Sunday, June 6, 2010

வகுத்தல்

ஒருவன் தன நண்பனிடம் சொன்னான்,''எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று ஆண் பிள்ளைகள்.சிறு வயதில் எங்களுக்கு ஒரு பிரச்சினை.நாங்கள் மூவரும் இரு நூறு ஆடுகளை மேய்க்க வேண்டியிருந்தது.எங்களுக்குள் அதனால் அடிக்கடி சண்டை வந்தது.''நண்பன் சொன்னான்,''மூன்று பேர் இருநூறு ஆடுகளை மேய்ப்பது என்பது எவ்வளவு கஷ்டம்!சரி,பின் என்ன செய்தீர்கள்?அவன் சொன்னான்,''எங்கள் அப்பா மேலும் நூறு ஆடுகள் வாங்கினார்.அதன் பின் தான் பிரச்சினை முடிந்தது.''நண்பன் அதிர்ச்சி அடைந்தான்.''இருநூறு ஆடு மேய்ப்பதே சிரமம்.அதிலே மேலும் நூறு ஆடுகள் வாங்கியபின் எப்படி பிரச்சினை தீரும்?மேலும் சிரமம் கூடத்தானே செய்யும்?''என்று நண்பன் கேட்க அவன்சொன்னான்,''மூன்று நூறை மூன்றால் வகுப்பது எளிதல்லவா?''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஜலதோஷம்

காட்டில் ஒரு சிங்கம்,ஒரு ஆட்டை அழைத்தது.''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து.அதனுடைய கருத்தைக் கேட்டது.ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.நரி சொன்னது,''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.

புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net