Saturday, June 5, 2010

பாவம்

ஒரு நாட்டில் ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டது.அதனால் பல நாட்கள் பட்டினி கிடந்த ஒரு முனிவர், ஒரு யானைப் பாகனைப் பார்த்து,''உண்ண ஏதாவது உணவு இருந்தால் கொடு,''என்று கேட்டார்.''நான் எச்சில் படுத்தியஉணவு தான் இருக்கிறது,''என்றான் பாகன்.''பரவாயில்லை,அதையே கொடு,''என்று சொல்லி வாங்கிச் சாப்பிட்டார் முனிவர்.''இந்தாருங்கள்,இந்தத் தண்ணீரைக் குடியுங்கள்,''என்றான் பாகன்.;;அது எச்சில்,நான் குடிக்க மாட்டேன்,''என்றார் முனிவர்.''உணவுக்கு இல்லாத எச்சில்,தண்ணீருக்கு மட்டும் எப்படி வந்தது?''என்று கேட்டான்,பாகன்.முனிவர் சொன்னார்,''வேறு எங்கும் உணவு கிடைக்கவில்லை.இதைச் சாப்பிடாவிட்டால் என் உயிர்போயிருக்கும்.ஆனால் தண்ணீர் எங்கும் கிடைக்கும்.''
ஒரு தடவை தவறு செய்து விட்டால் தொடர்ந்து தவறு செய்தால் என்ன என்று நாம் நினைப்பதால் தான் பாவங்கள் அதிகரிக்கின்றன.வேறு வழியின்றி,நிர்பந்தத்தால் தவறு செய்தால் அது பாவமில்லை.நிர்ப்பந்தம் இல்லாத போது,வேண்டுமென்று தவறு செய்வது தான் பாவம்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இயல்பு

மனிதனின் இயல்பு;
முப்பது வயதில்  --முறுக்கு
நாற்பது வயதில் --நழுவல்
ஐம்பது வயதில்  --அசதி
அறுபது வயதில்--மறதி
எழுபது வயதில்  --ஏக்கம்
என்பது வயதில்  --தூக்கம்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கிளிப்பேச்சு

வீட்டின் வரவேற்பறை. உச்சியில் ஊஞ்சல் கட்டப்பட்டு ஒரு கிளி.அந்தக் கிளியின் ஒரு காலில் பச்சை நிற நூலும்,மறுகாலில் சிவப்பு நிற நூலும் கட்டப்பட்டுக் கீழே தரை வரை தொங்கிக் கொண்டிருந்தன.வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்ததும் வீட்டுக்காரர் பச்சை நூலை ஒரு சுண்டு சுண்டினார்.உடனே கிளி,''வாங்க!வாங்க!வணக்கம்!சௌக்கியமா?''என்றது. விருந்தாளி விடை பெற்றுச் செல்லும் போது வீட்டுக்காரர் சிவப்பு நூலை சுண்டினார்.உடனே கிளி,''போயிட்டு வாங்க!அடிக்கடி வாங்க!நன்றி,''என்றது.விருந்தாளி வியந்து கூவினார்,''என்ன ஆச்சரியம்!பச்சை நூலை இழுத்தால் கிளி வரவேற்றுப் பேசுகிறது!சிவப்பு நூலை இழுத்தால் விடை கொடுக்கிறது!இரண்டையும் சேர்த்து இழுத்தால் என்னாகும்?''கிளி அவசரமாகக் கத்தியது,''அறிவு கெட்ட முட்டாளே,கீழே விழுவேன் !''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net