Tuesday, November 9, 2010

எதையும் செய்வேன்

ஒரு நாடோடி ஒரு கிராமத்தை நோக்கி செல்கையில் பசி எடுத்ததால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது அந்த வழியே ஒரு சுல்தான் குதிரையில் வந்து கொண்டிருந்தான்.சுல்தான் இவனைப் பார்த்து,''இப்படி நாடோடியாகத் திரிகிறாயே?சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்?''என்று கேட்டார்.அதற்கு நாடோடி,''நான் நினைத்தால் எதையும் செய்வேன்,''என்றான்.சுல்தான்,''
என்னப்பா,ஒரு நாட்டிற்கே அதிபதியான எனக்கே நான் நினைத்ததைஎல்லாம் செய்ய முடியாது.ஒரு நாடோடியாகிய நீ எல்லாம் முடியும் என்கிறாயே?''என்று வியப்புடன் கேட்டார்.நாடோடி சொன்னான்,''உங்களால் முடியாது.ஆனால் என்னால் முடியும்.''உடனே சுல்தான் ,''எங்கே என்னைக் குதிரையிலிருந்து இறங்க வை பார்ப்போம்,''என்று சவால் விட்டார்.அதற்கு அவன்,''அய்யா,உங்களைப் போன்ற சுல்தானைக் குதிரையிலிருந்து இறங்க வைக்க முடியாது.ஆனால் நீங்கள் குதிரையிலிருந்து இறங்கினால்,அடுத்த நிமிடமே உங்களைக் குதிரையில் திரும்ப ஏற வைக்க முடியும்,''என்றான்.உடனே சுல்தானும் கீழே இறங்கினார்.உடனே நாடோடி,''இதோ,நான் சொன்ன உடனே இறங்கி விட்டர்கள்,பார்த்தீர்களா?''என்றான்.சுல்தானுக்கக் கோபம் வந்து விட்டது.''நீ சரியான் ஏமாற்றுப் பேர்வழி,''என்று கூறிக் கொண்டே மீண்டும் குதைரை மீது ஏறி கிளம்பினார்.அவன் சொன்னான்,''பார்த்தீர்களா?நான் சொன்னது போல நீங்கள் குதிரையிலிருந்து இறங்கிய உடனே திரும்பவும் ஏற வைத்து விட்டேன்.''என்றான்.சுல்தான்,அந்த நாடோடி தன்னை முட்டாளாக்கி விட்டான் என்பதை உணர்ந்தாலும் அவனுடைய சாமர்த்தயத்தை மெச்சி ஒரு தங்கக் காசினைக் கொடுத்துவிட்டு சென்றார்.நாடோடிக்கு இப்போதைக்கு சாப்பாட்டுப் பிரச்சினை தீர்ந்தது.


http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிரிக்க ..

டாக்டர்:இதற்கு முன்னாள் டாக்டர் ரவியிடம் வேலை பார்த்ததாகச் சொல்கிறாயே,உன்னை எப்படி நம்புவது?சான்றிதழ் ஏதேனும் வைத்திருக்கிறாயா?
வந்தவர்:சான்றிதழ் எல்லாம் எதற்கு டாக்டர்?இதோ அவருடைய ஸ்டெதாஸ்கோப், தெர்மாமீட்டர் எல்லாம் வைத்திருக்கிறேனே!
**********
எஜமான்:ஏம்பா,இன்றைக்கு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலையா?
வேலைக்காரன்:இன்றைக்கு மழை பெஞ்சதில்ல எஜமான்!
எஜமான்:உனக்கு எப்பவும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லணும்.குடையைப் பிடிச்சுக்கிட்டு தண்ணீர் ஊற்றியிருக்கலாம் இல்லையா?
**********
பயணி:குழந்தைகளுக்கு அரை டிக்கட் வாங்க வேண்டுமா?
நடத்துனர்:ஐந்துக்குக் கீழ் என்றால் வேண்டாம்.
பயணி:நல்ல வேளை, நான் நான்கு பிள்ளைகளைத்தான் கூட்டி வந்திருக்கிறேன்.
**********
ஒரு பேருந்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் வாயில் சிகரெட் வைத்திருந்தார்.அதைப் பார்த்த நடத்துனர்,பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த,'புகை பிடிக்காதீர்'என்ற அறிவிப்பினை சுட்டிக் காட்டி,;;இங்கு புகை பிடிக்கக் கூடாது,''என்றார்.பயணி சொன்னார்,''நான் புகைக்கவில்லை,''நடத்துனர் கேட்டார்,''நீங்கள்தான் வாயில் சிகரெட் வைத்திருக்கிறீர்களே?''பயணி பதிலுரைத்தார்,''அதனால் என்ன?இதோ பாருங்கள்!காலில் நான் செருப்பு அணிந்துள்ளேன்.அதற்காக நான் இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தமா?''
**********

http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

"சிற்பமாய் அவள் "




அவள் என்னை
விரும்பவில்லை என்று
தெரிந்ததும்,
என் மனதை
கல்லாக்கி கொண்டேன்...
ஆனால்,
அதிலும்,
"சிற்பமாய் அவள் "
                               



ஒருத்திய கூட காதலிக்காத
பையன் இருக்கலாம்...
ஆனால்,
ஒருத்தன மட்டும் காதலித்த
பொண்ணு இருக்கமாட்டா...
இது கீதை'ல சொல்லல
நேத்து என் நண்பன்
போதை'ல சொன்னது...
                                      

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தீபாவளி சரவெடி ஜோக்ஸ்



1. பறவைகள்  பறந்த  சுவடு
வான  வீதியில்  இருப்பதில்லை.
அது  போல்தான்...
உன்  பார்வைகள்  எனக்குள்
ஏற்படுத்திய  பாதிப்புகளும்...



2. கவிதை  எழுதாத  காதலர்கள்
உலகில்  இல்லை,
கவிதை  எழுதாவிட்டால்
அவர்கள்  காதலர்களே  இல்லை.



3. தலைவருக்கு  விபரமே  பத்தலை,  தியேட்டருக்கு  போறப்ப  எதுக்கு ஊறுகாய்  பாக்கெட்டோட  போறாரு?

வ குவாட்டர்  கட்டிங்  படம்.  தொட்டுக்க  வேணாமா?



4. ஏட்டய்யா,  இவன்  கிரிக்கெட்  ஸ்டேடியத்துல  சீட்டு  ஆடிட்டு  இருந்தான்,

யோவ்,  அதுக்காக  கிரிக்கெட்  சூதாட்ட  கேஸ்ல  இவனை  உள்ளே  தள்ளுவதா?



5. வாழ்க்கையே  எனக்கு  வெறுத்துடுச்சு.

தலைவரே!  உங்களைப்  பார்த்து  வாழ்க்கைதான்  வெறுத்துடனும்.



6. மாப்ளை  டைடல்  பார்க்ல  இருக்காருனு  சொன்னீங்க,  கம்ப்யூட்டர்  எஞ்சினியரா?

அட  நீங்க  வேற,  டைட்டல்  பார்க்ல  பொழுதுபோகாம  உக்காந்திருப்பாரு, வெட்டாஃபீஸ்ங்க.



7. உங்க  படத்துக்கு  எருமைச்சேலைனு  டைட்டில்  வெச்சிருக்கீங்களே, எருமை  எங்கேயாவது  சேலை  கட்டுமா?

நீங்க  வேற,  எருமைச்சேலை  அப்படிங்கறது  ஈரோடு  மாவட்டத்துல  உள்ள ஒரு  ஊரோட  பேருங்க.(மாட்டுத்தாவணி வைக்கலாம்,,  எருமைச்சேலை வைக்கக்கூடாதா?)



8. தியேட்டர்  ஓனர்  ஏன்  கோபமா  இருக்கார்?

பின்னே  என்னங்க?  அய்யனார்  படம்  ஓடற  தியேட்டர்ல  வந்து  அய்யனார்  பட்டாசுகள்  கிடைக்குமா?-னு  கேட்டா?



9. ஹைவேஸ்  ரோடுன்னா  அது  ஹைவே (HIGH WAY) யாக  இருக்கும். ரிங் ரோடுன்னா  அதுல  ரிங்  இருக்குமா?

by  தத்துவங்களை  கவரிங்  பண்ணி  எழுதுவோர்  சங்கம்.



10. தலைவருக்கு  கேரளா  ஸ்டேட்  ரொம்ப  பிடிக்குமாம்.

அதுக்காக  குளிக்கறதுகூட  எர்ணாகுளத்துலதான் -னு  சொன்னா  எப்படி?



11. ஜட்ஜ்: எதுக்காக  உன்  மனைவியை  கொலை  செஞ்சே?

கைதி: இது  என்ன  கேள்வி  எஜமான்?  செத்து  தொலையட்டும்-னு  தான்.



12. ஜட்ஜ்: நீ கொலை  செஞ்சதைப்  பார்த்த  சாட்சிகள்  12  பேர்  இருக்காங்க.

கைதி: யுவர்  ஆனர்  அதைப்  பார்க்காதவங்க  21 பேர்  இருக்காங்க. 12 பெரிசா? 21 பெரிசா?



13. தலைவருக்கு  தண்ணி  அடிக்கறதுல  அலாதி  பிரியம்.

அதுக்காக  உங்களுக்கு  பிடிச்ச  டூர்  ஸ்பாட்  எது?-னு  கேட்டா  சாலக்குடி, காரைக்குடி,  பரமக்குடி,  தூத்துக்குடி  அப்டினு  சொல்லனுமா?



14. அந்த  புதுமுக  நடிகை  ஸ்க்ரீன்  பிரிண்டிங்  பற்றி  படிச்சிட்டிருக்கே,  ஏன்?

இன்னைக்கு  ஸ்க்ரீன்  டெஸ்ட்  வைக்கறதா  டைரக்டர்  சொன்னாராம்.



15. கபாலி  வீட்டு  வாசல்ல  வெச்சிருந்த  போர்டைப்  பார்த்து  போலீஸ்  அதிர்ச்சி  அடைஞ்சிடுச்சாமே?

ஆமா.  மாமூல்  நிலையம்-னு  போர்டு  வெச்சிருக்கானாம்.



16. கபாலி  கிட்டத்தட்ட  தொழில்  அதிபர்  மாதிரியே  செயல்படறான்.

எப்படி  சொல்றே?

போலீஸ்  ஸ்டேஷன்ல  எல்லாருக்கும்  மாமூல்  குடுக்கறானே?

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net