Wednesday, October 13, 2010

கடி ஜோக்ஸ் - படி(கடி)த்ததில் பிடித்தது - பாகம் 07


ஓர் அரிசிக் கடையில் இருவர் பேசியது;

அரிசி கிலோ எவ்வளவு?
பதினைஞ்சு ரூபாய்!
கொஞ்சம் குறைச்சுப் போடக் கூடாதா?
இப்பவே ஒரு கிலோ அரிசிக்கு தொளாயிரம் கிராம் தான் போடுறம்னு எல்லாரும் சொல்றாங்க . இன்னும் எப்படி குறைச்சுப் போடுறது ?






சலூனில் இருவர் பேசியது;

மதுக்கும் விஷத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
எனக்கு முதல் சமாசாரம் மட்டும்தான்டா தெரியும்... ரெண்டாவதா சொன்னியே அதப்பத்தி தெரியாதுடா ......
மது குடிச்சா நாம ஆடுவோம் . விஷம் குடிச்சா நம்ம முன்னாடி மத்தவங்க ஆடுவாங்க .....





மாணவர்கள் இருவர் பேசியது;

வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாட்டுக் கேட்ட ஒரு கரப்பான் பூச்சிக்கு என்ன ஆச்சுத் தெரியுமா ?
என்ன ஆச்சு ?
செத்துப் போச்சு......
ஏன் ?
அந்தப் பாட்டுதான் HITஸாங் ஆச்சே!!!





இரண்டு எழுத்தாளர்கள் பேசிக்கொண்டது;

நான் பத்தாண்டு காலமாக எழுதிவந்த புதுக்கவிதைகளை எல்லாம் சேர்த்து தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறேன்....
பத்துவருஷமா எழுதின கவிதைங்கள்னா அது பழசாத்தானே இருக்கும்? எப்பிடி புதுக்கவிதைங்கிறீங்க?




மனைவியும் கணவனும் பேசிக்கொண்டது;

இந்த மாதிரியே நான் சமைச்சிப் போட்டா எனக்கு என்ன தருவீங்க அத்தான்!
சீக்கிரமா உனக்கு 5 லட்ச ரூபாய் கிடைக்கும் செல்லமே!!!
எப்படி?
என்னோட LIC policy மூலமா தான் செல்லம்!






பள்ளியில் ஆசிரியரும் மாணவனும் பேசியது;

ஓட்டப் பந்தயத்தில் முயல் ஆமையிடம் தோற்றது ஏன்?
'
முயலாமை' யினால் தான்!





பெண் வீட்டில் மாப்பிள்ளை வீட்டார் பேசியது;

பொண்ணு பிடிச்சிருந்தாத் தான் கை நனைப்போம்!
நீங்க பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்ன பிறகுதான் நாங்க டிபனே வைப்போம்!






தாத்தாவும் பேத்தியும் பேசியது;

இங்க ஒருத்தன் 'நாயா' கத்திக்கிட்டு இருக்கேன்! நீ எங்க போன.....
சிரித்துக்கொண்டே , உனக்குத்தான் 'பிஸ்கெட்' வாங்கப் போனேன் தாத்தா.....






ஆசிரியரும் மாணவனும் பேசியது;

ஏன் பரிட்சை பேப்பர்ல 'எருமை'-ங்கிறதுக்கு 'எரு' ன்னு எழுதியிருக்கே?
'
மை' தீர்த்து போச்சு சார்!




மனைவியும் கணவனும் பேசியது;

என்னங்க.... டப்பியை அரைமணி நேரமா தடவிட்டு இருக்கீங்க ?
டாக்டர்தான் இந்த டப்பியைக் கொடுத்து தலை வலிக்கிறப்போ தடவுங்கன்னு சொன்னார் .... அதான்.....






இரண்டு சிறுவர்கள் பேசியது;

டி.வி வயலென்ஸைத் தூண்டிவிடுதுடா?
எப்படிச் சொல்றே?
எப்ப டி.வியை ஆன் பண்ணினாலும் எங்க அப்பா என்னை அடி பின்னுறார்.




பொடியனும் பெரியவரும் பேசியது;

இந்த வழியாகப் போகலாமா சார்?
ஏன் தம்பி கேக்குற....?
வாகனங்கள் போகக் கூடாதுன்னு போர்டு போட்டிருக்கு. என் பேரு மயில் வாகனம் ..... அதான் கேட்டேன்....






ஆசிரியரும் மாணவனும் பேசியது;

நான் அஞ்சை விட பெரியவன். ஏழுக்கு இளையவன். இரட்டைப் படையன்னு சம்பந்தமில்லாம எழுதியிருக்கியே?
ஆறு தன் வரலாறு கூறுதல்னு கட்டுரை கேட்டிருந்தீங்களே . அதான் சார் இப்படி எழுதியிருக்கேன் .






மகனும் அப்பாவும் பேசியது;

அப்பா எங்க கணக்கு வாத்தியாருக்கு ஞாபக மறதி ரொம்ப!.....
எப்படிச் சொல்றே?
நேத்து ஐந்தும் ஐந்தும் பத்துன்னு சொன்னார் ....இன்னிக்கு ஆறும் நாலும் பத்துன்னு சொல்றார்....






இரண்டு சிறுவர்கள் பேசியது;

ஏண்டா ....காக்கையை பிடித்துத் தண்ணீரில் மூழ்கடிக்கிறே?
'
காக்கை கரையும்' னு புத்தகத்தில போட்டிருக்கே ....அதான்டா....




--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

செல்லமே... குழந்தைகள் வளர்ச்சி

குழந்தைகள் என்றாலே குதூகலம் தான். ஆனால் அவர்களை வளர்த்து ஆளாக்குவது அத்தனை சுலபமல்ல. குழந்தைகள் வளர்ச்சி என்பது தொடர்ச்சியான பல்வேறு செயல்களை கொண்டது. அவர்கள் குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய வேண்டும். இவைகளைத்தான் வளர்ச்சி படிநிலைகள் என்கிறோம்.
குழந்தை அந்தந்த வயதுக்கேற்ற செயல்களைச் செய்தால்தான், சரியான வளர்ச்சி பெறுகிறது என்று அர்த்தம். ஆனாலும் ஒரு குழந்தை வளரும் விதத்திலேயே மற்ற குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை. இதை பெற்றோர் உணர வேண்டும்.
***
பக்கத்து வீட்டு குழந்தை செய்வதை எல்லாம் நம்முடைய குழந்தையும் செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்பதும், புலம்புவதும் தேவையற்றது. குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து கொண்டால்தான் அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க முடியும்.
பெற்றோர் கண்காணிக்க வேண்டிய குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் நிறையவே உள்ளன. பிறந்த குழந்தையானது, 2 மாதங்களில் சிரிக்கத் தொடங்கும். 4 மாதங்களில் கழுத்து தலைசுமக்கும்படி உறுதியாகும். 8 மாதங்களில் குழந்தை எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காரும், 12 மாதங்களில் எழுந்து நிற்கும்.
***
குழந்தை பிறந்து முதல் 6 வாரங்கள் வரை தலையை ஒரு புறமாகத் திருப்பியவாறு மல்லாந்து படுத்துக் கொண்டு இருக்கும். திடீரென்று உருவாகும் சத்தம் குழந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அப்போது குழந்தையின் உடல் `விலுக்'கென்று சிலிர்த்துக் கொள்ளும்.
கைவிரல்களை இறுக்கமாக மூடி வைத்து இருக்கும் குழந்தையின் உள்ளங்கையில் ஒரு பொருளையோ அல்லது விரலையோ வைத்தால் இறுக்கமாக பிடித்து வைத்துக் கொள்ளும். அடுத்த ஒன்றரை மாதத்தில் குழந்தையின் கழுத்து உறுதியாகும். பொருட்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுபார்க்கும்.
***
மூன்று மாதங்களில் குழந்தைகள் மல்லாந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகைச் சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோசத்தை வெளிபடுத்தும் வகையில் குரலை உயர்த்துதல் போன்றவற்றை தொடரும்.
இந்த கால கட்டத்தில் குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிபடுத்தும். கைவிரல்களை முன்புபோல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக் கொள்ளும்.
***
6 மாதங்களில் குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட ஆரம்பிக்கும். தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து ஏதேனும் சத்தம் கேட்டால் அந்த பக்கமாக குழந்தை தனது தலையைத் திருப்பும்.
படுத்த வாக்கிலேயே உருண்டு கொண்டு செல்லும். எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார ஆரம்பிக்கும். குழந்தை நிற்கும்பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.
***
குழந்தைகள் 9 மாதங்களில் கைகளை ஊன்றியோ, எவ்வித பிடிப்போ, உதவியோ இல்லாமல் உட்காரும். அப்புறமாய் குழந்தை தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கும். 12 மாதங்களில் குழந்தை எழுந்து நிற்கத் தொடங்கும். நடக்க பழகும். அத்தை, மாமா போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்ல ஆரம்பிக்கும்.
2 வருடங்களில் கால் சட்டை போன்ற உடைகளை உடுத்திக் கொள்ளும். கீழே விழாமல் ஓடிச்செல்லும். புத்தகத்தில் உள்ள படங்களை பார்க்க ஆர்வபடும். தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்கும். பிறர் சொல்லுவதை திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும்.
***
குழந்தைகள் 3 வயதை அடைந்தால் தலைக்குமேல் கையைக் கொண்டு சென்று பந்தை வீசி எறியும்.
` பையனா, பெண் பிள்ளையா' போன்ற எளிய கேள்விகளுக்கு பதில் சொல்லும். உடல் பாகங்களின் பெயரைக் கேட்டால் சொல்லி விடும்.பொருட்களை இங்கேயும், அங்கேயும் வைப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளில் உதவி செய்யும். மூன்று சக்கர சைக்கிளை மிதித்து ஓட்ட ஆரம்பிக்கும். புத்தகங்கள் அல்லது பத்திரிகைகளில் உள்ள படங்களின் பெயரைச் சொல்லும்.
***
குழந்தைகள் 5 வயதில் துணிகளை உடுத்திக் கொள்ளும்போது ஒரு சில பட்டன்களையாவது போட்டுக் கொள்ளும். குறைந்தபட்சம் மூன்று நிறங்களின் பெயரையாவது சொல்லும். படிக்கட்டுகளில் பெரியவர்களை போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச்செல்லும். குதித்தும், தாண்டியும் செல்லத் தொடங்கும்.
அந்தந்த காலகட்டத்திற்கும் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை என்றால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தையைக் காட்டி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
***
குழந்தை நடப்பதற்கு தயாராக இல்லாத நேரத்தில் நடக்க வைத்து வலுக்கட்டாயமாக பயிற்சி கொடுப்பது எந்தவித பலனையும் தராது. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி, பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ குழந்தைகளின் செயல்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் ஏற்படும். சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையைவிட சில செயல்பாடுகளில் குறைவான வளர்ச்சியோ அல்லது அதீத வளர்ச்சியோ பெற்று இருக்கலாம். எல்லா பிரச்சினைகளுக்கும் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்துகொள்வது நலம்.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அப்பா...

அப்பா...

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...

முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது

உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?

லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...

அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?

எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?

சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..

அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்



--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net