாக்டர் உங்களுக்கு ஆபரேஷன் பண்ணப்போறார்.ஏதாவது சாப்பிடலாங்களா ?கடைசியா ஒரு முறை என்ன வேணாலும் சாப்பிட்டுக்குங்க.==========5. முகம் இருண்டு படுசோகமாக வந்த தனது கல்லூரி நண்பனை விசாரித்தான் அவன்.மச்சி, என்னாச்சு உனக்கு ?கம்ப்யூட்டர் வாங்கணும். .. கொஞ்சம் பணம் அனுப்புங்க-னு வீட்டுக்கு லெட்டர் போட்டிருந்தேன்.புரிஞ்சிடுச்சு, இப்ப பணம் அனுப்ப முடியாது-னு பதில் வந்திருக்கு அதானே மேட்டர் ?அதில்லை கம்ப்யூட்டரை வாங்கி அனுப்பியிருக்காங்க!==========6. அவர் பயங்கர குடிகாரர்...இருக்கட்டும்... அதுக்காக கை பம்புல தண்ணி அடிக்கிறப்பகூட ஊறுகாயைத் தொட்டுக்கணுமா ?==========7. எங்க வீட்ல மாமியார் - மருமகள் சண்டைகூட டி.வி. சீரியல் மாதிரி ஆயிடுச்சு.எப்படி ?ஒவ்வொரு நாளும் சண்டையை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி முதல்நாள் சண்டைலேர்ந்து கொஞ்சம் போட்டுக் காட்டுவாங்க!==========கடைசியா இன்றைய மெகா ஜோக்கைப் படிச்சிருங்க:8. உன் கணவர் வீட்டு வேலைய எல்லாம் முடிச்சுட்டாராம் ?உனக்கு எப்படித் தெரியும் ?இதோ பாரு கேபிள் டி.வி-யில் விளம்பரம் கொடுத்திருக்காரே!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 41

1. நேத்திக்கு எதுவரைக்கும் பாடம் நடத்தினேன்-னு டீச்சர் கேட்டதுக்குப் பையன் என்ன பதில் சொன்னான் தெரியுமா ?என்ன சொன்னான் ?பெல் அடிக்கிற வரைக்கும்.==========2. நான் ஒருத்தன் இல்லேன்னா இந்தக் கட்சி அடுத்த நிமிஷமே இல்லாமப் போயிடும்-ன்னு பேசிட்டுப் போறhரே... அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா ?அட நீங்க வேற... அவர் தொடங்கின கட்சியில் அவர் மட்டுந்தான் இருக்கார். அதைத்தான் அப்படிச் சொல்லிட்டுப் போறார்.==========3. என்ன இது... என்னை வரவேற்க ஒரு தொண்டர்கூட வரலையா ?தலைவரை வரவேற்க ஸ்டேஷனுக்கு வாங்கன்னு மொட்டையா சொன்னது தப்பா போச்சு எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ட்டாங்க போல இருக்கு!==========4. அவரு காது டாக்டர் சார்... அவர்கிட்டே போய் ஏன் உங்க கண் ப்ராப்ளத்தைச் சொல்றீங்க ?கண்ணாடி போட்டா என்னோட காதுல சரியா நிற்கமாட்டேங்குது... அதான்!==========5. என்னோட சோப்பை எதுக்கு நாய்க்குப் போட்டு குளிப்பாட்றே ?உங்களுக்கு என்ன தொற்று நோயா இருக்கு... நாய்க்குப் பரவிடும்ங்கிற மாதிரில்ல பயப்படறீங்க ?==========6. இங்கே ஸ்டெனோ வேலைக்கு அப்ளிகேஷன் போட்ட எத்தனையோ பேர்ல உன்னை மட்டும் நான் செலக்ட் பண்ணிய காரணம் என்ன தெரியுமா ?சொல்லுங்க டார்லிங்!===========7. இந்தாளு அப்பா அம்மா மேல உயிரையே வச்சிருக்காரு.இந்தக் காலத்துல இப்படி ஒருத்தர் இருக்காரா ?ஆமா... பொண்டாட்டி இவர போட்டு அடிக்கும்போது அப்பா. அம்மான்னுதான் கத்துவாரு!இன்றைய மினி பிட்டு ஜோக்கு:8. செக்ஸ் தொழிலாளிகள் கோரிக்கை தொடர்பா அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையால் ஏதோ பெரிய பிரச்சினையாயிடுச்சாமே ?ஆமா பலகட்டப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படும்னு சொன்னது, பத்திரிகையில், பலகட்டில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படும்னு அச்சாயிடுச்சாம்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 40

1. அந்த டைரக்டர் இதுக்கு முன்னால பஸ் கண்டக்டரா இருந்திருப்பார் போலருக்கு ?எப்படி சொல்றே ?கட், கட்னு சொல்லாம ஸ்டாப், ஸ்டாப்-ங்கறாரே==========2. ஐயா... ஒரு மாசமா இந்த நர்ஸ் உங்களுக்கு சேவை பண்ணியிருக்கலாம். அதுக்காக டிஸ்சார்ஜ் ஆகிறப்ப நர்ஸைக் கட்டிப்பிடிச்சு அழறதுக்கெல்லாம் அனுமதிக்க முடியாது!==========3. நேத்து மூக்குப்பிடிக்க சாப்பிட்டிங்களே... அதே சாம்பார்தான் இன்னிக்கும்.சரி, இன்னிக்கு மூக்கைப் பிடிச்சுட்டு சாப்பிடறேன்.==========4. நான் என் மாமியார் எதிரே வாயையே திறக்கமாட்டேன்...அவ்வளவு மரியாதையா ?நீ வேற... அவங்களுக்கு சுத்தமா காது கேட்காது. எதுக்குப் பேசி வீணா நம்ம எனர்ஜியை வேஸ்ட் பண்ணணும்னுதான்==========5. ஆனாலும் அந்த டாக்டருக்கு ரொம்பத்தாண்டி நக்கல்ஏண்டி...?பல்லைப் பிடுங்கறப்போ வலிச்சா, பல்லை நல்லா கடிச்சிக்குங்கன்னு சொல்றாரே!==========6. பக்கத்து வீட்டு வேலைக்காரியிடம் பேசியது தப்பா போச்சு ?ஏன் - என்னாச்சு ?எங்க வீட்டு வேலைக்காரி என்னைத் தப்பா நினைச்சுட்டா==========7. என் மனைவியிடம், உனக்குப் புன்னகையே அழகா இருக்குன்னு சொன்னேன்அதுக்கென்ன ?உடனே அதை வாங்கித் தாங்கன்னு அரிக்க ஆரம்பிச்சிட்டா.==========அப்புறம் இன்றைய மெகா ஜோக்:8. அவரு சரியான குடிகாரரா இருக்காரு...எப்படிச் சொல்றே ?டாக்டர் கொடுத்த டானிக்கைகூட சோடா கலந்துதான் சாப்பிடறாரு

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 39

1. குருவே, சித்தி அடைய ஒரு வழி சொல்லுங்கள் குருவே?சித்தாப்பாவுக்கே துரோகம் செய்ய நினைக்கிறாயே, நீ உருப்படுவியா...?==========2. 5-ம் வார்டு பேஷண்ட் பீஸ் செட்டில் பண்ணாம ஓடிட்டாரு...அப்படியா ? அங்கே டூட்டி பார்த்த நர்ஸை கூப்பிடுங்க.அந்த நர்ஸோடதான் ஒடிப்போய்ட்டாரு.==========3. நர்ஸ், இந்த மருந்தை சாப்பிட்டேன். ஒரு கிஸ் குடுங்க.எதுக்கு ?கசப்பான மருந்தை சாப்பிட்டதும் டாக்டர்தான் இனிப்பா ஏதாவது சேர்த்துக்குங்கன்னார்.==========4. மாப்ளே, எம் பொண்ணை கிளி மாதிரி வளர்த்துட்டேன். அவளை பத்திரமா பார்த்துக்கோங்க.கவலைப்படாதீங்க மாமா. வீட்ல அடைச்சி வச்சேன்னா கதவைத் திறந்தே விடமாட்டேன்.==========5. சார், அந்த எக்ஸ் மினிஸ்டர் கைதியை ஒரே ஜெயில்ல ஒரு வருஷம் வெச்சது தப்பாப் போச்சு...என்னாச்சுய்யா...?அந்த ஜெயிலை பிளாட் போட்டு வித்துக்கிட்டு இருக்காராம்==========6. டாக்டர்... எங்க மாமியார் கால்ல முள்குத்திடுச்சு...முள்ளை எடுக்கணுமா ?முள்ளு ரொம்ப சின்னது... எடுக்கறது கஷ்டம்... காலை எடுத்துடுங்க!==========7. வர வர எனக்குக் கண்ணே தெரியமாட்டேங்குது.பின்ன... அன்னிக்கு நான் தூரத்துல போயிட்டிருக்கும்போது கரெக்டா என்னைக் கூப்பிட்டீங்களே, எப்படி ?போகும்போதுதானே ? எனக்கு வரவரதானே கண்ணு தெரியலேனு சொன்னேன்இன்றைய மெகா ஜோக்:8. அந்தப் பெண் ஆழ்ந்த துயரத்தில் இருந்தாள். அன்று காலையில்தான் அவள் கணவன் செத்துப் போயிருந்தான். தனது செல்லப் பிராணியான கழுதையால் உதைப்பட்டு அவன் சாவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. எதற்கெடுத்தாலும் எரிந்துவிழும், எல்லாவற்றையும் குறை சொல்லும், கண்டதற்கெல்லாம் கை ஓங்கும் கணவன்தான் என்றாலும் அவனது இழப்பு அவளை ரொம்பவே பாதித்தது.ஆச்சு... அடுத்த சில விநாடிகளில் மண்ணுக்குள் அவன் அடக்கமாகப் போகிறhன். அந்தச் சோக நிமிடங்களில் ஆறுதல் சொல்ல வந்த ஒவ்வொருவரிடமும் அவள் தலையாட்டிக் கொண்டிருந்ததையே கவனித்துக் கொண்டிருந்தார் ஒருவர். ஆறுதல் சொல்ல வந்த ஆண்களிடம் அவள் சரி என்பது போலவும் பெண்களிடத்தில் இல்லை என்பது போலவும் அவள் தலையாட்டியது அவரை ரொம்பவே குழப்பியது. துக்கம் விசாரிப்பதில்கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இருக்குமா என்ன ? அவளிடமே நேரில் போய்க் கேட்டார்.அவள் சொன்னாள்... மனசு கலங்காதே என்றார்கள் ஆண்கள். அந்தக் கழுதை விலைக்குக் கிடைக்குமா.. ? என்று கேட்டார்கள் பெண்கள்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 79

1. யோவ், யாருய்யா ஆபரேஷன் தியேட்டர் வாசல்லே சூஸைட் பாயிண்ட்-னு எழுதி வெச்சது ?==========2. டாக்டர், மாடி மேல கிளினிக் வெச்சிருக்கீங்களோ ?அதனாலே என்ன ?மேலே போகும் வழி-னு போர்டு வேற வெச்சிருக்கீங்களே... பேஷண்ட்ஸ் எப்படி வருவாங்க ?==========3. ஐயா இல்லீங்களா...? தீபாவளி இனாம் வேணும்!ஐயாவும் தீபாவளி இனாம் வாங்கத்தான் அடுத்த தெருவுக்குப் போயிருக்காரு.==========4. உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி ஒருவன் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. . என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ?திரும்பவும் இவன் கேட்டான் - அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய் ?நீ அவளைக் காதலிக்கத்தான். ..பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ?அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?- லேசான நகைப்போடு இவன் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்.==========5. அந்த ஓட்டல் பொங்கல் மணக்க, மணக்க இருக்கும்.மண்ணாங்கட்டி.. . நீ சொன்னியேனு போய் சாப்பிட்டேன். கைநிறைய இஞ்சி, கறிவேப்பிலை, மிளகுக்கு நடுவே கொஞ்சூண்டு பொங்கலும் இருந்துச்சு.==========6. என் காதுல நீங்க போட்ட புதுத் தோடு எங்கேயோ விழுந்திடிச்சுன்னு சொன்னா, அதுக்குச் சந்தோஷப்படறீங்களே. .. ஏன் ?நான் உன் காதுல போட்டதுல ஏதோ இந்த ஒண்ணாவது விழுந்திருக்கேனுதான்.==========7. ஒரு நோயாளி தன் மனைவியுடன், ஆஸ்பத்திரியில்: ”டாக்டர் தெரியாம ஸ்பூனை முழுங்கிட்டேன். கஷ்டமா இருக்கு.. .”மனைவி: “ஆமாம் டாக்டர். .. ஸ்பூன் இல்லாம ஊறுகாய் எடுக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.. .இன்றைய மெகா ஜோக்:8. எல்லா மெகா சீரியல்-களிலேயும் பழைய நடிக, நடிகைகளையே போடறாங்களே. .. ஏன் ?அவங்கதான் இப்ப மெகா சைஸ்ல இருக்காங்க

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 78

1. தலைவர் பாக்கெட்ல பேனா வைக்கறதுக்குப் பதிலா எதக்கு ஸ்டாம்ப் பேட் வெச்சிருக்கார் ?கை நாட்டு வைக்கதான்.==========2. ஒரு மாவட்ட கலெக்டருக்கு வேறு ஊருக்குப் போகச் சொல்லி டிரான்ஸ்ஃபேர் ஆர்டர் வந்தது. கலெக்டரின் ஊழியர்கள் அவருக்குப் பிரிவு உபசார விழா நடத்தினார்கள். விழா முடிந்தபிறகு ஒருவர் மட்டும் ஒரமாக உட்கார்த்து அழுது கொண்டிருந்தார்.அவரிடம் போன கலெக்டர் அவரைப் பார்த்துக் கண்கலங்கி கவலைப்படாதே நீ என்மேல் இவ்வளவு பாசம் வைத்திருப்பாய் என்று தெரியாது அடுத்து வரப்போகம் கலெக்டர் என்னைவிடநல்லவராக இருப்பார் என்று ஆறுதல் சொன்னார்.அதற்கு அழுதுகொண்டிருந்த அந்த நபர் சும்மா எனக்காகப் பொய் சொல்லாதீங்க சார் இதை நான் நம்பமாட்டேன் என்னா உங்களுக்கு முன்னாடி இருந்த கலெக்டரும் இதையேதான்சொன்னாரு என்றார்.==========3. தொகுதி மக்கள் இப்படிக் கேப்பாங்கன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கலைஎன்ன கேட்டாங்க ?இத்தினி வருஷம் எம்.எல்.ஏ-வா இருந்து உங்க குடும்பத்துக்கே ஒண்ணும் செஞ்சுக்கலை .. .. எங்களுக்கு என்ன செஞ்சு கிழிக்கப் போறீங்கன்னு கேட்கறhங்க *==========4. எதுக்குத்தான் எது இனாம் கொடுக்கறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சுஎதுக்குப் புலம்பறீங்க .. .. ?அந்த பாருங்க மாட்டுச் சந்தையில ரெண்டு மாடு வாங்கினா இந்த ஆடு இலவசம்னு சொல்றார் அந்த வியாபாரி==========5. சார் நீங்க சமயத்துல ஆயிரம் ரூபா குடுத்து உதவி பண்ணீங்க உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை.என்ன சார் இதுக்குப் போய் நன்றி சொல்றீங்கஅப்படீன்னா இன்னொரு ஆயிரம் ரூபா குடுங்க சார்!==========6. என்ன உங்க வீட்டுக்காரர் எப்ப பார்த்தாலும் வீட்டுக்கு வெளியவே நிக்கிறார்வீட்டுக்கு மேலே திருஷ்டி பொம்மை வச்சிருந்தோம் அது எங்கேயோ காணாம போயிடுச்சு அதுதான் அவரை நிக்க வச்சிருக்கோம்.==========7. வெயில் தாங்க முடியலியாம் காருக்குள்ள இருந்தே நடிக்கிறேன்னு ஹிரோயின் சொல்றாங்க.==========இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:8. நாயை டெஸ்ட் செய்த டாக்டர் அது கர்ப்பமாக இருப்பதாகச் சொன்னார் அந்தப்பெண்ணுக்குப் பயங்கர கோபம் வந்துவிட்டது.அதுக்கு வாய்ப்பே இல்லை இந்த நாயை நான் வீட்டுக்குள் கதவைப் பூட்டி வளர்கிறேன் வேறு நாயும் உள்ளே வராது பிறகு எப்படி .. ? என்றாள்.இந்த நாயோடு சேர்த்து இன்னொரு நாய் வளர்க்கிறீர்களே அது ஆண்நாய்தானே ? என்று கேட்டார் டாக்டர்.உடனே அந்தப் பெண் முட்டாள்தனமா பேசாதீங்க டாக்டர் அந்த நாய் இவளோட அண்ணன் என்றாள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 77

1. எது எதுக்குதான் போராட்டம் நடத்தறதுன்னு நம்ம தலைவர்க்கு விவஸ்தை இல்லாமப் போச்சு.ஏன் என்னாச்சு?கடுமையான வெய்யிலைக் கண்டித்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போறாராம்.==========2. நேத்து ராத்திரி என் மனைவியை நான் கைநீட்டி அடிச்சுட்டேன்.ஐயோ அப்புறம் என்னாச்சி?அதுக்குள்ள என் மனைவி என்னை எட்டி உதைச்சி வேலைக்குப் போக நேரமாச்சு எழுந்திரின்னு கனவைக் கலைச்சுட்டா.==========3. மகன்: அப்பா .. .. எங்க ஸ்கூலில் அப்பாவின் உழைப்பு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடக்கப் போகிறது என்ன எழுதலாம்?அப்பா - நான் ஆபீஸில் உழைப்பதைப் பற்றி மட்டும் எழுது. வீட்டில் மாவாட்டுவதை எல்லாம் எழுதித் தொலைக்காதே.==========4. அன்பே வாங்க ஒடிப் போயிடலாம் கூழோ கஞ்சியோ நீங்க ஊத்தறதை நான் சாப்பிட்டுக்கறேன்.சந்தடிச்சாக்குல சமையல் வேலையை என் தலைலகட்டறே பாத்தியா?==========5. நீங்க ஒரு காரியம் பண்ணணுமே டாக்டர்.நான் ஆபரேஷன் வரைக்கும் மட்டும்தான் பண்ணுவேன் காரியம் எல்லாம் என்னால பண்ணமுடியாது.==========6. நம்ம தலைவருக்குப் பொருளாதாரம் பத்தி ஒண்ணுமே தெரியலையே ஏன் ?பணவீக்கத்தைக் குறைக்கறதுக்கு அயோடெக்ஸ் தடவலாம்னு பேசியிருக்காரு.==========7. அந்த ஹார்ட்வேர் இஞ்சினீயர் ஃப்ராடுன்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க ?இது மூலிகையால செஞ்ச சி.டி. இதை உபயோகிச்சா வைரஸ் செத்துடும்னு சொல்றாரு.==========இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:8. ஷூட்டிங் ஸ்பாட்ல பாடி-யை கையில வெச்சுக்கிட்டு அலையறாரே யார் அவர் ?அவர் தான் அந்த நடிகையோட பாடிகார்டு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 76

1. ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மானேஜரிடம், "என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள்!" என்று பதட்டத்துடன் சொன்னார்.மானேஜர்: "அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"வந்தவர்: "ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!"==========2. "படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள். ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுறாமீன்கள். தப்பிக்க என்ன செய்வீர்கள்?""சிம்ப்பிள். கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்."==========3. நீதிபதி:ஏம்மா அவரை உலக்கையாலே அடிச்சுக் கொன்னே?பெண்:உரலைத் தூக்க முடியல்ல சாமி!==========4. சே... அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு.பேசட்டுமே சார்... நம்ம கட்சிப் பிரமுகர்தானே.நீங்க வேற ... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்!==========5. அந்த ஆஸ்பத்திரியில ஆறாம் நம்பர் ரூமும், நூறாம் நம்பர் ரூமும் ஆபரேஷன் தியேட்டர்...ஆறுலேயும் சாவு.. நூறுலேயும் சாவுன்னு சொல்லுங்க.==========6. நான் வெச்சிருந்த விஸ்கி பாட்டிலைத் தூக்கி என் மனைவி கிணத்துல போட்டுட்டா...அதான் குடி முழுகிப் போனா மாதிரி இருக்கீங்களா?==========7. மாமியாரையும் மருமகளையும் ஒரே வீட்டுல வெச்சுக்கிட்டு குப்பைக் கொட்றது ரொம்ப கஷ்டமா இருக்கு...ஏன்..வீட்டில ஒரே ஒரு துடப்பமும் முறமும்தான் இருக்கு.==========இன்றைய மெகா பிட்டு ஜோக்:8. ரொம்ப கவலையா இருக்கே போலிருக்கு என்னாச்சு ? முகம் தொங்கிப்போய் வந்த அவனைக் கனிவோடு விசாரித்தான் நண்பன்.”நான் அப்பாவாகப் போறேன்” என்ற அவனது பதிலில் சோகம் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.”வாவ் சந்தோஷமான சமாசாரமாச்சே, இதுக்குப் போய் ஏண்டா கவலைப்படறே””என்ன சந்தோசமான சமாசாரம் ? இந்த விஷயம் இன்னும் என் பெண்டாட்டிக்குத் தெரியாது”

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 75

1. நான் கொடுத்த ராஜினாமா கடிதத்தைக் கட்சி மேலிடத்துல வாங்க மறுத்துட்டாங்கஏன் ?பதவியில இருக்கறவங்கதான் அதெல்லாம் கொடுக்கணுமாமே==========2. கார் ஒட்டக் கத்துக்கறதா சொன்னீங்களே .. இன்னும் முழுசா கத்துக்கலையா ?இல்லே கொஞ்சம் கொஞ்சமா இப்பத்தான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்இப்போதைக்கு என்ன கத்துக்கிட்டிருக்கீங்க .. ?ஹாரன் எப்படி அடிக்கறதுன்னு==========3. பக்கத்து வீட்டுக்காரி காபி சாப்பிடணும்னா அதுக்காக எதைத்தான் இரவல் கேட்கறதுன்னு இல்லியா ?காபி போடியா, சர்க்கரையா எதை இரவல் கேட்டாங்க ?ரெண்டும் இல்ல காபி போட்டுத்தர அஞ்சு நிமிஷம் என் கணவரை இரவலா அனுப்பணுமாம்==========4. நாங்கதான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டோமோ பையன் ரொம்ப சிக்கனம்னு .. ..இருக்கலாம் அதுக்காக ஹனிமூனுக்குகூட பெண்ணை விட்டுட்டு தனியாப் போறேன்னு செல்றது நல்லாயில்லே==========5. நான் மனசு வெச்சா அந்த மார்வாடி கடைல எவ்வளவு வேணம்னாலும் கடன் வாங்குவேன்நகையை வெச்சாதானே கடன் கொடுப்பாங்க மனசை வெச்சாக் கூடவா கொடுப்பாங்க ?=========6. எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு .இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு=========7. நடிகையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது நல்லதா போச்சுஎப்படிஅவ கோபமா கத்தும் போது “டேக் ஓகே” ன்னு நான் சொல்லிட்டா ரிலாக்ஸ் ஆயிடுறா.இன்றைய மினி பிட்டு ஜோக்கு:8. வீடு கட்ட லோன் வாங்கின பணத்துல இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே நிஜமா?இப்போதைக்கு சின்ன வீடு போதும்னு ஜோசியர் சொன்னார்..

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 74

1. டாக்டர் அந்த 10-ம் நம்பர் பேஷண்ட் தெர்மாமீட்டரை முழுங்கிட்டாருஅப்படியா ஒரு ஸ்கேன் எடுத்து தெர்மாமீட்டர்ல என்ன டெம்பரேச்சர் காட்டுதுன்னு பார்த்துடுங்க==========2. சர்வர் .. .. எல்லா டேபிள்லயும் ஒரு அயர்ன்பாக்ஸ் இருக்கே எதுக்கு ?தோசை சூடு பத்தலைன்னா அயர்ன் பண்ணிக்கலாம்==========3. உன் மனைவிக்கும் உங்கம்மாவுக்கும் சண்டை வந்தா நீயும் உங்கப்பாவும் எந்த பக்கம் இருப்பீங்க ?நான் வாசல் பக்கமா எங்கப்பா கொல்லைப் பக்கமா==========4. சின்ன ஆபரேஷன்தான் பயப்பாடதீங்கனு நர்ஸ் ஆறுதல் சொன்னாங்கபரவாயில்லையே...ஆறுதல் சொன்னது எனக்கு இல்லை ஆபரேஷன் பண்ணப் போற டாக்டருக்கு==========5. எங்க அப்பா இனிமே என்னைத் தண்டச்சோறுன்னு திட்ட முடியாதுஏன் எங்கேயாவது வேலைக்குப் போறியா ?இல்ல வீட்டுல இப்பல்லாம் டிபன்தான் சாப்பிடறேன்==========6. எல்லாரும் காதலிக்கு வளையல் சுண்டல்னு வாங்கித் தருவாங்க நீங்க மட்டும் ஏன் தேங்கா பழம் ஊதுபத்தி வாங்கிட்டுவரீங்க ?எங்க காதல் தெய்வீகமானதாச்சே==========7. இந்தப் பிச்சைக்காரனை எதுக்கய்யா இங்க அழைச்சிட்டு வந்திருக்கே ?வோட்டு கேட்கப் போகும்போது தொகுதி முழுக்க அறிமுகமான ஒரு நபர் கூட வரணும்னு நீங்கதானே சொன்னீங்க==========இன்றைய மினி பிட்டு ஜோக்கு:8. இல்லத்தரசி: ஏண்டி அவர்தான் ஆம்பளை அப்படி நடந்துகிட்டாரு நீ என் தடுக்கலை ?வேலைக்காரி: நீங்கதானே நாங்க சொல்றதை எல்லாம் தட்டாம கேட்டு நடந்தா சம்பளம் சேத்து தாரேன்னு சொன்னீங்க.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 73

1. உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கறானே சார் ..சீ.. .. சீ .. .. அவன் பிடிக்கறதுக்கு முன்னாடியே நான் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்==========2. டாக்டர், நான் நூறு வயசு வரைக்கும் இருப்பேன்னு ஜோசியர் சொல்லி இருக்காரு.அப்ப சரி நானா ஜோசியரான்னு ஒரு கை பார்த்துடுவோம்.==========3. உங்க ஊர்ல இவ்வளவு தண்ணி கஷ்டமா ?ஏன் கேட்கறீங்க ?ஒட்டல்ல காசு இல்லாம தண்ணி குடிச்சதுக்கே மாவாட்ட சொல்லிட்டாங்க==========4. அதோ போறாங்களே அவங்ககிட்ட நிறைய விடியோ காஸெட், காமிரா எல்லாம் இருக்குவிடியோ கடை வெச்சு இருக்காங்களா ?ஊஹூம் ஆசிரமம் வெச்சு நடத்தறாங்க==========5. அந்த ஆசிரமத்துல இருக்கிற நாய் ஏன் பயங்கரமா குரைக்குது ?அதுவா யாரோ நிஜ சாமியார் உள்ளே நுழைஞ்சிருக்காராம் அதான்==========6. யுவர் ஆனார் என் சார்பா வாதாட வக்கீல் யாரும் இல்லைஅதுக்காக .. .. ?நீங்களாவது என் சார்பா தீர்ப்பு சொல்லக்கூடாதா ?==========7. தண்ணியில் வாழும் உயிரினம் மூன்று கூறு ?தவளை., மீன், எங்கப்பா==========இன்றைய மெகா பிட்டு ஜோக்கு8. என் கணவருக்கும் எங்க வீட்டு வேலைக்காரிக்கும் தொடர்பு இருக்குமோனு சந்தேகமா இருக்கு.எதை வைச்சு அப்படிச் சொல்றே ?நான் என் கணவரைத் திட்டினா ”மனசை சரியில்லை” ன்னு அன்னிக்கி லீவு எடுத்துக்கிட்டு போயிடுறான்னா பாருங்களேன்.==========

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 72

1. அந்த காதல் ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வைச்சது தப்பாப் போச்சு ஏட்டைய்யா..ஏன் சார்..இப்போ வளைகாப்பு பண்ணி வையுங்கன்னு வந்து நிக்கிறாங்க.=========2. .உங்க கணவருக்கு எங்காவது ஓடிப்போகனும்னு போல தோணிக்கிட்டே இருக்காம்.. கவலைப் படாதீங்க.. குணப்படுத்திடலாம்..சரி பண்ணமுடியுமான்னு பாருங்க.. இல்லை.. என்னையும் இழுத்துட்டு ஓடறமாதிரி மருந்து குடுங்க.=========3. என் சம்பந்தி அரைகுறையா எதையோ தெரிஞ்சுக்கிட்டு என் பொண்ணுக்கு வைரஸ் கல் மூக்குத்தி ஒண்ணு செஞ்சி போட சொல்றாராம்..=========4. அடுத்ததாக நம் தலைவர் கட்சியில் துரோகம் செய்த சில முக்கிய புள்ளிகளை மேடையிலிருந்து தூக்கியெறிய இருப்பதால் அருகில் அமர்ந்துள்ள அணைவரும் சற்று தள்ளி அமர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்..==========5. அவன் தற்கொலை செய்து கொள்வதாக முடிவு பண்ணினான். விஷம் அருந்தலாமா.. தூக்கில் தொங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, கடைசியில்.. ரெயில் முன்பாய்வதுதான் சரியான ஐடியாவாக தோன்றியது..தெரிந்தவர்கள், நண்பர்கள் எல்லாருக்கும் தன் முடிவைச் சொல்லிவிட்டு, ஒரு நாள் சாயந்திரம் ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளோடு புறப்பட்டான். அத்தனை மூட்டைகளிலும் சிக்கன், மட்டன்என்று அசத்தலான சாப்பாட்டு அயிட்டங்கள்பார்த்தவர்கள் வியந்தார்கள்.ஆமா.. ரெயில்ல பாய்ஞ்சு தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொல்றே.. அப்புறம் எதுக்கு இத்தனை சாப்பாடு மூட்டைகள்?அவன் சொன்னான்.. சரியாப் போச்சு போங்க..அந்த வௌஸ்தை கெட்ட ரயில் லேட்டா வந்துச்சுன்னா, பசியிலேயே நான் செத்துடமாட்டேனா?==========6. எதுக்கு தூங்கிக்கிட்டிருக்கிற உன் கணவரை அலாரத்தை எடுத்து அடிச்சே ?அலாரம் அடிச்சாத்தான் அவர் எழுந்திரிப்பாரு.==========7. பால்காரரை காதலிக்கிறதா சொன்னே .. ஆனா அவர் லாண்டரிகாரராச்சேஆமாண்டீ வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனச்சுட்டேன்.இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:8. ராப்பிச்சையை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சா .. ஏன் ?நைட் ஆனா கௌம்பிடுறாரு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 71

1. வக்கீல் சார், நீங்க ஏன் உங்க மனைவியை டைவர்ஸ் பண்ணினீங்க?கேஸ் எதுவும் இல்லையான்னு கேட்டு தினமும் நச்சரிச்சுக்கிட்டு இருந்தா. அந்த எரிச்சல்ல டைவர்ஸ் பண்ணித் தொலைச்சிட்டேன்=========2. பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க ?மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேன்==========3. பக்கத்து வீட்டுப் பங்கஜத்திடம் பேசிவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்துடறேன்அஞ்சு நிமிஷத்தில் வந்திடுவியா?ஆமாங்க, நீங்க அரை மணிக்கு ஒரு தரம் அடுப்பில் இருக்கறதை கிண்டிவிட்டுடுங்க==========4. அந்த ஆள் பயங்கர குடிக்காரர்.நிஜமாவா .. ?ஆமாம், வெளியூருக்கு எங்கயாவது போனாகூட சரக்கு ரயில்லதான் போவாருன்னா பாருங்களேன்.==========5. பரீட்சை அறையில் ஏண்டா தூங்கினே ?பதில் தெரியாட்டி முழிச்சுக்கிட்டு இருக்காதே-னு நீங்கதானே சொன்னீங்க==========6. வெயில் காலம் வந்தால் உனக்குப் பைத்தியம் பிடிக்குமாமே உண்மையா?எந்த நாய் அப்படி சொல்லிச்சி...=========7. உங்க படத்துல இடைவேளையப்போ தேவையில்லாம் ஒரு குண்டு வெடிப்புக் காட்சி வருதே எதுக்கு?நல்லா தூங்கிட்டிருக்கிற எல்லோரையும் எழுப்பி விடத்தான்..========இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:8. டாக்டர் 22-ம் நம்பர் ரூம்ல வச்சிருந்த பாடியைக் காணல.. டாக்டர்..சரி சரி கவலைப் படாதே புதுசா ஒண்ணு நானே வாங்கித் தரேன்..

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 70

1. ஊசியை எங்கே போட்டுக்கறீங்க ?சட்டைப் பையில போடுங்க டாக்டர் பத்திரமாயிருக்கும்.==========2. உங்க பையன் அவங்க அம்மாவை மம்மின்னு கூப்பிடறான், உங்களை கம்மி-ன்னு கூப்பிடறானே ஏன் சார் ?வீட்ல எனக்கு பவர் ரொம்ப கம்மியாம் அதான் குத்திக்காட்றான்==========3. தலைவரே, தொண்டர்கள் கூட்டமா இருக்கிறப்ப ஆட்டோகிராஃப் போடாதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா ?ஏன் இப்ப என்னாச்சு ?கூட்டத்தோடு கூட்டமா எவனோ ஒருத்தன் உங்க செக்புக்குல கையெழுத்து வாங்கிட்டான்.==========4. தூர எது இருந்தாலும் தெரிய மாட்டேங்குது டாக்டர்.அப்ப கிட்டப்போய் பாருங்க.நிலாவையெல்லாம் எப்படி டாக்டர் கிட்டே போய் பார்க்க முடியும் ?==========5. நான் எடுத்துட்டுருக்கற சினிமாப் படத்தோட டைட்டில் ரொம்ப வித்தியாசமானது.அப்படி என்ன டைட்டில் வச்சிருக்கீங்க?நான் தான் சொன்னேனே .. .. ”ரொம்ப வித்தியாசமானது”-ன்னு.==========6. என்னதான் லோ பட்ஜெட் படம்னாலும் இப்படியா ?என்ன ஆச்சு .. ?காதல் தோல்வியிலே கதாநாயகி சைக்கிள் முன்னாலே விழுந்து தற்கொலை பண்ணிக்கிறாளாம்==========7. உப்பில்லாப் பண்டம் குப்பையிலேன்னு யாராவது சொன்னா எனக்குப் பத்திகிட்டு வரும்.எம்பா ?ஏன் தூக்கி எறியணும் உப்பைப் போட்டுச் சாப்பிட வேண்டியதுதானே==========இன்றைய மெகா ஜோக்:8. உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே.அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாளே

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 69

1. ஆபரேஷன் வேண்டாம்னு திரும்ப வார்டுக்கே அழைச்சிட்டு போறீங்களே ஏன் டாக்டர் ?நீங்க அதிர்ஷ்டகாரர் நான் எதிர்பார்த்த பணம் வேறு இடத்திலே இருந்து கிடைச்சிடுச்சு!==========2. தட்டு போட்டு உட்கார்ந்த உடனே என் கணவருக்குச் சாப்பாடு போட்டுடணும் இல்லைன்னா ரொம்பக் கோபம் வரும் ..ஏன் ?கஷ்டப்பட்டு சமைச்சு வெச்சிற அவருக்கு இதுகூடப் பண்ணலைன்னா பின்ன கோபம் வராதா ?==========3. நீயும் உன் மாமியாரும் ஒரே வீட்டுல இருக்கீங்களே சமையல் யார் பண்ணுவா ?ஒரு நாள் என் கணவர் பண்ணுவாரு மறு நாள் என் மாமனார் பண்ணுவாரு.==========4. உங்க மாமியார் தனக்கு தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்டே சொல்லலியா ?ஆமாம் சொன்னா எங்க நான் சந்தோஷப்பட்டுடுவேனோன்னு வயித்தெரிச்சல் ..==========5. டாக்டர் என் கணவருக்கு ஞாபகமறதி வியாதி அதிகமா போச்சு ..ஏன் .. .. ?அவருதான் டாக்டர் சமையல் பண்றாரு ஆனா சாப்பிடும்போது சமையல் நல்லா இல்லைனு என்னைத் திட்டுறாரு.==========6. சுண்ணாம்புக்குப் பதிலா டிஸ்டெம்பர் பயன்படத்தாலாம்னு அந்த ஆளுகிட்டச் சொன்னியா .. .. ?ஆமா ஏன் ?அங்கே பாரு வெத்தலைக்குக்கூட சுண்ணாம்புக்குப் பதிலா டிஸ்டெம்பர் தடவுறாரு.==========7. நம்ம தலைவரு இப்பல்லாம் மேடையில வடநாட்டுத் தலைவர்களோடு ரெண்டு கைகளையும் தூக்கி போஸ்கொடுகடகிறதையே விட்டுட்டாரு தெரியுமா ?ஏன் ?போனவாரம் இப்படி நடந்த கூட்டத்துல போஸ் கொடுக்கறப்ப அவரோட வேட்டி அவுந்து போச்சு.இன்றைய மினி பிட்டு ஜோக்கு:8. கண்ணா உன்கூட விளையாட தம்பிப் பாப்பா வேணுமா, இல்லை, தங்கச்சிப் பாப்பா வேணுமா ?எனக்காக நீங்க கஷ்டப்பட வேண்டாம் டாடி .. .. நான் எதிர்வீட்டுப் பாப்பா கூட விளையாடிக்கிறேன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 68

1. இந்த டாக்டருக்குச் சொந்தமா ஒரு ஸ்கூல்கூட இருக்கு.இருக்கலாம் .. .. அதுக்காக க்ளினிக்ல அட்மிட் பண்றதுக்குக்கூட இப்படி என்ட்ரன்ஸ் எக்ஸாம் எல்லாம் வைக்கணுமா ?==========2. மனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கித் தந்தீங்க தெரியுமா?கணவன் : ஓ! ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே!==========3. டாக்டர் : குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கறதுக்கு முன்னாடி நல்லா கொதிக்க வெச்சுக் குடுங்க.ஜோ : ஏன் டாக்டர், குழந்தைகளை அடுப்பில கொதிக்க வைக்கிறது தப்பில்லையா?==========4. ஜோ : போன வாரம் போலீஸ் என்னை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.நண்பர் : நீ என்ன தப்பு செய்தே?ஜோ : கடைக்குப் போய் ஷாப்பிங் செய்தேன்.நண்பர் : ஷாப்பிங் செய்ததுக்கா உன்னை அரெஸ்ட் பண்ணினாங்க?ஜோ : ஆமா.. ராத்திரி அவங்க கடையை மூடினப்புறம் ஷாப்பிங் போனேன்.==========5. காதலன் : "கண்ணே, நம்ப காதலைப் பத்தி யார் கிட்டேயும் சொல்லிடாதே!”காதலி : "மூளையில்லாதவன்கூட உன்னை காதலிக்க மாட்டான்னு சொன்ன ராதாகிட்ட மட்டும் சொல்றேனே!.''==========6. கணவன் : "உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?''மனைவி : "உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?''==========7. வள்ளுவருக்கு வளையல், மோதிரம் நெக்லஸை விட தோடு, தொங்கட்டான்தான் ரொம்பப் பிடிக்குமா எப்படி ?செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்னு சொல்றாரே!==========இன்றைய மெகா ஜோக்:8. அந்த தம்பதிக்கு திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. கணவனது அறுபதாவது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த கோலாகல கொண்டாட்டத்துக்கிடையே மின்னல் கீற்றாக வந்து உதித்தது ஒரு தேவதை. ”உங்களின் இணைபிரியாத வாழ்க்கையை மெச்சுகிறேன் எனது அன்பு பரிசாக ஆளுக்கொரு வரம் தருகிறேன் கேளுங்கள்” என்றது.மனைவி கேட்டாள் ”இத்தனை காலம் எங்கள் வாழ்க்கை ஏழ்மையிலேயே கழிந்துவிட்டது. அடுத்த ஊரைக்கூட பார்க்க இயலாத பரிதாப நிலைமையிலேயே இருந்துவிட்டோம் உலகம் முழுக்க நாங்கள் சுற்றிப் பார்க்க உதவி செய்தாலே போதும்”கண்களை மூடி கைகளைச் சுழற்றி ”ஜீபூம்பா” சொன்ன தேவதை அடுத்த விநாடியே கைநிறைய விமான டிக்கெட்டுகளை வரவழைத்துத் தந்தது. இப்போது கணவனின் முறை. மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தபடி தயங்கித் தயங்கிக் கேட்டான், “என்னைவிட முப்பது வயது குறைந்த பெண்ணுக்கு நான் புருஷனாக வேண்டும்”அவனது விபரீத ஆசையைக் கேட்டு திடுக்கிட்ட தேவதை சற்றே யோசித்து கண்களை மூடி கைகளைச் சுழற்றி ”ஜீபூம்பா” சொன்னது. அவன் தனது மனைவியைவிட முப்பது வயது கூடுதலான குடுகுடு கிழவனாக மாறியிருந்தான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 67

ராணுவ நகைச்சுவைஅது ரஷ்யாவும், சீனாவும் அரசியல் ரீதியாக பகை பாராட்டியிருந்த நேரம். இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று ராணுவ பலத்தால் அழித்து விடுவதாக சவாலிட்ட சமயம். க்ரெம்லின்மாளிகைக்கு ஒரு பெரிய பார்சல் வருகிறது. ரஷ்ய அதிபர் பிரெஸ்னேவ் அதைத் திறக்கிறார். ஒரு பை முழுவதம் பீன்ஸ் விதைகள்.அதோடு சீனாவின் மாவோவிடமிருந்து ஒரு கடிதம். "இப்படித்தான் படை படையாக உங்களை வந்து தாக்குவோம்" என்று கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.பிரெஸ்னேவ் உடனே பதிலுக்கு ஒரு பெரிய பையில் கோதுமை மாவை பார்சலில் சீனாவிற்கு அனுப்புகிறார். அதனுடன் இணைப்பாக ஒரு கடிதம். "இப்படித்தான் உங்கள் படையைப் பொடிப்பொடியாக்கி விடுவோம்”*****ஒரு அமெரிக்க ராணுவப் பயிற்சி முகாம். விமானப்படை வீரர்கள் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் கீழே குதிக்க வேண்டும்.ஒரு வீரன் பதற்றத்துடன் சொன்னான். "தலைவரே, எனது பாரசூட் திறக்க மாட்டேன் என்கிறது"தலைவர் சொன்னார். " கவலைப்படாதே! இது வெறும் பயிற்சிதானே!"*****கிழக்கு ஜெர்மனி வீரர்கள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். பல ஆண்டுகள் பல நாடுகளுடன் போரிட்டு அவர்களுக்கு யார் நண்பர்கள், யார் விரோதிகள் என்பதிலேயே குழப்பம்இருந்தது. கமாண்டர் ஒரு வீரனைக் கூப்பிட்டு, "ஒரு அமெரிக்கன் ஒரு ரஷ்யன் இருவரைப் பார்த்தால் முதலில் யாரைச் சுடுவாய்?" என்று கேட்டார்.இப்போது அமெரிக்கா விரோதியா, இல்லை.. ரஷ்யா விரோதியா எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்த அந்த வீரன் "ரஷ்யனை" என்றான்.கமாண்டர், " நீ ஒன்றுமே தெரியாத முட்டாளாயிருக்கிறாயே! நான் உனது இடத்தில் இருந்தால் அமெரிக்கனைத்தான் கொல்வேன்" என்றார்.அந்த வீரன், "அப்படியே இருந்தாலும் நான் கொல்வதற்கு அந்த ரஷ்ய வீரன் இருப்பான்.. இல்லையா?" என்று அப்பாவித்தனமாகச் சொன்னான்.*****ஒரு முறை ஹங்கேரிய ஜனாதிபதி ஜனோஸ் கத்தாரும் ரஷ்ய அதிபர் பிரெஸ்னேவும் தத்தமது நாட்டு வீரர்கள்தான் சிறந்தவர்கள் என்று ஒருவருக்கொருவர் விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.ரஷ்ய அதிபர், "சோவியத் வீரர்கள்தான் சிறந்தவர்கள். சோவியத் வீரன் முதலில் சிந்திக்கிறான், பிறகு செயல்படுகிறான்" என்று கூறினார்.ஹங்கேரி அதிபர், "இல்லை.. இல்லை. எங்கள் நாட்டு வீரர்கள்தான் சிறந்தவர்கள். எங்கள் வீரர்கள் முதலில் செயல்படுவார்கள், பிறகுதான் சிந்திப்பார்கள்" எனக் கூறினார்.அவர்கள் இருவரும் இப்படியே விவாதித்துக் கொண்டிருக்க, இரண்டு நாட்டு வீரர்களையும் அழைத்து சோதித்துப் பார்த்துவிடுவது எனப் பந்தயம் கட்டினார்கள்.பிரஸ்னேவ் தனது வீரனை அழைத்து, "வீரனே, இதோ இங்கிருப்பது ஹங்கேரிய ஜனாதிபதி ஜனோஸ் கத்தார். அவரை சென்று தாக்கு" என்றார். சோவியத் வீரன் சற்றே யோசித்து, "இல்லை,என்னால் நம் நாட்டு நண்பரைத் தாக்க முடியாது" என்றான். ஹங்கேரிய ஜனாதிபதி தனது வீரனிடம் "இதோ, இங்கிருப்பது சோவியத் அதிபர் ப்ரெஸ்னேவ். அவரை உடனே சென்று பலமாகத்தாக்கு" என்றார். அந்த வீரனும் சற்றும் யோசிக்காமல் உடனே பிரஸ்னேவை பலமாகத் தாக்கியதில் அவர் சற்று தள்ளிக் கீழே விழுந்தார்.அந்த வீரன் கதவு வரை சென்று ஏதோ சிந்திக்கத் தொடங்கினான். தான் பந்தயத்தில் வெற்றி பெற்றோம் என்ற களிப்பில் இருந்த கத்தார், அந்த வீரன் போகாமல் இருப்பதைப் பார்த்து, "ஏன்நிற்கிறாய் போகாமல்? என்ன சிந்தனை உனக்கு? என்னைப் பந்தயத்தில் ஜெயிக்க விடமாட்டாய் போலிருக்கிறதே" என்றார் எரிச்சலுடன்.அந்த வீரன் சொன்னான், "இல்லை.. தாக்கியது போதுமா அல்லது உதைக்கவும் வேண்டுமா" என்றுதான் யோசிக்கிறேன் என்றான்.*****ஒரு ரஷ்ய உளவு விமானம் அலாஸ்கா அருகில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலுள்ள விமான ஓட்டியை அமெரிக்க ராணுவத்தினர் பிடித்து விசாரித்தனர். விசாரணை செய்த அமெரிக்க அதிகாரிரஷ்ய விமான ஓட்டியிடம், ரஷ்யப் போர் விமானம் மிக் 29ஐப் பற்றி விளக்கிக் கூறுமாறு கேட்டார். எத்தனை முறை திரும்பத் திரும்பக் கேட்டாலும் அந்த விமான ஓட்டி தனக்குத் தெரியாதுஎன்றே பதிலளித்தான். அடித்து உதைத்துக் கேட்டும் பிரயோசனமில்லை. அமெரிக்கர்களே களைத்துப்போய் அந்த விமான ஓட்டியை ரஷ்யாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள்.ரஷ்யா சென்ற அவன் தனது சக விமான ஓட்டிகளிடம் சொன்னான். "மிக் 29ஐப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அது தெரியாமல் அமெரிக்கப் படைகளிடம் பிடிபட்டால் நன்றாகஉதை வாங்க வேண்டி வரும். எனக்கு அது பற்றி தெரியாததால் என்னை நொறுக்கியே விட்டார்கள்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 66

1. இந்த மருந்தை தினமும் காலையில வெறும் வயித்துல சாப்பிடுங்க.பனியன்கூடப் போட்டிருக்கக்கூடாதா டாக்டர் ?==========2. அவசியம் இருந்தால்தான் உங்களுக்கு டெஸ்டெல்லாம் எடுக்க வேண்டியது இருக்கும்அது எப்ப தெரியும் டாக்டர் ?லேப் வெச்சிருக்கிற என் தம்பி போன் பண்ணுவான்.==========3. நேற்று நான் வந்தப்போ நீங்க இல்லை, உங்க கம்பவுண்டர்தான் மருந்து கொடுத்தார்ஐயையோ.. . என்ன ஆச்சு ?ஒரே வேளையில குணமாயிடுச்சு==========4. என் மாமியார் வந்த ஆட்டோ கவுந்துடுச்சு.ஐயையோ.. . அப்புறம் என்ன பண்ணே ?ஆட்டோகாரனுக்கு மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுத்தேன்.. .==========5. நேத்து நம்ம வீட்டுக்கு வந்த திருடனை உங்கப்பாதான் அனுப்பியிருப்பாரோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு.ஏங்க வீணா அவர்மேல பழியைப் போடுறீங்க.. .?பின்ன என்ன.. . வரதட்சணையா வாங்கின ஐம்பதாயிரத்தை எடு-னு திருடன் கரெக்ட கேட்டானே.==========6. சட்டசபையில் பக்கத்துல உட்கார்ந்திருக்கிற எம்.எல்.ஏ.க்கள் கூட தொணதொண-ன்னு தலைவர் பேசிக்கிட்டே இருக்காரே, என்ன விஷயம் ?சட்டசபையில் தலைவர் பேசவே இல்லை-ன்னு யாரும் சொல்லிடக்கூடாதுங்கறதுக்காகத்தான் இப்படிப் பேசிட்டிருக்காரு==========7. தலைவர், தன்னோட மாமாவும் தாத்தாவும் சுதந்திரப் போராட்ட வீரர்கள்-னு சொல்றது நிஜமாய்யா ?அவர் சொல்றது, நேருவையும், காந்தியையும்யா==========இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:8. கணவன்: என்னைக்கேட்டு யாராவது போன் பண்ணினா ”நான் வீட்டில இல்லை”ன்னு சொல்லிடு.மனைவி: சரிங்கஅப்புறம் ஒரு போன் வந்தது. மனைவி போனை எடுத்து, “அவர் வீட்டில இருக்கார்”னு சொல்லிட்டாங்க.கணவன்: நான் என்ன சொன்னேன், நீ என்ன செய்றே, நான் தான் வீட்டில இல்லைன்னு சொல்லச் சொன்னேன்லமனைவி: சும்மா கத்தாதீங்க. இது எனக்கு வந்த கால்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 65

1. என்ன டாக்டர், திடீர்னு கண்ணை மூடிக்கிட்டீங்க ?பார்வை நேரம் முடிஞ்சிடுச்சு போயிட்டு நாளைக்கு வாங்க==========2. உங்க வீட்டுக்கு பின்னால இருக்கிற பெரிய கிரவுண்டு யாருது ?அதெல்லாம். என்னோடதுதான்உங்களுக்குப் பெரிய பேக்கிரவுண்டே இருக்குன்னு சொல்லுங்க==========3. உங்க பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வைங்க.. ரொம்பத் திமிரா பேசுறான்என்ன பேசினான் ?ஏண்டா ரெண்டு நாளா ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்டான்.. . மதியாதார் தலைவாசல் மிதிக்க வேணாம்-னு நீங்கதானே சொன்னீங்கங்கறான்==========4. சரக்கு மாஸ்டர் தேவைங்கற விளம்பரத்தைப் பார்த்துட்டு அப்ளிகேஷன் போட்டியே, என்ன ஆச்சு ?அங்கே போனப்புறம்தான் சொல்றாங்க, கள்ளச் சாராயம் காய்ச்சணும்-னு==========5. வானம் கூட குடிக்கும் போலிருக்கு.. .பின்ன இன்றும் வானம் தெளிவாக இருக்கும்-னு ரேடியோல சொன்னாங்களே.. .==========6. அந்த நடிகருக்குக் கொஞ்சம்கூட டான்ஸ் ஆட வராதே.. . உங்க படத்திலே மட்டும் இவ்வளவு பிரமாதமா ஆடறாரே.. . எப்படி ?அவரோட மனைவியைக் கூட்டி வந்து எதிரில் நிறுத்தினோம். அவர் உடம்பு தன்னாலே ஆட ஆரம்பிச்சுட்டது.==========7.வைக்கோல் சாப்பிட்டா கண் பார்வைக்கு நல்லதுசும்மா அளக்காதே.. .உண்மையாதான் சொல்றேன்.. . எந்த மாடாவது மூக்குக்கண்ணாடி போட்டிருக்கா ?==========இன்றைய மினி பிட்டு ஜோக்கு:8. காதலில் சைவம், அசைவம்னு ரெண்டு வகை இருக்கு. உதாரணம் சொல்லு பார்ப்போம்.கதாநாயகி தொப்புளில் ஹீரோ தோசை சுட்டா அது சைவம். ஆம்லெட் போட்டா அது அசைவம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 64

1. அந்தக் காலத்துல ஏன் தட்டுங்கள் திறக்கப்படும்-னு சொல்லியிருக்காங்க ?அப்பா காலிங்கெல் கிடையாது.. . அதான்==========2. டெலிபோனை எடுத்து என்னனு கேளு, போடெலிபோன் அடிக்கலையே அத்தைஆமா.. . அது அடிக்கிற வரைக்கும் காத்திருக்கணுமா ? நீயே போய் எடுத்தா குறைஞ்சு போயிடுவியாக்கும் ?==========3. தெரியாத்தனமா, பூசணிக்காய் வியாபாரம் செய்யறவர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிட்டேன்.சமையல்ல பூசணிக்காயா ?அதில்ல. தாம்பூலப் பையில் ஆளுக்கொரு பூசணிக்காய்.. .தூக்கிட்டு வந்ததில் ரெண்டு கையும் செம வலி==========4. நேத்து எங்க தலைவர், தொகுதிக்கு குறை கேட்கப் போயிருந்தப்ப ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சூழ்ந்துக்கிட்டு குரைக்க ஆரம்பிச்சிட்டுதுஅப்படின்னா உங்க தலைவர் தொகுதிக்கு குரை கேட்கப் போனார்-னு சொல்லு.==========5. தலைவர் பேசும்போதெல்லாம் ரெண்டு மைக் வைக்கிறாங்களே.. . ஏன் ?அவருக்கு ரெட்டை நாக்காம்==========6. பொண்ணு போட்டோவை மாப்பிள்ளைகிட்ட ஆபீஸ்ல கொண்டு போய்க் காட்டினது தப்பாப் போச்சுஏன் ?தூக்கக் கலக்கத்துல இருக்கிறப்ப என்னை ஏமாத்திட்டீங்கன்னு சொல்றாரு==========7. கமல் ரசிகையை காதலிச்சது நல்லதாப் போச்சுஏன் ?நான் முத்தம் கேட்கறதுக்குள்ள அவளே குடுத்துடறா.இன்றைய மெகா பிட்டு ஜோக்:8. சார்.. . இன்னைக்குக் குலுக்கலை வாங்கிட்டுப் போங்க.. காலையிலே யோகலட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப்போறா!யோவ். .. போனவாரம் நான் தனலட்சுமி வீட்டுக் கதைவைத்தட்ன விவகாரமே இன்னமும் தீரலை.. .

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 63

1. சார்.. .இந்தப் புடவை லேட்டஸ்ட் மாடல்.. . கட்டினா சூப்பரா இருக்கும்.அதெல்லாம் முக்கியமில்லே.. . துவைக்கிறதுக்கு ஈசியா இருக்குமான்னு சொல்லுங்க.==========2. ஆஸ்பத்திரிலேர்ந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த எங்க அம்மா மயக்கம் போடுற அளவுக்கு என்ன சொன்னே ?நீங்க நல்லபடியா உடம்பு குணமாகி வந்தா, முருகனுக்கு உங்களை அலகுக் காவடி எடுக்க வைக்கிறதா வேண்டிக்கிட்டிருக்கேன்னு சொன்னேன். அவ்வளவுதான்.==========3. என் கணவருக்கு நான்தான் சார் உலகமே.அதான் உலகம் எப்ப அழியும்ன்னு அடிக்கடி எல்லாரையும் கேட்டுக்கிட்டிருக்காரா ?==========4. எனக்குச் சர்க்கரை வியாதி.. . டாக்டருக்கே ஆயிரம் ரூபாய் செலவாகிடுச்சு.ஆச்சரியமா இருக்கு.. . உனக்கு வந்த சர்க்கரை வியாதிக்கு டாக்டருக்கு ஏன் ஆயிரம் ரூபாய் செலவாச்சு ?==========5. நேத்து நைட் எங்க வீட்டுக்கு வந்த திருடன் ரொம்ப அமைதியான கேரக்டர் போல.எப்படிச் சொல்றே ?அவன் வந்ததும் தெரியலை போனதும் தெரியலை. அப்படி காம் டைப்.==========6. என் கடைசித் தம்பிகிட்ட நேத்து படி படி-ன்னு சொன்னேன்.. . கேட்காம .என்ன.. . ஃபெயில் ஆயிட்டானா ?ம்ஹூம். .. மாடிப்படியில தடுக்கி விழுந்து காலை ஒடிச்சுக்கிட்டான்.==========7. அந்த டாக்டர் போலி டாக்டர்-னு எப்படி கண்டுபிடிச்சிங்க.எலும்பு உடைஞ்சிருக்கு.. . உடனே போய் பெவிகால் வாங்கீட்டு வாங்க, அப்படின்னு சொல்றாரு.==========இன்றைய மினி பிட்டு ஜோக்கு:8. வாங்க சார். டாக்டர் இல்லீங்களே.. . வெளில போயிருக்கார்.சரி.. . பரவாயில்லை. நர்ஸைக் கூப்பிடுங்க வந்ததுக்கு அவங்களையாவது பார்த்துட்டுப் போயிடறேன்.==========

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 62

1. அடியே நான் சாமியார் ஆகிவிட்டேன்சரி, இப்பவாவது நாலுகாசு சம்பாதிக்கப் பாருங்க.. .==========2. இன்னைக்கு ஸ்டேஷனில் ஒரு கேஸைத் துருவித் துருவி விசாரிச்சேன்அதெல்லாம் கிடக்கட்டும்.. . முதலில் தேங்காயைத் துருவுங்க.. . அப்புறம்தான் சாப்பாடு.. .==========3. நாட்டு வைத்தியரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுத் தவிக்கிறேன் ?ஏன் ?தலைக்கு வேப்பம்-பூ வாங்கிட்டு வந்து வச்சுக்கச் சொல்றாரு.==========4. என்னது, அவர்கள் ஹைடெக் காதலர்களா ?ஆமாம், முன்பு பனகல் பார்க்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவங்க. இப்போது டைடல் பார்க்குக்கு வந்துட்டாங்களே. .==========5. டாக்டர், எனக்கு அடிக்கடி கழுத்துவலி வருது.. .பொண்டாட்டியைத் தலைல தூக்கி வெச்சுக்கிட்டு ஆடினா.. . இப்படித்தான்.==========6. அந்த ஆள் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றீங்க.. .?பின்ன .. என்னோட ப்ளட்ல யூரியா நிறைய இருக்கு.. . அதனால தலைமுடி நல்லா வளரும்னு சொல்றாரே..==========7. டாக்டர், ஒரு வாரமா பின்னாடி தலைமுடி ஒரே கொட்றது.. .முன்னாடி எப்பவாவது இது மாதிரி கொட்டியிருக்கா. ?இல்லே டாக்டர்.. . பின்னாடி தான் கொட்டியிருக்கு..==========இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:8. நேத்து நடந்த கல்யாணத்துல தலைவர் மானத்தை வாங்கிட்டார்என்னாச்சி?திருமணத்தை நடத்தி வைத்த நான், சாந்தி முகூர்த்தத்தையும் நடத்திவைத்து மணமக்களை சந்தோஷப் படுத்துவேன்னு மைக்கில பேசிட்டாரு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 61

1. என்ன உங்க பையன் உங்களையே கோவிந்தான்னு கூப்பிடுறான் ?நான்தான் சொன்னேனே பேர் சொல்ல ஒரு பிள்ளை இருக்கான்னு...==========2. போர் முழக்கம் செய்தாயிற்று. .. இன்னும் படை வீரர்கள் போருக்குக் கிளம்பவில்லையே. .. ஏன் ?அவர்களது உயிருக்கு நாம் இன்னும் இன்ஷூரன்ஸ் எடுத்துத் தராததால் ஸ்டிரைக் செய்கிறார்கள் மகாராஜா.==========3. மூத்தவனான உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே, உன் தம்பிக்குக் கல்யாணம் ஆயிடுச்சாமே ?அவன் பஸ் டிரைவர். ஓவர் டேக் பண்ணியே பழக்கம்.==========4. அவனை நாயேன்னு திட்டினது தப்பாப் போச்சு.ஏன், என்ன ஆச்சு ?5. இப்ப டெலிபோன்ல நீங்க உங்க மனைவிகிட்டேதானே பேசினீங்க ?ஆமாம் எப்படிக் கண்டு பிடிச்சீங்க ?தலையை ஆட்டிக்கிட்டே பேசினீங்களே.. .==========6. என்னங்க.. . நானும் 3 மாசமா நாய் மாதிரி கத்திக்கிட்டுக் கிடக்கேன். கழுத்துக்கு ஒரு செயின் வாங்கித் தரக்கூடாதா ?==========7. ஆபரேஷன் முடிந்து மறுபடியும் செக்கப்புக்கு வரணுமா டாக்டர் ?அதுக்கெல்லாம் அவசியமே இருக்காதுங்க.==========அப்புறம் இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:8. அந்த டைரக்டர் என்ன, நடிகையோட வயித்தையே பார்த்துக்கிட்டு இருக்காரு.. ?தொப்புள் காட்சி எடுக்க லொகேஷன் பார்க்கறாரு.. .

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 60

1. மனைவி: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்கணவன் : ரொமப தேங்ஸ்.மனைவி: சரியா படிக்கலைன்னா உன் அப்பன் மாதிரி உதவாக்கரையாயிடுவன்னு அப்பப்போ சொல்வேன். பையன் புத்திசாலி. புரிஞ்சுக்கிடடு படிச்சான். பெரிய ஆளாயிட்டான்==========2. கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?மனைவி : நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.==========3. மனைவி : எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க?கணவன் : ஏன் உனக்கு சொல்லணும்?மனைவி : நீங்கன்னு நெனச்சு, அவன் முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்.==========4. கடை வீதியில் ஒரு பெண்ணிடம் பிச்சைக்காரி ஒருத்தி " அம்மா தாயே காசு கொடுங்கம்மா சாப்பிட்டு நாலு நாளாயிடுச்சு".பெண்: நான் காசு குடுத்தா அதில பவுடர் சீப்பு கண்ணாடி வாங்க மாட்டேயே"பிச்சைக்காரி: நான் குளிச்சே ரொம்ப நாளாயிடுச்சு. எனக்கு எதுக்குமா இதெல்லாம்பெண்: காசு குடுத்தா அதில நல்ல சேலை வாங்க மாட்டேயேபிச்சைக்காரி: பிச்சை எடுக்கற எனக்கு எதுக்குமா நல்ல சேலையெல்லாம். காசு குடுங்க நான் சாப்பிடணும்.பெண்: காசு தறேன். அதுக்கு முன்னால உன்னை என்னொட கணவர்கிட்ட காட்டணும். எனக்கு பவுடர் சீப்பு கண்ணாடி சேலை எல்லாம் வாங்கி தராட்டா நான் எப்படி இருப்பேன்னு காட்டணும்.==========5. பேய் இருக்குன்னா நம்புற நீங்க, கடவுள் இருக்காருன்னா ஏன் நம்ப மாட்டேங்குறீங்க???என் மனைவிகிட்டேயிருந்து என்னை காப்பாத்த யாரும் இல்லையே...==========6. ஏங்க.. . நம்ம பையனுக்கு உடனே ஒரு நல்ல பொண்ணா பாருங்க. அவனுக்கு கல்யாண ஆசை வந்திடுச்சுஎப்படிச் சொல்றேஅவனோட ரூம்ல போய் பாருங்க. . . சமையல் செய்வது எப்படி ?-னு புத்தகமா வாங்கி அடுக்கியிருக்கான்.==========7. அந்த ஆளுக்கு வைர- வியாபாரத்துல ஏகப்பட்ட நஷ்டம் வந்து இப்ப அவரோட வியாபாரமே தலைகீழா மாறிப்போச்சு.எப்படி ?இப்ப அவரு ரவை வியாபாரம் பண்றாரு.==========இன்றைய மெகா ஜோக்:8. மனைவி: என்னங்க... எதிர் வீட்டுக்காரன் என்னை நாய்னு திட்டீட்டான்.கணவன்: வரட்டும் ராஸ்கல். நாய்னா அவனுக்கு அவ்வளவு கேவலமாப் போச்சா?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Sunday, June 19, 2011

பிட்டு - 54

1. எங்க மானேஜருக்கு ஆபீஸ்ல திடீர்னு பெண்டாட்டி ஞாபகம் வந்தா போதும்.. .உடனே வீட்டுக்கு கிளம்பிடு வாரா.. .?இல்ல ஆபீஸ்ல எல்லார் மேலயும் எரிஞ்சு விழுவாரு.=========2. போலீஸை ஏன் அரிவாளால் வெட்டுனே ?சும்மா மாமூலை வெட்டு வெட்டுனு தொந்தரவு குடுத்துட்டு இருந்தாரு மொத்தமா வெட்டிட்டேன்.==========3. டீச்சர்: ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.மாணவன்: உங்க கொடுமைகளை தாங்கிக்கிட்டு உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்கார் டீச்சர்.==========4. உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?கண்டிப்பா இருக்கே.அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே==========5. டேய். .. மரியாதையா பீரோ சாவியை எடு.எடுக்கறேன். .. முதல்ல பணம் கொடு.எதுக்கு ?பீரோ வாங்கத்தான்==========6. தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சுஏன் ?நர்ஸிங் ஹோம் வெச்சுத்தரச் சொல்லி பிடிவாதம் பண்றாரு.=========7. கணவன்: என்ன இது, சாம்பார்ல ரெண்டு ரூபாய் காய்ன் கிடக்குது ?மனைவி: நீங்க தானே சமையல்ல சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க.=========இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:8. டாக்டர், ரெண்டு நாளா நானும் கவனிச்சிட்டு இருக்கேன். எப்பப்பாரு என் சம்சாரம் கையை டச் பண்ணிக்கிட்டே இருக்கீங்களே ?என் மனைவிக்கு ஆபத்து, கைவிட்டுடாதீங்க டாக்டர்னு நீங்கதானே சொன்னீங்க ?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 52

1. எதுக்கு அந்த வாஸ்து சாஸ்திர ஜோசியரைப் போய் அடிக்கப் போனீங்க. ..?பின்னே. .. இடதுபக்கம் இருக்கிற இதயத்தை எடுத்து வலதுபக்கம் வெச்சுட்டா நல்ல பணம் வரும்-னு சொல்றாரு.=========2. சார். .. நாங்க வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியே போயிருக்கும்போது யாரோ திருடன் புகுந்து வீட்டையே காலி பண்ணிட்டுப் போயிட்டான். ..ஆச்சரியமா இருக்கே. ..இதுக்கே ஆச்சரியப்பட்டா.. . போகும்போது வீட்டை ஒருத்தருக்கு வாடகைக்கு வேற விட்டுட்டுப் போயிட்டான் சார்.=========3. சாப்பிட்டு முடிச்சவுடனே, உன்னைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளை உன்கிட்ட என்னவோ கேட்டாரே. .. என்னவாம் ?இதே மாதிரி சாப்பாடு எப்பவும் கிடைக்குமா ?னு கண்ணீர் மல்கக் கேட்டார்========4. நாம ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடப்போற விஷயம் எங்கப்பாவுக்கு தெரிஞ்ச போச்சு. ..ஐயையோ. .. என்ன சொன்னாரு ?போறப்ப எங்க அம்மாiவும் கூட்டிட்டுப் போகச் சொன்னாரு.=========5. பக்கத்து வீட்டுக்காரி நல்லாத்தானே இருக்கா. அப்புறம் ஏன் கழுத்துல சுளுக்குங்கிறா ?அவ போட்டிருக்கிற வைர அட்டிகையை எல்லோரும் பார்க்கணுமாம். அதான்.=========6. கணிப்பொறிக்கும், எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம் .. .?கணிப்பொறிக்கு மௌஸ் வெளியே இருக்கும். .. எலிப் பொறிக்கு மௌஸ் உள்ளே இருக்கும்.=========7. குரைக்கிற நாய் கடிக்காதுன்னு எதவைச்சு சொன்னாங்க ?தேள் குரைக்கறதில்லை. ஆனா கடிக்குதுல்ல.=========இன்றைய மினி பிட்டு ஜோக்கு:8. கார் மெக்கானிக்கைக் கல்யாணம் பண்ணினது தப்பா போச்சுஏன் ?டெய்லி கட்டிலுக்குக் கீழே தான் படுக்கறாரு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 49

1. கண்ணாடியை கழட்டிட்டா எதுவுமே தெரியமாட்டேங்குது டாக்டர்.. .நிஜமாவா.. ?ஆமாம், கண்ணாடியை கழட்டிட்டனா இல்லையான்னு கூட தெரியமாட்டேங்குது டாக்டர்==========2. சார் பீரோல வெச்சிருந்த என்னோட மொத்தப் புடவைகளும் காணாம போச்சு..உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா. .?தோய்க்கறதுக்கு சோம்பேறித்தனப்பட்டுட்டு என் கணவர்தான் யாருக்காவது எடுத்துக் கொடுத்துட்டாரோன்னு சந்தேகமா இருக்கு.==========3. எங்கப்பா வெளியே போறப்ப சட்டை போட்டா பேண்ட் போட மாட்டாரு.. . பேண்ட் போட்டா சட்டை போட மாட்டாரு.. .ரொம்ப அசிங்கமாயிருக்குமே..அதெப்படி அசிங்கமாயிருக்கும். .. சட்டை போட்டா பேண்ட்டுக்குப் பதிலா வேஷ்டி கட்டுவாரு.. . பேண்ட் போட்டா சட்டைக்குப் பதிலா ஜpப்பா போடுவாரு.. .==========4. ராத்திரி எட்டு மணி ஆனா என் கணவர் வீட்டுக் கதவைச் சாத்திடறhரு.. .புதுசா கல்யாணம் ஆச்சே., கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும்.அட நீ வேற அவரு பாத்திரம் தேய்க்கற விஷயம் வெளியே யாருக்கும் தெரியக் கூடாதாம்.==========5. சார் நான் பரீட்சை எழுதறப்ப இவனைப் பார்த்துதான் எழுதினேன்.சரி.. . இண்டர்வ்யூக்கு இவரை ஏன் கூட்டிட்டு வந்தீங்க ?எனக்கு பதில் தெரியாத கேள்வியைக் கேட்டீங்கன்னா இவரைக் கேட்டு பதில் சொல்வேன்.==========6. ஏன் சார் உங்களுடையது காதல் திருமணமா ?எப்படி கரெக்டா சொன்னீங்க ?இவ்வளவு மோசமான சமையலை இவ்வளவு ருசிச்சு சாப்பிடறீங்களே அதை வச்சுதான் கண்டுபிடிச்சேன்==========7. தலைதீபாவளிக்கு உன்னோட மாமனார் முறைப்படி எல்லாம் செஞ்சாரா.. ?ம்.. . முறைப்படி செஞ்சார்.. . ஆனா, முறைச்சபடி செஞ்சார்==========இன்றைய மினி பிட்டு ஜோக்கு:8, (முதலிரவு அறையில்) என்னது.. . அங்கேயே வெட்கப்பட்டுக்கிட்டு நிக்கிறே.. .? உனக்கு யாரும் எதுவும் சொல்லித் தரலையா.. .?சொல்லித் தந்தாங்க. மொதல்ல அஞ்சு நிமிஷம் வெட்கப்படணும்-னு சொன்னாங்க.. அதான் பட்டுக்கிட்டிருக்கேன்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 38

1. அவர்:எதுக்கு பெண் போலீஸ் எல்லாம் திடீர் போராட்டம் நடத்துறாங்க?இவர்:அவங்க யூனிபார்ம்ல ஜன்னல் வைக்க அனுமதி கோரியாம்!==========2. ஒருவர்: உங்க பையனை நீங்க "தருதல" னு திட்டினாக்கூட அமைதியா சிரிச்சுக்கிட்டு போறான் நல்ல மரியாதை தெரிஞ்ச பையன் போல...மற்றவர்: நீங்க வேற அவன் அஜித் ஃபேனாம் திட்டும் போதும் "தல" சொல்றேன்னு அவனுக்கு அதுல அல்ப சந்தோஷம்!==========3. வாங்கின கடனை போன மாதம் திருப்பிக் கேட்டப்ப அடுத்த மாதம் தர்றேன்னு சொன்னீங்க. இப்பவும் அடுத்த மாதம்னு சொல்றீங்களே.. .?இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சுங்கிறது என்கிட்ட கிடையாதுங்க==========4. பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!இப்பவாவது உணர்ந்தியே!கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!==========5. என்னப்பா இது... தோசையை இப்படி ஸ்டாண்ட்ல தொங்க விட்டுத் தர்றீங்க...?சும்மா அப்படியே பிய்ச்சுத் தின்னுடுங்க... இல்லேன்னா, தட்டு கழுவுற சார்ஜ; எக்ஸ்ட்ரா போடுவோம்==========6. உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார்.ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.==========7. ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்புபோனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க!==========இன்றைய மெகா ஜோக்:8. மேடம்... ஒரு அஞ்சு நிமிஷம் வெளில வெய்ட் பண்ணுங்க...எதுக்கு டாக்டர் ?தெர்மா மீட்டர் வெச்சு டெம்பரேசர் பார்க்கணும்... நீங்க பக்கத்துல இருக்கறதால இவரு வாயைத் திறக்க மாட்டேங்கறார்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 36

1. ஏன் உங்க மூளையைப் படம் எடுத்துத் தரச் சொல்லி தொல்லைப்படுத்துறீங்க?எனக்கு மூளை இல்லேன்னு சொல்றவங்க கிட்டெல்லாம் காட்டத்தான்==========2. நிம்மதியைத் தேடி ஊர் ஊரா யாத்திரை போறதுக்குப் பதிலா, இப்படிச் செய்தா என்ன ?எப்படி ?உங்க மனைவியை கொஞ்சநாள் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வையுங்களேன்.=========3. என் கணவர் இரவு பகல்னு பார்க்க மாட்டார். எப்பவும் கடினமாதான் உழைப்பார்.அதான் இத்தனை குழந்தைகளைப் பார்த்தாலே தெரியுதே...=========4. அன்பரே, கைவிட்டு விட மாட்டீங்களே ?கையை எப்படி விட முடியும் கண்ணே. கைக்கு பத்து பவுன் வளையல் அல்லவா போட்டிருக்கே.==========5. உங்க மனைவியைப் பற்றிப் பலபேர் பலவிதமா பேசறhங்களே, நீங்க கண்டிக்கக் கூடாதா ?ஒருத்தர் ரெண்டு பேர்னா கண்டிக்கலாம். பல பேரை எப்படிக் கண்டிக்க முடியும்==========6. சிஸ்டர் எனக்காக ஒரு பாட்டு பாடுவீங்களா ?ஓ.. .ஆனால் திட்டக் கூடாதும் .. . பாடுங்கஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமடா.. .==========7. நடிகை - டைரக்டர்: சார்மார்வாடிகிட்டே என்னை ஏன் அழைச்சுட்டு வந்தீங்க ?டைரக்டர் - அதான் சொன்னேனே.. . உங்களை வச்சுத்தான் இந்த படமே எடுக்கணும்னு==========இன்றைய மெகா ஜோக்:8. பசங்களை அப்பா அம்மா விளையாட்டு விளையாடச் சொன்னது தப்பாப் போச்சு.என்ன ஆச்சு ?பயங்கரமாக அடிச்சு சண்டை போட்டுக் கொண்டு ரத்தக் காயத்துடன் வந்து நிற்கறாங்க.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 35

1. தொண்டன்1: நம்ம தலைவர் கதை விடுறதுல பலே கில்லாடி...தொண்டன்2: அப்படி என்னக்கதை விட்டார்...தொ1: நாங்க ஆட்சிக்கு வந்தால் .... இரவில் வானத்தில் பறக்கும் விமானங்களுக்கு சரியாக வழி தெரிய வானத்திலும் தெரு விளக்குகள் அமைப்போம்னு சொல்றார்.==========2. ஒருவர்: எதுக்கு அந்த டிராபிக் போலீஸ் காரர் விமான நிலையத்தில வந்து சண்டைப்போடுறார்.மற்றவர்: நோ எண்ட்ரி வழியா ஒரு பிளைட் ஆகாயத்துல பறந்து போச்சாம், அதுக்கு ஃபைன் போடணும்னு சொல்றார்!==========3. வித்வான்:அந்தம்மாவுக்கு பெரிய நாட்டிய "தார"கைனு தான் பேரு, ஆனால் சம்பளம் ஒழுங்காவே தர மாட்டாங்க!நண்பர்: அப்போ நாட்டிய தராத"கை"னு சொல்லுங்க!==========4. நண்பர்: பக்கத்து வீட்டில திருடி போலீஸ்ல மாட்டிக்கிட்டாரே கொன்னக்கோல் பாகவர் கிட்டப்பா இப்போ என்ன ஆனார்?மற்றவர்: இப்போ அவரை எல்லாம் கன்னக்கோல் பாகவதர்னு சொல்றா!==========5. நண்பர்1: உங்க பிரண்டு பெரிய விஜய் ஃபேனாக இருக்கலாம் அதுக்காக பஸ்டாண்ட்ல போய் மதுரைக்கு போகாதடினு பாடிக்கிட்டு நிக்கனுமா?நண்பர்2: நீ வேற அவன் பொண்டாட்டி கோச்சுக்கிட்டு அவங்க அம்மா ஊரு மதுரைக்கு போகுது அவங்களை போக வேண்டாம் சொல்லிக்கிட்டு இருக்கான்!==========6. நண்பர்1: தனுஷ் "பொல்லாதவன், அஜித் "பில்லா" தெரியும் அது என்ன அவரைப்பார்த்து எல்லாம் பில்லாதவன் சொல்றாங்க!நண்பர்2: அவர் பலே ஆசாமி , ஹோட்டலுக்கு சாப்பிட கூப்பிட்டு போய்ட்டு பில்லை நம்ம தலைல கட்டிட்டு எஸ்கேப் ஆகிடுவார், பில் தர மாட்டார் அதான் "பில்லாதவன்"==========7. மீனா: நம்ம பரிமளாவுக்கு ஓவர் பந்தாடி...வீணா: எப்படி சொல்ற...மீனா: அவ ஜாக்கெட்ல இருக்க ஜன்னலுக்கு ஒரு விண்டோவ் ஏசி வைக்க போறாளாம்!==========இன்றைய மெகா ஜோக்:8. அவள்: அந்த டைலர் லேட்டஸ்ட் டெக்னாலஜிப்படி ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பாரம்?இவள்: எப்படி?அவள்: ஜாக்கெட்ல இருக்க ஜன்னலுக்கு "பவர் விண்டோவ் "எல்லாம் வைப்பாராம் ஒரு பட்டனை அமுக்கினா விண்டோவ் தானா மூடிக்கிட்டு சாதாரண ஜாக்கெட் ஆகிடுமாம்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 34

1. உங்க வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன்.சரி உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க, பொறையா, பிஸ்கட்டா ?==========2. பள்ளிக்கூட திறப்பு விழாவுக்கு நம்ம தலைவரைக் கூப்பிட்டது ரொம்பத் தப்பா போச்சு.எதனால .. ..?வகுப்பு அறைகளைப் பார்த்துட்டு, இதென்ன ரூம், ரூமா கட்டியிருக்கு, லாட்ஜா? -னு கேட்கிறாரு==========3. இயக்குனர்: விஜய் துப்பாக்கி சுடும் வீரராக நடிக்கிறாப்போல ஒரு படம் எடுக்கிறேன்.தயாரிப்பாளர்: பேர் என்ன?இயக்குனர்:அழகிய டுமீல் மகன்!==========4. நண்பர்: கார்த்திக் அஜித் ஃபேன் என்பதை நிருபிச்சுட்டாண்டா...நண்பர்2: எப்படிறா?நண்பர்1: வரலாறு ல மட்டும் பாஸ் மத்த சப்ஜெக்ட்ல எல்லாம் பெயில் ஆகிட்டான்.==========5. இயக்குனர்: நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் கதையை வச்சு ஒரு சரித்திர படம் எடுக்கப்போறேன்.தயாரிப்பாளர்:பெயர் என்ன வச்சு இருக்கிங்க...இயக்குனர்: நேதாஜி - "the bose"==========6. உங்க பையன் ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமாக பேசுறான்...அப்படி என்ன பேசினான்:வெங்காயத்தை உரிச்சா கண்ணில தண்ணீர் வரும் சொன்னிங்க, பெருங்காயத்தை உரிச்சா என்ன வரும்னு கேட்கிறான்?==========7. கல்லூரி னு படம் வந்துச்சு அதுக்குள்ள பழனியப்பா கல்லூரினு ஒரு படம் வருதே, ரெண்டும் ஒண்ணா?படத்துக்கு கல்லூரினு பேரு வச்சாங்க ஆனா கல்லூரிக்கு பேருக்கு வைக்க மறந்துட்டாங்களாம், அதான் பழனியப்பா கல்லூரினு பேரு வச்சு கல்லூரிய திரும்பவும் ரிலீஸ்செய்றாங்க!==========இன்றைய மெகா ஜோக்:8. நிதி வசூலிப்பவர்:" flood donation" நிதி கேட்டா ஒரு பாட்டில் தண்ணீர் தரிங்களே!என்னை என்ன கேணைப்பயனு நினைச்சிங்களா.... "blood donation" என்று வந்திங்க ஒரு பாட்டில் ரத்தம் கேட்டிங்க கொடுத்தேன், இப்போ "flood donation" கேட்கறிங்கஅதான் சரியா ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்தேன்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 33

1. அவர் திடீர்னு கோர்ட்ல குட்டிக்கரணம் போடுறாரே.. . ஏன் ?அதான் சொன்னேனே.. . அந்த சாட்சி பல்டி அடிப்பாருன்னு.. .==========2. தலைவர் வாழ்ந்த வீட்டை நினைவுச் சின்னம் ஆக்கறேன்னு சொல்லிட்டு ஏன் கை விட்டுட்டாங்க?அவரு ஏகப்பட்ட வீட்டுல வாழ்ந்ததால, அரசாங்கத்தால முடியாதாம்.==========3. நம்ம தலைவருக்கு ரொம்பத்தான் குசும்பு.கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய முடியலையாம்.... கோர்ட்லயே ஒரு ரூம் வாடகைக்குக் கேக்கிறார்.==========4. எதை வெச்சிப் படம் எடுத்தா நல்லா ஓடும் ?முயலை வெச்சிப் படம் எடுங்க சார், நல்லா துள்ளித் துள்ளி ஓடும்==========5. ஏண்டீ என் கல்யாண பட்டு வேட்டி பத்திரமா இருக்கா .. .பாத்திரமா இருக்கு .. ..==========6. டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ?ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்==========7. நம்ம தலைவரை நெடுஞ்சாலைத் துறையிலிருந்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக்கினது தப்பாப்போச்சு .. ..ஏன்யா .. .. ?ஏர்போர்ட் ரன்வேயில விமானங்களெல்லாம் ரொம்ப வேகமா வருது. அதனால, ஏகப்பட்ட ஸ்பீட் பிரேக்கர் போடணும்னு அடம் பிடிக்கிறாரு.==========இன்றைய மெகா ஜோக்:8. மாமியார் முகத்துல அயர்ன் பாக்ஸை வச்சு தேச்சியா .. .. ஏன் ?முகத்துல சுருக்கம் விழுதுன்னு கவலைப்பட்டாங்க

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 31

1. உன் பக்கத்துல உக்காந்து பரீட்சை எழுதின மனோகரைப் பார்த்து நீ காப்பி அடிச்சிருக்கேங்கறதை வாத்தியார் எப்படிக் கண்டுபிடிச்சார்?பரீட்சை பேப்பர்ல கடைசியா நன்றி - மனோகர்னு எழுதித் தொலைச்சுட்டேன்.==========2. விநாடி வினா நிகழ்ச்சில அந்தப் பொண்ணை ஏன் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்தீங்க ?ஸாரிங்க, குவிஸ் புரோக்ராம்னு தெரியாது, கிஸ் புரோக்ராம்னு நினைச்சுட்டேன்.==========3. என்னடா ? போஸ்ட்மேன் வேலை கிடைச்சதுக்கு இவ்வளவு சந்தோஷப்படறே ?பின்னே ? இனி எந்த ஃபிகரைப் பார்த்து லெட்டர் குடுத்தாலும் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க.==========4. சார் பர்ஸை வீட்லயே வெச்சிட்டு ஆஃபீஸ் வந்துட்டேன். ஒரு நூறு ரூபா இருந்தா கொடுங்களேன்.இந்தா ரெண்டு ரூபா! பஸ் புடிச்சு வீட்டுக்குப் போய், பர்ஸை எடுத்துட்டு வந்துடு.==========5. அந்த ஆட்டோவுல கல்யாணத்துக்கு வயது 31-ன்னு எழுதியிருக்கே, எப்படி ?அந்த ஆட்டோக்காரரோட பேரு கல்யாணம். அவருக்க வயசு முப்பத்தி ஒண்ணு==========6. பதவிப் பிரமாணம் எடுக்க தலைவர் ரொம்ப கூச்சப்படுறாரே .. ஏன் ?எதையும் யாருக்கும் தெரியாம எடுத்துதான் பழக்கமாம்==========7. மாப்பிள்ளை பையன் ஊமை பரவாயில்லையா ?பரவாயில்லை .. .. எப்படியும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வாயைத் திறக்கப் போறதில்லையே==========இன்றைய மெகா ஜோக்:8. கணவன்: சென்ஸார் அதிகாரிங்க வந்திருக்காங்க .. ..மனைவி: எதுக்காம் .. .. ?கண்வன்: நீயும் என் அம்மாவும் போடற சண்டையில் அளவுக்கு மீறி வன்முறை இருக்குனு அவங்களுக்குத் தகவல் போயிருக்குதாம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 30

1. டாக்டர் என் கணவர் என்னை எதிர்த்துப் பேசறார் ?இந்தப் பிரசினைக்கு ஏன் இங்கே வந்தீங்க ?நான் வீட்ல இல்லாதப்ப தனியா அவர் பாட்டுக்கு எதிர்த்துப் பேசறார் டாக்டர்.==========2. இல்லத்தரசி : டாக்டர், என் மாமியாருக்கு நீங்க வைத்தியம் பண்றது இது மூணாவது தடவை.டாக்டர்: அதுக்கு என்னங்க இப்போ?இல்லத்தரசி: இந்த முறையும் அவங்க தேறிட்டாங்கன்னா, நான் டாக்டரை மாத்த வேண்டியிருக்கும்.==========3. தரகர்: மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே ஏன் .. .. ?வீடு பார்க்க வந்தவர்: என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் பயமா இருக்கு==========4. தன் வீட்டருகே இருந்த பைனான்ஸ் கம்பெனி திடீரென்று மூடப்பட்டுவிட்டதாக தன் நண்பனிடம் வருத்தத்தோடு சொன்னார் சர்தார்ஜி."ஏன், நீ எதுவும் பணம் போட்டிருந்தியா?" என்று கேட்டார் நண்பர்."பத்தாயிரம் ரூபாயை இன்னிக்கு அங்கே டெபாசிட் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன் படுபாவி அதுக்குள்ளே ஒடிட்டானே" முன்பை விட வருத்தமாய் சொன்னார் சர்தார்ஜி==========5. சர்தார்ஜி ஒருவர் வேலை விஷயமாக ஒரு கம்பெனிக்குச் சென்றார். அங்கே, அவசரமாக பத்து ஒயிட் பேப்பர்கள் தேவைப்பட்டது அவருக்கு ஆனால், அவரிடமிருந்ததோஒரே ஒரு பேப்பர் மட்டும். பக்கத்தில் இருந்த கடைகளில் பேப்பர் கிடைக்காததால் ஒரு ஐடியாவுடன் ஜெராக்ஸ் கடை ஒன்றிற்குள் நுழைந்து கையிலிருந்த ஒயிட் பேப்பரைக்குடுத்து அவசரமா, பத்து காப்பி போட்டுக்குடுங்க என்றவர் சட்டென்று ஏதோ நினைவுக்கு வந்தவராய் பேக் அண்ட் ஃப்ரெண்ட் ரெண்டு சைடும் காப்பி போட்டுடுங்க - என்றார்.==========6. சர்தார்ஜிகள் முட்டாள்களாக ஜோக்குகளில் சித்திக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பவர் சுக்பீர்சிங் இந்த உலகில் சர்தார்ஜிகள் மட்டும் தான் முட்டாள்களா ? எல்லோரும்ஒரு வகையில் முட்டாள்கள்தான். இதை நிரூபித்துக் காட்டுவேன் என்று தன் நண்பர்களிடம் ஒரு நாள் சவால் விட்ட சுக்பீர் சிங், குதுப்மினாருக்கு போனார்.குதுப்மினாரின் உச்சியில் நின்று கொண்டு கீழே எதையோ சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தார் "கீழே அப்படி என்ன சுவாரஸ்யமாக இருக்கிறது?" என்று அவர் காதருகில்ஓரு குரல் கேட்டது. "பேசாமல் என் பின்னால் கியூவில் நில், நான் கொஞ்ச நேரம் பார்த்த பிறகு உனக்கு விஷயத்தை சொல்கிறேன்" என்றார் சுக்பீர் சிங்.கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆன பின் சர்தார்ஜியின் பின்னால் நின்றவருக்கு கோபம் வந்தது. என்னய்யா இது நீ பார்த்து ரசிக்க குதுப்மினாரின் உச்சியில் இருந்து தரைவரை நீண்ட கியூ நிற்கிறது. நீ என்ன பார்க்கிறாய் என்பதை இப்போதாவது சொல்லமாட்டாயா ? என்று சிங்கின் காதருகே சென்று கத்தினார்.இதைக் கேட்டதும் சுக்பீர் சிங்குக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஒரு சர்தார்ஜியை நம்பி எத்தனை முட்டாள்கள் ஒன்றுமில்லாததைப் பார்க்க கியூவில் நிற்கிறhர்கள்என்று நினைத்தவாறு திரும்பிப் பார்த்த சுக்பீர்கிங்கின் முகம் குறுகியது. குதுப்பினாரின் உச்சி முதல் தரை வரை கியூவில் நின்றிருந்தவர்கள் எல்லோருமே சர்தாஜிகள்==========7. டாக்டர் எனக்கு வாய் கூசாத மாதிரி மாத்திரை குடுங்கஏன் ? அடிக்கடி மாங்கா சாப்பிடுவீர்களா ?நான் ஒரு வக்கீல் டாக்டர். கோர்ட்ல வாய் கூசமா நிறைய பொய் சொல்ல வேண்டி இருக்கு.==========இன்றைய மெகா ஜோக்:8. என்னடி நீ, பஸ்ஸில் உன் பின்னால் நின்னவன் உன் ஜாக்கெட்டுக்குள்ள கையை விடறான் .. .. நீ பேசாம இருக்கியே ?நான் மணிபர்சை ஜாக்கெட்டுக்குள்ள வைக்கலையே .. .. கையை விட்டு அவன் ஏமாறட்டுமேன்னுதான் சும்மா இருந்தேன்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 29

1. உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க ?பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சி==========2. ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க ?பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.==========3. மேடையில மைக் டெஸ்ட் பண்ணியது தப்பாப் போச்சி.ஏன் ?ஒன் டூ த்ரீன்னு சொன்னதும் எல்லோரும் ஓடிட்டாங்க==========4. சர்தார்ஜியும் அவரது நண்பரும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார்கள். உயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற ஒரு ஆள் அங்கிருந்த குதிக்கப் பார்ப்பதாக ஒரு காட்சி, பரபரப்பான இந்தக் கட்டத்தில் இடைவேளை விடப்பட வெளியே வந்த நண்பர்கள் இந்த காட்சி பற்றியே விவாதித்தார்கள்.பேச்சுவாக்கில் அந்த ஆள் கீழே குதிக்கப் போகிறான் கால் எலும்பு முறியப் போகுது என்று பந்தயமே கட்டினார் நண்பர். சர்தார்ஜியும் விடவில்லை பந்தயத்துக்கு நானும் தயார். அவன் கண்டிப்பாக கீழே குதிக்கமாட்டான் என்றார் நம்பிக்கையோடு பந்தயத்தில் தோற்பவர், வெல்பவருக்கு விருந்து தரவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு இருவரும் தியேட்டருக்குள் போனார்கள்.சர்தார்ஜிதான் பாவம் அந்த ஆள் உச்சியிலிருந்து கீழே குதித்துவிட்டான்.பந்தயத்தின்படி, வென்ற நண்பருக்கு விருந்து வைத்தார் சர்தார்ஜி. அப்போது நண்பர், "உங்களை நான் எமாத்திட்டதா என்னோட மனச்சாட்சி உறுத்துது. அந்த ஆள் கீழே குதிக்கப்போறது எனக்கு முன்னாடியே தெரியும். படத்தை நான் எற்கெனவே பார்த்துட்டேன் என்றார்."நானும்தான் படத்தைப் பார்த்திருந்தேன். ஆனால் அந்த முட்டாள் மறுபடியும் இப்படிக் கீழே குதிப்பான்னு துளிகூட நான் எதிர்பார்க்கலை" என்றார் சர்தார்ஜி வருத்தத்தோடு==========5. டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு பூச்சிகூட இல்லை.வெரிகுட் நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க==========6. உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே ?ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன்==========7. மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்ககணவன்: ஏன் .. .. ?மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே==========இன்றைய மெகா ஜோக்:8. என்ன சார்.. .. வண்டியில காஸ் பொருத்தினப்புறம் ஆபீஸ் போறது கஷ்டமா இருக்காதேநீங்க வேற ... இப்ப ராத்திரி சமையலையும் கார்லேயே பண்ணி முடிச்சுடுங்கனு சொல்லிட்டா என் பொண்டாட்டி

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 27

1. மகன்: அப்பா .. .. எங்க ஸ்கூலில் "தந்தையின் உழைப்பு" என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடக்கப் போகிறது என்ன எழுதவது?அப்பா: நான் ஆபீஸில் உழைப்பதைப் பற்றி மட்டும் எழுது, வீட்டில் மாவாட்டுவதை எல்லாம் எழுதித் தொலைக்காதே.==========2. அரசியல் பொதுக்கூட்டத்தில் ஒரு அறிவிப்பு:முப்பது உண்டியல்களைக் கூட்டத்தினரிடையே வசூலுக்கு அனுப்பினோம். இருபத்தெட்டுதான் திரும்பி வந்துள்ளன உண்டியலுடன் எதிர் அணிக்கு ஒடிவிட்ட அந்தஇருவரையும் அப்படியே தங்கள் கட்சியிலேயே வைத்துக் கொண்டு உண்டியல்களை மட்டும் திருப்பி அனுப்புமாறு எதிர் அணியினரைப் பணிவோடு வேண்டுகிறோம்==========3. அந்த லேடி டாக்டர் தொட்டாலே போதும், அம்பது ரூபாய் வாங்கிடுவாங்க.அப்படி ஒண்ணும் அழகா இல்லையே அவங்க.==========4. சர்வர் : முதலாளி... இந்த ஆள் காசில்லாமல் சாப்பிட்டார்...முதலாளி : சரி... மாவாட்டச் சொல்லிடு...சர்வர் : சென்னேன்... மெடிக்கல் சர்டிபிகேட்டைக் காட்டறார். நெஞ்சுவலி வருமாம்...==========5. மனைவி : நாளைக்கு எங்க `லேடீஸ் கிளப்'பில் எல்லாரையும் அவங்க அவங்க ஹஸ்பெண்டுகளை அழைச்சுக்கிட்டு வரச் சொல்லியிருக்காங்க.கணவன் : எதுக்காக?மனைவி : புதுசா ஒரு சலவைத் தூளை அறிமுகப்படுத்தறார்களாம்.==========6. அந்தக் கடையில் தள்ளுபடி விலையில் வாங்கிட்டுப் போன துணி சாயம் போகுதுன்னு கன்ஸ்யூமர் கோர்ட்டிலே கேஸ் போட்டியே என்ன ஆனது?கேஸ் தள்ளுபடி ஆயிடுச்சு!==========7. புதுக்கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்கமாட்டாள் என்று நினைக்கிறேன்!நண்பன்: எப்படி சொல்கிறாய்?புதுக்கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!==========இன்றைய மெகா ஜோக்:8. மீட்டிங்லே பேச வந்த தலைவர் ஏன் டென்ஷனா உட்காந்திருக்கார்?போஸ்டர்ல அஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்றதுக்குப் பதிலா, கஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்ணிட்டாங்களாம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 26

1. பக்கத்து வீட்டுக்காரி காபி சாப்பிடணும்னா அதுக்காக எதைத்தான் இரவல் கேட்கறதுன்னு இல்லியா ?காபி பொடியா, சர்க்கரையா எதை இரவல் கேட்டாங்க ?ரெண்டும் இல்ல காபி போட்டுத்தர அஞ்சு நிமிஷம் என் கணவரை இரவலா அனுப்பணுமாம்==========2. எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு?இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு?==========3. சே... அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு!பேசட்டுமே சார்... நம்ம கட்சிப் பிரமுகர்தானே.நீங்க வேற ... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்!==========4. அந்த ஆஸ்பத்திரியில ஆறாம் நம்பர் ரூமும் நூறாம் நம்பர் ரூமும் ஆபரேஷன் தியேட்டர்.அப்போ ஆறுலேயும் சாவு.. நூறுலேயும் சாவுன்னு சொல்லுங்க.==========5. நான் வெச்சிருந்த விஸ்கி பாட்டிலைத் தூக்கி என் மனைவி கிணத்துல போட்டுட்டா...அதான் குடி முழுகிப் போனா மாதிரி இருக்கீங்களா.==========6. ஏன் இந்தப் படத்துல கதாநாயகன் முட்டையின் மஞ்கள் கரு-வை சாப்பிடுற மாதிரி அடிக்கடி காட்றாங்ககதையில கருவே இல்லேன்னு யாரும் சொல்லிவிடக் கூடாது பாருங்க அதான்.==========7. நேத்து ராத்திரி என் மனைவியை நான் கைநீட்டி அடிச்சுட்டேன்.ஐயோ அப்புறம் என்னாச்சி?அதுக்குள்ள என் மனைவி என்னை எட்டி உதைச்சி, "வேலைக்குப் போக நேரமாச்சு, எழுந்திரி" ன்னு கனவைக் கலைச்சுட்டா.==========இன்றைய மெகா ஜோக்:8. நேத்து முதல் ராத்திரியில நடக்கக்கூடாதது நடந்திடுச்சு.என்னாச்சு தூங்கிட்டியா?இல்லடா! எல்லாம் முடிந்தவுடன் பழக்க தோஷத்துல அவள் கையில ஐநூறு ரூபா நோட்டை திணிச்சிட்டு எழுந்து வந்துட்டேன்.அப்புறம்?அவ மீதின்னு சொல்லி 200 ரூபாய் என் கையில் திருப்பிக் கொடுத்துட்டா!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 24

1. வீடு கட்ட லோன் வாங்கின பணத்துல இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே நிஜமா?ஆமாங்க, இப்போதைக்கு சின்ன வீடு போதும்னு ஜோசியர் சொன்னார்..==========2. ஆப்பரேஷனில் உங்க மாமியார் பிழைச்சுட்டாங்க..எதுக்கும் இன்னொரு தரம் ட்ரை பண்ணிப் பாருங்க டாக்டர்..==========3. உங்க கணவருக்கு எங்காவது ஓடிப்போகனும்னு போல தோணிக்கிட்டே இருக்காம்.. கவலைப் படாதீங்க.. குணப்படுத்திடலாம்..சரி பண்ணமுடியுமான்னு பாருங்க.. இல்லை.. என்னையும் இழுத்துட்டு ஓடறமாதிரி மருந்து குடுங்க..==========4. கல்யாணப் பெண்ணைப் பார்த்தா கொஞ்சம் வயசான மாதிரி தெரியுது..நீங்க சத்திரம்; மாறி வந்திட்டீங்க போல.. இங்க நடக்கறது 60-ம் கல்யாணம்..==========5. டாக்டர் 22-ம் நம்பர் ரூம்ல வச்சிருந்த பாடியைக் காணல.. டாக்டர்..சரி சரி கவலைப் படாதே புதுசா ஒண்ணு நானே வாங்கித் தரேன்..==========6. அரசே.. நாம் மோசம் போயிட்டோம்.என்னாச்சு மந்திரியாரே?இப்பொழுது நடக்கும் போரில் நமது படைத் தளபதி போர் ஃபிக்ஸிங் செய்து தோற்றுக்கொண்டிருக்கிறா மன்னா!==========7. எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறhன்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே.. .=========இன்றைய மெகா ஜோக்:8. அவன் தற்கொலை செய்து கொள்வதாக முடிவு பண்ணினான். விஷம் அருந்தலாமா.. தூக்கில் தொங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, கடைசியில்.. ரெயில்முன் பாய்வதுதான் சரியான ஐடியாவாக தோன்றியது..தெரிந்தவர்கள், நண்பர்கள் எல்லாருக்கும் தன் முடிவைச் சொல்லிவிட்டு, ஒரு நாள் சாயந்திரம் ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளோடு புறப்பட்டான். அத்தனை மூட்டைகளிலும்சிக்கன், மட்டன் என்று அசத்தலான சாப்பாட்டு அயிட்டங்கள்.பார்த்தவர்கள் வியந்தார்கள்.ஆமா.. ரெயில்ல பாய்ஞ்சு தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொல்றே.. அப்புறம் எதுக்கு இத்தனை சாப்பாடு மூட்டைகள்?அவன் சொன்னான்.. சரியாப் போச்சு போங்க. அந்த விவஸ்தை கெட்ட ரயில் லேட்டா வந்துச்சுன்னா, பசியிலேயே நான் செத்துடமாட்டேனா?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 22

1. ஊஞ்சலாடுவது என் பொழுது போக்கு என்கிறார் உங்கள் மனைவி, உங்களுக்கு என்ன பொழுதுபோக்கு ?ஹி... ஹி.... ஊஞ்சலாட்டுறதுங்க!==========2. உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே.....? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!==========3. இந்த ஊர்ல திருட்டு பயம் ஜாஸ்தின்னு பேசிக்கிறாங்க. நீங்க எப்படி இவ்வளவு தைரியமா போறீங்க ?எனக்கு போலீஸ்னாதான் பயமே!==========4. காரோட என் மனைவியைக் காணோம்னு நான் புகார் கொடுத்திருந்தேனே, அதை நான் வாபஸ் வாங்கிக்கிறேன் சார்!ஏன் ?கார் கிடைச்சிடுச்சு.==========5. ஆசிரியர்: பரீட்சை அறையில் ஏண்டா தூங்குறே ?மாணவன்: பதில் தெரியாட்டி முழிச்சுக்கிட்டு இருக்காதே-னு நீங்கதானே சொன்னீங்க.==========6. வாணி: புடவை தீப்பிடிச்சிகிட்டு உன் மாமியாரைக் காப்பாத்த நினைச்சதுக்காக உன் மேலே கொலை பழி விழுந்துதா ஏன் ?ராணி: தீயை அணைக்க நான் அவங்களைக் கிணத்தக்குள்ளே தள்ளினது தப்பாம்.==========7. ஹலோ போலீஸ் ஸ்டேஷனா இங்க டி.வி-ல தொடர் பார்க்கவிடாம ஒரத்தர் குறுக்கம் நெடுக்கமா என் வீட்டுல நடந்து தொலைக்கறார்யார்னு விசாரிச்சீங்களா ?விசாரிச்சேன். யாரோ திருடனாம்.==========இன்றைய மெகா ஜோக்:8. சோமு: வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!ராமு: அதனால...?சோமு: வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 20

1. ஹலோ டாக்டர் ஸ்ரீதரா ..? அவசரமா ஒரு நூறு ரூபாய் இருந்தா கொடுக்க முடியுமா ..?யாருய்யா நீ டெலிபோன்ல கடன் கேட்கறது ?நான்தான் உங்க பேஷண்ட்... நீங்கதானே ஏதாவது அவசரம்னா உடனே போன் பண்ணச் சொன்னீங்க===========2. ஏன் சார் இவர் ஃபைலைக் கட்டிப்பிடிச்சு சிரிச்சுக்கிட்டே இருக்கார் ?எப்பவும் ஆபீஸ்ல ஃபைலைக் கட்டிக்கிட்டு அழறீங்களே.. .னு அவர் மனைவி திட்டினாங்களாம்.. . அதான்==========3. டாக்டர்.. . இந்த வியாதியோட போராடி வாழவே பிடிக்கலை. ஏதாவது விஷஊசி இருந்தா போட்டுக் கொன்னுடுங்கநீங்க இப்படிக் கவலைப் படக்கூடாது. அதுக்காகத்தானே ஆபரேஷன் பண்றேன்==========4. ஆப்பக்காரக் கிழவி பிஸியா வியாபாரம் பார்த்துட்டிருந்தப்போ திடீர்னு அடைமழை .. .. இடி, மின்னல் .. .. கடையைச் சாத்திட்டுப் போன கிழவி மறுநாள் காலையில வந்துபார்த்தப்போ ஆச்சரியமாயிட்டாங்க .. ..ஏன் .. .. ?கடையில இருந்த ஆப்பமெல்லாம் இடியாப்பமா மாறிப் போயிருந்தது==========5. வளவளன்னு பேசாம, சுருக்கமா ஒரே வார்த்தையிலே புரியும்படி சொல்லு.செலவுக்கு 1000 ரூபாய் கடன் வேணும்==========6. என் - பையனுக்கு ராஜா-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சுஏன் என்ன ஆச்சு ?எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான்==========7. வெயிலுக்கு எங்கேயாவது வெளியூர் போகலாம்னு இருக்கேன். .வெயிலுக்கா... அதுக்கு ஏண்டா வெளியூர் போறே ? சும்மா வெளியிலே போய் நில்லு... போதும்.. .==========இன்றைய மெகா ஜோக்:8. பக்தன்: சுவாமிஜி, உலகம் ஏன் இப்படி சுத்துது?சுவாமிஜி: ஒரு குவார்ட்டர் தண்ணி அடிச்சா மனுஷனே சுத்தும் போது, 3 குவார்ட்டர் தண்ணி இருக்கிற உலகம் ஏன் சுத்தக் கூடாது?

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பிட்டு - 18

1. பத்து மணிக்கு டாண்னு ஆபீஸ் போகலாம்னு பார்த்தா முடியலைஏன் .. . நடுவில் ஏதாவது பிரச்சினையா ?இன்னும் வேலையே கிடைக்கலையே==========2. எலிப்பொறி செய்ய என்னை ஏன் கூப்பிடுறீங்க ?நீங்க பொறியல் வல்லுனர்னு சொன்னாங்களே==========3. டிஸ்பென்சரி வாசல்ல கடை வெச்சதுக்குப் போய் அந்த டாக்டர் ஏன் இப்படி சத்தம் போடறாரு ?பின்ன டிஸ்பென்சரி வாசல்ல ரோஜா மாலை, மலர் வளையமெல்லாம் வித்தா டாக்டர் சும்மா இருப்பாரா ?==========4. போன ஜென்மத்துல எனக்கு நீ மருமகளா வந்திருப்பேன்னு நினைக்கிறேன்..எப்படிச் சொல்றீங்க.. .?உன்னைப் பார்த்தாலே சண்டை போடணும் போலத் தோணுதே.. .==========5. நான் குடிகாரனா நடிச்சதை என் ரசிகர்கள் ஏத்துக்கலைன்னு நினைக்கிறேன்.ஏன் சொல்றீங்க ?படம் ஊத்திக்கிச்சு.==========6. அந்த நடிகைகிட்டே எக்ஸ்-ரே படம் எடுக்கணும்னு சொன்னீங்களா டாக்டர்?ஆமாம் .. .. ஏன் கேட்கறீங்க ?முழு டிரஸ்ஸோட எடுத்தா ஒரு ரேட் கவர்ச்சி டிரஸ்ல எடுத்தா ஒரு ரேட்னு சொல்றாங்க==========7. என்ன .. .. அந்த டாக்டர் எம்.பி.பி.எஸ்-னு மட்டும் போட்டுக்கிட்டு இருக்காரு .. ..பேரே போடலையே .. .. ?நான்தான் சொன்னேனே .. .. அவர் பேர் போன டாக்டர்னு .. ..==========இன்றைய மெகா ஜோக்:8. ஷூட்டிங்கல ஏன் கேமராமேன் குஷியாயிட்டாரு ?அது ஒண்ணுமில்ல.. . ஜன்னல் ஜாக்கெட்டை கதாநாயகி மாத்திப் போட்டுட்டாங்களாம்.. . அதான்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net