Monday, June 7, 2010

பொம்மை

ஏழை ஒருவனின் குழந்தை. தன தாயிடம் சொன்னது,''அம்மா,எனக்கு இந்த மண் பொம்மை வேண்டாம் .பார்,எல்லாம் உடைந்து இருக்கிறது.பக்கத்து வீட்டு அண்ணன் நல்ல நல்ல பொம்மைகள் எல்லாம் வைத்திருக்கிறான்.அது போல பொம்மைகள் வாங்கித்தா.''அடுத்த வேலை சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் குழந்தைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றாள் அந்த  ஏழைத்தாய்.
பக்கத்துவீடு ஒரு பணக்காரரின் வீடு.அந்த வீட்டுப் பையனைப் பார்த்துக்கொள்ள ஒரு பணிப் பெண்.விளையாட வித விதமான பொம்மைகள். விளையாடிக் கொண்டிருந்த பையன் அந்தப் பெண்ணிடம் சொன்னான்,''ஆயா,எனக்கு இந்த பொம்மையெல்லாம் வேண்டாம்.பக்கத்து வீட்டுத் தம்பி அழகான மண் பொம்மைகள் வைத்து விளையாடுகிறான்.எனக்கு அது போல பொம்மைகள் வேண்டும்'' என்று கூறி அழ ஆரம்பித்தான்.அவன் அழுகையை அடக்க வழி தெரியாது திகைத்து நின்றாள் வேலைக்காரப்பெண்.
பொன்னென்றும் மண்ணென்றும் வேறுபாடு அறியாக் குழந்தை,பொன்னுக்கும்,மண்ணுக்கும் போராடுகிறது வளர்ந்த பின். என்றென்றும் குழந்தையாய் இருந்தால்  இவ்வுலகில் ஏனிந்த சண்டை,ஏனிந்த வேற்றுமை?
                                                             மூலம் ;ஒரு இந்திக் கவிதை

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

காற்று

காற்று 
தெற்கிலிருந்து வீசினால்    --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால்   --வாடை
கிழக்கிலிருந்து வீசினால்   ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால்     ---மேலை

பூ 
மலர்வதால்    --மலர்.
விரிவதால்     ---வீ
பூப்பதால்          --பூ
வாடுவதால்    --அலர்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பயனிலை

தமிழ் ஆசிரியர் திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தொடர்ந்து பாடம் கேட்ட சீடர் ஒருவர்,பலமுறை சொல்லிக் கொடுத்தும் பாடம் சரியாகக் கேட்காமல் ஒரு நாள்,''எழுவாய்,பயனிலை என்றால் என்ன?'' என்று கேட்டார். பிள்ளையவர்களுக்குக் கோபம் வந்து விட்டது.உடனே அவர்,''நீ இங்கிருந்து எழுவாய்!உன்னால் ஏதும் பயனிலை,''என்றதுமே சீடன் ஓடி விட்டான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net