Thursday, May 27, 2010

பெருக்க வேண்டும்

கி.வா.ஜ வீட்டில் விசாலம் என்ற வேலைக்காரி இருந்தாள்.ஆள் கொஞ்சம் பருமன்.ஒரு நாள் கி.வா.ஜ.,ஒரு நண்பருடன் தரையில் அமர்ந்து சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்.''என்ன இது?விசாலம் பெருக்க வேண்டும்.நீங்கள் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்களே!''என்றார் கி.வா.ஜ.வின் மனைவி.''விசாலம் இன்னுமா பெருக்க வேண்டும்?''என்று ஒரு போடு போட்டார் கி.வா.ஜ.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

குத்துச்சண்டை

தன எதிரியை நன்றாக உதைக்க எண்ணி ஒருவன் குத்துச்சண்டை பழகவிரும்பினான்.முதல் நாள் பாடம் படிக்குமுன் அவன் உடம்பில் ஏகப்பட்ட குத்துக்கள் விழுந்தன.அடுத்த நாள் அவன் குருவிடம் சொன்னான்,''எனது எதிரியை நையப் புடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வந்தேன்.இப்போது அந்த யோசனையைக் கை விட்டு விட்டேன்.நாளை என் எதிரியை இங்கே அனுப்புகிறேன்.அவனுக்கு மீதியை நன்றாகச் சொல்லிக் கொடுங்கள்.''

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கெளரவம்

நெப்போலியன் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ஒரு பெண்மணி பேசும் போது,''ரஷ்யாவில் நாங்கள் சண்டை போடுவது என்றால் அது கௌரவத்திற்காகவே,''அடுத்துப் பேசிய நெப்போலியன்,''அது உண்மை தான் அம்மணி!இல்லாத ஒன்றிற்காகத்தானே எல்லோரும் சண்டையிடுவார்கள்,''என்று சொன்னாராம்.

நீங்கள் யார்?
சார்லஸ் லாம்ப் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தார்.கூட்டத்தினர்,''ஷ்ஷ்ஷ்.....'' என்று ஓசைப் படுத்தினார்கள்.லாம்ப் கூட்டத்தைப் பார்த்து,''பாம்பு,வாத்து,முட்டாள் மூவரும் தான் இம்மாதிரி ஒலி எழுப்புவது உண்டு.மேடைக்கு வந்து நீங்கள் யார் என்பதை அறிமுகப் படுத்திக் கொள்கிறீர்களா?என்றார்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

சோம்பேறி

ஒரு ஊரில் ஒரு கெட்டிக்கார சோம்பேறி இருந்தான்.அவன் எந்த வேலையும் தான் செய்யாது,மற்றவர்கள் மூலமே செய்து கொள்வான்.
ஒரு சமயம் அவன் தன தோட்டத்தில் ஒரு புதிய கிணறு தோண்ட விரும்பினான்.சில அடி தூரம் அவன் தானே தோண்டி விட்டு மேலே ஏறி வந்து தன வேட்டியையும் முண்டாசையும் அவிழ்த்துப் பள்ளத்தருகே வைத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டான்.
அவன் போன பின் அந்தப் பக்கம் வந்த கிராம மக்கள் பாதி தோண்டப்பட்ட கிணற்றோரம் அவன் துணிகளைப் பார்த்து விட்டு உள்ளே எட்டிப் பார்த்து ஒருவரும் இல்லாததால் அவனை மண் சரிந்து மூடி விட்டது என்றெண்ணி  எல்லோரும் கிணற்றைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.தண்ணீர் தென்படும் வரை தோண்டியும் உடல் கிடைக்காததால் எல்லோரும் வீடு திரும்பினர். சிரமப்படாமல் தன கிணறு முழுக்கத் தொண்டப்பட்டதைக் கண்டு அந்தக் கெட்டிக்காரச் சோம்பேறி மகிழ்ச்சி அடைந்தான்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net