Monday, November 1, 2010

ராக்ஃபெல்லர் – II

தான் சம்பாதித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் ஒன்று சேர்த்து, கச்சா எண்ணெய் சுத்திகரித்து விற்கும் வியாபாரத்தில் இறங்கினார் ராக்ஃபெல்லர். நீராவியில் ஓடிய ரயில் மட்டுமே அப்போது பெரிய போக்குவரத்துச் சக்தியாக விளங்கியது என்பதால், பெட்ரோலின் மகத்துவம் எவருக்கும் புரியவில்லை.

ஏற்கனவே இந்தத் தொழில் இருந்தவர்களைவிட பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்; அதே நேரம், அதிக பணம் சம்பாதிப்பதிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார் ராக்ஃபெல்லர். உற்பத்தி இடத்திலிருந்து விற்பனை இடங்களுக்கு அனுப்புவதற்கான ரயில் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, தினமும் குறிப்பிட்ட பேரல்கள் அனுப்புவதாகவம், அதற்காக கட்டணச் சலுகை தரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைக்க நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையவே விலையை குறைத்து விற்பனை செய்தார். வியாபாரம் சூடுபிடித்ததும் போட்டியில் இருந்த சில கம்பெனிகளை அதிகவிலை கொடுத்து வாங்கினார். விற்பனைக்கு மறுத்தவர்களைக் கூட்டாளியாக்கிக் கொண்டார்.

கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தொட்ட 1872ம் வருடம் அமெரிக்க முழுவதும் ஆயில் வியபாரம் செய்யும் ஒரே நிறுவனமாக இருந்தது ராக்ஃபெல்லரின் ''ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனிதான்". போட்டி நிறுவனம் இல்லை என்பதால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட, உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகிவிட்டார். 

"கோடிக் கோடியாகப் பணம் குவித்து விட்டீர்கள் இப்போது சந்தோஷம்தானா?" என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, "சந்தோசம் என்பது பணத்தில் இல்லை;  வெற்றியில்தான் இருக்கிறது!" என்றார்.



--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சிறுநீரகக் கல் உருவாவது எப்படி?

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.
"கிட்னி ஸ்டோன்' என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில்  ஏற்படலாம்; சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம்; சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம்; கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி. சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 - 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது. பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது.  கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம்.  கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.
சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.
* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.
* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.
* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.
* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.
* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவதுநல்லது.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

தெரிந்து கொள்ளலாம் வாங்க !





ஆர்குட் சமுதாய இணைய தளத் தினை அதிகம் பயன்படுத்து பவர்கள் பிரேசில் நாட்டு மக்கள். அடுத்தபடியாக, இந்தியாவில் தான் ஆர்குட் தளவாசிகள் அதிகம்.

* மைக்ரோசாப்ட் நிறுவனம் 1983ல் தன்னுடைய முதல் மவுஸை வடிவமைத்தது. முதலில் தயாரித்த ஒரு லட்சம் மவுஸ்களில், 5,000 மட்டுமே விற்பனையானது. ஓராண்டுக்குப் பின் மேக் இன்டோஷ் கம்ப்யூட்டர் வந்த பின்னரே, மக்கள் மவுஸின் தகவல் உள்ளிடும் திறனை அறிந்து அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.




* சமுதாய தளங்களில், யு-ட்யூப் மற்றும் ட்விட்டர் தளங்களைக் காட்டிலும், இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது லிங்ட் இன் தளம் தான்.

* இணையத்தைப் பயன்படுத்துபவர்களில், குறைந்தது 86.6% பேர் வாரத்தில் ஆறு மணி நேரம் இணையத்தில் உலா வருகிறார்கள்.

* புளுடூத் தொழில் நுட்பத்திற்கு அந்தப் பெயர் வந்ததன் காரணம் தெரி யுமா? அது டென்மார்க் நாட்டின் மன்னர் ஒருவரின் பெயர். ஹெரால்ட் புளுடூத் என்ற அந்த மன்னர், தன் நாட்டில் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்த பல்வேறு ஆதிவாசி குழுக்களை ஒன்றிணைத்து, இணக்கமாக வாழ வழி செய்தார். அதற்கான நன்றிக் கடனாக, புளுடூத் தொழில் நுட்பம் கண்டறிந்த விஞ்ஞானிகள் அவரின் பெயரை, அத் தொழில் நுட்பத்திற்கு பெயரிட்டனர்.

* ட்ரைவ் அசிஸ்ட் என்ற சாப்ட்வேர் தொகுப்பினை, கனடா நாட்டைச் சேர்ந்த ஏஜிஸ் மொபிலிட்டி என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தினால், நாம் மொபைல் போனில் அழைக்கும் ஒருவர், வாகனம் எதனையேனும் ஓட்டிக் கொண்டிருந்தால், அழைப்பவருக்கு எச்சரிக்கை கொடுக்கும். ஆனால் அழைப்பதற்கான காரணம் மிக மிக முக்கியமானதாக இருந்தால், இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி, அழைப்பை உண்டாக்கலாம். அல்லது மெசேஜ் கொடுப்பதற்கும் இந்த சாப்ட்வேர் வழி தருகிறது. அத்துடன் அழைப்பவர், அழைக்கப்படும் நபர் எங்கிருக்கிறார் எனவும் இந்த சாப்ட்வேர் மூலம் அறிந்து கொள்ளலாம்.

* பெட் போர்ட் என்ற நிறுவனம், நாம் செல்லமாக வளர்க்கும் நாய் மற்றும் பூனை போன்ற பிராணிகள், வீட்டை விட்டு செல்லாத வகையில் கண்காணிக்கும் மைக்ரோ சிப் ஸ்கேனர் ஒன்றை வடிவமைத்து வழங்கி வருகிறது.










--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஜோக்ஸ்,ஜோக்ஸைத்தவிர வேறொன்றுமில்லை

ஜோக்ஸ்,ஜோக்ஸைத்தவிர வேறொன்றுமில்லை

 

1. ஆம்னி பஸ்-க்கு எதிர்ப்பதம் என்ன?

இல்லை நான் லாரி.


2. தலைவரே! நீங்க செஞ்ச ஊழல் குறித்து விசாரிக்க விசாரணை
கமிஷன் அமைக்கறாங்களாம்.

விடுய்யா, அவங்களுக்கு 10% கமிஷன் குடுத்தா பிரச்சனை தீர்ந்தது.



3.சச்சின் டெண்டுல்கருக்கும், நம்ம மன்னருக்கும் என்ன
வித்தியாசம்?

அவரு ஆட்ட நாயகன், இவரு ஓட்ட நாயகன்.


4. ஊலலலா-னு பாடிட்டு போறாரே உன் கணவர் அதுக்கு ஏன்
அவர் கேரக்டர் மேல சந்தேகப்படறே?

ஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா-னு பொண்ணுங்ககூட
சிநேகம் இருக்குமோனு டவுட்.


5. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

ஆகும். பூனை கூட புலி கள்ளத் தொடர்பு வெச்சிருந்தா.


6. என் பையன் சிங்கக் குட்டி மாதிரி இருப்பான்.

அப்போ... மனுஷக் குழந்தை மாதிரி இருக்கமாட்டானா?


7. பாரதி கண்ட கனவு நனவு ஆகிடுச்சுனு தலைவர் குதிக்கறாரே?

அட நீ வேற, தலைவரோட சின்ன வீடு பாரதி கனவுகண்ட
மாதிரி அவரு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.



8. பதவிக்காக தலைவர் நாய் மாதிரி அலையறாரு...

அதுக்காக நாய் சேகர்-னு பட்டப்பெயர் வெச்சு அவரைக்கூப்பிடனுமா?


9. நம்ம டல் திவ்யா இப்போ தூள் திவ்யாவா மாறிட்டாளே?

சும்மாவா? தலைவருக்கு சின்ன வீடா ஆகிட்டாளே?


10. தலைவரே! கல்மாடி நிராகரிப்பு-னு நியூஸ்ல சொல்றாங்களே?

சரி... கல்மாடிக்கு பதிலா சாதா மாடி கட்டுனா போச்சு.



11. கைதிகளுக்கு சிறப்பு சலுகை வேணும்னு தலைவர் திடீர்-னு
போராட்டம் பண்றாரே?

அவரை அரெஸ்ட் பண்ணப் போறதா தகவல் வந்துச்சாம்.



12. என் மனைவி மாதிரி ஒருத்தியை பாக்கவே முடியாது.

ஏன்? அவங்க கூடப் பிறந்தவங்க யாருமே இல்லையா?


13. ஒண்டே மேட்ச் டெஸ்ட் மேட்ச் என்ன வித்தியாசம்?

முதலிரவு-ஹனிமூன் டூர்.

14. உன் ஆளு உன்னை கட்டைல போறவனே அப்டினு திட்றாளே, ஏன்?

அவளோட அம்மாவை முதமுறை பார்த்தப்ப செம கட்டையா இருக்கே-னு கமெண்ட் அடிச்சுட்டேன்.



15. தலைவருக்கு ராசி பார்க்கற பழக்கமே இல்லையாமே?

ரெட்டை ஜடை வயசு படம் ரிலீஸ் ஆகி 10 வருஷம் ஆகுது.
இன்னுமா அந்தப்பட ஹீரோயினை பார்ப்பாரு?



16. சினிமாவுக்கே போகாத தலைவர் இந்தப்படத்துக்கு மட்டும்
வந்திருக்காரே?

"பட்டாப்பட்டி 50-50" அப்டினா ஏதாவது நிலம் பட்டா போட்டு
தருவாங்கனு நினைச்சுட்டாராம்.





--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

எப்போது?

ஜெயிலிலிருந்த ஒருவனுடைய கடிதப் போக்குவரத்து முழுவதும் கடுமையாகக் கண்காணிக்கப் பட்டன.ஒருமுறை அவன் மனைவியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.அதில்,தோட்டத்தில் எப்போது விதைக்கலாம் எனக் கேட்டு எழுதியிருந்தாள்.உடனே இவன் பதில் எழுதினான்,''அன்பே,தோட்டத்தில் மண்ணை இப்போது தோண்டாதே.அதில் தான் நான் என்னுடைய ஆயுதங்களை எல்லாம் ஒழித்து வைத்திருக்கிறன்.''அடுத்து மனைவியிடமிருந்து கடிதம் வந்தது.''ஆறு பேர் வந்து நம் தோட்டத்தை முழுவதும் தோண்டி  மண்ணைப் புரட்டி விட்டார்கள்.''கணவன் இப்போது எழுதினான்,''சரி,இப்போது விதைகளை விதைத்துவிடு.''

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மெழுகுவர்த்தி

கணவனும் மனைவியும் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென மின்சாரம் நின்று விட்டது.ஆனாலும் ஒரு மெழுகு வர்த்தியைப் பொருத்தி வைத்து விட்டு இருவரும் தொடர்ந்து சாப்பிட்டார்கள்.கணவன் முதலில்சாப்பிட்டு முடித்தான்.அவன் கை கழுவ எழுந்தான் மனைவி சொன்னாள்.''எனக்குரொம்ப வேர்க்கிறது..''கணவன் உடனடியாக,''மின் காற்றாடியை சுழல விடட்டுமா?''எனக் கேட்டான்.மனைவி கோபத்துடன்,''உங்களுக்கு மூளை மழுங்கி விட்டதா?என்னால் இருளில் சாப்பிட முடியுமா?நீங்கள் காற்றாடியைப் போட்டால் மெழுகுவர்த்தி அணைந்து விடாதா?''என்று கேட்டாள்.

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net