Sunday, November 21, 2010

'மருத்துவ இலைகள்!'

பழங்காலத்தில் இலைகள் பெரும்பாலும் மருந்தில் மூலக் கூறுகளாக பயன்படுத்தப்பட்டன. நமக்கு எளிதாக கிடைக்கும் சில இலைகளின் அபூர்வ மருத்துவ பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

* செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்கள் மிகுந்த மருத்துவப் பயன்கள் கொண்டவை. இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் உடையவை. வழுவழுப்பான தன்மை கொண்ட இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாக்க உதவுகிறது. பூக்கள் குளிர்ச்சி பொருந்தியதால் சருமம் அழகாகும். சிவப்பு பூக்கள்தான் மருத்துவ சிறப்பு வாய்ந்தவை. செம்பருத்திப் பூவில் தங்கச் சத்து உண்டு என்று மருத்துவ சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்கிவிடும்.

* துளசி இலையில் புரதம், கார்போஹைட்ரேட், அமிலச் சத்துகள் மற்றும் உலோகச் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. துளசி வேர்ப்பட்டைத் தூள் அரை டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு குணமாகும். நாக்கில் தோன்றும் எல்லாவித குறைபாட்டையும் நீக்கும் குணம் உடையது. சருமத்தை சுத்தம் செய்து மென்மை தரக்கூடியது.

* வேப்பிலையை அரைத்து சாற்றை முகப்பருக்களுக்கு தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் முகப்பருக்கள் மறையும். ஒரு பிடியளவு வேப்பிலையில் கசகசா, கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மைப்போல அரைத்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வர, அம்மை வடு மறையும். வேப்பம்பூவை காய்ச்சி, அதனுடன் நெல்லிக்காய் சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் சரும நோய்கள் நீங்கும்.    * கறிவேப்பிலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இது சோப்புகளில் வாசனையை நிலைக்கச் செய்யும். தலை முடி நரைப்பதைத் தடுத்து கேசத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும். கறிவேப்பிலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலையின் தண்டு, வேப்பிலையின் கொழுந்து சிறிது சேர்த்து அரைத்து தலையில் பூசி வந்தால் நரை மறையும்.

* புதினா இலைகளின் சாறு குளிர்ச்சி தரக் கூடியது. பருக்கள் மற்றும் வடுக்களுக்கு மருந்தாகவும், தோலின் வனப்பை ஊக்கப்படுத்தும் டானிக்காகவும் பயன்படுகிறது. இதன் எண்ணை சருமத்திற்கு புத்துணர்ச்சியை வழங்குகிறது. குளியல் தைலங்களிலும், இதன் பயன்பாடு அதிகம். பொடுகை அகற்றி கேசத்தின் வேர்க்கால்களில் ஊடுருவி கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

* கொத்தமல்லி இலையின் சாறை சருமத்தின் சொரசொரப்பான பகுதிகளில் காலையில் தேய்த்து, மாலையில் குளித்து வந்தால் தோல் தடிப்பு மாறி வழவழப்பாகும். கொத்தமல்லி இலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். கொத்தமல்லி தைலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சோடிய உப்பு நறுமணம் கொண்டது. வாசனைப் பொருட்களில் அதிகஅளவில் கொத்தமல்லி பயன்படுகிறது.

* தேயிலையில் இருக்கும் `காபின்' என்ற பொருள் நரம்பு மண்டலத்தின் செயலை ஊக்குவிக்கிறது. கிரீன் டீ என குறிக்கப்படும் தேயிலை தற்போது அழகு சாதனப் பொருட்களில் பங்கு வகிக்கின்றது. தேயிலையில் வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நோயை தடுக்கக் கூடிய `ஆன்டி ஆக்ஸிடென்டுகள்' உள்ளன. மூளையை ஊக்கப்படுத்துதல், ஞாபக சக்தி, இளமையைத் தக்க வைத்தல், ஆரோக்கியம் ஆகியவை தேயிலைக்கு உரிய குணங்கள். பற்சிதைவு போன்ற பல் தொடர்பான நோய்களைத் தடுக்கும் வைட்டமின் சி, டி, கே மற்றும் ப்ளோரைடுகள் ஆகியவை இதில் அதிகம் உள்ளன.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

வேர்க்கடலை சாப்பிடுவோம்!


எங்கும், எப்போதும், எளிதில் கிடைக்கும் வேர்க்கடலையில் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்துள்ளது. எனவே, குழந்தைகள் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகிறது.

சேயாபீன்சிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதமும், முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதமும் வேர்க்கடலையில் உள்ளது.

மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.

எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.

ஒபிசிட்டி பிரச்சினை உள்ளவர்கள், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. குறைந்த அளவே உணவை சாப்பிட முடியும். இவ்வாறாக உடல் எடையையும் குறைக்கலாம்.

வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது

http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்!

இதைப் படிக்க வரும் நண்பர்களே! நீங்க ரொம்ப மனசு நொந்து படிக்க வந்தது தெரியுது.

டிஸ்கி - இதை படித்து முயற்சி செய்து அடி வாங்கினால் நான் பொறுப்பு இல்லை

1. ரொம்ப நல்லவனா நீங்க ஹி ஹி... கண்டிப்பா பொண்ணுங்களுக்கு உங்கள புடிக்காது.

'நான் ரொம்ப நல்லவன் மச்சான். ஆனா, என்னை ஒரு பொண்ணு பார்க்க மாடிங்கது ... அவன் ஒரு பொறுக்கி ஆனா அவன் பின்னாடி ஓர பொண்ணுங்க மச்சான்' என்று சொல்வதை கேள்வி பட்டிருப்பிங்க.

காரணம்..?

பொண்ணுங்களுக்கு ரொம்ப நல்லவனா இருந்தா பிடிக்காது...

நீங்க நல்லவனா இருந்தா அவங்க யார தான் திருத்துவாங்க? அவங்களுக்கு எம்ஜிஆர் பாதி நம்பியார் பாதி வேணும்... ரொம்ப குறும்புத்தனம் இருக்கணும் கொஞ்சம் லொள்ளு இருக்கணும்.

2. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொல்ற எந்த பையனையும் பொண்ணுங்களுக்கு பிடிக்காது...

யோசிச்சி பாருங்க... ரொம்ப அழகா இருக்கிற பொண்ணுங்க ரொம்ப ரொம்ப கம்மி அப்படி இருக்கும் போது அந்த பொண்ணு முன்றாவது படிக்கும் போதே பசங்க என்னோட ஆளு டா அவ... இப்படி future figure ஆக இருக்கும் போதே புக் செஞ்சி
அப்புறம் ஸ்கூல், காலேஜ் என்று பல தடைகளை தண்டி வரும் பொண்ணுங்களிடம் நீங்க அதைபோல 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க' என்று சொன்னால், நீங்க கண்டிப்பாக நூறோட நூத்திஒண்ணு:-)

அதுக்காக, 'நீங்க அசிங்கமா இருக்கீங்க' என்று சொலி அடி வாங்கிடாதீங்க...

சும்மா ஜாலி பண்ண 'ஹே நீ இன்னிக்கு இந்த டிரஸ் சும்மா அழகா இருக்க...'

அந்த பொண்ணு நன்றி சொல்லும்போது... நான் தான் அடிக்கடி பொய் சொல்லுவேன்னு உனக்கு தெரியாதா ஹி ஹி:-)

3. நம்ம பொண்ணுங்க மட்டும் இல்லை. உலகத்துல உள்ள எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிச்ச ரொம்ப பிடிச்ச விஷயம் நகைச்சுவை ... (மொக்கை இல்லை)

பொண்ணுங்க பொதுவாவே சுமாரான ஜோக்குக்குக் கூட விழுந்து விழுந்து சிரிப்பாங்க... நல்ல காமெடி பண்ணனும், அதுவும் அவங்கள புண்படுத்தாம...

உங்க அப்பா அப்படியே விரும்பாண்டி கணக்கா, எங்க ஊரு அய்யனாரு மாதிரி மீசை வச்சி இருக்காரு அப்படின்னு அவங்க அப்பாவ பத்தி அவங்க கிட்ட காமெடி பண்ண கூடாது... நீங்க நல்ல ஃபிரெண்ட்ஸ் ஆகுற வரைக்கும்.

ஃபிரெண்ட்ஸ் ஆயிட்ட அப்புறம்... 'கொரில்லா எப்படி இருக்காரு' என்று கூட கேட்கலாம். அதுக்கும் கேக்க பிக்க என்று சிரிப்பார்கள்... (நான் சொல்லி இருக்கேன்) அப்புறம் உங்க அப்பாவ பத்தி தான் சொன்னேன் என்று சொல்லி கலாய்க்கலாம்...

4. பொண்ணுங்க நம்மள மாதிரி அழகை பார்த்து காதலிப்பதோ, விரும்புவதோ கிடையாது. சூப்பர் ஃபிகரும், சுமாரான பையனும் சுத்துறத நிறைய பார்த்து இருப்பீங்க. காரணம்... உளவியல்!

அவியல் இல்லை பாஸ்... உளவியல்!

இப்படி நமக்கு ஒரு பொண்ண பார்த்தா... அதுவும் அழகான பொண்ண பார்த்த உடனே ஒரு கெமிஸ்ட்ரி.. ஃபிசிச்ஸ்.. அதாங்க சும்மா உச்சங்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் சும்மா சர்ர்ர்ர் ஒரு பீலிங் வரும் பாருங்க... அது மாதிரி பீலிங் பொண்ணுகளுக்கு அழகான பசங்கள பார்த்தா வராது..

அவங்களுக்கு பசங்களோட body language பார்த்தா சும்மா ஒரு ஃபீலிங் வரும்... சும்மா சூப்பரா பேசுறது, ஸ்டைல் உங்க பாடி, கை, கால் அசையற விதம் அவங்களுக்கு ஒரு ஃபீலிங் கொடுக்கும்...

அதுக்காக அவங்க முன்னாடி காமெடி பண்ற மாதிரி அடிக்கடி சீவுறது, ஸ்டைல் பண்ணுறது, பந்தா பண்றது.. கண்டிப்பா புடிக்காது.

நீங்க நீங்களா இருங்க... எதார்த்தமா இருங்க. ஏன்னா, அவங்க ரொம்ப புத்திசாலி!

5. எனக்கு லவ் என்றல் சுத்தமா பிடிக்காது என்று சொல்லுங்க... உங்கள ரொம்ப பிடிக்கும். அதுக்கு அப்புறமா ஃப்ரெண்ட்ஸ் ஆகி லவ் பண்றது வேற விஷயம்...

பொண்ணுங்க பசங்க கிட்ட பேசுறத தவிர்கறதே இந்த விஷயத்துனால தான்.

அவங்க அப்பா, அம்மா க்ளோஸ் பிரெண்ட்ஸ் என்று எல்லாரும் லவ்வுக்கு எதிரி...

'எனக்கு லவ் பிடிக்காது ஒன்லி ஃபிரெண்ட்ஷிப்' என்று நல்லா பேசி புரிஞ்சிகோங்க...

அப்புறம் சினிமால வர்ற மாதிரி 'ஐ லவ் யூ' எல்லாம் சின்ன பசங்க, ஸ்கூல் பசங்க தான் சொல்லுவாங்க... அப்படி சொல்ல தேவையில்லை. ஒரு தருணத்துல நீங்க இல்லாம அந்த பொண்ணும், அவங்க இல்லாம நீங்களும் இருக்க முடியாது தெரிஞ்சு அதுவே லவ் என்று மாறிடும்...

எக்ஸ்ட்ரா டிப்ஸ் :

மொத மொத பார்க்கிற பொண்ணுங்க்கிட்ட நான் பேசுற வசனம்

"நீங்க ரொம்ப படிப்ஸோ?"

"ஏன் கேக்குறீங்க?"

"இல்லை உங்க பின்னாடி ஒரு பெரிய ஒளி வட்டம் தெரியுதே அதான் கேட்டன்."

:-) சிரித்து விட்டு, "நாங்க ரொம்ப படிப்ஸ் இல்லை" என்று பதில் வரும் :-)




--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நல்ல சிந்தனைகள்


நல்ல சிந்தனைகள்

மனிதன் சூழ்நிலைக்காக படைக்கப்படவில்லை சூழ்நிலைகளே மனிதனுக்காக படைக்கப்பட்டன...

தெளிவான குறிக்கோளே வெற்றியின் ஆரம்பம்.

லட்சியம் இல்லாத வாழ்க்கை எண்ணை இல்லா விளக்குக்கு சமம்.

உண்மையான ஆலயம் இதயத்தில் தான் அமைந்துள்ளது.

தயங்குவது என்பது தோல்விக்கு அடையாளம் ஆகும். 

உனக்காக பொய் சொல்பவன். உனக்கு எதிராகவும் பொய் சொல்வான். 

கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளை இடுதலையும் அறிவான்.

நல்லவனை பிறப்பது சந்தர்ப்பத்தினால், நல்லவனாக வாழ்வது முயற்சியினால்.

அதிகாரத்தை வெல்வது அன்பு. பயத்தை வெல்வது துணிவு.

இன்பத்தில் உண்டாவது மறதி. துன்பத்தில் உண்டாவது உறுதி.

பொறுமையும் தன்னடக்கமும் வாழ்வின் பிற்பகுதியை வெற்றியாக்கும்.

தோல்வியடைவது குற்றமில்லை முயற்சி இல்லாத வாழ்வு குற்றமுடையது.

ஏக்கமும், தூக்கமும் ஊக்கத்தை கெடுக்கும்.

வேலை செய்ய நேரம் எடுத்துக்கொள் அது வெற்றியின் விலை.

தோல்வி மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை உள்ளத்தில் நுழையவே இடம் தரக்கூடாது.

ஏராளமான வாய்புகள் வரும்போது எச்சரிக்கையாய் இரு.

தோல்வியில் இறக்கம் கூடாது. வெற்றியில் கர்வம் கூடாது.

தனக்கு மட்டும் நல்லவனாக இருப்பவன் எதற்கும் பயன் பட மாட்டான்.

ஒரு நிமிட கோவம் ஓராயிரம் வருட புகழை அழித்துவிடும்.

ஏளனம் என்பது குறுகிய உள்ளத்தில் இருந்து எழுகிற நச்சு புகை.


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net